Tag Archives: ஆசிரியர்தெரிவு

விஜயகலாவை விசாரிக்க ஒழுக்காற்று குழு!

சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சராக பதவி வகித்த விஜயகலா மகேஷ்வரன் அண்மையில் விடுதலைப்புலிகளின் மீள் வருகை தொடர்பில் வெளியிட்டிருந்த கருத்து தொடர்பில் விசாரணை செய்வதற்காக நால்வர் கொண்ட ஒழுக்காற்று விசாரணை குழுவை ஐக்கிய தேசிய கட்சி நியமித்துள்ளதாக கட்சியின் தவிசாளர் அமைச்சர் கபீர் ஹாசிம் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் விஜயகலா மகேஷ்வரன் யாழ்பாணத்தில் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் விடுதலைப் புலிகள் பற்றிய கருத்தினை முன்வைத்திருந்தார்.அது தொடர்பில் பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் வெளியாகின. அது மாத்திரமன்றி அரசியலமைப்பிற்கு முரணான ...

Read More »

ஆஸ்திரேலியாவில் கார்களின் டயர்களை பதம்பார்த்த “உருகும் சாலை”

சாலையில் போடப்பட்டுள்ள கட்டித்தார் உருகி, வாகனங்களின் டயர்களில் ஒட்டியதால், ஆஸ்திரேலிய வாகன ஓட்டுநர்கள் தங்களுடைய வாகனங்களை கைவிட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். குயின்ஸ்லாந்திலுள்ள 50-க்கு மேற்பட்ட வாகன ஓட்டிகளுக்கு இது தொடர்பாக இழப்பீடு வழங்கப்படலாம் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன. “இதுபோல நான் இதுவரை பார்த்ததில்லை. நேற்று இது பற்றிய தகவல்கள் வர தொடங்கியவுடன் நம்ப முடியவில்லை” என்று உள்ளூர் மேயரான ஜோ பரோனல்லா பிபிசியிடம் தெரிவித்தார். வானிலையில் ஏற்பட்ட மாற்றத்தால் நிகழந்துள்ள இந்த சம்பவத்தால், கடந்த வாரம் தார் போடப்பட்ட சாலை சேதமடைந்துள்ளது. பல ...

Read More »

‘நாங்கள் நலமாக உள்ளோம் ஆனா ரொம்ப குளிருது!- தாய்லாந்தின் குகையில் இருந்து சிறுவர்கள்

தாய்லாந்தில் நீர் தேங்கியிருக்கும் குகையில் சிக்கியுள்ள 12 சிறுவர்கள் மற்றும் அவர்களது கால்பந்து பயிற்சியாளருக்கு நீரில் மூழ்க தெரியாது என்பதால் ஓர் இரவில் அவர்களை மீட்டுவிட முடியாது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தாய்லாந்தின் தம் லுவாங் குகையின் ஒரு பகுதியில், ஏறக்குறைய இரண்டு வாரங்களாக சிக்கியிருக்கும் 12 சிறுவர்கள் மற்றும் அவர்களது கால்பந்து பயிற்சியாளரை மீட்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.உயிருடன் இருப்பதாக இங்கிலாந்தை சேர்ந்த 2 நீர் மூழ்கி வீரர்கள் கடந்த 9-ம் தேதி உறுதி செய்தனர். இதனையடுத்து அவர்கள் அனைவரையும் விரைந்து ...

Read More »

சிறார்களுக்கான தேடியந்திரம்!

கூகுள் முன்னணித் தேடியந்திரமாக விளங்கினாலும், சிறார்கள் இணையத்தில் உலாவும்போது பயன்படுத்த பாதுகாப்பான தேடியந்திரம் தேவை. அந்த வகையில், சிறார்களுக்கான தேடியந்திரமாக, ‘கிட்டி’ (Kidy) தேடியந்திரம் புதிதாக இணைந்துள்ளது. சிறார்களுக்குப் பொருத்தமில்லாத உள்ளடக்கம் இந்தத் தேடியந்திரத்தில் குறிச்சொற்கள் மூலம் முடக்கப்படுகின்றன. மேலும் பல வகையான பாதுகாப்பு அம்சங்களும் அளிக்கப்படுகின்றன. கூகுள் தேடியந்திரம் அளிக்கும் தேடல் நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டே இந்தத் தேடியந்திரமும் செயல்படுகிறது. இணைய முகவரி: https://kidy.co/

Read More »

குகையில் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்த கடற்படை வீரர் பலி!

தாய்லாந்தில் குகையில் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்த கடற்படை வீரர் ஒருவர் உயிரிழந்தார். குகையில் சிறுவர்கள் சுவாசிப்பதற்காக ஏர் டேங்குகளை (சுவாசிப்பதற்கு தேவையான காற்று அடங்கிய சிறிய தொட்டிகள்) பொருந்தும் போது மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த சமான் குனான் என்ற கடற்படை வீரர் பலியானதாக தாய்லாந்து கடற்படை தெரிவித்துள்ளது. தாய்லாந்து நாட்டின் மா சே நகரில் தாம் லுவாங் என்ற குகை உள்ளது. இந்தக் குகை 10 கி.மீ. நீளம் உடையதாகும். கடந்த வாரம் 11 வயது முதல் 16 வயதுவரை உடைய ...

