குமரன்

மட்டக்களப்பில் காணாமல் ஆக்கப்பட்டோர் கவனயீர்பு ஆர்பாட்டம்!

யார் வெற்றி பெற்றாலும் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றிக் கொள்வோம் எனும் தொனிப் பொருளில் காணமல் ஆக்கப்பட்டோரின் உறுவுகள் மட்டக்களப்பு பேருந்து நிலையத்தில்  கவனயீர்பு ஊர்வலமும் போராட்டத்திலும் நேற்று சனிக்கிழமை ஈடுபட்டனர் காணாமல் ஆக்கப்பட்டோர் குடும்ப ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த ஆர்பாட்ட பேரணி மட்டக்களப்பு திருமலை வீதியில் ஆரம்பித்து நகர் மணிக் கூட்டு கோபுரம் வரை சென்று அங்கிருந்து மத்திய பேருந்து நிலையத்திற்கு சென்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர் இதில் காணாமல் போன உறவுகள் யார் வெற்றி பெற்றாலும் காணாமல் ஆக்கப்பட்டோர் ...

Read More »

ஆஸ்திரேலியாவில் காட்டுத் தீ: 2 பேர் பலி; 150 வீடுகள் நாசம்!

ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ காரணமாக 2 பேர் பலியாகியுள்ளனர். 150க்கும் அதிகமான வீடுகள் காட்டுத் தீ காரணமாக நாசமாகி உள்ளன. இதுகுறித்து ஆஸ்திரேலியாவின் தீயணைப்பு அதிகாரிகள் தரப்பில், ”ஆஸ்திரேலியாவின் கிழக்குப் பகுதியில் கடந்த சில நாட்களாக ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக இதுவரை 2 பேர் பலியாகியுள்ளனர். 30 பேர் வரை காயமடைந்துள்ளனர். சுமார் 150க்கும் அதிகமான வீடுகள் காட்டுத் தீயால் நாசமாகி உள்ளன. தொடர்ந்து காட்டுத் தீ ஏற்பட்ட இடங்களில் ஹெலிகாப்டர்கள் மூலம் தண்ணீர் பாய்ச்சப்பட்டு வருகிறது. மேலும், காட்டுத் தீ ...

Read More »

வாக்­கு­ரி­மையை சமூக நலன்­க­ருதிப் பயன்­ப­டுத்துவோம்!

அடுத்த ஐந்து ஆண்­டு­க­ளுக்கு நாட்டை ஆட்சி செய்யும் அதி­காரம் கொண்ட ஜனா­தி­ப­தி­யொ­ரு­வரைத் தெரிவு செய்யும் தேர்தல் நடை­பெ­ற­வுள்­ளது. நாட்டின் ஜனா­தி­ப­தி­யாகத் தெரிவு செய்­யப்­ப­ட­வுள்­ளவர் நிச்­சயம் ஒரு பௌத்த சிங்­கள வரா­க­வே­யி­ருப்பார். அதில் மாற்­ற­மி­ருக்­காது. குறித்த தேர்­தலில் பலர் போட்டி யிட்­டாலும் இரு­வ­ருக்­கி­டை­யே­யா­கவே போட்டி நில­வு­கின்­றது. நாட்டின் சிறு­பான்­மை­யி­னத்­த­வ­ரெ­வரும் தெரி­வாகும் வாய்ப்பு அற்­ற­போது சிறு­பான்­மை­யி­னத்­த­வ­ரான நாம் ஏன் இத்­தேர்­தலில் அக்­கறை செலுத்­த­வேண்டும் என்ற வினா எழலாம். குறித்த ஜனா­தி­பதிப் பதவி நாட்டைப் பொறுத்­த­வரை சக்தி வாய்ந்­தது. சகல சமூ­கத்­தி­ன­ரையும் அணைத்து, இணைத்துச் செல்ல வேண்­டிய பொறுப்பு ...

Read More »

புத்தகம் வெளியிடும் ஆண்ட்ரியாவுக்கு மீண்டும் மிரட்டல்?

தமிழில் பல படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை ஆண்ட்ரியா எழுதிய புக்கை வெளியிடாமல் தடுக்க மிரட்டல் விடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழில் ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, விஸ்வரூபம், அரண்மனை, உத்தம வில்லன், துப்பறிவாளன், வடசென்னை உள்பட பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருக்கும் ஆண்ட்ரியா சில மாதங்களுக்கு முன்பு நிகழ்ச்சியொன்றில் பேசும்போது, “திருமணமான ஒருவருடன் தகாத உறவு ஏற்பட்டு மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் துன்புறுத்தலுக்கு ஆளானேன் என்றும் இப்போது ஆயுர்வேத சிகிச்சை பெற்று மீண்டு வந்து இருக்கிறேன் என்றும் கூறினார். ...

Read More »

காணாமல் ஆக்கப்பட்டோர் மனுக்களுக்கு நீதி கிடைக்க வாதிடும் குருபரனுக்கு நீதிமன்றங்களில் முன்னிலையாவதற்குத் தடை!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக சட்டத்துறைத் தலைவர் கலாநிதி குமாரவடிவேல் குருபரனை நீதிமன்றங்களில் முன்னிலையாவதைத் தடை செய்யும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் முடிவை யாழ்ப்பாணம் பல்கலைக்கழக பேரவை ஏற்றுக்கொண்டுள்ளதாக அறிய முடிகிறது. அத்துடன், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் இந்த முடிவை சட்டத்துறைத் தலைவர் கலாநிதி குமாரவடிவேல் குருபரனுக்கு பல்கலைக்கழக தகுதிவாய்ந்த அறிவிக்கவேண்டும். அதுதொடர்பில் அவரால் மேன்முறையீடு முன்வைக்கப்படுமாயின் அதனை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பிப்பது எனவும் பேரவை முடிவு செய்தது. மேலும் கலாநிதி குமாரவடிவேல் குருபரனை நீதிமன்றங்களில் முன்னிலையாவதைத் தடை செய்யும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் முடிவு ...

