யாழில் முகமூடி அணிந்த கும்பலால் தாக்குதல்!

யாழில்.வீடொன்றின் மீது முகமூடி அணிந்த கும்பல் ஒன்று தாக்குதலை மேற்கொண்டு உள்ளது.

கல்வியங்காட்டு பகுதியில் உள்ள வீடொன்றினுள் நேற்று அதிகாலை உட்புகுந்தவர்கள் வீட்டின் யன்னல் கண்ணாடிகளை அடித்து நொறுக்கி விட்டு தப்பி சென்றுள்ளனர்.

நாம் உறக்கத்தில் இருந்த போது , கண்ணாடிகள் உடையும் சத்தம் கேட்டு எழுந்த போது எமது வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளை முகத்தினை கறுப்பு துணிகளால் கட்டிவாறு நின்ற கும்பல் அடித்து நொறுக்கி அட்டகாசம் புரிந்து விட்டு தப்பி சென்றது என வீட்டின் உரிமையாளர் யாழ். காவல் துறை நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

குறித்த முறைப்பாட்டின் பிரகாரம் காவல் துறை தீவிர விசாரணைகளை முன்னேடுத்துள்ளனர்.