Tag Archives: ஆசிரியர்தெரிவு

இன்று தேர் ஏறி வருகிறாள் நயினை நாக ­பூ­சணி!

வர­லாற்­றுச் சிறப்­பு­மிக்க நயினாதீவு நாக­பூ­சணி அம்­மன் ஆல­யத் தேர்த் திரு­விழா இன்று நடை­பெ­ற்றது. காலை 7 மணிக்கு வசந்த மண்­ட­பப் பூசை நடை­பெற்று, காலை 8.15 மணிக்கு அம்­மன் தேரில் எழுந்­த­ரு­ளினார். பிற்­ப­கல் 4 மணிக்கு பச்சை சாத்­தும் பூசை இடம் பெற்று அம்­மன் ஆல­யத்­துக்­குள் எழுயந்­த­ரு­ளு­வார். நாளை வியா­ழக்­கி­ழமை காலை 5.30 மணிக்கு தீர்த்த திரு­வி­ழா­வுக்­காக வசந்த மண்­டப பூசை­கள் ஆரம்­ப­மா­கும். காலை 8.30 மணி தொடக்­கம் 10 மணி தீர்த்த பூசை­கள் நடை­பெ­றும்.

Read More »

புலத்தில் இருந்து தாயகம் திரும்பி சிறுவன் விபத்தில் பலி!

மட்டக்களப்பு – கிரான் பகுதியில் நேற்று முன் இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் பிரான்சில் இருந்து தாயகம் திரும்பிய 12வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், இந்த விபத்தில் உயிரிழந்த சிறுவனின் சகோதரன் மற்றும் அவருடைய தந்தை ஆகியோர் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காத்தான்குடியிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த இரவுநேரப் பேருந்தும், கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி சென்ற வானும் நேருக்கு நேர் மோதிக்கொண்டமையினால் இந்த விபத்து ஏற்பட்டிருந்தது. இதில் வானின் சாரதியான கல்லடி நொச்சிமுனையைச் சேர்ந்த பாலச்சந்திரன் ...

Read More »

படகுகளில் வருவோரை தடுக்க அவுஸ்திரேலியா அதிரடி நடவடிக்கை!

அவுஸ்திரேலியாவுக்குள் சட்டவிரோதமாக படகுகளில் வருவோரை தடுப்பதற்கு புதிய யுக்தி ஒன்றினை அவுஸ்திரேலியா கையாளவுள்ளது. கடல் எல்லையைப் பாதுகாக்கும் நோக்கில் Triton drones என்று பெயரிடப்பட்டிருக்கும் ஆளின்றி பறக்கும் அதிநவீன போர் விமானங்களை அவுஸ்திரேலிய அரசு வாங்கவுள்ளது. இந்த ஆளின்றி பறக்கும் அதிநவீன போர் விமானத்தின் மூலம் புகலிடம் கோருவோரை ஏற்றிவருத் படகுகள் அவுஸ்திரேலிய கடல் எல்லைக்குள் வரும் முன்பே கண்டறிந்துவிட முடியும் என கூறப்படுகிறது. அமெரிக்காவின் ஆயுத மற்றும் வான்வழி போர் தளபாடங்களை தயாரிக்கும் Northrop Grumman Corporation எனும் நிறுவனத்திடமிருந்து அவுஸ்திரேலியா அரசு ...

Read More »

ஐஸ்வர்யா ராயின் மகள் வருங்கால பிரதமரா ?

அமிதாப் பச்சனின் பேத்தியும், ஐஸ்வர்யாராயின் மகளும் ஆன ஆர்த்யா இந்தியாவின் வருங்கால பிரதமராக வருவார் என பிரபல ஜோதிடர் கியானேஷ்வர் கணித்துள்ளார். 2018ஆம் ஆண்டின் புதிய ஜோதிட கணிப்புகளை வெளியிட்டுள்ள கியானேஷ்வர், ஐஸ்வர்யாராயின் மகள் ஆர்த்யா தனது பேரை ரோகினி என மாற்றிக்கொண்டார் என்றால் அவர் இந்தியாவின் வருங்கால பிரதமராக வருவார் என கணித்துள்ளார். இவர் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி மற்றும் நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் அரசியலுக்கு வருவார்கள் என ஏற்கெனவே துல்லியமாக கணித்துவர். அத்துடன் 2009ஆம் ஆண்டு ஆந்திராவில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியை ...

Read More »

ரெலோ அமைப்பின் ஆயுதக் குவியல் ரமேஸ்வரத்தில் கண்டுபிடிப்பு!

ராமேஸ்வரம் அருகே கைப்பற்றப்பட்ட துப்பாக்கி குண்டுகள், வெடிகுண்டுகள் தமிழ்ஈழ விடுதலை இயக்கம் பதுக்கியது என தெரிய வந்ததால் டெல்லி, சென்னையைச் சேர்ந்த புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்த ராமேசுவரம் விரைந்துள்ளனர். ராமேசுவரம் அருகே கடற்கரை கிராமமான தங்கச்சி மடத்தில் ஆயுத குவியல் சிக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தமிழ்ஈழ விடுதலை இயக்கம் பதுக்கியது என தெரிய வந்ததால் டெல்லி மற்றும் சென்னையைச் சேர்ந்த புலனாய்வு அதிகாரிகள் மேல் விசாரணை நடத்த ராமேசுவரம் விரைந்துள்ளனர். தங்கச்சி மடத்தைச் சேர்ந்த மீனவர் எடிசன் என்பவரது ...

