Tag Archives: ஆசிரியர்தெரிவு

இலங்கையின் முஸ்லீம் சமூகத்தின் பாதுகாப்பு குறித்த கரிசனை அதிகரித்துள்ளது!

இலங்கை அதிகாரிகள் உரிய நடைமுறைகளை பின்பற்றவேண்டும்,சமீபத்தில் கைதுசெய்யப்பட்ட முஸ்லீம் சமூகத்தை சார்ந்தவர்கள் சட்டத்தரணிகளை தொடர்புகொள்வதற்கு அனுமதி வழங்கவேண்டும் என மனித உரிமை கண்காணிப்பகம் வேண்டுகோள்விடுத்துள்ளது. கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்கள் தொடர்பான கொள்கையொன்றை அரசாங்கம் வெளியிட்ட பின்னர் இடம்பெற்றுள்ள கைதுகள் இலங்கையின் முஸ்லீம் சிறுபான்மையினத்தவரின் ; பாதுகாப்பு குறித்த கரிசனையை ஏற்படுத்தியுள்ளது என மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. கடந்த வருடம் இடம்பெற்ற மிகவும் கொடுரமான உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புகளிற்கு காரணமானவர்களை நீதி விசாரணைகளிற்கு உட்படுத்தவேண்டும் எனினும் கைதுகள் சட்டபூர்வமானவையாக காணப்படவேண்டும் என மனித ...

Read More »

யாழில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்தவர் மரணம்

கொரோனோ சந்தேகத்தில் கொழும்பிலிருந்த கொண்டு வரப்பட்டு யாழில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். கொழும்பு பண்டாரநாயக்க மாவத்தையைச் சேர்ந்தவர்கள்  யாழ்ப்பாணம் கொடிகாமம் விடத்தற்பளை கொரோனோ தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இதில் எம்.அ.நசார் என்ற நபர் காய்ச்சல் காரணமாக கடந்த 22 ஆம் திகதி யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதற்கமைய கடந்த 23 ஆம் அவருக்கு தொற்று ஏதும் இல்லை என உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் சாதாரண விடுதிக்கு மாற்றப்பட்டிருந்தார். இந் நிலையில் நேற்று இரவு அவர் ...

Read More »

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உடல்நிலை நிலவரம் என்ன?

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் அது குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தகவல் வெளியி்ட்டுள்ளார் வட கொரியா அதிபர் கிம் ஜாங் சமீபகாலமாக வெளிஉலகிற்கு வரவில்லை. வடகொரியாவின் தந்தை எனப்படும் கிம் இல் சங்-ன் பிறந்த தின கொண்டாட்டத்தில் அதிபர் கிம் ஜாங் உன் பங்கேற்கவில்லை. கடந்த 15-ம் திகதி நடைபெற்ற தனது தாத்தாவின் பிறந்தநாள் விழாவில் அதிபர் கிம் ஜாங் உன் கலந்து கொள்ளாதது சந்தேகங்களை எழுப்பியது. கடந்த 2011-ம்ஆண்டு அதிபராக ...

Read More »

மீண்டும் வார்னர், ஸ்மித்: வித்தியாசமான தொடராக இருக்கும் என்கிறார் ரோகித் சர்மா

ஆஸ்திரேலிய அணிக்கு மீண்டும் வார்னர் மற்றும் ஸ்மித் ஆகியோர் திரும்பியுள்ளதால் வித்தியாசமான தொடராக இருக்கும் என்கிறார் ரோகித் சர்மா. ந்திய டெஸ்ட் அணி கடந்த முறை ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து விளைாடும்போது டேவிட் வார்னர் மற்றும் ஸ்மித் ஆகியோர் தடை காரணமாக விளையாடாமல் இருந்தனர். நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 2-1 என முதன்முறையாக ஆஸ்திரேலியா மண்ணில் கைப்பற்றியது. இந்நிலையில் வருகிற டிசம்பர்-ஜனவரியில் இந்தியா ஆஸ்திரேலியா மண்ணில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இந்தத் தொடரில் ...

Read More »

மக்களின் இறையாண்மையே இறுதி இலக்கு!

சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவில் அங்கத்துவம் வகிக்கின்ற உறுப்பினர்கள் மூவரும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் ஒரே நிலைப்பாட்டைக் கொண்டிருக்க வேண்டும் என்றால் ஆணைக்குழு அவசியமற்றதாகும். நாம் பல்வேறு நிலைப்பாடுகளைக் கொண்டிருந்தாலும் இறுதியில் மக்களின் இறையாண்மையைப் பாதுகாப்பதே எமது ஒரே இலக்காகும் என்று சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்திருக்கிறார். தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விடயங்களில் வெவ்வேறு நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதாலும், உறுப்பினர்களுக்கிடையில் கருத்து முரண்பாடுகள் காணப்படுவதாலும் ஒரே நோக்கில் ஆணைக்குழுவினால் பயணிக்க முடியாமலிப்பதாகக் கூறப்படுகின்றமை உண்மையா என்று ஊடகவியலாளர்களும் அரசியல் ஆர்வலர்களும் கேள்வியெழுப்புவதாகக் ...

