Tag Archives: ஆசிரியர்தெரிவு

வடகொரியா தலைவர் நலமாக இருக்கிறார் என்கிறார் தென்கொரிய வெளியுறவுக் கொள்கைகளுக்கான ஆலோசகர்!

வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் உயிருடனும், நலமாகவும் இருப்பதாக தென்கொரிய வெளியுறவுக் கொள்கைகளுக்கான ஆலோசகர் தெரிவித்துள்ளார். வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் சமீபகாலமாக வெளி உலகிற்கு வரவில்லை என்பதால் அவரது உடல்நிலை குறித்து சந்தேகம் எழுந்துள்ளது. இதனிடையே, சமீபத்தில் அவருக்கு நடந்த இருதய அறுவை சிகிச்சைக்கு பின்னர் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக பிரபல அமெரிக்க செய்தி நிறுவனம் கடந்த வாரம் செய்தி வெளியிட்டது. வடகொரியாவின் ரெசார்ட் நகரில் உள்ள ரெயில் நிலையத்தில் கிம் ஜாங் அன்னின் சிறப்பு ரெயில் நிறுத்தப்பட்டிருக்கும் ...

Read More »

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் 26 மாணவர்கள் 9A

2019ஆம் ஆண்டிற்கான க. பொ. த. சாதாரண தரப் பரீட்சையில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் 26 மாணவர்கள் 9 பாடங்களிலும் திறமைச்சித்தி (ஏ) பெற்றுள்ளனர். 2019 டிசெம்பரில் நடைபெற்ற க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் 250 மாணவர்கள் தோற்றியிருந்தனர். அவர்கள், 250 பேரும் சித்தியடைந்து, கல்லூரிக்கு 100 வீதம் சித்தியைப் பெற்றுக் கொடுத்துள்ளனர். 26 மாணவர்கள் 9 ஏ பெற்றுள்ளதுடன், அவர்களில் தமிழ் மொழி மூலம் 12 பேரும் ஆங்கில மொழி மூலம் 14 பேரும் அடங்குகின்றனர். 29 மாணவர்கள் ...

Read More »

யாழ்.வேம்படியில் 58 மாணவிகளுக்கு 9A

நேற்று வெளியாகிய 2019ஆம் ஆண்டு க.பொ.த. சாதாரணதரப் பரீட்சையில் யாழ்ப்பாணம் மகளிர் உயர்தரப் பாடசாலையில் 58 மாணவிகள் 9 பாடங்களிலும் அதிதிறமைச் சித்தி (ஏ) பெற்றுள்ளனர். 2019ஆம் ஆண்டு டிசெம்பரில் இடம்பெற்ற க.பொ.த. சாதாரணதரப் பரீட்சையில் யாழ்ப்பாணம் மகளிர் உயர்தரப் பாடசாலையில் 251 மாணவிகள் தோற்றியிருந்தனர். அவர்களில் தமிழ்மொழிமூலம் 177 மாணவிகளும் 74 மாணவிகள் இருமொழிமூலம் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர். இந்த நிலையில் 58 மாணவிகள் 9 பாடங்களிலும் அதிதிறமைச் சித்தி (ஏ) பெற்றுள்ளனர். அவர்களில் 34 மாணவிகள் தமிழ்மொழிமூலம் 24 மாணவிகள் இருமொழிமூலமும் பரீட்சைக்குத் ...

Read More »

30 முதல் 50 வயதினருக்கு கரோனா பாதி்ப்பால் முக்கிய உள்ளுறுப்புகள் பாதிக்கும்;ஸ்ட்ரோக்கால் மரணம் ஏற்படும்!

கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படுத்தினால் நீரிழிவு நோய், இதயக்கோளாறு, சிறுநீரக பாதிப்பு உள்ளிட்ட நீண்டகால நோய் பாதிப்புகள் இருப்போர், முதியோர் ஆகியோருக்குத்தான் அதிகமான பாதிப்பை ஏற்படுத்தும், அவர்களுக்கு உயிரிழப்பை ஏற்படுத்தும் என கருத்து நிலவி வந்தது ஆனால் சமீபத்திய அமெரிக்க மருத்துவர்கள் ஆய்வில் 30 வயது முதல் 50 வயதுக்குள் இருப்போர் கரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகினால் உடலின் முக்கிய உறுப்புகள் பாதிக்கப்படும். சிலர் ஸ்டோரோக்கால் திடீரென எதிர்காலத்தில் உயிரிழப்பைச் சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளனர் இதில் தி வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்ட செய்தியிலும்கூட, ...

Read More »

ஏறாவூர் தமிழ் மகா வித்தியாலய மாணவன் 9A சித்தி பெற்று முதலிடம்

2019 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. (சா/தர) பரீட்சையில் மட்டக்களப்பு கல்வி வலையத்திற்குட்பட்ட ஏறாவூர் கல்விக் கோட்டத்தில் ஏறாவூர் தமிழ் மகா வித்தியாலயம் முதலிடம் பெற்றுள்ளது. அப் பாடசாலையைச் சேர்ந்த   ராதாகிருஸ்ணன் கேமதருண் எனும் மாணவன் 9A சித்தி பெற்று  பாடசாலைக்கும் அப்பிரதேசத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார். ஏறாவூர் தமிழ் மகாவித்தியாலய பாடசாலை வரலாற்றில் முதற்தடவையாக க.பொ.த. (சா/தர) பரீட்சையில் 9A சித்தி பெற்ற சந்தர்ப்பமும் இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது. 9A சித்தி பெற்று பாடாசாலைக்கும் பாடாசாலைச் சமூகத்திற்கும் பெருமை சேர்த்த இம் மாணவனை பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், ...