Read More »

யாழில் மீண்டும் கிட்டுப்பூங்கா!

யாழில் நல்லூர்க் கந்தன் ஆலயத்திற்கு பின்புறமாக காணப்படும் தீயாக தீபம் தீலபனின் சிலையை மீளவும் அதே இடத்தில் நிறுவுவதற்கும் யாழ் மாநகர சபைக்குட்பட்ட சங்கிலியன் பூங்காவாகவுள்ள கிட்டு  பூங்காவை மீளவும் கிட்டுப் பூங்கா என பெயர் மாற்றுவதற்கும் நாவாந்துறையில் அமைக்கப்பட்டிருந்த மாவீரர் நினைவுத் தூபியை நிறுவுவதற்கும் யாழ் மாநகர சபையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ் மாநகர சபையின் அமர்வு இன்றைய தினம் நடைபெற்ற போதே மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தற்போது சங்கிலியன் பூங்கா என அழைக்கப்படும் கிட்டுப் புங்காவை மீளவும் கிட்டுப் பூங்கா என பெயர் ...

Read More »

மைதானத்தினுள் நுழைந்து கால்பந்து விளையாடிய கங்காரு!

ஆஸ்திரேலியா தலைநகர் கான்பெராவில் நேற்று பெண்களுக்கான கால்பந்து பிரீமியர் லீக் போட்டி நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது திடீரென கங்காரு ஒன்று மைதானத்துக்குள் நுழைந்தது. அதனை கண்ட அனைவரும் மைதானத்தை விட்டு வெளியேறினர். கங்காரு மைதானத்தை குதித்து குதித்து சுற்றி வந்தது. பின்னர் கங்காருவிடம் பந்தை எறிந்தனர். கங்காரு அந்த பந்துகளை காலால் எட்டி உதைத்தது. அதன் பின் மைதானத்தை சுற்றி வந்தது. இதனால் போட்டி 20 நிமிடம் தாமதமானது. இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் கங்காருவை வானில் ஏற்றி அழைத்து சென்றனர். ...

Read More »

மேசையுடன் கூடிய புத்தகப் பை!

பள்ளி குழந்தைகள், தங்கள் முதுகில் சுமந்து செல்லும் வகையில், எடை குறைவான, சிறிய மேசையுடன் கூடிய, ‘ஸ்கூல் பேக்’கை, கான்பூர், ஐ.ஐ.டி.,யில் படித்த மாணவர், உருவாக்கி சாதனை படைத்துள்ளார். உ.பி., மாநிலம், கான்பூரில் உள்ள, ஐ.ஐ.டி., எனப்படும், இந்திய தொழில்நுட்ப மையத்தில் படித்த மாணவர், ஈஷான் சதாசிவன், 27.இவர், பள்ளி குழந்தைகள் பயன்படுத்தக்கூடிய, சிறிய மேசை இணைக்கப்பட்ட, ஸ்கூல் பேக்கை உருவாக்கி உள்ளார். 680 கிராம் எடையுள்ள இந்த பேக்கின் விலை, 400 ரூபாய் மட்டுமே. இந்த பேக்கில், இலகு வகை டியூப்களால் ஆன, ...

Read More »

“ எனது கணவர் விடுதலைப்புலிகளின் உளவாளி என மிரட்டல் விடுக்கின்றனர்“!

ஊடகவியலாளர் பிரகீத்எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொட தான் புதிதாக அச்சுறுத்தல்களையும் மிரட்டல்களையும் எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளார் ஞானசார தேரர் விவகாரம் தொடர்பிலேயே தனக்கு மிரட்டல்கள் விடுக்கப்படுவதாக தெரிவித்துள்ள அவர் சமூக ஊடகங்கள் ஊடாகவே அதிக அச்சறுத்தல்கள் விடுக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். முகநூல்  ஊடாக நாளாந்தம் அச்சுறுத்தல்களும் கொலைமிரட்டல்களும் விடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். உண்மையை அறியாமல் விபரங்களை அறிந்துகொள்ளாமல் மக்கள் என்னையும் எனது பிள்ளைகளையும் உளவியல் ரீதியில் சித்திரவதை செய்கின்றனர் என சந்தியா தெரிவித்துள்ளார். பொதுபலசேனாவின் ஞானசார தேரர் விவகாரத்திற்கு பின்னர் அடையாளம் தெரியாத முகப்புத்தக பயனாளர்கள் மரண ...

Read More »

அவுஸ்திரேலியாவுக்குள் அழைத்து வரப்பட்ட நவுறு அகதி!

நவுறு அகதி ஒருவர் அவுஸ்திரேலியாவுக்குள் அழைத்து வரப்பட்டுள்ளார். palliative care எனப்படும் நோய்த்தணிப்பு நிவாரணத்தைப் பெறுவதற்காக நவறு அகதி ஒருவருக்கு அவுஸ்திரேலியா வர அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அவர் அவுஸ்திரேலியாவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளார். பல தரப்புக்களிலிருந்தும் வந்த அழுத்தங்களை அடுத்தே நவுறு அகதியை அவுஸ்திரேலியா அழைத்துவர அரசு அனுமதி வழங்கியுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. தஞ்சம் கோரி வந்த ஆப்கான் ஹஸரா பின்னணி கொண்ட 63 வயதான ஆண் ஒருவர் நாட்பட்ட நுரையீரல் புற்றுநோயால் அவதிப்பட்டு வருகிறார். மேலும் இவர் சில மாதங்களே உயிர்வாழ்வார் என்று ...

Read More »