Tag Archives: ஆசிரியர்தெரிவு

கொரோனாவால் கல்வித்துறை மிக மோசமாக பாதிக்கப்படும்!

கொரோனாவால் கல்வித்துறை மிக மோசமாக பாதிக்கப்படும் என்று உலக வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. உலக வங்கியின் கல்வித்துறை நிபுணர்கள் குழு, ‘கொரோனா பெருந்தொற்று-கல்வியில் ஏற்படுத்திய அதிர்ச்சி’ என்ற தலைப்பில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:- கொரோனா வைரஸ் பரவலுக்கு முன்பே, 25 கோடியே 80 லட்சம் குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் பள்ளியில் சேராமல் இருந்தனர். படிப்பை பாதியில் நிறுத்துபவர்கள் அதிகமாக இருந்தனர். இதனால் கற்றல் குறைபாடு பெருமளவில் காணப்பட்டது. கொரோனா வைரஸ் வந்த பிறகு, நிலைமை இன்னும் மோசமாகி விட்டது. உலகின் ...

Read More »

இராணுவ மயமாகும் சிறிலங்கா அரச இயந்திரம்!

சுகாதார அமைச்சின் புதிய செயலாளராக இராணுவ மருத்துவப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சஞ்சீவ முனசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். சஞ்சீவ முனசிங்க, இராணுவ மருத்துவ சேவை முன்னாள் பணிப்பாளர் நாயகமாகவும் இராணுவ மருத்துவ படையின் கட்டளை அதிகாரியாகவும் கடமையாற்றி வந்த நிலையிலேயே இவ்வாறு சுகாதார அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக சுகாதார அமைச்சின் செயலாளராக பத்ராணி ஜயவர்தன செயற்பட்டு வந்தமையும் குறிப்பிடத்தக்கது. சுகாதார அமைச்சின் செயலாளராக பணிபுரிந்த பத்ராணி வர்த்தக அமைச்சுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read More »

நான் ஆஜராக முடியாத நிலை! – சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா

தேர்தல் ஆணைக்குழு மற்றும் அதன் உறுப்பினர்கள் சார்பில் ஆஜராக முடியாத நிலையில் தாம் இருப்பதாக சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா உயர்நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார் . நாடாளுமன்றக் கலைப்பு மற்றும் ;ஜூன் 20 ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படுவதற்கு எதிராக உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனு மீதான விசாரணையின்போது தேர்தல் ஆணையகம் மற்றும் அதன் உறுப்பினர்கள் சார்பில் ஆஜராகும் நிலையில் தான் இல்லையென்று சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா உயர் நீதி மன்றுக்கு அறிவித்துள்ளார். ...

Read More »

நியூசிலாந்து: மே 14-ம் திகதி முதல் உணவு விடுதிகள், திரையரங்குகள், உடற்பயிற்சி நிலையங்கள் இயங்க அனுமதி

நியூசிலாந்தில் வரும் 14-ம் தேதி முதல் மால்கள், திரையரங்குகள், கஃபேக்கள், உடற்பயிற்சி நிலையங்கள் ஆகியவை திறக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆதர்ன் கூறும்போது, “ஊரடங்குத் தளர்வு அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது. உணவு விடுதிகள், கஃபேக்கள், திரையரங்குகள், உடற்பயிற்சி நிலையங்கள் வியாழக்கிழமை முதல் திறக்கப்பட உள்ளன. பள்ளிக் கூடங்கள் அடுத்த வாரம் திங்கட்கிழமை முதல் திறக்கப்படுகின்றன. மதுபான விடுதிகள் மே 21 ஆம் தேதி திறக்கப்படும். பொதுமக்கள் 10 பேர் மட்டுமே கூடுவதற்கு அனுமதி அளிக்கப்படும். தொழில் நிறுவனங்களைத் ...

Read More »

உலகின் சிறந்த பேட்ஸ்மேன் விராட் கோலி – இயான் சேப்பல் பாராட்டு

உலகின் சிறந்த பேட்ஸ்மேன் விராட் கோலி தான் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் இயான் சேப்பல் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கப்டன் இயான் சேப்பல் சமீபத்தில் ஒரு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன். இந்த தொடர் விறுவிறுப்பும், சுவாரஸ்யமும் நிறைந்ததாக இருக்கும். கடந்த முறை இந்திய அணி தொடரை வென்றதால் நம்பிக்கையுடன் வருவார்கள். ஆனால் ஸ்டீவன் சுமித்தும், டேவிட் வார்னரும் ஆஸ்திரேலிய அணிக்கு திரும்பி இருப்பதால் இந்த ...

