பூஸா கைதிகள் உண்ணாவிரதம்!

பூஸா முகாமில் இரண்டாயிரம் பேரை தடுத்து வைத்திருக்கும் பிரிவில் இரண்டு பேரை மாத்திரம் தடுத்து வைத்திருப்பதை கண்டித்தும் தம்மை சிறைச்சாலைக்கு மாற்றுமாறு கோரியும் 2 தமிழ் அரசியல் கைதிகள் இன்றில் (25) இருந்து உண்ணாவிரத போராட்டத்தினை ஆரம்பத்துள்ளனர்.

பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கடந்த 2009 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட தங்கராசா விமலன் மற்றும் கனகரத்தினம் ஆதித்தன் ஆகிய இருவரும் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு நீதிமன்றில் அவர்களின் வழக்கு இடம்பெற்று வந்தது.

பின்னர் 2012 ஆம் ஆண்டு மேலதிக விசாரணைக்கான பூஸா முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டு 15 கீழ் 1 என்ற பிரிவில் இன்றுவரை தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். 2 ஆயிரம் பேர் தடுத்து வைக்கக்கூடிய அப் பிரிவில் 2 பேர் மாத்திரமே தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.

தாம் காரணம் தெரியாமல் அங்கு தாம் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவ தம்மை தங்கலை சிறைக்கு மாற்றி தமது வழக்கு விசாரணைகள் இடம்பெற வேண்டும் என கோரி இன்றில் இருந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

தமது நிலை அறிந்து தமிழ் அரசியல்வாதிகளும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் கவனம் எடுத்து குறித்த விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு இரு அரசியல் கைதிகளும் கோரிக்கை விடுத்துள்ளன.