Read More »

கொவிட் -19 கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறலாம் !- எச்சரிக்கை!

கொவிட் -19 கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவல் சமூகத்திலான பரவலாக பரிமாணமடைய அதிக வாய்ப்புகள் உள்ள நிலையில் ஊரடங்கை அரசாங்கம் தளர்த்தி நாட்டினை வழமைக்கு கொண்டுவர நினைப்பது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என தொற்றுநோய் தடுப்பு பிரிவு தெரிவிக்கின்றது. வைரஸ் பரவலானது அதன் மூன்றாம் கட்டத்தில் இருப்பதால் அடுத்தது சமூக பரவலாக மாறலாம் எனவும் அவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர். கொவிட் -19 கொரோனா வைரஸ் பரவலின் தாக்கம் தற்போது எவ்வாறான நிலைமையில் உள்ளது என்பது குறித்து தொற்றுநோய் தடுப்பு பிரிவின் உடற்கூற்று மருத்துவ நிபுணர் ...

Read More »

பிரியா நடேசன் – 2 இலட்சம் டொலர்கள் வழக்கு செலவு செலுத்த அரசுக்கு உத்தரவு!!

அவுஸ்திரேலியா அரசின் நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட தமிழ் குடும்பத்திற்கு 2 இலட்சம் டொலர்களை  வழக்கு செலவாக செலுத்தவேண்டும் என, அந்நாட்டு அரசுக்கு, நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. பிரியா மற்றும் நடேசன் முருகப்பன் ஆகியவர்கள் சிறீலங்காவில் இடம்பெற்ற இனப்போரில் இருந்து பாதுகாப்புத் தேடி அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரியிருந்தனர். அங்கு அவர்களுக்கு கோபிகா மற்றும் தருணிகா ஆகிய இரு குழந்தைகளும் பிறந்திருந்தன. எனினும் அவர்களின் புகலிடத் தஞ்சத்தை நிராகரித்த அவுஸ்திரேலியா அரசு அவர்களை தடுப்பு முகாமுக்கு அனுப்பி நாடுகடத்த திட்டமிட்டிந்தது. இந்த நிலையில் அவர்களின் வழக்கை விசாரித்த நீதிமன்றம் ...

Read More »

முருகனின் தந்தை காலமானார்!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன் எனும் ஸ்ரீஹரனின் தந்தை வெற்றிவேல் (75-வயது) இன்று (27) அதிகாலை யாழ் போதனா வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளார். புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் இன்று மரணமடைந்துள்ளார். தனது தந்தை இறப்பதற்கு முன்னர் வீடியோ கோலில் தந்தையின் முகத்தை பார்க்க சட்டத்தரணி ஊடாக முருகன் விடுத்த கோரிக்கை தமிழக அரசு மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தந்தையின் உடலையாவது இறுதியாக பார்க்க அனுமதிக்குமாறு முருகன் மற்றும் யாழ்ப்பாணத்தில் ...

Read More »

சிறிலங்கா எதிர்க்கட்சிகளின் தீர்மானங்கள்!

பொதுத் தேர்தல் உரிய திகதியில் நடத்தப்படாததை அடுத்து பழைய பாராளுமன்றத்தை மீண்டும் கூட்ட வேண்டும் என்ற பிரதான காரணி உள்ளடங்கலாக பத்து அம்சக் கோரிக்கையில் ஐக்கிய தேசிய கட்சி, தேசிய மக்கள் சக்தி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கையொப்பமிட தீர்மானித்துள்ள நிலையில்,மக்கள் விடுதலை முன்னணி கையொப்பமிட மறுப்பு தெரிவித்து வருகின்றது. எனினும் கையொப்பமிடப்பட்ட பத்து அம்சக் கோரிக்கை இந்த வார இறுதிக்குள் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படுமெனவும், அதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவிக்காவிடாது எதிர்க்கட்சிகள் நீதிமன்றத்தை ...

Read More »

கிளிநொச்சி அழகாபுரி பாடசாலையை ஆக்கிரமித்த விமானப்படை !

கிளிநொச்சி இராமநாதபுரம் கிழக்கு அழகாபுரி அ.த.க.பாடசாலையினை கிளிநொச்சி இரணைமடு விமானப்படையினர் வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளரின் அனுமதியுடன் பொறுப்பேற்றுள்ளனர். இரணைமடு விமானப்படையின் முகாமின் ஒரு பகுதி தற்போது கொரோனா தனிமைப்படுத்தல் நிலையமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றமையால் அங்குள்ள விமானப்படையினர் தற்காலிகமாக தங்குவதற்கு எனத் தெரிவித்து குறித்த பாடசாலையினை பொறுப்பேற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விமானப்படையின் அதிகாரிகள் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளருடன் தொடர்பு கொண்டு அவரது அனுமதியுடன் பாடசாலையினை தங்களின் தேவைக்கு பெற்றுள்ளதாக கல்வித் திணைக்களம் தெரிவித்துள்ளது. பாடசாலையினை சூழவும், கிராமத்திலும் பொது மக்கள் நெருக்கமாக ...

Read More »