Tag Archives: ஆசிரியர்தெரிவு

கொரோனாவிற்கெதிராக போராடுவதற்கு ஆயுர்வேத வைத்தியர்களின் பரிந்துரைகள்!

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றின் காரணமாக நாடெங்கும் அமைதியான சூழ்நிலை நிலவிவருகிறது. இந்நிலையில், தற்போது 77 பேர் வரை கொரோனா தொற்றுக்குள்ளாகியிருப்பது உறுதியாகியுள்ளது. இந்நிலையில், இத்தொற்று ஏற்பட முன்னர் மக்களை மிக அவதானத்துடன் செயற்படுமாறு அரசாங்கம் அறிவித்தல்களை வழங்கிவருகின்றது. அத்தோடு ஆயுர்வேத மருத்துவர்கள் சில மருந்து வகைளை பயன்படுத்தவதன் மூலம் இத்தொற்றிலிருந்து மக்களை பாதுகாத்துக்கொள்ள முடியுமென பரிந்துரைக்கின்றனர். அதாவது, இக்கொரோனா தொற்று பரவுவதற்கு இடம்கொடுக்காது, எமது உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொண்டால், இந்நோய் தொற்றிலிருந்து விடுபடுவதற்கு அதிக வாய்ப்புக்கள் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அதற்காக ...

Read More »

கொரோனாவை எதிர்த்துக் கொல்லும் மருந்து பெயர்!

கொரோனா வைரஸ் தொற்றை எதிர்த்துப் போராடிக் கொல்லும் மருந்துகளின் பெயரை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தற்போது வெளியிட்டுள்ளார். உலக நாடுகளை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை 2 லட்சத்து 77 ஆயிரத்து 166 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று மாலை நிலவரப்படி, சிகிச்சை பலனின்றி பலியானவர்கள் எண்ணிக்கை 11 ஆயிரத்து 737 ஆக அதிகரித்துள்ளது. இதற்கிடையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த 18-ம் தேதி அடுத்தடுத்து வெளியிட்ட பதிவுகளில், ‘அமெரிக்க மக்களின் சமூக பாதுகாப்பு மற்றும் மருத்துவ பாதுகாப்புக்கு நான் பாதுகாப்பு ...

Read More »

கொரோனா உங்களை தேடிவருவதில்லை நீங்களே அதைத்தேடிச் செல்கின்றீர்கள்!

வைரஸ் என்பது எமக்கு புதிய விடயமல்ல கொரோனா வைரஸை பொறுத்தமட்டில் அது உங்களை தேடிவருவதில்லை நீங்களே அதைத்தேடிச் செல்கின்றீர்கள் எனவே தேவையற்ற அச்சங்களை விடுத்து ஆலோசனைகளுக்கு அமைவாக செயற்படுங்கள் என கிழக்கு பல்கலைக்கழக மருத்துவபீட சிரேஸ்ட விரிவுரையாளரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வைத்திய நிபுணரும் கொரோனா வைரஸ் எதிர்ப்பு பிரிவின் வைத்திய நிபுணருமான ம.உமாகாந்த் தெரிவித்தார். கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பாக மக்களை தெளிவூட்டும் வைகையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார் அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், உலகம் இன்று ...

Read More »

இறந்தவரிடம் மன்னிப்பு கேட்ட சீன அரசாங்கம்!

கொரோனா பாதிப்பு இருப்பதாக , Li Wenliang எங்களுக்கு முதலில் சொன்னவர். ஆனால் அவர் பேச்சை நாங்கள் கேட்கவில்லை. அவர் பேச்சை மதிக்காமல் நாங்கள் அவர் மீது வழக்கு பதிவு செய்தோம். நாங்கள் செய்த தவறு இது. இதை இனி எங்களால் மாற்ற முடியாது என சீன காவல் துறையினர்   தெரிவித்துள்ளனர். சீனாவை மட்டுமல்ல இன்று முழு உலகையும் நிலைகுலையச் செய்திருக்கும் கொரோனா பாதிப்பு தொடர்பில் முதல் முதலில் வெளிப்படுத்தியவர் தான் Li Wenliang என்கிற மருத்துவர். ஆனால், அவரின் பேச்சினை அரசும் கண்டு ...

Read More »

ஆஸ்திரேலிய அகதிகள் அச்சத்தில்! முகாம் காவலாளிக்கு கொரோனா!