Read More »

ஆயிரத்து 416 மில்லியன் ரூபா வைப்பில்!

இலங்கையின் பல்கலைக்கழகங்களுக்கு அரசாங்கத்தினால் வருடாந்தம் ஒதுக்கிடப்படும் நிதியில் 5 ஆயிரத்து 666 மில்லியன் ரூபா, 15 பல்கலைக்கழகங்களினால் பயன்படுத்தப்படாமல், வங்கிக் கணக்களிலேயே வைக்கப்பட்டுள்ளதாக கோப் குழு தகவல் வெளியிட்டுள்ளது. 794 வங்கிக் கணக்குகளில் குறித்த நிதி உள்ளதாக 2017 ஆம் ஆண்டுக்கான கணக்காய்வு அறிக்கையில் கண்டறியப்பட்டுள்ளது. இதேநேரம், வருடாந்தம் வழங்கப்படும் நிதி ஒதுக்கீடுகளின் பயன்பாட்டை பெற்றுக்கொள்ளாமல், அவை அவ்வாறே வைப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் திகதியாகும்போது, இவ்வாறு வைப்பிலிடப்பட்டு வைக்கப்பட்டிருந்த நிதி ஆயிரத்து 416 மில்லியனாகும் என்றும் ...

Read More »

ஆட்களைப் பதிவுசெய்யும் திணைக்களத்தினால் விநியோகிக்கப்படும் தேசிய அடையாள அட்டை…..!

ஆட்களைப் பதிவுசெய்யும் திணைக்களத்தினால் விநியோகிக்கப்படும் தேசிய அடையாள அட்டையின் தகவல்களை உறுதிப்படுத்தி வழங்கும் கடிதத்தை, வாக்களிப்பதற்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆவணமாக ஏற்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அறிக்கை ஒன்றின் ஊடாக இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளார். தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்வாதற்காக விண்ணப்பித்துள்ளவர்களின் பெயர், முகவரி, அடையாள அட்டை இலக்கம் என்பனவற்றுடன், புகைப்படத்துடன்கூடிய தேசிய அடையாள அட்டையின் தகவல்கள் அடங்கிய கடிதம் ஆட்பதித்வுத் திணைக்களத்தினால் விநியோகிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, வாக்களிக்கும்போது, வாக்குச்சீட்டில் தவறிழைக்கப்பட்டால், அதற்காக மற்றுமொரு வாக்குச்சீட்டு வழங்கப்பட மாட்டாது ...

Read More »

ஆஸ்திரேலியாவில் நடந்த சர்வதேச மாநாட்டில் தீவிரவாத நிதியை தடுக்க இந்தியா வலியுறுத்தல்!

தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டு பவர்களுக்கு எதிராக உலக நாடுகள் ஒன்றுபட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தி உள்ளது. ‘தீவிரவாதத்துக்கு நிதி இல்லை’ என்ற தலைப்பிலான மாநாடு ஆஸ்தி ரேலியா தலநகர் மெல்போர்னில் நடந் தது. தீவிரவாதிகளுக்கு நிதி கிடைப் பதைத் தடுக்க இந்தியா உட்பட 100-க்கும் மேற்பட்ட நாடுகளைக் கொண்ட ‘எக்மோன்ட் குழு’ என்ற அமைப்பு 1995-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. இந்த நாடுகளைச் சேர்ந்த ‘நிதி நுண்ணறிவுப் பிரிவுகள்’ சார்பில் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது. இம்மாநாட்டில் இந்தியா சார்பில் மத்திய ...

Read More »

ஐஸ்கிரீம் புகைப்படம் வெளியிட்டு மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பிரியங்கா சோப்ரா!

பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, ஐஸ்கிரீம் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு மீண்டும் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். நடிகை பிரியங்கா சோப்ரா சமீபத்தில் டெல்லி காற்று மாசுவால் கவலைப்பட்டு முகத்தில் முகமூடி அணிந்த புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். அதில் “காற்று மாசு ஏற்பட்டுள்ளதால் எப்படி வாழமுடியும். காற்று சுத்திகரிப்பும் முகமூடியும் நமக்கு தேவையாக இருக்கிறது. வீடு இல்லாதவர்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள்” என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த புகைப்படம் சர்ச்சையை ஏற்படுத்தியது. “புகைப்பிடிக்கும் உங்கள் வாய்க்கு முகமூடி போட்டது சரியான செயல்தான். காற்று மாசு ...

Read More »

விமானத்துக்கு வெடிகுண்டு வைப்பதாக அச்சுறுத்தல்! -தண்டனைக்காலம் குறைப்பு!

விமானத்தை வெடிகுண்டு வைத்து வெடிக்கச் செய்வதாக அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இலங்கைப் பிரஜையொருவின் விளக்கமறியல் காலம் குறைக்கப்பட்டுள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில் இருந்து கோலாலம்பூர் புறப்பட்ட மலேசிய விமானத்தில் மனோத் மார்க்ஸ் என்ற இலங்கையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கையில் வெடிகுண்டு போன்ற ஒரு பொருடன் விமானியின் அறைக்குள் அத்துமீறி நுழைய முயன்று, விமானத்துக்கு வெடிகுண்டு வைக்கப்போவதாக அச்சுறுத்தல் விடுத்தார். எனினும் சாதுரியமாக செயல்பட்ட பயணிகள் அந்த நபரை பிடித்து விமான ...

Read More »