குமரன்

பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கும் பிரபல குழந்தை நட்சத்திரம்

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் பிரபல குழந்தை நட்சத்திரம் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘பொன்னியின் செல்வன்’ நாவலை இயக்குனர் மணிரத்னம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாக்கி வருகிறார். இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, அமிதாப்பச்சன், ஐஸ்வர்யாராய், பிரபு, நிழல்கள் ரவி, ரகுமான், விக்ரம் பிரபு, மலையாள நடிகர்கள் ஜெயராம், லால், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்திற்கு, ரவிவர்மன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். ரூ.800 கோடி செலவில் இரண்டு பாகங்களாக ...

Read More »

இடிபாடுகளுக்கு மத்தியில் ஒரு கையில் தொலைபேசி, மறுகையில் 3 பச்சிளம் குழந்தைகள்

பெய்ரூட்டின் விபத்து நடந்த பகுதிக்கு அருகில் இருந்த மருத்துவமனையில் கட்டிட இடிபாடுகளில் சிக்கிய 3 பச்சிளம் குழந்தைகளை காப்பாற்றிய பெண் செவிலியரின் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது. லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுகத்தில் நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 4) பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்து பெய்ரூட் நகரையே உருகுலைய செய்துள்ளது. வெடிவிபத்து நடந்த சிலவினாடிகளில் பெய்ரூட் துறைமுகப்பகுதி முழுவதும் ஆரஞ்சு நிறத்தில் புகைமண்டலமாக மாறியது. துறைமுகப்பகுதியில் உள்ள சேமிப்பு கிடங்கில் பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்பட்டிருந்த வெடிக்கக்கூடிய அமோனியம் நைட்ரேட் வேதிப்பொருளால் இந்த ...

Read More »

நேற்று பொதுத் தேர்தலின் போது வாக்களிப்பில் மோசடி!

இலங்கையில் 9 ஆவது நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் போது வாக்களிப்பில் மோசடி இடம்பெற்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி,  நேற்று  இடம்பெற்ற தேர்தலின் போது குறித்த நபரின் வாக்கை பிரிதொரு நபர் வாக்களித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. மொனராகல பஞ்ஞானந்த மகா வித்தியாலயாவில் உள்ள வாக்குச் சாவடி நிலையத்தில் வாக்களிக்கச் சென்ற வாக்காளர் ஒருவரின் வாக்குகள் ஏற்கெனவே வாக்களிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அத்துடன், தன்னுடைய வாக்களிக்கப்பட்டுள்ள போதிலும், அதனுடன் சம்பந்தப்பட்ட வாக்கு அட்டை மற்றும் அடையாள அட்டை இன்னும் தனது கையில் இருப்பதாக அவர் தெரிவித்தார். இந்நிலையில், ...

Read More »

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர் குடும்பத்தினர் மீது தாக்குதல் !

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திகாமடுல்ல மாவட்ட வேட்பாளரான இரா.சயனொளிபவன், அவரின் குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தேர்தலில் போட்டியிடும் விநாயகமூர்த்தி முரளிதரனின் கருணா குழுவினரே இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர். இரா.சயனொளி பவன் மற்றும் அவரது சகோதரர் மரண வீடு ஒன்றுக்கு சென்று திரும்பியபோதே அவர்களை வழிமறித்த கும்பல் தாக்குதலைநடத்தியது. இதில் வேட்பாளரின் சகோதரர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தத் தாக்குதலை நடத்திய சிலரை காவல் துறையினர்  கைது செய்துள்ளனர். வேறு சிலர் தப்பிச் சென்றுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது.

Read More »

வாக்களிப்பு பூர்த்தி – யாழில் 67.72 வீத வாக்குப் பதிவாகியது

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் சுமூகமான முறையில் பொதுத் தேர்தல் வாக்களிப்பு நிறைவடைந்த நிலையில் வாக்குப்பெட்டிகள் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் உள்ள வாக்குகள் எண்ணும் மத்திய நிலையத்துக்கு எடுத்து வரப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 4 லட்சத்து 79 ஆயிரத்து 848 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளார்கள். இவற்றில் தபால்மூல வாக்களிப்பு நீங்கலாக 4 லட்சத்து 58 ஆயிரத்து 345 வாக்காளர்களுக்காக 508 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்புகள் இடம்பெற்றன. அதில் தாபால் வாக்களிப்புடன் சேர்ந்து 67.72 சதவீத வாக்களிப்பு இடம்பெற்றுள்ளது.

