Tag Archives: ஆசிரியர்தெரிவு

தமிழ் அகதிகளை விடுவிக்க ஆஸ்திரேலிய மருத்துவ சங்கம் கோரிக்கை

ஆஸ்திரேலியாவின் புதிய உள்துறை அமைச்சராக நாடாளுமன்ற உறுப்பினர் Karen Andrews பொறுப்பேற்றுள்ள நிலையில், இது அகதிகள் மற்றும் தஞ்சக்கோரிக்கையாளர்கள் சுகாதார பிரச்னைகள் தொடர்பாக புதிய அணுகுமுறையைப் பின்பற்றுவதற்கான நல்ல வாய்ப்பு என ஆஸ்திரேலிய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. இது புதிய உள்துறை அமைச்சர் Karen Andrews தனது புதிய பொறுப்பைக் கருணையுடன் தொடங்குவதற்கான நேரமாகும். அத்துடன், ஆஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவு தடுப்பில் உள்ள தமிழ் அகதி குடும்பத்தை விடுவிப்பதற்கான நடவடிக்கையை புதிய அமைச்சர் மேற்கொள்ள வேண்டும் என மருத்துவ சங்கம் குறிப்பிட்டுள்ளது. “எந்த நாட்டு ...

Read More »

அமைதியைப் பெற்றுக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்

வடக்கு, கிழக்குப் பிரதேசங்களில் மோதல்கள் இடம்பெற்ற காலப்பகுதியில் மறைந்த ஆயர் இராயப்பு யோசேப் ஆண்டகை நெருங்கிய வகையில் தொடர்புபட்டு ஆற்றிய அளப்பரிய பணிகளை தனிப்பட்ட முறையில் நான் நன்கறிவேன் என பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். மன்னார் மறைமாவட்டத்தின் ஓய்வு நிலை ஆயர் அதி வணக்கத்திற்குரிய இராயப்பு யோசேப் ஆண்டகையின் மறைவையடுத்து, அதிவணக்கத்துக்குரிய கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள இரங்கல் செய்தியிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை ஊடகங்களுக்கு ...

Read More »

நீதிக்காகப் போராடிய மாமனிதரின் இழப்பு ……….ஈடுசெய்யப்பட முடியாத இழப்பு

மன்னார் மறைமாவட்ட ஓய்வுநிலை ஆயர் கலாநிதி இராயப்பு ஜோசப் ஆண்டகை, இலங்கையின் ஒஸ்கார் றொமேறோராவார் என்று இரங்கல் குறிப்பில் தமிழர் மரபுரிமைப் பேரவை குறிப்பிட்டுள்ளது. முள்ளிவாய்க்காலின் பின் சமூக, அரசியல் வரலாற்று தளத்தில் தமிழின இனப்படுகொலை தொடர்பில் உண்மையைக் எடுத்துக்கூறி நீதிக்காகப் போராடிய மாமனிதரின் இழப்பு என்பது தமிழினத்திற்கும் சர்வதேசத்திற்கும் என்றுமே ஈடுசெய்யப்பட முடியாத இழப்பாகும் என்றும் தமிழர் மரபுரிமைப் பேரவை தெரிவித்துள்ளது. அத்துடன், ஜோசப் ஆண்டகை, மதங்களைக் கடந்து தமிழின விடுதலைக்காக, இலங்கை அரச அடக்கு முறைக்கெதிராக ஓங்கி ஒலித்த குரல் விடுதலை ...

Read More »

விசாரணைகள் நடத்தப்பட வேண்டியுள்ளது மிகவும் முக்கியம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46/1தீர்மானத்தினை இலங்கை அரசாங்கம் அரசியல் தேவைக்காகவே எதிர்ப்பதாக கூறி எதிர்வாதம் செய்து கொண்டிருக்கின்றது. ஆனால் இலங்கை அரசாங்கத்தினால் அத்தீர்மானத்தினை நிராகரிக்க முடியாது. காலப்போக்கில் அதனை முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய சூழல் ஏற்படும் என்று தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஜெனிவா அழுத்தங்களுக்கு அச்சமின்றி முகங்கொடுப்பதோடு அதற்கு அடிபணியாமல் இருக்க முடியும் எனவும் இலங்கை ஒரு சுதந்திர நாடு என்றவகையில் இந்தியப் பெருங்கடலில் நடக்கும் அதிகாரப் போட்டிகளுக்கு நாங்கள் இரையாக மாட்டோமெனவும் ...

