Tag Archives: ஆசிரியர்தெரிவு

அவுஸ்திரேலிய மனைவியை 10 முறை கத்தியால் குத்தி கொலைசெய்தவருக்கு கிடைத்த தண்டனை!

அவுஸ்திரேலியாவில் மனைவியை கொலைசெய்த இந்திய நபருக்கு 25 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஆண்களா பெண்களா மேன்மையானவர்கள் என்று நண்பர்களுடன் இடம்பெற்ற வாதத்தின்போது தனது மனைவியை குறித்த நபர் கொலை செய்துள்ளார். இந்த வாதத்தினால் கடுங்கோபமடைந்து சமையலறையில் போய் கத்தியை எடுத்துவந்து அவரை பத்துக்கும் மேற்பட்ட தடவைகள் குத்திக்கொலை செய்த இந்திய நபருக்கு விக்டோரிய உயர்நீதிமன்றம் 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இந்தியாவை சேர்ந்த Douglas Derick Eustace என்ற 44 வயது நபருக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இந்தப்படுகொலை சம்பவம் மெல்பேர்ன் Hallam ...

Read More »

ஜெனீவா தீர்மானத்தை நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை!

ஜெனீவாவில் உள்ள இலங்கைத் தூதுவர் மனித உரிமைகள் ஆணைக்குழுவுடன் கைச்சாத்திட்டுள்ளதைத் தான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை எனத் தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இது, முப்படையினர், அரசாங்கம் மற்றும் மக்களை காட்டிக்கொடுத்த செயலாகும் என்றும் தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் பாதுகாப்பு தரப்பினரால் பயன்படுத்தப்பட்ட காணிகள் அவற்றின் உரிமையாளர்களுக்கு மீண்டும் விடுவிக்கப்படவில்லை என்றும், அது தொடர்பில் ஆணைக்குழுவொன்று அமைக்கப்பட வேண்டுமென்றும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் முன்வைத்துள்ள முன்மொழிவு, அரச சார்பற்ற நிறுவனங்களால் வழங்கப்பட்டுள்ள பிழையான தகவல்களை அடிப்படையாகக்கொண்டு மேற்கொள்ளப்பட்டதாகும் என்றும் தெரிவித்த ஜனாதிபதி, ...

Read More »

யாழில் முகமூடி அணிந்த கும்பலால் தாக்குதல்!

யாழில்.வீடொன்றின் மீது முகமூடி அணிந்த கும்பல் ஒன்று தாக்குதலை மேற்கொண்டு உள்ளது. கல்வியங்காட்டு பகுதியில் உள்ள வீடொன்றினுள் நேற்று அதிகாலை உட்புகுந்தவர்கள் வீட்டின் யன்னல் கண்ணாடிகளை அடித்து நொறுக்கி விட்டு தப்பி சென்றுள்ளனர். நாம் உறக்கத்தில் இருந்த போது , கண்ணாடிகள் உடையும் சத்தம் கேட்டு எழுந்த போது எமது வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளை முகத்தினை கறுப்பு துணிகளால் கட்டிவாறு நின்ற கும்பல் அடித்து நொறுக்கி அட்டகாசம் புரிந்து விட்டு தப்பி சென்றது என வீட்டின் உரிமையாளர் யாழ். காவல் துறை நிலையத்தில் முறைப்பாடு ...

Read More »

விண்வெளியில் பெண்களின் வரலாற்று நிகழ்வு ரத்து!

விண்வெளியில் முழுமையாக பெண்கள் மட்டுமே இணைந்து விண்வெளி நடையை மேற்கொள்வார்கள் என அறிவிக்கப்பட்ட வரலாற்று நிகழ்வு ரத்து செய்யப்பட்டதாக நாசா அறிவித்துள்ளது. அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட பல்வேறு சர்வதேச நாடுகள் இணைந்து விண்வெளியில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை அமைத்துள்ளன. விண்வெளி வீரர்கள் அங்கு தங்கியிருந்து பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இவர்கள் பராமரிப்புப் பணிகள் மற்றும் புதிய கட்டுமானப்பணிகளுக்காக சில மணி நேரம் விண்வெளி ஆய்வு மையத்தை விட்டு வெளியே சென்று, விண்வெளியில் மிதந்து கொண்டு வேலை செய்வது வழக்கம். இதுவரை இந்தப் பணிகளை ...

Read More »

அவுஸ்திரேலியாவில் நேர்மையாக செயற்பட்ட இலங்கையர்!

மிகவும் நேர்மையாக செயற்பட்ட இலங்கையர் ஒருவர் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது. அவுஸ்திரேலியாவில் மெல்பேர்ன் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. காணாமல் போன பணப்பை ஒன்றை உரியவர்களிடம் ஒப்படைப்பதற்கு இலங்கையர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, இரண்டு நபர்கள் 19500 அவுஸ்திரேலிய டொலர்களை (2.46 மில்லியன்) வங்கியில் மாற்றி கொண்டு பிட்ஸா கடை ஒன்றுக்கு சென்று அமர்ந்துள்ளனர். பிட்ஸாவுக்கு காத்திருந்த நபர்களில் ஒருவரது கையில் இருந்து பணப்பை கீழே விழுந்துள்ளது. எனினும் அதனை கவனிக்காமல் அவர்கள் அங்கிருந்து சென்றுள்ளனர். பலர் அங்கு நடமாடியுள்ளனர். ...