Read More »

வெற்றியுடன் மீளுவோம் என்ற நம்பிக்கையில் காத்திருக்கின்றோம்- முன்னணி வேட்பாளர் வி.மணிவண்ணன்

வெற்றியுடன் மீளுவோம் என்ற நம்பிக்கையில் காத்திருக்கின்றோம் என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி வேட்பாளர் வி.மணிவண்ணண் தெரிவித்தார். நாடாளுமன்றத்தேர்தலில் போட்டியிடும் இவர் நல்லூரில் ஆலய தரிசனத்திலும், தியாகி திலீபனின் நினைவிடத்திலும் வழிபாடுகளை மேற்கொண்டு தனது வாக்கினை கொக்குவில் மேற்கு சி.சி.ரி.எம் பாடசாலை நிலையத்தில் பதிவு செய்து வந்த நிலையில் ஊடகங்களிற்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் நாம் எம்முடைய ஜனநாயக கடமையினை நிறைவு செய்துள்ளோம். வெற்றியுடன் மீளுவோம் என்ற நம்பிக்கையில் காத்துள்ளோம் என்றார். யாழ். சென் ஜேம்ஸ் பாடசாலையில் தமிழ்த்தேசிய மக்கள் ...

Read More »

லெபனான் சம்பவத்தில் இரு இலங்கையர் காயமடைந்துள்ளனர்

லெபனானின் தலைநகரத்தில் துறைமுகத்தை அண்மித்த பகுதியில் நேற்று (4) இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் இலங்கையர்கள் இருவர் காயமடைந்துள்ளனரென, லெபனானிலுள்ள இலங்கைத் தூதரகம் ​அறிக்கை வெளியிட்டுள்ளது. அத்துடன் இலங்கைத் தூதரகமும் சிறிதளவு ​சேதமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த வெடிப்புச் சம்பவத்தில் 100 பேர் உயிரிழந்துள்ளதுடன், 4,000க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் தூதரகம் தெரிவித்துள்ளது.​

Read More »

யாழ். தேர்தல் மாவட்டத்தில் கள்ளவாக்கு பதிவு

யாழ். தேர்தல் மாவட்டத்தில் உள்ள சாவகச்சேரி தொகுதியில் கள்ளவாக்கு பதிவு செய்யப்பட்டுள்ளமை தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் குறித்த தொகுதியில் வாக்களிக்க வந்தவர்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினரான சாவகச்சேரி நகரசபை தவிசாளர் சிவமங்கை இராமநாதனின் கணவர் இராமநாதன் சாவகச்சேரி இந்து ஆரம்பப் பாடசாலைக்கு வாக்களிக்கச் சென்றிருக்கின்றார். அங்கு அவர் ஏற்கனவே வாக்களித்தாக பதிவாகியிருப்பதாக அங்கிருந்த அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். இதனால் சம்பவம் தேர்தல்கள் திணைக்கள அதிகாரிகள், பொலிஸார் மற்றும் கட்சிப் பிரமுகர்கள் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதால் விசாரணைக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் பாரிய ...

Read More »

ஆஸ்திரேலிய கடல் கடந்த தடுப்பில் உள்ள அகதிகளின் நிலை என்ன?

பப்பு நியூ கினியா எனும் தீவு நாட்டில் செயல்பட்டு வரும் ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாமில் உள்ள அகதிகளின் பாதுகாப்பை ஆஸ்திரேலிய அரசு உறுதிச் செய்ய வேண்டும் என ஆஸ்திரேலிய மனித உரிமைகள் சட்ட மையம் வலியுறுத்தியுள்ளது. பப்பு நியூ கினியாவில் கொரோனா தொற்று பரவினால் அது அந்நாட்டில் உள்ள சுகாதார கட்டமைப்பை சீர்குலைக்கூடும் என பப்பு நியூ கினியாவின் பெருந்தொற்று கட்டுப்பாட்டாளர் எச்சரித்துள்ள நிலையில் அங்குள்ள அகதிகளின் நிலைக்குறித்து அச்சம் எழுந்துள்ளது. தற்போதைய நிலையில், பப்பு நியூ கினியாவில் உள்ள ஆஸ்திரேலிய ...

Read More »

வட இந்திய தொழில் அதிபரை காதலிக்கிறாரா ஜூலி?

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான நடிகை ஜூலி, வட இந்திய தொழில் அதிபரை காதலிப்பதாக வந்த செய்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமான ஜூலிக்கு பட வாய்ப்புகள் கிடைத்தன. பொல்லாத உலகில் பயங்கர கேம் படத்தில் நடித்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்குகிறார்.  இந்த நிலையில் ஜூலி வட இந்திய தொழில் அதிபர் ஒருவரை காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்ளாமல் அவரோடு சேர்ந்து வாழ்ந்து வருவதாகவும் சமூக வலைத்தளத்தில் தகவல் பரவியது. இதை பார்த்து அதிர்ச்சியான ஜூலி தனது டுவிட்டர் ...

Read More »