பயங்கரவாத தடைச்சட்டத்தில் மாற்றங்கள்…..

பயங்கரவாத தடைச்சட்டத்தில் மாற்றங்களை மேற்கொள்வது குறித்து அமைச்சரவை ஆராய்ந்தது என நீதியமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள் இது குறித்து ஆராய்நது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தாத விதத்தில் மாற்றங்களை மேற்கொள்வோம் என நீதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

இன மதங்களை கருத்தில்கொள்ளாமல் அனைவரும் இலங்கையர்கள் என்ற அடிப்படையில் நாங்கள் தீர்வை வழங்க முயல்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.