Tag Archives: ஆசிரியர்தெரிவு

மீள் குடியேறியுள்ள முள்ளிக்குள மக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும் அதிகாரிகள்!

மீள் குடியேறியுள்ள முள்ளிக்குளம் கிராம மக்கள் தற்போது தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தமது குடியிருப்பில் இருந்து சுமார் ஒரு கிலோ மிற்றர் தொலைவில் உள்ள ஆற்றில் மீன் பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற போதும், அப்பகுதியில் உள்ள வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் பல்வேறு அசௌகரியங்களை ஏற்படுத்துவதாக முள்ளிக்குளம் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். முள்ளிக்குளம் கிராம மக்கள் பல வருடங்களாக குறித்த ஆற்றில் மீன் பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக மீன் பிடித்தல்,மட்டி மற்றும் குவாட்டி போன்றவற்றை பிடித்து தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்தி ...

Read More »

பைலட் பிக்சிங் எரேசபில் பென் (Pilot Fixing Erasable Pen)

பைலட் பிக்சிங் எரேசபில் பென். இந்த வகை பென் மாணவர்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். பொதுவாக மாணவர்கள் தேர்வு நேரங்களில் எழுதிக்கொண்டு இருக்கும் பொழுது தவறு எதும் வரமால் எழுதுவதற்கு மிகவும் கவனமுடன் செயல்படுவார்கள். அப்பொழுது எழுதிக்கொண்டு இருக்கும் பொழுது ஏதேனும் தவறாகிவிட்டல் ஏதேனும் ஒரு ரப்பரை கொண்டு அதனை அழித்து திருத்துவார்கள். ஆனால், அழித்த இடத்தில் பேப்பர் சற்று அழுக்காகலாம் அல்லது சில நேரங்களில் சேதமடைந்து துளை விழலாம். இது. பார்ப்பவர் கண்களுக்கு குறிப்பாக விடைத்தாளை திருத்தும் ஆசிரியருக்கு சற்று அதிருப்தியைத் ...

Read More »

7000 அபாயகர வெடிபொருட்கள் அகற்றல்!

கிளிநொச்சி மாவட்டத்தில் பளைப்பகுதியில் ஜப்பான் நாட்டு நிதியுதவியுடன் இயங்கி வரும் ஸார்ப் மனிதாபிமானக் கண்ணிவெடியகற்றும் அரச சார்பற்ற நிறுவனமானது 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடக்கம் 2018 ஆகஸ்ட் மாதம் 15ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 7147 அபாயகரமான வெடிப்பொருட்களை அகற்றியுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள அம்பகாமம் மற்றும் தச்சடம்பன் பகுதியிலும்; ,கிளிநொச்சி மாவட்டத்தில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள முகமாலையிலும் ஜந்து இலட்சத்து தொண்ணூற்றேழாயிரத்து நூற்றியேழு சதுரமீற்றர் பரப்பளவில் (597,107) இருந்து ஏழாயிரத்து நூற்று ...

Read More »

ஜனவரி மாதம் 7 மாகாணங்களுக்கான தேர்தலை நடத்த முடியும்!

நடைமுறையில் காணப்படுகின்ற மாகாண சட்ட திட்டங்கள் ஊடாக செயற்பட்டால் மாத்திரமே ஜனவரி மாதம் 7 மாகாணங்களுக்கான தேர்தலை நடத்த முடியும். எனவே நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த விடயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க தேசிய அரசாங்கம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தேர்தல்களை ஒத்திவைக்கும் நிலைப்பாட்டில் இல்லை எனவும் தெரிவித்துள்ளார். ஜனவரி 5 ஆம் திகதி 7 மாகாணங்களுக்கான தேர்தலை நடத்துவது குறித்து அரசாங்கம் அறிவித்தல் விடுத்திருந்தது. ஆனால் தேர்தல் முறைமை குறித்து அறிவிக்கப்படாத நிலையில் கட்சி ...

Read More »

பி.யு.பி. (PUP) ஸ்கேனர்!

