Tag Archives: ஆசிரியர்தெரிவு

பூஸா கைதிகள் உண்ணாவிரதம்!

பூஸா முகாமில் இரண்டாயிரம் பேரை தடுத்து வைத்திருக்கும் பிரிவில் இரண்டு பேரை மாத்திரம் தடுத்து வைத்திருப்பதை கண்டித்தும் தம்மை சிறைச்சாலைக்கு மாற்றுமாறு கோரியும் 2 தமிழ் அரசியல் கைதிகள் இன்றில் (25) இருந்து உண்ணாவிரத போராட்டத்தினை ஆரம்பத்துள்ளனர். பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கடந்த 2009 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட தங்கராசா விமலன் மற்றும் கனகரத்தினம் ஆதித்தன் ஆகிய இருவரும் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு நீதிமன்றில் அவர்களின் வழக்கு இடம்பெற்று வந்தது. பின்னர் 2012 ஆம் ஆண்டு மேலதிக விசாரணைக்கான பூஸா முகாமுக்கு ...

Read More »

குற்றவியல் நீதிமன்றம் தொடர்பான ரோம் பிரகடனத்தில் சிறீலங்கா கையெழுத்திடவேண்டும்!

பயங்கரவாதத் தடைச்சட்டத்தை இல்லாதொழிக்குமாறும், அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றம் தொடர்பான ரோம் பிரகடனத்தில் சிறீலங்கா கையெழுத்திடவேண்டுமெனவும் ஐநாவின் சிறப்பு அறிக்கையாளர் ஜூவான் மென்டஸ் வலியுறுத்தியுள்ளார். சித்திரவதைகள் மற்றும் ஏனைய கொடூரமான, மனிதமாபிமானமற்ற, அல்லது இழிவுபடுத்தும் நடவடிக்கைகள், தண்டனைகள் தொடர்பான ஐ.நா சிறப்பு அறிக்கையாளரான, ஜுவான் மென்டஸ் சிறீலங்காவுக்கு மேற்கொண்ட பயணம் தொடர்பான அறிக்கையை வெளியிட்டுள்ளார். 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29ஆம் நாள் தொடக்கம் மே மாதம் 7ஆம் நாள் வரை சிறீலங்காவின் பல பகுதிகளுக்கு மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் அவர் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார். ...

Read More »

அரசியலிலிருந்து ஒதுங்குமாறு மகிந்தவிற்கு அழுத்தம்!

சிறீலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷவை அரசியலிலிருந்து ஒதுங்கியிருக்குமாறு இரண்டு பிரதான நாடுகள் அழுத்தம் கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்நாடுகளின் தூதரகங்களினால் இவ்வழுத்தம் பிரயோகிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மேலும், அயல் நாடுகளின் புலனாய்வாளர்களும் இந்த அழுத்தத்தைப் பிரயோகித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புலனாய்வுத் துறையைச் சேர்ந்த அதிகாரிகளும் கூட்டு எதிர்க் கட்சியைச் சேர்ந்த முக்கிய உறுப்பினர்களைச் சந்தித்து தனித்தனியாக இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளதாகவும் சிங்கள நாளிதள் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அத்துடன், சிறீலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷவின் செல்வாக்கு நாளுக்குநாள் வீழ்ச்சியடைந்து வருவதாகவும், அவரது கௌரவத்தைக் காக்கும் ...

Read More »

எழுக தமிழ் பேரணி! கிழக்கு மாகாணத்தில்! பெப்ரவரி 10ஆம் நாள்!

கிழக்கு மாகாணத்தில் எதிர்வரும் 28ஆம் நாள் நடைபெறவுள்ள எழுக தமிழ் பேரணி நிகழ்வானது பெப்ரவரி மாதம் 10ஆம் நாளுக்கு பிற்போடப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ் மக்கள் பேரவை அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் அபிலாசைகளையும் அன்றாட ஒடுக்குமுறைகளையும் மக்கள்ஒன்றுதிரண்டு வெளிப்படுத்தும் ஜனநாயக எழுச்சியான எழுகதமிழ் நிகழ்வானது கிழக்கு மாகாணத்தில்ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தினத்தில் இருந்து தவிர்க்க முடியாத காரணங்களால் எதிர்வரும் மாசி மாதம்முழுநிலவு நாளாகிய 10 ம் திகதி, வெள்ளிக்கிழமைக்கு  (10/02/2017) பிற்போடப்பட்டிருக்கின்றது என்பதை தாழ்மையுடன் அறியத்தருகின்றோம். அரசாங்கமானது ...

Read More »

நீதி கிடைத்தால் மட்டுமே சமாதானமும் நல்லிணக்கமும் ஏற்படும்!

இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி கிடைத்தால் மட்டுமே சமாதானமும் நல்லிணக்கத்தினையும்ஏற்படுத்த முடியுமென ஐரோப்பிய ஒன்றியத்தின் பதில் உயர்ஸ்தானிகரிடம் வடமாகாணமுதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தின் பதில் உயர்ஸ்தானிகர் போல் மற்றும் அவரது பிரதிநிதிகள்இன்று வெள்ளிக்கிழமை யாழிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர். அந்த விஜயத்தின் போது, வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை கைதடியில்அமைந்துள்ள முதலமைச்சர் செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்கள். அந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு முதமைச்சர் கருத்து தெரிவிக்கையில், வடமாகாணமக்களுக்கு எவ்வாறான உதவிகளை செய்ய முடியுமென கேள்வி எழுப்பியிருந்தார்கள். போரினால் கணவனை இழந்த பெண்கள் மற்றும் முன்னாள் போராளிகளின் வாழ்வாதாரத்தினைஉயர்த்தும் ...

