நியுசிலாந்து பொதுத்தேர்தல்- ஜசின்டா ஆர்டெனின் கட்சி முன்னிலையில்

நியுசிலாந்தில் இடம்பெற்ற பொதுத்தேர்தலில் பிரதமர் ஜசின்டாஆர்டெனின் தொழில்கட்சி வெளியாகியுள்ள ஆரம்ப கட்ட முடிவுகளின் அடிப்படையில் முன்னிலையில் உள்ளது.


ஜசின்டா ஆர்டெனின் மூன்றுவருட பதவிக்காலம் முடிவடைந்ததை தொடர்ந்து இடம்பெற்ற பொதுத்தேர்தல் முடிவுகள் வெளியாகத்தொடங்கியுள்ளன.

இதுவரை தேர்தல் ஆணையகம் வெளியிட்டுள்ள முடிவுகளின் படி பிரதமரின் தொழில்கட்சி 50வீத வாக்குகளை பெற்றுள்ளது.எதிர்கட்சியான தேசிய கட்சிக்கு 25 வீத வாக்குகளை பெற்றுள்ளது.

கருத்துக்கணிப்புகள் பிரதமருக்கு சாதகமாக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

எனினும் பிரதமர் ஜசின்டா ஆர்டெனிற்கு பெரும்பான்மை கிடைக்குமா என்ற கேள்விகளும் நியுசிலாந்தில் காணப்படுகின்றன.