அமரிக்காவில் கறிப்பினத்தவருக்கு எதிரான அராஜகங்களுக்காக குரல்கொடுக்கும் இலங்கையர்கள், நம் நாட்டில் சிறுபான்மையினருக்கு எதிராக இடம்பெறும் வன்முறைகளுக்கும் புறக்கணிப்புகளுக்கு எதிராகவும் குரல்கொடுக்க வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் அமைப்புச் செயலாளரும் ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளருமான கலாநிதி ஜனகன் வலியுறுத்தியுள்ளார். அரசாங்கத்தின் இராணுவ மயமாக்கல் தொடர்பில் ஊடகங்களுக்கு அவர் அனுப்பி வைத்துள்ள அறிக்கையில், மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவையாவன: தொல்பொருள் திணைக்களம் தொடர்ச்சியாக மதவாத அரசியலின் ஓர் ஊடகமாக பயன்படுத்தப்படுகின்றது. காலாகாலமாக தொல்பொருள் திணைக்களம் தமிழர்களையும் முஸ்லிம்களையும் புறக்கணித்துச் செயற்பாடுவது ஒரு தொடர்கதையாகத் தொடர்கிறது. ...
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
புதிய அரசியலமைப்பை உருவாக்கினால் சர்வதேச அங்கீகாரத்தைப் பெறுவீர்கள்!
மக்கள் ஆதரவு பெற்ற ஒரு பலமிக்க தலைவரான மஹிந்த ராஜபக்ஷ, அவசரமானதும் கட்டாயமானதுமான புதிய அரசமைப்பை உருவாக்கும் பணியை நிறைவேற்றினால் வெறுமனே தேசிய அங்கீகாரத்தை மாத்திரமின்றி சர்வதேச அங்கீகாரத்தையும் மதிப்பையும் பெறுவார். இந்த விடயத்தில் எமது முழுமையான ஆதரவு அவருக்கு வழங்கப்படும் என இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அரசியலில் ஐம்பது ஆண்டுகளைப் பூர்த்தி செய்தமையைப் பாராட்டி வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மஹிந்த ராஜபக்ஷ தனது அரசியல் வாழ்க்கையில் ...
Read More »சிறிலங்காவில் ஆகஸ்ட் முற்பகுதியில் தேர்தல்
நாடாளுமன்ற தேர்தல் ஆகஸ்ட் மாதம் முற்பகுதியில் நடைபெறலாம் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரியவை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன. நாடாளுமன்ற தேர்தலை ஆகஸ்ட் முற்பகுதியில் நடத்துவது குறித்தே தேர்தல் ஆணைக்குழு ஆராய்ந்துவருகின்றது என மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார் திங்கட்கிழமை இது குறித்த இறுதி முடிவெடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.வேட்பாளர்களின விருப்ப்பிலக்கங்களை நாளை வெளியிடுவோம் என அவர் குறிப்பிட்டுள்ளார் . தேர்தல்வாக்களிப்பு நிலையங்கள் மற்றும் வாக்குகள் எண்ணப்படும் நிலையங்களின் எண்ணிக்கை இம்முறை அதிகரிக்கப்படும் என தெரிவித்துள்ள மகிந்த தேசப்பிரிய இம்முறை மரப்பெட்டிகளால் தயாரிக்கப்பட்ட பெட்டிகளை ...
Read More »அவதூறு வழக்கில் இம்ரான்கானிடம் விளக்கம் கேட்ட பாக். நீதிமன்றம்
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு எதிராக தொடரப்பட்டிருந்த அவதூறு வழக்கில், அவரிடம் விளக்கம் கேட்டு பாகிஸ்தான் நீதிமன்றம் நேற்று நோட்டிஸ் அனுப்பியுள்ளது. இம்ரான்கான் தங்கள் குடும்பத்தின் மீது அவதூறு சுமத்தியுள்ளார் என்று பாகிஸ்தான் முஸ்லிம் லீக் – நவாஸ் கட்சியின் தலைவர் ஷாபாஷ் ஷெரீப் வழக்குத் தொடர்ந்து இருந்தார். இந்நிலையில் கடந்த மூன்று வருடமாக நடந்து வருகிற இந்த வழக்கில் ஜூன் 10-ம் திகதிக்குள் இம்ரான்கான் எழுத்து மூலம் விளக்கம் அளிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. முன்னதாக, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் ...
Read More »யாழ் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் காலமானார்!
யாழ் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தம்பு லோகநாதபிள்ளை தனது 85 ஆவது வயதில் கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை காலமானார். யாழ் நாரந்தணையில் பிறந்த லோகநாதபிள்ளை தனது கல்வியை கரம்பன் சென் அன்றனிஸ் கல்லூரியில் பயின்று பின்னர் 1957ல் கொழும்பு வீரகேசரி பத்திரிகையில் தனது பணியை தொடங்கினார். பின்னர் கொழும்பு மாநகரசபையில் உத்தியோகத்தராக சேர்ந்தார். கொழும்பில் பணியாற்றிய போதிலும் வடக்கு கிழக்கு பகுதிகளில் தந்தை செல்வா மற்றும் தமிழ் தலைவர்களின் தலைமையில் நடைபெற்ற அகிம்சை போராட்டங்களில் தொடர்ச்சியாக கலந்துகொண்டிருந்தார். 1983ல் ஏற்பட்ட இன கலவரத்தினால் ...