Read More »

அவுஸ்திரேலியாவில் இரண்டு பிள்ளைகளைச் சுட்டுக்கொன்ற தந்தை!

அவுஸ்திரேலியாவில் இரண்டு பிள்ளைகளைச் சுட்டுக்கொன்ற தந்தை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. சிட்னி Pennant Hills பகுதியில் தமது படுக்கை அறைகளிலிருந்த 15 வயது மகன் மற்றும் 13 வயது மகளை 68 வயது தந்தை ஒருவர் சுட்டுக் கொன்றிருந்தார். அத்துடன் அவர் அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த நபரைத் தேடும் பணி பல மணிநேரங்களாக இடம்பெற்றது. இந்த நிலையில் இன்று Normanhurst பகுதியில் அவரது சடலம் மீட்கப்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். மீட்கப்பட்ட சடலத்துக்கு அருகில் இரண்டு கைத்துப்பாக்கிகளும் மீட்கப்பட்டுள்ளது. அந்தக் ...

Read More »

“அன்று மக்களுக்காக உயிர் துறந்தவர் மகேஸ்வரன் இன்று பதவி துறந்தவர் விஐயகலா“!

அமைச்சர் பதவியை இராஜினாமா செய்தவிஐயகலா மகேஸ்வரனுக்கு ஆதரவாக யாழில் பல இடங்களிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருக்கின்றன. யாழில் கடந்தவாரம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் புலிகளை மீள உருவாக்க வேண்டுமென விஐயகலா மகேஸ்வரன் உரையாற்றியிருந்தார். இந்த உரைக்கு தெற்கிலிருந்து கடுமையான எதிர்ப்புக்கள் வெளியிடப்பட்ட நிலையில். நாடாளுமன்றத்திலும் குழப்பங்கள் ஏற்பட்டிருந்தன. அத்தோடு விஐயகலாவின் உரை குறித்தான விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்ற நிலையில் பிரதமர் ரணிலையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார். இந் நிலையில் தமிழ் மக்களுக்காக தன்னுடைய பதவியை இராஜினாமா செய்வதாக நேற்று அறிவித்திருந்தார். இதனையடுதே அவருக்கு ஆதரவாக குடாநாட்டின் பல இடங்களிலும் சுவரொட்டிகள் ...

Read More »

மக்களுக்காக அமைச்சுப் பதவியை ராஜினாமா செய்ததில் நான் பெருமை கொள்கின்றேன்!-விஜயகலா

அமைச்சர் விஜயகலா தனது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி மைத்திரிபாலா, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே ஆகியோருக்கு நேற்று(5) அனுப்பி வைத்தார். இதுகுறித்து விஜயகலா தனது முகநூல் பக்கத்தில் மக்களின் துன்பங்களை பொறுத்துக்கொள்ள முடியாமையினாலேயே குரல் கொடுத்தேன் மக்களுக்காகவே பதவி துறந்தேன். வடக்கில் மக்களின் துன்பங்களை துயரங்களை வெளிக்கொணரும் வகையிலேயே நான் கருத்துத் தெரிவித்திருந்தேன். அத்தகைய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளமையால் கட்சியின் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியும் மக்களுக்காகவும் எனது அமைச்சுப் பதவிலியிருந்து இராஜினாமாச் செய்துள்ளேன். வடக்கில் குறிப்பாக யாழ்.குடாநாட்டில் வன்முறைகளும் குற்றச்செயல்களும் அதிகரித்துள்ளன. ஆறு வயதுச் சிறுமி ...

Read More »

நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையின் செய்தி: ரணில் நாடாளுமன்றத்தில் விசேட உரை !

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று நாடாளுமன்றத்தில் விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார். இவ்வுரையில், நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி அறிக்கை பற்றியும், ஹம்பாந்தோட்டை திட்டம் பற்றியும் விசேட கூற்றொன்றை வெளியிட்டு உரையாற்றவுள்ளமை குறிப்பிடதக்கது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்பாக, நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டிருந்த செய்தி தொடர்பாகவே மேற்படி உரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடதக்கது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று நாடளுமன்றத்தில் விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார். இவ்வுரையில், நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி அறிக்கை பற்றியும், ஹம்பாந்தோட்டை திட்டம் பற்றியும் விசேட கூற்றொன்றை வெளியிட்டு ...

Read More »

சீனாவில் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளவரை விடுவிக்க ஐ.நா. வலியுறுத்தல்!

நோபல் பரிசு பெற்ற சமூக ஆர்வலரின் மனைவியை வீட்டுச் சிறையில் இருந்து உடனடியாக விடுதலை செய்யுமாறு சீன அரசை ஐ.நா. மனித உரிமை முகமை வலியுறுத்தியுள்ளது. சீனாவில் ஜனநாயகம் தொடர்பான ‘சார்ட்டெர் 8’ என்ற நூலை கடந்த 2009-ஆம் ஆண்டு வெளியிட்ட காரணத்துக்காக அந்நாட்டின் பிரபல எழுத்தாளரான லியு சியாபோ (61), என்பவருக்கு சீன அரசு 11 வருட சிறைத் தண்டனை விதித்தது. கடந்த 2010-ம் ஆண்டு அவருக்கு சமாதானத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இதனால் சீனாவுக்கும் நோபல் பரிசை அளித்துவரும் நார்வே நாட்டுக்கும் ...

Read More »