Read More »

நெடுந்தாரகையின் முதல்ப் பயண நிகழ்விற்காக அவுஸ்ரேலியத் தூதுவர் யாழ்ப்பாணம் வருகை

நெடுந்தாரகையின் முதல்ப் பயண நிகழ்விற்காக நாளைய தினம் அவுஸ்ரேலியத் தூதுவர் , உலக வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் ஆகியோருடன் மாகாண சபைகள் உள்ளுராட்சி அமைச்சர் பைசல் முஸ்தபா ஆகியோர் யாழ்ப்பாணம் வருகை தருகின்றனர். உலக வங்கி மற்றும் அவுஸ்ரேலிய நாடுகளின் உதவியுடன் குறிகட்டுவான் நெடுந்தீவு இடையிலான பயணிகள் போக்குவரத்திற்காக 150 மில்லியனில் இலங்கை படகுகட்டுமான நிறுவனமான டொக்கியாட் நிறுவனத்தினில் 80 இருக்கைகள் வசதியுடன் அமைக்கப்பட்டது. இவ்வாறு அமைக்கப்பட்ட படகிற்கான மாலுமிகளிற்காகவும் நெடுந்தீவு இளைஞர்களில் ஐவரிற்கு இலங்கை துறைமுக அதிகார சபையின் ஊடாக பயிற்சி வழங்கப்பட்டு ...

Read More »

கோத்தபாயவுக்கு அவுஸ்ரேலியாவில் நெருக்கடி!

ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலைக்கு முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ பொறுப்புக் கூற வேண்டும் என அவுஸ்ரேலியாவில் உள்ள லசந்த விக்ரமதுங்கவின் மகள் வாக்குமூலமளித்துள்ளார். கொலை இடம்பெற சில தினங்களுக்கு முன்னர் தனது தந்தை தன்னிடம் தெரிவித்த விடயங்களை வெளிப்படுத்தியே அவுஸ்திரேலியாவில் வைத்து அவர் இவ்வாறு தமது விசாரணையாளர்களிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார். இது குறித்து குற்றப் புலனாய்வுப் பிரிவின் சிறப்பு விசாரணை அதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் நிசாந்த டி சில்வா கல்கிஸ்ஸ நீதிவான் நீதிமன்றுக்கு நேற்று அறிவித்தார். ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க ...

Read More »

மிக் போர் விமானக் கொள்வனவு ஊழலைப் பகிரங்கப்படுத்தியதால், எனது உயிருக்கு ஆபத்து !

மிக் போர் விமானக் கொள்வனவு ஊழலைப் பகிரங்கப்படுத்தியதால், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக, படுகொலை செய்யப்படுவதற்கு முன்னர், சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க தனது குடும்பத்தினருக்குத் தெரிவித்துள்ளார். கல்கிசை நீதிமன்றத்தில் நேற்று நடந்த விசாரணையின் போது, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இந்த தகவலை வெளியிட்டுள்ளனர். மிக் கொள்வனவு ஊழலை அம்பலப்படுத்தியதால் தனது உயிருக்கு ஆபத்து நேரிடலாம் என்று லசந்த விக்கிரமதுங்க அச்சம் கொண்டிருந்தார் என்று லசந்த குடும்பத்தினர் தம்மிடம் தெரிவித்தனர் என்று குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கூறியுள்ளனர். இந்த வழக்கு மீண்டும் மார்ச் ...

Read More »

வீரம் விளைந்த வல்வெட்டித்துறை வானில் வித்தியாசமான பட்டங்கள் பறந்தன

தமிழர் திருநாளான தைப்பொங்கலை முன்னிட்டு வல்வெட்டித்துறையில் நேற்று(14) மாலை நடத்தப்பட்ட பட்டப் போட்டியில் வித்தியாசமான உருவங்களில் தயாரிக்கப்பட்ட பட்டங்கள் வானத்தில் பறக்கவிடப்பட்டன. வல்வெட்டித்துறை உதயசூரியன் கடற்கரையில் நேற்றுமாலை நடந்த இந்தப் பட்டப் போட்டியில், பெருமளவு இளைஞர்களும் சிறுவர்களும், பங்கேற்று, தாம் தயாரித்த பட்டங்களை பறக்கவிட்டனர். இந்தப் பட்டப்போட்டியைக் காண, யாழ்ப்பாணக் குடாநாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பெருமளவிலானோர் வல்வெட்டித்துறையில் ஒன்று கூடியிருந்தனர்.

Read More »

ஐ.தே.க வேண்டுமென்றே தேர்தலை ஒத்தி வைத்து வருகின்றது!

ஐக்கிய தேசியக் கட்சி வேண்டுமென்றே தேர்தலை ஒத்தி வைத்து வருவதாக கபே என்ற தேர்தல் கண்காணிப்பு அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. வேண்டுமென்றே தேர்தலை ஒத்தி வைத்து வருகின்றது என தெரிவித்துள்ள கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரஞ்சித் கீர்த்தி தென்னக்கோன் தேர்தலை எதிர்நோக்க அச்சம் காரணமாகவோ அல்லது வேறு காரணிகளினாலோ இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சி உள்ளுராட்சிமன்றத் தேர்தல்களை ஒத்தி வைத்து வருவதாகக் குறி;பிட்டுள்ளார். யுத்தம் இடம்பெற்ற காலத்திலும் ஏனைய பிரச்சினைகள் நாட்டில் நிலவிய காலத்திலும் தேர்தல் நடத்தப்பட்டுள்ளதாகவும் தந்திரோபய அடிப்படையில் தேர்தல்கள் ஒத்தி ...

Read More »