Read More »

வடகொரியாவுக்கு கொரோனா அச்சுறுத்தல்! -சீனா கவலை

கொரோனா வைரசை எதிர்த்து போராட வடகொரியாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய சீனா தயாராக இருப்பதாகவும் ஜின்பிங் தெரிவித்துள்ளார். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசின் பிறப்பிடமான சீனாவில் வைரஸ் பாதிப்பு குறைந்து, அந்த நாடு இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. இந்த வைரஸ் தற்போது 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியிருந்தாலும் சீனாவின் அண்டை நாடான வடகொரியாவில் தற்போது வரை ஒருவருக்கு கூட கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை. கொரோனா பரவ தொடங்கிய ஆரம்பத்திலேயே வடகொரியா, தனது எல்லைகளை மூடி சர்வதேச பயணங்களுக்கு தடைவிதித்தது. இதன் ...

Read More »

அவுஸ்திரேலியாவில் சிக்கியிருந்த 272 பேர் சிறிலங்கா திரும்பினர்

அவுஸ்திரேலிய நாட்டின் மெல்பர்ன் நகரில் சிக்கியிருந்த 272 பேர் இன்று (10) அதிகாலை சிறிலங்காவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். அவர்களை ஏற்றிய ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானம் இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளது.

Read More »

பொதுத் தேர்தலுக்கு தடை உத்தரவு கோரும் முதல் மனு விசாரணை நாளை

ஜூன் மாதம் 20 ஆம் திகதி நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ள 2020 பொதுத்தேர்தலை இடைநிறுத்தும் வகையிலான தடையுத்தரவை பிறப்பிக்குமாறு கோரி உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட முதல் அடிப்படை உரிமை மீறல் மனு மீதான விசாரணை நாளைய தினம் இடம்பெறவுள்ளது. மூவரடங்கிய நீதிபதிகள் குழு முன்னிலையில் இந்த மனு மீதான விசாரணைகள் இடம்பெறவுள்ளது. குறித்த நீதிபதிகள் குழாமுக்கு நீதிபதி ஜெயந்த ஜெயசூர்யா தலைமை தாங்குவார். அத்துடன் நீதிபதிகள் குழாமில் எஸ்.துரைராஜா மற்றும் முர்து பெர்னாண்டோ ஆகியோரும் உள்ளடங்கியுள்ளனர். எதிர்வரும் ஜூன் 20 ஆம் திகதி இலங்கையில் ...

Read More »

ஊரடங்கு தளர்த்தப்பட்டபின் எவ்வாறு செயற்பட வேண்டும்?

ஊரடங்கு தளர்த்தப்பட்டபின் எவ்வாறு செயற்பட வேண்டுமென்பது தொடர்பில் சுகாதார அமைச்சினால் வழிகாட்டல்கள் வழங்கப்பட்டிருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார். இதற்கு அமைவாக வைரஸ் தொற்று காலத்துக்கு முன்பு போல் அல்லாமல் அதன் பின்னர் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை நாம் சிந்தித்து செயல்படுவது அவசியம் என்று தெரிவித்த அவர், குறிப்பாக அரச ,அரச சார்பற்ற மற்றும் ஏனைய நிறுவனங்கள் கைத்தொழில் துறை நிறுவனங்கள் உட்பட அத்தியவசிய சேவைகளில் ஈடுபடுவோருக்கும் வழிகாட்டல்கள் வழங்கப்பட்டிருப்பதாகவும் கூறினார். தமிழ், சிங்களம், ...

Read More »

பொதுத் தேர்தல் தள்ளிப்போகும்!

ஏற்கெனவே ஒத்திவைக்கப்பட்ட நிலையில், ஜூன் மாதம் 20ஆம் திகதிக்கு நாள் குறிக்கப்பட்ட பொதுத் தேர்தல், அன்று முதல் 3 அல்லது 4 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படும் சாத்தியங்கள் காணப்படுவதாக, அரசாங்கம் அறிவித்தது. அந்த வகையில், ஜூலை 4ஆம் திகதியன்றே தேர்தலை நடத்துவதற்கான மிக நெருங்கிய காலப்பகுதியாயினும், தேர்தலுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குப் போதிய நாள்கள் தேவைப்படுவதால், ஜூலை 4ஆம் திகதியன்றும் தேர்தல் நடைபெறுவதற்கான சாத்தியங்கள் இல்லையென்றும் தெரிவித்தது. இது தொடர்பில் தமிழ்மிரருக்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் டலஸ் அழகப்பெரும, எவ்வாறாயினும் இம்மாதம் 11ஆம் திகதியன்று, தேர்தல்கள் ஆணைக்குழுவின் ...

Read More »