Tag Archives: ஆசிரியர்தெரிவு

மல்லாகம் துப்பாக்கிச் சூடு! மனித உரிமை ஆணைக்குழு நேரடி விசாரணை!

யாழ்ப்பாணம், மல்லாகம் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக, யாழ்ப்பாணம் மாவட்ட மனித உரிமை ஆணையாளர் கனகராஜ் தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்துக்கு தற்போது நேரடியாகச் சென்று விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட பா.சுதர்சனின் உறவினர்களிடமும், சம்பவத்தை நேரில் கண்ட சிலரிடமும் அவர்கள் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர். மல்லாகம் சகாய மாதா ஆலயம் முன்பாக நேற்று(17) இரவு இந்தச் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றது. தற்போது அந்தப் பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. காவல் துறையினர்   பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

Read More »

வடகொரியாவுடனான பேச்சுவார்த்தை முறிந்துபோனால் அடுத்தது என்ன?

வடகொரியாவுடனான பேச்சுவார்த்தை முறிந்துபோனால் தென் கொரியாவுடன் ராணுவ ஒத்திகைகள் தொடங்கும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். கொரிய தீபகற்பத்தில் போர்பதற்றத்தை உருவாக்கி வந்த வடகொரிய தலைவர் தனது அணு ஆயுத திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததுடன், அமெரிக்காவுடன் சமாதான பேச்சுவார்த்தைக்கும் முன்வந்தார். அதன்படி ஜூன் 12ம் திகதி சிங்கப்பூரில் இரு நாட்டு தலைவர்களின் சந்திப்பு நடைபெற்றது. சமரச ஒப்பந்தமும் ஏற்படுத்தப்பட்டது. அப்போது வடகொரியாவில் உள்ள அணுஆயுதங்கள் அனைத்தையும் அழித்து விடுவதாக கிம் ஜாங் அன் ஒப்புதல் தெரிவித்திருந்தார். வடகொரியா அணு ஆயுதங்களை முழுமையாக அழித்தால் ...

Read More »

கார்கில் போரில் வீர மரணமடைந்த விக்ரம் பத்ராவின் கதையில் சித்தார்த் மல்ஹோத்ரா

கார்கில் போரில் மரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர் விக்ரம் பத்ரா குறித்த வாழ்க்கை வரலாறு பாலிவுட்டில் திரைப்படமாக உருவாக உள்ளது. 1999 ஆம் ஆண்டு இந்தியா – பாகிஸ்தான் இடையே நடந்த கார்கில் போரில் பாகிஸ்தான் ராணுவ வீரர்களுடன் துணிச்சலாகப் போரிட்டு தங்கள் உயிரை இழந்த இந்திய வீரர்களில் ஒருவர்தான் 24 வயதான கேப்டன் விக்ரம் பத்ரா. கார்கில் போரில் மரணம் அடைந்த விக்ரம் பத்ராவுக்கு பரம் வீர் சக்ரா விருது வழங்கி மத்திய அரசு கவுரவித்தது. தற்போது விக்ரம் பத்ராவின் வாழ்க்கைவரலாறு ...

Read More »

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து அணி வெற்றி!

ஜேஸன் ராயின் முத்தாய்ப்பான சதம், பட்லரின் அதிரடி ஆட்டம் ஆகியவற்றால், கார்டிப்பில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் ஆட்டத்தில் 38 ரன்களில் வெற்றிபெற்றது இங்கிலாந்து அணி. சதம் அடித்து அசத்திய ஜேஸன் ராய் ஆட்டநாயகராக தேர்வு செய்யப்பட்டார். ஆஸ்திரேலிய அணிக்கு புதிய பயிற்சியாளராக ஜஸ்டின் லாங்கர் பொறுப்பேற்றபின் அந்த அணி சந்திக்கும் 2-வது தோல்வியாகும். இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலை வகிக்கிறது. வரும் செவ்வாய்கிழமை நாட்டிங்ஹாமில் நடக்கும் 3-வது போட்டியில் இங்கிலாந்து ...

Read More »

நியூசிலாந்து செல்லும் அவுஸ்திரேலியர்களுக்கு வரி விலக்களிப்பு!

நியூசிலாந்து செல்லும் சுற்றுலாப் சுற்றுலாப் பயணிகளிடமிருந்து NZ$25 – NZ$35 வரையிலான தொகையை வரியாக அறவிட நியூசிலாந்து அரசு தீர்மானித்துள்ளது. ஆனால் அவுஸ்திரேலியர்களுக்கு இதிலிருந்து விலக்களிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை அடுத்த ஆண்டு பிற்பகுதியிலிருந்து இம் முறையானது நடைமுறைக்கு வருகிறது என கூறப்படுகிறது. அவுஸ்திரேலிய குடியுரிமை மற்றும் நிரந்தர வதிவிட உரிமை உள்ளவர்களுக்கும் Pacific Islands Forum நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கும் இரண்டு வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கும் இதிலிருந்து விலக்களிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவ்வாண்டு ஆரம்பம் முதல் ஏப்ரல் வரை 3.8 மில்லியன் சுற்றுலாப்பயணிகள், நியூசிலாந்துக்கு சென்றுள்ளனர். இதில் ...

Read More »

காணாமல் ஆக்கப்பட்ட 500பேரின் பட்டியலை ஐ.நா வெளியிட்டது!

