Tag Archives: ஆசிரியர்தெரிவு

விக்டோரியாவில் ஒரே ஒரு நோய்த்தொற்றுச் சம்பவம்!

சில மாதங்களாகவே நோய் அதிகமாகப் பரவிக்கொண்டிருந்த ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் கடந்த 24 மணிநேரத்தில் ஒரேயொரு நோய்த்தொற்றுச் சம்பவம் மட்டுமே பதிவாகியுள்ளது. ஜூன் மாத ஆரம்பத்திலிருந்து ஆஸ்திரேலியாவின் பெரும்பாலான நோய்த்தொற்றுச் சம்பவங்கள் விக்டோரியாவின் மெல்பர்ன் நகரில் பதிவாயின.  

Read More »

பிரான்சில் வரலாற்று ஆசிரியர் தலை துண்டித்து கொலை

பிரான்சில் நபிகள் நாயகம் தொடர்பான கேலிச்சித்திரங்களை மாணவர்களுக்கு காட்டிய வரலாற்று ஆசிரியர் தலை துண்டித்து கொல்லப்பட்டார். பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் புறநகர்ப் பகுதியில் வரலாற்று ஆசிரியர் ஒருவர் நேற்று மாலை, தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். பள்ளி அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது. இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த ஆசிரியர் நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரங்களை மாணவர்களுக்கு காட்டியதால் கோபமடைந்த ஒரு நபர் அவரை கொன்றதாக தெரியவந்தது. குற்றவாளியை  காவல் துறையினர்  சுட்டுக் கொன்றுள்ளனர். இந்த ...

Read More »

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் புதிய பணிப்பாளரராக நிசாந்த டி சொய்ஸா

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் புதிய பணிப்பாளரராக சிரேஷ்ட காவல் துறை  அத்தியட்சர்(SSP) நிசாந்த டி சொய்ஸா நியமிக்கப்பட்டுள்ளதாக காவல் துறை  தலைமையகம் தெரிவித்துள்ளது. இதேவேளை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பொறுப்பதிகாரியான பிரதி காவல் துறை   மா அதிபர் நுவான் வெதசிங்க மேல் மாகாணத்துக்கான பதில் பிரதி காவல் துறை  மா அதிபராக மாற்றப்பட்டுள்ளார்.

Read More »

நியுசிலாந்து பொதுத்தேர்தல்- ஜசின்டா ஆர்டெனின் கட்சி முன்னிலையில்

நியுசிலாந்தில் இடம்பெற்ற பொதுத்தேர்தலில் பிரதமர் ஜசின்டாஆர்டெனின் தொழில்கட்சி வெளியாகியுள்ள ஆரம்ப கட்ட முடிவுகளின் அடிப்படையில் முன்னிலையில் உள்ளது. ஜசின்டா ஆர்டெனின் மூன்றுவருட பதவிக்காலம் முடிவடைந்ததை தொடர்ந்து இடம்பெற்ற பொதுத்தேர்தல் முடிவுகள் வெளியாகத்தொடங்கியுள்ளன. இதுவரை தேர்தல் ஆணையகம் வெளியிட்டுள்ள முடிவுகளின் படி பிரதமரின் தொழில்கட்சி 50வீத வாக்குகளை பெற்றுள்ளது.எதிர்கட்சியான தேசிய கட்சிக்கு 25 வீத வாக்குகளை பெற்றுள்ளது. கருத்துக்கணிப்புகள் பிரதமருக்கு சாதகமாக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது. எனினும் பிரதமர் ஜசின்டா ஆர்டெனிற்கு பெரும்பான்மை கிடைக்குமா என்ற கேள்விகளும் நியுசிலாந்தில் காணப்படுகின்றன.

Read More »

மருத்துவரின் மாஸ்கை கழற்றும் பிறந்த குழந்தை

கொரோனா தொற்று வேகமாக பரவிவரும் நிலையில் பொதுமக்களுக்கு நம்பிக்கை தரும் வகையிலான புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. 2020ஆம் ஆண்டை கொரோனா பெருந்தொற்று உலக அளவில் புரட்டிப்போட்ட நிலையில், அதன் விளைவால் அமலில் உள்ள கட்டுப்பாடுகள், கெடுபிடிகள் போன்றவற்றுக்கு மத்தியில் முக கவசத்தை பிடுங்கும் சுட்டிக்குழந்தையின் செயல், விரைவில் இயல்புநிலைக்கு உலகம் திரும்ப வேண்டும் என்பதை குழந்தையின் புதிய வரவு உணர்த்துவது போல பலரும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். எதிர்கால உலகின் அவசியம், முக கவசமில்லாத வாழ்க்கை என்பதை இந்த பிஞ்சுக் ...

Read More »

திபெத்தின் மனித உரிமை விவகாரங்களுக்கான பிரதிநிதியை நியமித்தது அமெரிக்கா

திபெத்தின் மனித உரிமை விவகாரங்களுக்கான பிரதிநிதியொருவரை அமெரிக்கா நியமித்தமை குறித்து சீனா கடும் சீற்றம் வெளியிட்டுள்ளது. திபெத்தின் மனித உரிமை விவகாரங்களுக்கான பிரதிநிதியாக ஜனநாயகம் மனித உரிமைகள் தொழிலாளர் ஆகியவற்றிற்காக உதவி இராஜாங்க செயலாளர் ரொபேர்ட் டெஸ்டிரோ செயற்படுவார் என அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்பொம்பியோ அறிவித்துள்ளார். 2017 முதல் குறிப்பிட்ட பதவிக்கு எவரும் நியமிக்கப்படாமலிருந்த நிலையிலேயே புதிய பிரதிநிதி நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு சீனா கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. திபெத்த் ஸ்திரமிழக்கும் நிலையை ஏற்படுத்துவதற்கு அமெரிக்கா முயல்கின்றது என சீனா தெரிவித்துள்ளது. ...

