யாழ்ப்பாணம் – உரும்பிராய் பகுதியில் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினார்கள் என்ற குற்றச்சாட்டில் மூன்று இளைஞர்கள் நேற்று (23) கைது செய்யப்பட்டுள்ளனர். இராணுவத்தால் கைது செய்யப்பட்ட குறித்த இளைஞர்கள் கோப்பாய் காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் காவலரணில் நின்ற இராணுவத்தினர் மீதே தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட மூவரும் முச்சக்கர வண்டியில் வந்தவர்கள் என்றும் கோப்பாய் காவல் துறையினர் தெரிவித்தனர். அவர்கள் கோப்பாய், அனலைதீவு மற்றும் சங்கானைப் பகுதியைச் சேர்ந்தவர்கள். மூவர் மீதும் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், யாழ்ப்பாணம் ...
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
சமூக விலகலைக் கடைப்பிடித்து வளைகுடா நாடுகளில் இன்று ரமலான்
புனித ரமலான் மாதத்தில் கடைப்பிடிக்கப்பட்ட நோன்புக் காலம் முடிந்து வானில் பிறை காணப்பட்டதையடுத்து வளைகுடா நாடுகள் அனைத்திலும் இன்று புனித ரமலான் பண்டிகை தீவிரமான சமூக விலகலைக் கடைப்பிடித்துக் கொண்டாடப்படுகிறது. வளைகுடா நாடுகளில் இருக்கும் லட்சக்கணக்கான முஸ்லிம்கள், இந்தியர்கள் அனைவரும் உற்சாகமாக ரமலான் பண்டிகையைக் கொண்டாடுகின்றனர். கடந்த ஏப்ரல் மாதம் 24-ம் திகதி முதல் ரமலான் நோன்பு தொடங்கிய நிலையில் நோன்புக் காலம் முடிந்து நேற்று பிறை தென்பட்டதையடுத்து ஞாயிற்றுக்கிழமை ரமலான் பண்டிகை கொண்டாடப்படுவதாக வளைகுடா நாடுகளின் ஆட்சியாளர்கள் மக்களுக்கு அறிவித்து, வாழ்த்துகளைத் தெரிவித்தனர். ...
Read More »ஆஸ்திரேலியாவிலிருந்து அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்ட அகதிகள்
அமெரிக்காவில் கொரோனா கிருமித்தொற்று பெரும் சுகாதார சிக்கலாகவும் அதன் தொடர்ச்சியாக பயணத் தடைகளும் நடைமுறையில் உள்ள இச்சூழலில், மனுஸ்தீவில் (பப்பு நியூ கினியா) வைக்கப்பட்டிருந்த அகதிகளில் 35 பேர் அமெரிக்காவுக்கு மீள்குடியேற்றத்திற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் ஆஸ்திரேலியாவுக்கு மருத்துவ சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட 7 அகதிகளும் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இதன் மூலம், ஆஸ்திரேலியா- அமெரிக்கா அகதிகள் ஒப்பந்தத்தின் கீழ் தற்போது அமெரிக்காவுக்கு 42 அகதிகள் பயணமாகியுள்ளனர். கடந்த 2016ம் ஆண்டு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஆட்சிக்காலத்தில் ஆஸ்திரேலியா- அமெரிக்கா இடையே கையெழுத்தான ஒப்பந்தத்தின் ...
Read More »இறக்குமதி செய்யப்படும் 26 உணவுப் பொருட்களுக்கு வர்த்தக வரி
வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 26 ; உணவுப் பொருட்களுக்கு வர்த்தக வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்த வரிவிதிப்பு நேற்று வெள்ளிக்கிழமை முதல் அமுலுக்கு வந்துள்ளது. இதன்படி வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சீனி ,பருப்பு, செத்தல் மிளகாய்,வெள்ளைப்பூண்டு, கிழங்கு, டின் மீன், பேரீச்சம்பழம் உள்ளிட்ட 26 பொருட்களுக்கே வர்த்தகவரி விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கிழங்கிக்காக விதிக்கப்பட்டிருந்த விலை 25 ரூபாவிலிருந்து ; 50 ரூபாவாகவும் வெள்ளைப்பூடு 40 ரூபாவிலிருந்து 50 ரூபாவுக்கும், செத்தல் மிளகாய் 25 ரூபாவிலிருந்து 100 ரூபாவாகவும், மைசூர் பருப்பு 7 ரூபாயிவிலிருந்து 10 ரூபாவுக்கும், ...
Read More »உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – விசாரணைகளை சீர்குலைக்க முயற்சி
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் முறையாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிகிறது. எனினும் சிலர் இதனை சீர்குலைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன என்று பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார். நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பில் நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இதனைக் கூறிய பேராயர் மேலும் தெரிவித்ததாவது அதிகாரமுடைய ஸ்தானத்திலிருந்து கொண்டு இவ்வாறு செயற்படுபவர்கள் அவர்களுக்கு எவ்வாறு வாழ்வதற்கான உரிமை இருக்கின்றதோ அதே போன்ளுறு போது உயிர்த்த ஞாயிறு தினத்தன்று உயிழிரழந்தவர்களுக்கும் வாழ்வதற்கான உரிமை இருந்தது. ஆனால் ...
