Tag Archives: ஆசிரியர்தெரிவு

தமிழ் அகதி குடும்பத்துக்கு இணைப்பு விசா வழங்கிய ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாமில் பல ஆண்டுகள் கழித்த பிரியா- நடேசலிங்கம் எனும் இலங்கைத் தமிழ் அகதி குடும்பத்துக்கு இணைப்பு விசாக்களை வழங்கியுள்ளதாக ஆஸ்திரேலிய குடிவரவுத்துறை அமைச்சர் அலெக்ஸ் ஹாக் தெரிவித்திருக்கிறார். இதன் மூலம் பிரியாவும் நடேசலிங்கமும் வேலைச் செய்ய, கல்வி கற்க அனுமதிக்கப்படுவார்கள். இக்குடும்பத்துக்கு மருத்துவ உதவிகள், பிற உதவிகள் மட்டுமின்றி அவர்களது குழந்தைகளுக்கு கல்வி உதவியும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More »

அகதியாக ஆஸ்திரேலியா சென்று பேருந்து ஓட்டும் தமிழ்ப்பெண்

ஈழத்தில்  இருந்து அகதியாகச் சென்ற பருத்தித்துறையைச்  சேர்ந்த பெண் ஒருவர் அவுஸ்ரேலியா நாட்டில் பொதுப் போக்குவரத்து சாரதியாக பணிபுர்ந்து வருவது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. பருத்தித்துறையைச் சேர்ந்த சோதிகா ஞானேஸ்வரன் என்பவரே இவ்வாறு பணிபுரிந்து வருகிறார். பெற்றோர்கள் இல்லாத நிலையில் அவரின் திருமண வாழ்கையும் 3 வருட காலத்தில் முறிவடைந்த நிலையில் தனது 3 வயதுக் குழந்தையுடன் கடல் மார்க்கமாக அவுஸ்ரேலியாவிற்குச் சென்றுள்ளார். அவுஸ்ரேலியாவில் 5 வருடங்கள் கழித்து விசா கிடைத்ததும் தனது கையில் கிடைக்கும் வேலைகளைச் செய்து பணம் சாம்பாதித்தார். அதன் ...

Read More »

ஆஸ்திரேலியாவில் குடியேறுவதற்கான தொழிற்பட்டியலில் புதிதாக 22 தொழில்கள் இணைப்பு!

ஆஸ்திரேலியாவில் குடியேறுவதற்கான Priority Migration Skilled Occupation List (PMSOL)- முன்னுரிமை  அடிப்படையிலான தொழிற்பட்டியலில் புதிதாக 22 தொழில்கள் இணைக்கப்பட்டுள்ளதாக குடிவரவு அமைச்சர் Alex Hawke இன்று அறிவித்தார். இதையடுத்து Priority Migration Skilled Occupation List-இல் உள்ள மொத்த தொழில்களின் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது. Priority Migration Skilled Occupation List என்பது மிக அத்தியாவசிய தொழில்துறைகளுக்கான பணியாளர்களை  முன்னுரிமை அடிப்படையில் ஆஸ்திரேலியாவுக்கு வரவழைப்பதற்கான பொறிமுறையாகும். Priority Migration Skilled Occupation List-இல் புதிதாக சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ள தொழில்களின் விவரங்கள் வருமாறு: Accountant ...

Read More »

ராணாவை நாடு கடத்தும் வழக்கில் நாளை நேரடி விசாரணை

மும்பை தாக்குதல் குற்றவாளி ராணாவும் அவருடைய நண்பரும், கனடா குடியுரிமை பெற்ற பாகிஸ்தான் தொழிலதிபருமான தஹாவுர் ராணாவுக்கும் இவ்வழக்கில் தொடர்புள்ளது. கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம், மும்பையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 6 அமெரிக்கர்கள் உள்பட 166 பேர் பலியானார்கள். இதில் முக்கிய குற்றவாளியான ஹெட்லி, அமெரிக்காவில் பிடிபட்டார். அவர் அப்ரூவராக மாறி, சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார். அவருடைய நண்பரும், கனடா குடியுரிமை பெற்ற பாகிஸ்தான் தொழிலதிபருமான தஹாவுர் ராணாவுக்கும் இவ்வழக்கில் தொடர்புள்ளது. அவர் இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்தியாவின் ...

Read More »

தமிழ் மக்களுடைய நில உரிமையைப் பறித்தெடுக்கப்படுகிறது!