Read More »இந்திய எல்லையை கண்காணிக்க புதிய தளபதியை நியமித்தது சீனா
இந்தியாவுடனான எல்லையை பாதுகாக்கும் மேற்கு மண்டல் படையின் தரைப்படை பிரிவுக்கு சீனா, லென்டினன்ட் ஜெனரல் சூ கிலிங்கை புதிய தளபதியாக நியமித்து இருக்கிறது. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே 3,488 கி.மீ. நீள எல்லை உள்ளது. சீன ராணுவம் அடிக்கடி எல்லையை தாண்டி இந்திய நிலப்பகுதிக்குள் ஊடுருவுவதால் பிரச்சினை ஏற்படுகிறது. லடாக் எல்லை பகுதியில் சமீபத்தில் இரு தரப்பு ராணுவத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் உண்டான பதற்றத்தை தணிக்க இன்று (சனிக்கிழமை) பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இந்த நிலையில், இந்தியாவுடனான எல்லையை பாதுகாக்கும் மேற்கு மண்டல் படையின் ...
Read More »சிறிலங்காவில் நாளை தேர்தல் ஒத்திகை
சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றி ஒத்திகை தேர்தல் நாளை (7) காலை 10 மணியிலிருந்து 12 மணி வரை இடம்பெறவுள்ளது. அம்பலாங்கொடை விலேகொட தம்யுக்திகாராம விகாரையின் மண்டபத்தில் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரியவின் தலைமையில் இந்த தேர்தல் ஒத்திகை நடைபெறவுள்ளது. இதற்காக 200 வாக்காளர்களை மாத்திரம் ஈடுபடுத்தப்படவுள்ளனர். சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றி வாக்குச் சாவடியொன்றை நடத்திச் செல்லும் போது ஏற்படக்கூடிய சிக்கல்களை இணங்காண்பதே இந்த தேர்தல் ஒத்திகையின் நோக்கமாகும். சமூக இடைவெளியை பேணுதல், முகக்கவசம் அணிதல் மற்றும் கிருமி நீக்கி திரவத்தை உபயோகப்படுத்தல், தேசிய அடையாள ...
Read More »சிறிலங்கா ஜனாதிபதி, பிரதமர் நாட்டின் சிவில் சட்டங்களை மீறுகின்றனர்!
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவும் , பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் நாட்டின் சிவில் சட்டத்தை மீறி செயற்படுவதாக குற்றஞ்சாட்டிய ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில், துறைச்சார் தேர்ச்சி பெற்றவர்கள் ஊடாக முன்னெடுக்க வேண்டிய பிரிவுகளுக்கு இராணுவத்தினரை நியமித்து வருவது இராணுவ ஆட்சிக்கு வித்திடுவதாகும் என்றும் கூறினார். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அமுல்படுத்தப்பட்டிருக்கும் தனிமைப்படுத்தல் மற்றும் தொற்றுநீக்க சட்டவிதிகளை அரசாங்கம் மீறிவருவதுடன் , அமெரிக்க இராஜதந்திரி தொடர்பிலும் அக்கறையின்றி இருக்கின்றது. இந்த விடயம் தொடர்பில் வெளிநாட்டு அமைச்சர் மற்றும் அமைச்சின் ...
Read More »பார்த்திருக்கவே கறுப்பு நிறமாகிய உடல்! கொரோனாவால் மரணித்த வைத்திய நிபுணர்
கொரோனாவால் பாதிக்கப்பட்ட சீன வைத்தியர் ஒருவருக்கு உடல் முழுவதும் நிறம் மாறிக் கொண்டே வந்தது. கறுப்பு நிறமாக மாறிய நிலையில், சிகிச்சை பலனின்றி வைத்தியர் இறந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. சீனாவில் முன்னணி வைத்தியரான ஹூ வெய்பெங் ட்னி என்ற பெயருடைய வைத்தியர், சிறுநீரக வைத்திய நிபுணராவார். குறித்த பகுதியில் பிரபலமான வைத்தியர் இவர் என்பது குறிப்பிடதக்கது. இந்நிலையில், இவருக்கு கடந்த ஜனவரி மாதம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதேபோல, இவருடன் வேலை பார்த்த மற்றொரு வைத்தியரான யி-பன் என்பவருக்கும் தொற்று ...
Read More »தாயுடன் பேச முருகன், நளினியை மனிதாபிமான அடிப்படையில் கூட அனுமதிக்க முடியாதா?-
ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று வரும் முருகன், வெளிநாட்டில் வாழும் அவர் தாயுடன் தொலைபேசி மூலமாக பேச மனிதாபிமான அடிப்படையில் கூட அனுமதி வழங்க முடியாதா? என சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் கேள்வி எழுப்பி உள்ளது. ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகனின் தந்தை சமீபத்தில் காலமானார். இந்நிலையில், இலங்கையில் வசிக்கும் முருகனின் தாய் மற்றும் லண்டனில் வசிக்கும் தங்கையுடன் வாட்ஸ் ஆப் வீடியோ கால் மூலம் பேச முருகனுக்கும், நளினிக்கும் அனுமதியளிக்க உத்தரவிடக் ...
Read More » Eelamurasu Australia Online News Portal
Eelamurasu Australia Online News Portal
				 
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			