Read More »வடக்கு மாகாண சுகாதாரதுறைக்கு வடக்கு ஆளுநர் விடுத்துள்ள பணிப்புரை
வட மாகாண சுகாதாரத்துறையின் உடனடித் தேவைகளுக்கான முக்கியத்துவத்தின் அடிப்படையில் பூரணப்படுத்தப்பட்ட திட்டமொன்றை தயாரிக்குமாறு வடமாகாண ஆளுநர் திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸ் பணிப்புரை விடுத்துள்ளார். அத்துடன் தயாரிக்கப்படும் திட்டத்தினை படிப்படியாக செயற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளதோடு மாகாண சுகாதாரத்துறையில் காணப்படுகின்ற சாவால்கள் தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தியுள்ளார் வடமாகாணத்தில் காணப்படும், மாவட்ட பொது வைத்தியாசலைகள், பிரதேச வைத்தியசாலைகள், ஆரம்ப சுகாதாரப் பராமரிப்பு நிலையங்கள் ஆகியவற்றின் தற்போதைய நிலைமைகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதை அடிப்படையாகக் கொண்டு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள், மாவட்ட பொது வைத்தியசாலைகளின் ...
Read More »மாஸ்க் விதிமுறைகள்: இங்கிலாந்து அரசு உத்தரவை எதிர்த்து இந்திய வைத்திய தம்பதியர் வழக்கு
இங்கிலாந்தில் பயன்படுத்திய சுய பாதுகாப்பு கவசங்களை மீண்டும் பயன்படுத்த சொல்லி உயிருக்கு உலை வைக்கும் அரசு உத்தரவை எதிர்த்து இந்திய வைத்திய தம்பதியர் வழக்கு தொடருகின்றனர். இங்கிலாந்து நாட்டில் கொரோனா வைரஸ் காட்டுத்தீ போல பரவி வருகிறது. அங்கு இதுவரை அந்த வைரஸ் தாக்குதலுக்கு 2½ லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஆளாகி இருக்கிறார்கள். 36 ஆயிரத்துக்கும் மேலானோர் உயிரிழந்தும் இருக்கிறார்கள். அங்கு கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளானவர்களுக்கு இந்திய டாக்டர்கள் பலரும் முன்நின்று சிகிச்சை அளித்து வருகிறார்கள். அங்கு சிக்கன நடவடிக்கையாக, பி.பி.இ. என்று அழைக்கப்படுகிற ...
Read More »இலங்கைத் தீவை இரண்டாக பிரிக்கும் வகையில் உண்மையாகவே செயற்படுவது யார்?
இலங்கைத் தீவை பிரிப்பது யார் விக்கி கேள்வி ? வடக்கிற்கு ஒரு சட்டம் தெற்கிற்கு ஒரு சட்டம் என்கிறார் தமிழ் மக்களின் யுத்தத்தை பொறுத்தவரையில், நினைவுகூரல் நிகழ்வுகள் தடுக்கப்படுவதுடன் யுத்த வெற்றி விழா தென் இலங்கையில் அதே காலகட்டத்தில் கொண்டாடப்படுகின்றது. நீதித்துறையின் சட்டம் கூட இருவேறாக தென் இலங்கைக்கும் வடக்கு கிழக்கிற்கும் பிரயோகிக்கப்படுகின்றது. நினைவு கூரல் நிகழ்வுகளில் கலந்துகொண்டவர்கள் மீது கொரோன தனிமைப்படுத்தல் விதி முறைகள் பாய்கின்றன. ஆனால், ; தென் இலங்கையில் ; யுத்த வெற்றி விழா கொண்டாடுபவர்கள் மீது எந்த சட்டமும் ...
Read More »இரண்டு நாள்கள் இலங்கை முழுவதும் ஊரடங்கு அமுல்
எதிர்வரும் 24ஆம் திகதி மற்றும் 25ஆம் திகதி ஆகிய நாள்களில் இலங்கை முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் அமுலில் உள்ள ஊரடங்கு மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் நீட்டிக்கப்பட்டுள்ளது. கொழும்பு, கம்பஹா மாவட்டங்களை தவிர்த்து ஏனைய மாவட்டங்களில் நாளை (23) இரவு 08 மணிக்கு அமுல்படுத்தப்படும் ஊரடங்கு சட்டம் 26ஆம் திகதி அதிகாலை 05 மணிக்கு நிக்கப்படும். கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் வழமை போன்று ஊரடங்கு அமுலில் இருக்கும்.
Read More »வாரத்தில் 4 நாள் மட்டுமே வேலை – நியூசிலாந்து பிரதமர் ஆதரவு
வாரத்தில் 4 நாள் மட்டுமே வேலை, மற்ற 3 நாட்கள் விடுமுறை என்ற யோசனைக்கு நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் ஆதரவு தெரிவித்துள்ளார். நியூசிலாந்து பிரதமராக பதவி வகித்து வருபவர் ஜெசிந்தா ஆர்டெர்ன். உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரசை அந்நாட்டில் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளார். 5 மில்லியன் மக்கள்தொகை கொண்ட நியூசிலாந்தில் கொரோனாவால் 21 பேர் பலியாகி உள்ளனர். இந்நிலையில், வாரத்தில் 4 நாள் மட்டுமே வேலை, மற்ற 3 நாட்கள் விடுமுறை என்ற யோசனைக்கு நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் ஆதரவு ...
Read More » Eelamurasu Australia Online News Portal
Eelamurasu Australia Online News Portal
				 
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			