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் உள்ள ஹோட்டல் அகதிகளை வைத்திருக்கும் தற்காலிக இடமாக பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், அங்குள்ள காவல் அதிகாரிக்கு கொரோனா வைரஸ் தாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளமை அகதிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம்களிலிருந்து மருத்துவ சிகிச்சைக்காக கொண்டு வரப்பட்ட அகதிகள், இந்த ஹோட்டலில் வைக்கப்பட்டுள்ளனர். அதே சமயம், ஹோட்டலில் வைக்கப்பட்டுள்ள அகதிகளுக்கு கொரோனா சோதனை நடத்தப்படவில்லை எனக் கூறப்படுகின்றது. உணவு மற்றும் பிற செயல்களுக்காக பயன்படுத்தப்படும் இடம் மிக குறுகியதாகவும் பொதுவானதாகவும் இருக்கும் சூழலில், அகதிகளுக்கு பாதுகாப்பற்ற ...

Read More »

ஆஸ்திரேலியாவில் கொரோனாவால் 07 ஆவது மரணம்!

ஆஸ்திரேலியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 7வது நபர் மரணமடைந்துள்ளார். ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தைச் சேர்ந்த 81 வயது மூதாட்டியே இவ்வாறு மரணமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் மட்டும் இதுவரை 6 பேர் மரணமடைந்துள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில், நியூ சவுத் வேல்ஸில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக 75 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். இதையடுத்து, இம்மாநிலத்தில் வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 382 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில், ஆஸ்திரேலியா முழுதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 700-யை தாண்டியுள்ளது.

Read More »

யாழில் மனித உரிமைகள் அலுவலகம் மூடப்பட்டது!

கொரோன வைரஸ் அச்ச நிலையை அடுத்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகம் இன்று வெள்ளிக்கிழமை முதல் மறு அறிவித்தல் வரும்வரைக்கும் மூடக்பட்டுள்ளது. அலுவலகம் மூடப்பட்ட காலப்பகுதியில் மனித உரிமை மீறல் தொடர்பான முறைப்பாடுகளை 1996 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பதிவு செய்யுமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய இணைப்பாளர் ரி.கனகராஜ் தெரிவித்தார். கொவிட்-19 கொரோனா வைரஸ் தாக்கம் இலங்கையிலும் பீடித்துள்ள நிலையில், அதனை கட்டுப்படுத்த அரசாங்கத்தினால் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன்படி அரசாங்கம் மற்றும் தனியார் நிறுவனங்களையும் ...

Read More »

“சீன வைரஸ்” – வர்ணனைக்கு அதிகரிக்கும் கண்டனங்கள்!

சீனாவை அவமதிப்பதற்காக கொவிட் — 19 கொரோனாவைரஸை வௌநாட்டவரகள் மீதான வெறுப்புணர்வின் தொனியில் ‘ சீன வைரஸ் ‘ என்று அமெரிக்க அரசியல்வாதிகள் சிலர் செய்த வர்ணனைக்கு பரவலாக கடுமையான கண்டனங்கள் கிளம்பியிருக்கின்றன. கொரோனாவைரஸ் பரவலுக்கு எதிரான போராட்டத்தில் சர்வதேச சமூகம் ஒன்றிணைந்து செயற்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில், அந்த வைரஸ் பரவலுக்கு சீனா மீது பழியைச் சுமத்துகின்ற ஒரு சில அமெரிக்க அரசியல்வாதிகள் அதை ‘ சீன வைரஸ் ‘ அல்லது ‘ அந்நிய வைரஸ்’ என்று நாமகரணம் சூட்டியிருக்கிக்கிறார்கள். சீன வைரஸ் என்ற பதம் ...

Read More »

இலங்கை முழுவதும் ஊரடங்கு!

இலங்கை ரீதியில் காவல் துறை ஊரடங்கை அமுல்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி செயலகம் விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்தவகையில், நடளாவிய ரீதியில் இன்று மாலை 6 மணி முதல் எதிர்வரும் 23 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 6 மணி வரை ஊரடங்கை அமுல்படுத்தபடவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

Read More »

நியூசிலாந்தில் இனி கருக்கலைப்பு குற்றம் அல்ல!

நியூசிலாந்தில் கடந்த 40 ஆண்டுகளாக மருத்துவ சிகிச்சைகளில், குற்றமாக கருதப்பட்டு வந்த கருக்கலைப்பு குற்றம், தற்போது குற்றம் அல்ல என்ற மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. நியூசிலாந்து நாட்டில் கருக்கலைப்பு என்பது குற்றம். இதற்கு அங்கு 1977-ம் ஆண்டு இயற்றப்பட்ட ஒரு சட்டம் வழிவகுத்து இருந்தது. இந்த நிலையில், அந்த நாட்டின் குற்றவியல் சட்டத்தில் இருந்து, கருக்கலைப்பு குற்றம் என்று கூறப்பட்ட பிரிவை நீக்க நியூசிலாந்து அரசு முடிவு செய்தது. இதற்கான மசோதா, அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது. இந்த சட்ட மசோதாவுக்கு ஆதரவாக ...

Read More »