Read More »

‘சிறிலங்காவின் பெயரை சிங்கலே” – என மாற்ற பௌத்தமதகுருமார் யோசனை

சிறிலங்காவின் பெயரை சிங்கலே என மாற்றவேண்டும் என பௌத்தமதகுருமார் யோசனையொன்றை முன்வைத்துள்ளனர். புதிய அரசமைப்பிற்கான யோசனைகளை சமர்ப்பி;த்துள்ள பௌத்தமதகுருமார்கள் குழுவொன்று நாட்டின் பெயரை சிங்கலே என மாற்றவேண்டும் என்ற வேண்டுகோளை முன்வைத்துள்ளது. ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட பௌத்தமதகுரு ஒருவர் நாட்டின் பெயரை சிங்கலே என மாற்றவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். சிங்களமே உத்தியோகபூர்வ மொழியாக காணப்படவேண்டும், ருகுணு பிஹிட்டி மாயா என்ற அடிப்படையில் பிரதேசங்கள் பிரிக்கப்படவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Read More »

வங்காளதேசத்தில் மீண்டும் நாடு தழுவிய ஊரடங்கு அறிவிப்பு

வங்காளதேசத்தில் இன்று 6,830 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், முன்னெச்சரிக்கை காரணமாக ஒரு வாரம் நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் அண்டை நாடான வங்காளதேசத்தில் கொரோனா தொற்று அதிகரித்ததால், கடந்த ஆண்டு நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பின் படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு திரும்பப் பெற்றது. இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் அதிகரித்து வரும் அதேநிலையில், வங்காளதேசத்திலும் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. இன்றைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் அந்நாட்டில் 6,830 பேர் கொரோனா ...

Read More »

திங்கட்கிழமை தமிழ் தேசிய துக்க தினம்

இராயப்பு யோசப் ஆண்டகை தமிழ் தேசியத்திற்கு ஆற்றிய சேவைகளுக்கு மதிப்பளிக்கும் விதமாக எதிர்வரும் திங்கட்கிழமை தமிழ் தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக வடக்கு கிழக்கு சிவில் சமூக அமைப்புகள் அறிவித்துள்ளன. இந்நிலையில், குறித்த நாளை துக்க தினமாக அனுஷ்டிக்குமாறு பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம் உள்ளிட்ட வடக்கு கிழக்கு சிவில் சமூகங்கள் இணைந்து வெளியிட்டள்ள அறிக்கையில்,”மன்னார் மறைமாவட்டத்தின் ஓய்வுநிலை ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை இயற்கை எய்திய செய்தியானது தமிழர் தேசத்தினை ஆழாத்துயரில் ஆழ்த்தியுள்ளது. ஆயரின் இழப்பானது தமிழர் தேசத்திற்கு ...

Read More »

ஐ.நாவில் போர்க்கொடி தூக்கத் தயாராகும் ரணில்

அரசாங்கத்தின் வன அழிப்பிற்கு எதிராக கண்டனத்தை தெரிவிக்கும் வகையிலும் சிங்கராஜ வனம் உள்ளிட்ட தேசிய வன வளத்தை பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், தமிழ் – சிங்கள புத்தாண்டில் பச்சை நிற ஆடையணிய வேண்டும் என கேட்டுக்கொண்ட ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, சிறிகொத்தாவில் இன்று இடம்பெற்ற கட்சி உறுப்பினர்களுடனான சந்திப்பின் போதே இதனைத் தெரிவித்தார்.மேலும் அவர் குறிப்பிடும் போது; உலக மரபுரிமையான சிங்கராஜ வனத்திற்கு தற்போது ஏற்பட்டுள்ள அழிவு குறித்து செவ்வாய்க்கிழமை கொழும்பு ஐ.நா அலுவலகத்தில் முறைப்பாடளிப்பதோடு நீதிமன்ற ஊடக நடவடிக்கை ...

Read More »

புலமைப்பரிசில் ஆசிரியர் அன்பழகன் காலமானார்!

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை மாணவர்களுக்கான தனியார் கல்வி நிலையங்களை யாழ்ப்பாணத்தில் நடத்திவந்த யாழ்ப்பாணத்தின் மிகப் பிரபல ஆசிரியரான அன்பொளி கல்வியகத்தின் நிர்வாகி வே.அன்பழகன் இன்று காலை கொழும்பில் காலமானார். உடல் நிலைப் பாதிப்புக்கு உள்ளாகியிருந்த அவர் கொழும்பில் தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக சக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். அன்பொளி கல்வியகத்தில் கல்விபயில்வதற்காக ஆண்டு தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் இருந்தும் திரண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது. அன்பொளி புலமைப்பரிசில் மாதிரி மற்றும் வழிகாட்டிகள் நாடளாவிய ரீதியில் ...

Read More »

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில்

இலங்கை பெருந்தோட்ட தொழிலாளர் கல்வி நிதியத்தினால் (CEWET) புலமைப் பரிசில்கள் வழங்கப்படுவதற்காக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இந்தப் புலமைப் பரிசில்கள் க.பொ.த உயர்தரம், பட்டப்படிப்புக் கற்கை நெறிகள் மற்றும் இலங்கையின் ஏதேனும் அரசாங்க தொழில்நுட்பக் கல்லூரிகளில் தொழில் அல்லது தொழில்நுட்பக் கல்வியை மேற்கொள்ளும் மாணவர்களுக்கானவையாகும் என்று கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. க.பொ.த சாதாரண தரத்தில் (குறைந்தது 6 திறமைச் சித்திகளுடன்) சித்தியடைந்த அல்லது உயர் தரத்தில் சித்தியடைந்த 25 வயதிற்கு குறைந்தவர்கள் இந்தப் புலமைப் பரிசில்களுக்கு விண்ணப்பிப்பதற்குத் தகுதியானவர்கள். பூர்த்தி ...

Read More »