வாக்களிப்பு பூர்த்தி – யாழில் 67.72 வீத வாக்குப் பதிவாகியது

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் சுமூகமான முறையில் பொதுத் தேர்தல் வாக்களிப்பு நிறைவடைந்த நிலையில் வாக்குப்பெட்டிகள் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் உள்ள வாக்குகள் எண்ணும் மத்திய நிலையத்துக்கு எடுத்து வரப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 4 லட்சத்து 79 ஆயிரத்து 848 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளார்கள். இவற்றில் தபால்மூல வாக்களிப்பு நீங்கலாக 4 லட்சத்து 58 ஆயிரத்து 345 வாக்காளர்களுக்காக 508 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்புகள் இடம்பெற்றன.

அதில் தாபால் வாக்களிப்புடன் சேர்ந்து 67.72 சதவீத வாக்களிப்பு இடம்பெற்றுள்ளது.