Read More »

அவுஸ்திரேலிய பணியாளர்களால் திருமலை கடற்கரை சுத்தம் செய்யப்பட்டது!

இந்திய பசிபிக் ஒற்றுமை 2019 திட்டத்துக்கு கலந்துகொள்ள கடந்த மார்ச் 23 ஆம் திகதி திருகோணமலை துறைமுகத்துக்கு வந்தடைந்துள்ள அவுஸ்திரேலிய கடற்படைக்கு சொந்தமான சக்சஸ் கப்பலின் பணியாளர்களினால் நேற்று திருகோணமலை ரவுன்ட் பே கடற்கரை சுத்தம் செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன. இன் நிகழ்வுக்காக சக்சஸ் கப்பலின் கட்டளை அதிகாரி கப்டன் டிரகன் ஜி க்ரோகன் அவர்கள் உட்பட 19 கடற்படையினர் கலந்துகொண்டனர். அதேபோன்ற இலங்கை கடற்படையின் கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் சுமித் வீரசிங்க, இலங்கை கடற்படை கப்பல் திஸ்ஸ நிருவனத்தின் ...

Read More »

வடக்கு ஆளுநருக்கு எதிராக 217 வழக்குகள்!

தனக்கு எதிராக கொழும்பு, யாழ்ப்பாண நீதிமன்றங்களில் 217 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்தார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், ஒவ்வொரு விடயத்துக்கும் நீதிமன்றங்களை நாடி வழக்கு தாக்கல் செய்கின்றார்கள். இதுவரைக்கும் எனக்கு எதிராக யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா நீதிமன்றங்களின் 217 வழக்குகள் தாக்கல் செய்துள்ளனர். அவற்றை நாம் எதிர்கொண்டு வருகின்றோம். அண்மையில் கூட ஊழியர் ஒருவர் பணியிடத்தில் தன்னுடைய உரிமை மீறப்பட்டுள்ளதாக கூறி வழக்கு தாக்கல் செய்துள்ளார். குறித்த ஊழியர் 2 வருட காலத்தில் ஓய்வு பெறவுள்ளார். ...

Read More »

வைரலாகும் வங்கதேச கட்டிடத் தொழிலாளியின் புகைப்படம்!

வங்கதேசத்தைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி ஒருவரது புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. இதுகுறித்து வங்கதேச ஊடகங்கள் வெளியிட்ட செய்தியில், ”மாபெடன் முங் என்பவர் மார்ச்  21-ம் திகதி தனது ட்விட்டர் பக்கத்தில் வங்கதேசத்தைச் சேந்த கட்டிடத் தொழிலாளி ஒருவரின் புகைப்படத்தைப் பதிவிட்டிருந்தார்.  நான் புகைப்படம் எடுக்கும்போது அந்த நபர் மிகவும் வெட்கப்பட்டார். அவருக்கு எங்கு பார்க்க வேண்டும் என்றே தெரியவில்லை. அவர் கமராவைப் பார்த்தபடி ஒரு போட்டோ மட்டுமே எடுக்க முடிந்தது. நான் இறுதியாக அவரைப் புகைப்படம் எடுத்து விட்டேன். அவர் ...

Read More »

ஆஸி.யின் பந்து வீச்சுப் பயிற்சியாளராக அடம் கிரிப்த்!

எதிர்வரும் மே மாதம் 30 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் களமிறங்கவுள்ள அவுஸ்திரேலிய அணியின் பந்து வீச்சுப் பயிற்சியாளராக அடம் கிரிப்த் நியமிக்கப்பட்டுள்ளார். 41 வயதுடைய அடம் கிரிப்த் அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வலது கை வேகப் பந்து வீச்சாளர் ஆவார். இதேவேளை அவுஸ்திரேலிய அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக இருக்கும் முதல் தர வீரரான 53 வயது டிராய் கூலே எதிர்வரும் ஜூலை மாதம் நடைபெறும் ஆஷஸ் தொடர் முடியும் வரை அணியினருடன் தொடர்ந்து நீடிப்பார் என்றும் அவுஸ்திரேலிய ...

Read More »

மனப்பாங்கு மாற்றம் ஏற்படாதவரையில் இன முரண்பாடுகளை களையமுடியாது!

எம்மத்தியில் மனப்பாங்கு மாற்றம் ஏற்படாதவரையில் இலங்கையில் இனங்களுக்கிடையிலான முரண்பாடுகளை களைவது சாத்தியப்படாது என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கண்டி மாவட்ட இணைப்பாளர் திருமதி குமுதினி விதானகே தெரிவித்தார். கண்டி ஓக்ரைன் ஹோட்டலில் இண்டர்நியூஸ் நிறுவனம் ஒழுங்கு செய்த அரச உத்தியோகத்தர்களுக்கான இன நல்லிணக்கம் மற்றும் பல்லின வாதம் தொடர்பான செயலமர்விலே, அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது, நாம் மனித உரிகைள் ஆணைக்கு என்ற வகையில் பாரிய முயற்சி எடுத்தாலும், சட்டத்தால் எதனையும் சாதிக்க முடியாது. தனி நபர் ஒவ்வொருவரதும் மனதில் ...

Read More »