Read More »

அவுஸ்திரேலிய அதிகாரிகள் அமெரிக்காவின் ஊதுகுழல்கள்!

உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டனை அமெரிக்காவின் ஊதுகுழல் என அவுஸ்திரேலியாவிற்கான சீன தூதரகம் வர்ணித்துள்ளது. சீனா கொவிட் 19 குறித்து அதிகளவு வெளிப்படைதன்மையுடன் செயற்படவேண்டும், என அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் கடந்த வாரம் வெளியிட்டுள்ள கருத்து குறித்தே சீன தூதரகம் இவ்வாறு தெரிவித்துள்ளது. வைரஸ் எவ்வாறு பரவியது என்பதை தெரியப்படுத்தும் ஆதாரங்கள் உள்ளன என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியிருந்த பீட்டர் டட்டன் எனினும் அந்த ஆவணத்தை பார்வையிடவில்லை எனவும் குறிப்பிட்டிருந்தார். கொரோனா வைரசினால் உயிரிழந்த அவுஸ்திரேலியர்களிற்கு பதில் அவசியம் என அமைச்சர் தெரிவித்திருந்தார். ...

Read More »

சூப்பர் மார்க்கெட் வேலைக்குச் செல்லும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டின் ஸ்டா.ஃப்கள்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் 80 சதவீத ஸ்டாஃப்கள் சூப்பர் மார்க்கெட் வேலைக்கு செல்லும் நிலையை கொரோனா ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. மீண்டும் சகஜ நிலை உருவாகி கிரிக்கெட் போட்டி எப்போது தொடங்கும் என்று கணிக்க முடியாத நிலை உள்ளது. இதனால் ஒவ்வொரு நாட்டின் கிரிக்கெட் போர்டும் மிகக்பெரிய அளவில் இழப்பை சந்தித்துள்ளன. ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டு, ஸ்டாஃப்களின் சம்பளத்தை குறைத்ததுடன் 80 சதவீதம் பேரை கட்டாய விடுப்பில் அனுப்பிவிட்டது. இதனால் ஸ்டாஃப்கள் வேலை இல்லாமல் ...

Read More »

தனிமைப்படுத்தல் நிலையங்கள் பாதுகாப்பானவை அல்ல!

இலங்கையில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையங்கள் பாதுகாப்பானவை அல்ல. குறித்த தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து வெளியேறிய அனைவருக்கும் பாிசோதிக்கப்படவேண்டும். அதன் ஊடாகவே கொரோனா பாதிப்பு தனிமைப்படுத்தப்பட்டவா்களுக்கு கொரோனா தொற்றில்லை என்பதை 100 வீதம் உறுதியாக கூற முடியும் ;என சமுதாய மருத்துவ நிபுணா் முரளி வல்லிபுரநாதன் தெரிவித்தார் தனிமைப்படுத்தல் நிலையங்களின் நிலை தொடா்பாக ஊடகவியலாளா்கள் கருத்துக் கேட்டபோதே அவா் இதனை தெரிவித்தார். இது தொடா்பாக மேலும் அவா் தெரிவிக்கையில், ஒரு ஊா் மக்கள், ஒரு விமானத்தில் பயணித்தவா்கள் என கூட்டம் கூட்டமாக மக்களை ஒரு கூரையின் ...

Read More »

ஊரடங்கைத் தளர்த்தி மக்களை ஆபத்திற்குள் சிறிலங்கா அரசாங்கம் தள்ளியிருக்கிறது!

கொரோனோ பாதிப்பு முற்றாக நீங்காத நிலைமையில் தேர்தலை நடாத்துவதற்காக ஊரடங்கைத் தளர்த்தி மக்களை ஆபத்திற்குள் அரசாங்கம் தள்ளியிருப்பதாகக் குற்றஞ்சாட்டியுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட வேட்பாளரும் கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான திருமதி. உமாச்சந்திரா பிரகாஷ் தேர்தலை இலக்கு வைத்து சுயலாப தீர்மானங்களையே இந்த அரசாங்கம் எடுத்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். யாழ் ஊடக அமையத்தில் நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இச்சந்திப்பின் போது அவர் மேலும் தெரிவித்ததாவது. நாட்டில் கொரோனோ வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில் வைத்தியத் ...

Read More »

கொழும்பிலிருந்து பலாலிக்கு கொண்டு வரப்பட்ட 99 கொரோனா சந்தேக நபர்கள்

கொழும்பைச் சேர்ந்த 99 பேர் கொரோனா வைரஸ் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் பலாலி ராணுவ முகாமில் தனிமைப் படுத்தப்படுத்தலுக்காக தங்க வைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கொழும்பு கெசல்வத்த பகுதியைச் சேர்ந்த 99 பேர் வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகி இருக்கலாம் என்ற சந்தேகத்தில் தனிமைப் படுத்தப் பட்டுள்ளனர்.அவ்வாறு தனிமைப் படுத்தப் பட்டவர்கள் பலாலி இராணுவ முகாமில் சற்று முன்னர் தங்க வைக்கபபட்டுள்ளனர்.சற்று முன்னர் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

Read More »