நாம் பொதுவாக ஆவணங்களை ஸ்கேன் செய்வதற்கு பெரிய ஸ்கேனிங் இயந்திரம் தேவைப்படும். அதுவும் நாம் ஒரு இடத்தில் இருந்து ஸ்கேனிங் இருக்கும் இடத்திற்கு சென்றுதான் ஆவணங்களை ஸ்கேன் செய்ய முடியும். தற்பொழுது நாம் மிக எளிமையாக ஸ்கேன் செய்வதற்கு புதிய ஸ்கேனர் ஒன்று அறிமுகம் செய்துள்ளனர். அது தான் பி.யு.பி. ஸ்கேனர். இதை உங்கள் சட்டைப் பையில் வைத்துக் கொள்ளலாம். எளிதாக கையாள கூடியவை. எங்கு வேண்டுமானலும் எடுத்துச் செல்லலாம். இது வயர்லெஸ் டைப் ஸ்கேனர் ஆகும் பி.யு.பி. ஸ்கேனரில் நாம் ஒரு முறை ...

Read More »

ஆஸ்திரேலிய சொகுசு விடுதி உரிமையாளரிடம் இலஞ்சம் பெற்ற இஸ்ரேல் பிரதமர்!

ஊழல் வழக்கு தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு வீட்டுக்கு இன்று சென்ற காவல் துறையினர்  அவரிடம் 12-வது முறையாக விசாரணை நடத்தினர். யூதர்களின் நாடான இஸ்ரேலின் பிரதமராக பெஞ்சமின் நேதன்யாகு கடந்த 2009-ம் ஆண்டு முதல் பதவி வகித்து வருகிறார். ஏற்கனவே, 1996-99 முதல் அவர் பிரதமராக இருந்துள்ளார். தனது பதவிக்காலத்தில் தொழிலதிபர் ஒருவரிடம் இருந்து பரிசுப்பொருள் பெற்றதாகவும், எதிர்க்கட்சிகளை விமர்சித்து செய்தி வெளியிட ஊடக நிறுவனம் ஒன்றிடம் டீல் பேசியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த குற்றச்சாட்டுகளில் உண்மை உள்ளதா? என காவல் ...

Read More »

இம்ரான்கான் பாகிஸ்தான் பிரதமராக இன்று பதவி ஏற்கிறார்!

பாகிஸ்தான் பிரதமர் பதவிக்கான வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான், இன்று பிரதமராக பதவியேற்க உள்ளார். பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி, கூடுதல் இடங்களைப் பிடித்து தனிப்பெரும் கட்சியாக வந்தது. சிறிய கட்சிகளின் ஆதரவுடன் அந்தக் கட்சி பாகிஸ்தானில் கூட்டணி அரசு அமைக்கிறது. இந்நிலையில், புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்காக பாகிஸ்தான் நாடாளுமன்ற கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் ஓட்டெடுப்பு நடந்தது. பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி ...

Read More »

முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு அமெரிக்கா இரங்கல்!

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர் மைக் பாம்பியோ இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்தியாவின் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் (93) டெல்லி எய்மஸ் மருத்துவமனையில் நேற்று மாலை காலமானார். மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு கொண்டு வரப்பட்ட வாஜ்பாய் உடலுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, மந்திரிகள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் நேரில் அஞ்சலி செலுத்தினர். வாஜ்பாய் மறைவிற்கு உலக தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ...

Read More »

இந்திய குழந்தைகளை தத்தெடுக்க ஆஸ்திரேலிய அரசு அனுமதி!

இந்தியாவில் இருந்து குழந்தைகளை தத்தெடுக்க விதிக்கப்பட்ட தடையை 8 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலிய அரசு நீக்கியுள்ளது. வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே சப்ரகமுவ மாகாண பதில் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.சப்ரகமுவ மகாண ஆளுநர் நிலுக்கா ஏக்கநாயக்க உத்தியோக பூர்வ விஜயம் ஒன்ற‍ை மேற்கொண்டு இத்தாலி சென்றுள்ள நிலையிலேயே வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே இவ்வாறு பதில் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலிய தம்பதிகள் குழந்தைகளை தத்தெடுத்து வந்தனர். இந்த நிலையில் இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு குழந்தைகள் கடத்தப்படுவதாக புகார்கள் வந்தன. ...

Read More »

சப்ரகமுவ பதில் ஆளுநராக ரெஜினோல்ட் குரே!

வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே சப்ரகமுவ மாகாண பதில் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.சப்ரகமுவ மகாண ஆளுநர் நிலுக்கா ஏக்கநாயக்க உத்தியோக பூர்வ விஜயம் ஒன்ற‍ை மேற்கொண்டு இத்தாலி சென்றுள்ள நிலையிலேயே வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே இவ்வாறு பதில் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More »