தமிழில் பல படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை ஆண்ட்ரியா எழுதிய புக்கை வெளியிடாமல் தடுக்க மிரட்டல் விடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழில் ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, விஸ்வரூபம், அரண்மனை, உத்தம வில்லன், துப்பறிவாளன், வடசென்னை உள்பட பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருக்கும் ஆண்ட்ரியா சில மாதங்களுக்கு முன்பு நிகழ்ச்சியொன்றில் பேசும்போது, “திருமணமான ஒருவருடன் தகாத உறவு ஏற்பட்டு மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் துன்புறுத்தலுக்கு ஆளானேன் என்றும் இப்போது ஆயுர்வேத சிகிச்சை பெற்று மீண்டு வந்து இருக்கிறேன் என்றும் கூறினார்.
தன்னை மோசம் செய்தது யார்? என்ற தகவலை, தான் எழுதும் புத்தகத்தில் குறிப்பிட்டு இருப்பதாகவும் தெரிவித்தார். அந்த புத்தகம் சில வாரங்களுக்கு முன்பே வெளியாகும் என்று எதிர்பார்த்து இதுவரை வெளிவரவில்லை. புத்தகத்தை வெளியிடக் கூடாது என்று திருமணமான முன்னாள் காதலர் ஆண்ட்ரியாவை மிரட்டுவதாகவும் தகவல் வெளியானது.
அந்த நபர் அரசியலில் தொடர்பு உள்ளவர் என்றும் தற்போது சினிமாவில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. எதிர்ப்பை மீறி புத்தகத்தை வெளியிடும் முயற்சியில் ஆண்ட்ரியா ஈடுபட்டார். ஆனாலும் புத்தகம் வெளியாகவில்லை. அவருக்கு மீண்டும் மிரட்டல்கள் வந்து இருப்பதாக சமூக வலைத்தளத்தில் தகவல் பரவி வருகிறது.
Eelamurasu Australia Online News Portal