இந்த அரசு மேற்கொள்கின்ற அனைத்து விதமான செயற்பாடுகளும் இறுதியிலே தமிழ் மக்களுடைய நில உரிமையைப் பறித்தெடுப்பதாகத்தான் இருக்கின்றதே தவிர தமிழ் மக்களுடைய நில உரிமையை உறுதிப்படுத்துவதாக இல்லை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார். நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனம் தொடர்பான சட்டமூல விவாதத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனம் தொடர்பான சட்டமூல விவாதம் இங்கு இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த ...

Read More »

பயங்கரவாத தடைச்சட்டத்தில் மாற்றங்கள்…..

பயங்கரவாத தடைச்சட்டத்தில் மாற்றங்களை மேற்கொள்வது குறித்து அமைச்சரவை ஆராய்ந்தது என நீதியமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். நாங்கள் இது குறித்து ஆராய்நது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தாத விதத்தில் மாற்றங்களை மேற்கொள்வோம் என நீதியமைச்சர் தெரிவித்துள்ளார். இன மதங்களை கருத்தில்கொள்ளாமல் அனைவரும் இலங்கையர்கள் என்ற அடிப்படையில் நாங்கள் தீர்வை வழங்க முயல்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.

Read More »

வடகொரியாவில் கரோனா இல்லையா? –

வடகொரியாவில் ஜூன் 10 -ம் தேதி வரை நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனைகளில் யாருக்கும் கரோனா வைரஸ் உறுதிப்படுத்தப்படவில்லை என்று உலக சுகாதார அமைப்பிடம் அந்நாடு தெரிவித்துள்ளது. ஆனால் இதில் உண்மை இல்லை என தற்போது தெரிய வந்துள்ளது. ஜூன் மாதம் 10 ஆம் தேதிவரை சுமார் 30,000 பேருக்கு நடத்தப்பட்ட கரோனா பரிசோதனைகளில் யாருக்கும் தொற்று ஏற்படவில்லை என உலக சுகாதார அமைப்புக்கு அளித்த அறிக்கையில் வடகொரியா சமீபத்தில் தெரிவித்திருந்தது. ஆனால் உலக சுகாதார அமைப்பின் கண்காணிப்பு குழு வெளியிட்ட அறிக்கையில், “ 733 ...

Read More »

ஆஸ்திரேலி தடுப்பு முகாமில் உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அகதிகள்

ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு மருத்துவ சிகிச்சைக்கு என அழைத்துச் செல்லப்பட்ட அகதிகள் தாங்கள் சிறைவைக்கப்பட்டிருப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மெல்பேர்ன் குடிவரவுத் தடுப்பு முகாமில் உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் மனுஸ் மற்று நவுருத்தீவுகளிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்ட அகதிகள் எனக் கூறப்படுகின்றது. “நாங்கள் இங்கு மருத்துவ சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டோம். ஆனால் எந்த காரணமுமின்றி எங்களைத் தடுப்பிலேயே வைத்திருக்கின்றனர்,” என ஓர் அகதி தெரிவித்திருக்கிறார்.

Read More »

தேர்தலை பிற்போட வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு கிடையாது!

மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கான பாதுகாப்பான சூழல் தற்போது கிடையாது. நல்லாட்சி அரசாங்கத்தில் மாகாணசபை தேர்தலை விரைவாக நடத்துவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை. பிரதான எதிர்க்கட்சியாக செயற்பட்ட தமிழ் ; தேசிய கூட்டமைப்பு அக்காலக்கட்டத்தில் தேசிய பிரச்சினைகள் குறித்து அக்கறை கொள்ளவில்லை என ; உள்ளுராட்சி மற்றும் ; மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்தார். ;இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், அரசாங்கம் மாகாண சபை தேர்தலை விரைவாக நடத்த வேண்டும். அதற்கு இந்தியா அழுத்தம் ...

Read More »

சீனாவில் 100 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி

பொது மக்களுக்கு தடுப்பூசியை செலுத்துவதில் சீனா தீவிரம் காட்டி வருகிறது. கொரோனா என்ற பெரும் தொற்று சீனாவில் உருவானது. தற்போது உலக நாடுகளை ஆட்டிப்படைத்து வருகிறது. இந்த நிலையில் பொது மக்களுக்கு தடுப்பூசியை செலுத்துவதில் சீனா தீவிரம் காட்டி வருகிறது. இதையும் படியுங்கள்…. கொரோனாவின் அடுத்த எழுச்சியைத் தடுக்க தடுப்பூசி போடுவதை துரிதப்படுத்துங்கள்- உலக சுகாதார அமைப்பு வேண்டுகோள் இதுவரை சீனாவில் 100 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று அந்த நாட்டு சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது .என்றாலும் முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் ...

Read More »