அகதியாக ஆஸ்திரேலியா சென்று பேருந்து ஓட்டும் தமிழ்ப்பெண்

ஈழத்தில்  இருந்து அகதியாகச் சென்ற பருத்தித்துறையைச்  சேர்ந்த பெண் ஒருவர் அவுஸ்ரேலியா நாட்டில் பொதுப் போக்குவரத்து சாரதியாக பணிபுர்ந்து வருவது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

பருத்தித்துறையைச் சேர்ந்த சோதிகா ஞானேஸ்வரன் என்பவரே இவ்வாறு பணிபுரிந்து வருகிறார்.
பெற்றோர்கள் இல்லாத நிலையில் அவரின் திருமண வாழ்கையும் 3 வருட காலத்தில் முறிவடைந்த நிலையில் தனது 3 வயதுக் குழந்தையுடன் கடல் மார்க்கமாக அவுஸ்ரேலியாவிற்குச் சென்றுள்ளார்.
அவுஸ்ரேலியாவில் 5 வருடங்கள் கழித்து விசா கிடைத்ததும் தனது கையில் கிடைக்கும் வேலைகளைச் செய்து பணம் சாம்பாதித்தார்.
அதன் பின்னர் ஈழத்தில்  இருக்கும் போது சாரதி பயிற்சி பற்றி அறியாதிருந்தவர் அவுஸ்ரேலியாவில் சாரதி பயிற்சி பெற்று தற்போது அங்கு பொதுப் போக்குவரத்தில் சாரதியாகவும் பணிபுரிகிறா