Read More »

தமிழ்த் தேசியக் கட்சிகள் மீண்டும் நாளை யாழ்ப்பாணத்தில் கூடுகின்றன

தியாகி திலீபனின் நினைவேந்தலுடன் இணைந்து செயற்படும் தமிழ்க் கட்சிகளின் தலைவர்களுக்கான கூட்டம் ஒன்று யாழ்ப்பாணத்தில் நாளை சனிக்கிழமை காலை நடைபெறவிருக்கின்றது. இதற்கான அழைப்பை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சோனாதிராஜா விடுத்திருக்கின்றார். “தற்போது சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் 20 ஆவது திருத்தம், புதிய அரசியலமைப்பு உருவாக்கம் என்பவற்றுடன் எதிர்காலத்தில் இணைந்து செயற்படுவதற்கான வேலைத் திட்டங்கள் தொடர்பாக இந்தச் சந்திப்பில் ஆராயப்படும்” என மாவை சேனாதிராஜா தினக்குரல் இணையத்துக்குத் தெரிவித்தார். “ஏற்கனவே நாம் சந்தித்துப் பேசியிருக்கின்றோம். ஒரு உண்ணாவிரதப் போராட்டம், ஹர்த்தால் என்பவற்றை இணைந்து நடத்தியிருக்கின்றோம். இந்த நிலையில் ...

Read More »

கலாமதி பத்மராஜா மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து விடைபெற்றார்

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக கடந்த ஜனவரி மாதம்முதல் கடமையாற்றி வந்த திருமதி கலாமதி பத்மராஜாவிற்கான பிரியாவிடை நிகழ்வு மாவட்ட செயலக உத்தியோகத்தர்களால் நேற்று மாவட்ட செயலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கலாமதி பத்மராஜா அரசாங்க அதிபராகக் கடமையைப் பொறுப்பேற்றதிலிருந்து 09 மாதங்களில் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. இக்காலப்பகுதியில் கொரோனா வைரஸ் நோய் பரவல் ஏற்பட்டது. இம்மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவாமலிருக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் சம்மந்தப்பட்ட திணைக்களங்களை ஒருங்கிணைத்து செயற்படுத்தியிருந்தார். இதனால் நோய்தொற்று ஏற்படாத மாவட்டமாக இன்றும் மட்டக்களப்பு மாவட்டம் காணப்படுகின்றது. மேலும் இக்காலப்பகுதியில் ...

Read More »

ஆஸ்திரேலியாவில் நிரந்தர வதிவிடம் பெறுவதற்கு புதிய தடை!

ஆஸ்திரேலியரை திருமணம் செய்து கொள்ளும் வெளிநாட்டவர் ஆஸ்திரேலியாவில் நிரந்தர விசா பெற ஆங்கிலத் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்ற புதிய நடைமுறையை ஆஸ்திரேலிய ஆளும் தரப்பு கொண்டுவரும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. ஆஸ்திரேலிய அரசின் இந்த முடிவு பாரம்பட்சமிக்கது என விமர்சனம் எழுந்துள்ள நிலையில், இது சமூகப் பிணைப்புக்கு உதவியாக இருக்கும் எனக் கூறுகிறது ஆஸ்திரேலிய அரசு. “விசா கோரி விண்ணப்பிப்பவரும், அவருக்கு ஸ்பான்சர் செய்பவரும் செயல்பாட்டு அளவிலான ஆங்கிலத்தை தெரிந்திருக்க வேண்டும், அல்லது குறைந்தபட்சம் ஆங்கிலம் கற்றுக்கொள்வதற்கான முயற்சிகளை எடுத்திருக்க வேண்டும்,” எனக் ...

Read More »

“ஒற்றுமை என்ற வெற்றுக் கோஷத்துக்காக நாம் பயணிக்க முடியாது”

” மற்றைய தமிழ்க் கட்சிகளுடன் இணைந்து செயற்பட வேண்டும் என்பதில் எமக்கு மாற்றுக் கருத்துக்கள் இல்லை. ஒரு கூட்டாக இணைந்து செயற்படுவதற்கு முன்னர் தமிழ் மக்களுடைய உரிமைகள், அபிலாஷைகள் தொடர்பில் நாங்கள் ஒரு இணக்கப்பாட்டுக்கு வந்தேயாகவேண்டும். அவ்வாறு வராமல் வெறுமனே ஒற்றுமை என்ற வெற்றுக் கோஷத்துக்காக நாம் பயணிக்க முடியாது” எனக் கூறுகின்றார் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம். பிரத்தியேக நேர்காணலிலேயே இதனை அவர் தெரிவித்தார். 0 திலீபன் நினைவேந்தலின் போது தமிழ்க் தேசியக் கட்சிகள் சிலவற்றிடையே இணைந்து செயற்படுவதற்கான உடன்பாடு ...

Read More »