இலங்கை யுத்தத்தின்போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட 500 பேர் பற்றிய பட்டியலை ஐக்கிய நாடுகள் சபையின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான குழு வெளியிட்டுள்ளது. இப் பட்டியலில் குறிப்பிட்ட காணாமல் ஆக்கப்பட்ட நபர்கள் தொடர்பில் இலங்கை அரசு, விரைவான நடவடிக்கைகளை முன்னெடுத்தல், அவர்களைக் கண்டுபிடித்தல் மற்றும் பாதுகாத்தலை ஐநா வலியுறுத்துவதாக காணாமலாக்கப்பட்டோருக்கான ஐக்கிய நாடுகள் சபையின் குழுவின் தலைவர் சுயெலா ஜனினா கூறியுள்ளார். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் ஒவ்வொரு நொடியும் கலக்கத்தில் இருப்பதாகவும் அவர்களது நிலமையை கருத்தில் கொண்டு விரைவான நடவடிக்கைக்காக காணாமல் ஆக்கப்பட்டடவர்களின் ...

Read More »

கா.போ. பணியகத்தின் உறுப்பினர்கள் யாழ்,கிளி களப் பயணம்!

காணாமல்போனோர் பணியகத்தின் உறுப்பினர்கள் அடுத்த மாதம் 13, 14ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களுக்கு களப் பயணம் மேற்கொள்ளவுள்ளனர். காணாமல்போனவர்களின் உறவினர்களை நேரில் சந்தித்துக் கலந்துரையாடுவதற்கும், சாட்சியங்களைப் பதிவுசெய்வதற்காகவுமே இந்த அமர்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பணியக உறுப்பினர்கள் கடந்த மாதம் 12ஆம் திகதி மன்னாரில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுடன் முதலாவது கலந்துரையாடலை நடத்தினர். அதன்பின்னர் மாத்தறை, திருமலை ஆகிய மாவட்டங்களிலும் அமர்வுகள் நடத்தப்பட்ட நிலையிலேயே 4ஆம், 5ஆம் கட்ட அமர்வுகள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் இடம்பெறவுள்ளன. இதுவரை இடம்பெற்ற அமர்வுகளின்போது பெறப்பட்ட தகவல்களையும், ...

Read More »

சவாலான வேடங்களை விரும்பும் சமந்தா!

சமந்தா திருமணத்துக்கு பிறகும் சுறுசுறுப்பாக நடிக்கிறார். அவரது நடிப்பில் இரும்புத்திரை, நடிகையர் திலகம், தெலுங்கில் ரங்கஸ்தலம் படங்கள் வந்து வரவேற்பை பெற்றன. சிவகார்த்திகேயனுடன் சீமராஜா, விஜய்சேதுபதியுடன் சூப்பர் டீலக்ஸ் படங்கள் கைவசம் இப்போது உள்ளன. கன்னடத்தில் வெற்றி பெற்ற ‘யுடர்ன்’ படத்தின் தமிழ், தெலுங்கு பதிப்புகளிலும் நடிக்கிறார். சமந்தா விரும்பும் கதாபாத்திரங்கள் குறித்து சொல்கிறார்:– “திருமணத்துக்கு பிறகு மகிழ்ச்சியாக இருக்கிறேன். படவாய்ப்புகளும் வருகிறது. முன்பு மாதிரி இல்லாமல் சவாலான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புகிறேன். அதுமாதிரியான கதைகளையும் தேடுகிறேன். வித்தியாசமான வேடத்தில் நடிப்பதுதான் எனது லட்சியமும்கூட. ...

Read More »

நாவற்குழி இளைஞர்களை காணாமல் ஆக்கிய மேஜர் ஜெனரலுக்கு முக்கிய பதவி!

சிங்கப் படைப்பிரிவைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் துமிந்த கெப்பிட்டிவலன்ன, சிறிலங்கா இராணுவத் தலைமையகத்தின், காலாட்படையின் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று கொழும்பில் உள்ள காலாட்படை பணிப்பாளர் நாயகத்தின் பணியகத்தில் இவர் தனது பணிகளைப் பொறுப்பேற்றுள்ளார். இந்த நிகழ்வில் காலாட்படை பணிப்பாளர் பிரிகேடியர் தேசப்பிரிய குணவர்த்தன மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.காலாட்படை பணியக பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ள, மேஜர் ஜெனரல் துமிந்த கெப்பிட்டிவலன்ன முன்னர் 66 ஆவது டிவிசனின் கட்டளை அதிகாரியாக பணியாற்றியவர். இதன்போது, யாழ்ப்பாண மேல் நீதிமன்றத்தில், தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனுக்களில் இவர் பிரதான ...

Read More »

போர்க்குற்றவாளிகளில் ஒருவர் விரைவில் ஓய்வு!

இறுதிக்கட்டப் போரில் முக்கிய பங்காற்றியவரும், போர்க்குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டவரும், போருக்குப் பின்னர் சர்ச்சைக்குரிய ஒருவராகவும் இருந்த மேஜர் ஜெனரல் சாஜி கல்லகே சிறிலங்கா இராணுவத்தில் இருந்து ஓய்வு பெறவுள்ளார். வன்னியில் இறுதிக்கட்டப் போரில், 58 ஆவது டிவிசனின் கீழ் கொமாண்டோ படைப்பிரிவுகளை வழி நடத்தியவர் மேஜர் ஜெனரல் சாஜி கல்லகே. போரின் இறுதிக்கட்டத்தில், 59 ஆவது டிவிசனின் கட்டளை அதிகாரியாகவும் பணியாற்றினார். போரில் போது இடம்பெற்ற மீறல்களுக்குப் பொறுப்புக்கூற வேண்டிய அதிகாரிகளின் வரிசையில் முக்கியமான ஒருவராக இடம்பிடித்திருந்த இவருக்கு எதிராக, பிரித்தானியாவில் சட்ட நடவடிக்கைகளை எடுக்க ...

Read More »