Tag Archives: ஆசிரியர்தெரிவு

கரோனா வைரஸ் பாதிப்பு: சீன இயக்குநர் குடும்பத்தோடு பலி !

மத்திய சீனாவின் ஹுபெய் மாகாணம், வூஹானில் கடந்த டிசம்பர் மாதம் கோவிட்-19 காய்ச்சல் கண்டறியப்பட்டது. கடந்த சில மாதங்களில் ஹுபெய் மாகாணம் மட்டுமன்றி சீனா முழுவதும் இந்தக் காய்ச்சல் கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸுக்கு சீனாவில் மட்டும் 2004 பேர் பலியாகியுள்ளனர். சீனாவின் தேசிய சுகாதார அமைப்பின் தகவலின்படி சுமார் 74,185 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 11,977 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 14,376 பேர் குணமடைந்து மருத்துவமனை திரும்பியுள்ளனர். ...

Read More »

லாரியஸ் விருதை வென்றார் சச்சின்!

விளையாட்டு உலகின் மிக உயரிய அங்கீகாரங்களில் ஒன்றாக கருதப்படும் லாரியஸ் விருது சச்சின் டெண்டுல்கருக்கு வழங்கப்பட்டுள்ளது. விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குவோருக்கு ஆண்டுதோறும் லாரியஸ் விருதுகள் வழங்கப்படுகின்றன. விளையாட்டு உலகின் மிக உயரிய விருதுகளில் ஒன்றாக இந்த விருது கருதப்படுகிறது. அவ்வகையில் 2019- ஆம் ஆண்டுக்கான லாரியஸ் விருதுகள் வழங்கும் விழா ஜெர்மனி தலைநகர் பெர்லினில் நடைபெற்றது. இதில்  2019-ம் ஆண்டின் சிறந்த வீரருக்கான லாரியஸ் விருது நட்சத்திர கால்பந்து வீரர் மெஸ்சி மற்றும் பார்முலா முன் கார் பந்தயத்தில் 6 முறை சாம்பியன் ...

Read More »

கோட்டாவிடம் மஹிந்த முன்வைத்துள்ள முக்கிய கோரிக்கை!

நாடாளுமன்றத்தை கலைத்து உடனடியாக பொதுத்தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னெடுக்க வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார். ஏனெனில், அரசியல் பழிவாங்கள், முரண்பாடான அரசியல் நிர்வாகம் ஆகியவற்றைக் கொண்டு நாட்டை சிறந்த முறையில் கட்டியெழுப்ப முடியாது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பதுளையில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் இதனை குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த பிரதமர், “நாம் எதிர்க்கட்சியாக செயற்பட்ட கடந்த ஐந்து வருட காலத்தில் பதவியில் இருந்த அரசாங்கம் செயற்பட்ட விதம் தொடர்பாக ...

Read More »

வாக்குறுதிகளை நிறைவேற்றுவதை உறுதி செய்ய அமெரிக்கா முயற்சி எடுக்கும்!

சிறிலங்கா  அரசாங்கமானது தமக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதனை உறுதிசெய்யும் வகையில் அமெரிக்கா அனைத்து முயற்சிகளையும் எடுக்கும் என அமெரிக்க காங்கிரஸ் சபை உறுப்பினர் தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் தெரிவித்துள்ளார். அமெரிக்க காங்கிரஸ் சபை உறுப்பினரும் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியங்களின் வெளிவிவகார உபகுழுவின் தலைவருமான அமி பேரா இன்று (திங்கட்கிழமை) கொழும்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்து கலந்துரையாடினார். குறித்த சந்திப்பின்போது தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து குழுவினரை தெளிவுபடுத்திய இரா.சம்பந்தன், தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் கடந்த அரசாங்கத்தினால் ...

Read More »

இந்த முறை ஆஸ்திரேலியாவுக்கே வாய்ப்பு: ஸ்டீவ் வாக் சொல்கிறார்!

ஆஸ்திரேலியா – இந்தியா இடையிலான 2020-21 டெஸ்ட் தொடரை வெல்ல ஆஸ்திரேலிய அணிக்கே வாய்ப்பு உள்ளதாக ஸ்டீவ் வாக் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியா மண்ணில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 2018-19 டெஸ்ட் தொடரை வென்று சாதனைப் படைத்திருந்தது. இதற்கு எப்படியாவது பதிலடி கொடுக்க வேண்டும் என ஆஸ்திரேலியா துடித்துக் கொண்டிருக்கிறது. இந்த வருடம் இறுதியில் இந்தியா ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் ஒரு போட்டியை டே-நைட் டெஸ்டாக நடத்த விரும்பியது. இதற்கு இந்திய ...

Read More »

புதிய அரசியல் கட்சிகளின் பதிவு இன்றுடன் நிறைவு!

புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்காக விண்ணப்பிக்கும் நடவடிக்கை இன்றுடன் (17) நிறைவடைகின்றது. அதற்கமைய இன்று மாலை 4 மணி வரை அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்காக விண்ணப்பிக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதுவரை 70 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாகவும் அவற்றில் பெரும்பாலான விண்ணப்பங்கள் முழுமையாக பூர்த்தி செய்யப்படாதவை எனவும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. எனவே, சரியான விண்ணப்பங்களை இன்றைய தினத்தில் தேர்தல்கள் ஆணைக்குழுவில் கையளிக்க முடியும் என ஆணைக்குழு கேட்டுள்ளது. புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்காக விண்ணப்பிக்கும் நடவடிக்கை கடந்த ஜனவரி ...

Read More »

ஆஸ்திரேலியாவில் நம்பிக்கையிழந்த அகதி குடும்பம்: கனடாவில்……..!

ஆஸ்திரேலியாவில் வாழ்க்கைகான கடும் போராட்டத்தை எதிர்கொண்டு அங்கு வாழ்வதற்கான நம்பிக்கையிழந்த பாலஸ்தீனிய அகதிகளுக்கு, கனடாவில் புதியதொரு வாழ்க்கை அமைந்திருக்கின்றது. கனடா அரசின் ஸ்பான்சர் முறையின் கீழ் அவர்களுக்கு அங்கு நிரந்தரமாக வசிக்க (Permanent Residency) இடமளிக்கப்பட்டுள்ளது. திமா அவரது கணவர் ஹனி மற்றும் அவர்களது குழந்தைக்கே இந்த புதிய வாழ்க்கை ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. திமா எனும் பெண் குவைத்தில் பிறந்த நாடற்ற பாலஸ்தீனிய அகதி. அவரைப் போலவே நாடற்ற பாலஸ்தீனிய அகதியான ஹனியை ஈராக்கில் சந்தித்து அங்கிருந்து இருவரும் ஆஸ்திரேலியா நோக்கி பயணமாகியுள்ளனர். ஆஸ்திரேலியா ...

Read More »

யாழ். அரச அதிபராக மகேசன் கடமைகளை பொறுப்பேற்றார்!

யாழ். மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக இன்று காலை கணபதிப்பிள்ளை மகேசன் தனது கடமைகளை பொறுப்பேற்றார். மட்டக்களப்பு மேலதிக அரச அதிபராகவும் பொருளாதார அபிவிருத்தி மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் மேலதிக செயலாளராக பதவி வகித்த கணபதிப்பிள்ளை மகேசன், யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். 1991ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடக்கம் மட்டக்களப்பு வாழைச்சேனை, வவுணதீவு மற்றும் செங்கலடி ஆகிய பிரதேச சபைகளின் சிறப்பு ஆணையாளராக அவர் பதவி வகித்திருந்தார். 2005ஆம் ஆண்டு முதல் சுனாமி வீடமைப்புத் திட்டத்தின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளராக ...

Read More »

அபூர்வ நோய்- 8 வயதில் முதுமை அடைந்து சிறுமி மரணம்!

உக்ரைனில் ‘புரோஜீரியா’ என்ற மரபணு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 8 வயது சிறுமி அன்னா சாகிடோன் உயிரிழந்தார். கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனில் வசித்து வருபவர் இவானா. இவருக்கு அன்னா சாகிடோன் என்ற 8 வயது பெண் குழந்தை இருந்தது. உலகில் 160 பேரை மட்டுமே பாதித்துள்ள ‘புரோஜீரியா’ என்ற மரபணு நோயால் அக்குழந்தையும் பாதிக்கப்பட்டு இருந்தது. அந்த சிறுமி 80 வயதுக்கான முதுமையுடன் இருந்தார். வெறும் 7 கிலோ எடை கொண்ட அவள் உடல் நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் ...

Read More »

ஹேக் செய்யப்பட்ட சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் டுவிட்டர் கணக்குகள்!

ஒலிம்பிக் மற்றும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் அதிகாரப் பூர்வ டுவிட்டர் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டுள்ளமையினால், குறித்த கணக்குகளை தற்காலிகமாக முடக்கி வைத்துள்ளதாக சமூக ஊடக நிறுவனமாக டுவிட்டர் நேற்று சனிக்கிழமை தெரிவித்துள்ளது. மூன்றாம் தரப்பு மூலமாக ஒலிம்பிக் மற்றும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் கணக்குகள் இவ்வாறு ஹேக் செய்யப்பட்டுள்ளதாக டுவிட்டர் செய்தித் தொடர்பாளர் ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவையிடம் தெரிவித்துள்ளார். அத்துடன் இவ்வாறு கணக்குகள் ஹேக் செய்யப்பட்ட விவகாரம் தெரியவந்ததும், நாங்கள் குறித்த கணக்குகளை தற்காலிகமாக முடக்கி வைத்ததாகவும், எவ்வாறெனினும் அவற்றை மீட்டெடுக்க நடவடிக்கைகளை முன்னெடுத்து ...

Read More »