Tag Archives: ஆசிரியர்தெரிவு

ஆஸ்திரேலிய தொடர் ரத்தானால் பேரிழப்பு ஏற்படும்

இந்திய கிரிக்கெட் அணியின் ஆஸ்திரேலிய போட்டி தொடர் நடக்காமல் போனால் பேரிழப்பு ஏற்படும் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர் லபுஸ் சேன் தெரிவித்தார். உலகையே நிலைகுலைய வைத்துள்ள கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் 13-ந் தேதிக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் எதுவும் நடைபெறவில்லை. ஆஸ்திரேலியாவை பொறுத்தமட்டில் செப்டம்பர் 30-ந் தேதி வரை அந்த நாட்டு எல்லைகள் அனைத்தும் மூடப்பட்டு இருக்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருக்கிறது. கொரோனா அச்சுறுத்தல் எதிரொலியாக ஆஸ்திரேலியாவில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதத்தில் நடைபெற ...

Read More »

கொரோனா அச்சத்திலும் அகதியை சீண்டும் அவுஸ்ரேலியா!

ஆஸ்திரேலியாவில் தடுப்பிற்கான மாற்று இடமாக செயல்படும் ஹோட்டலில் இருந்த குர்து அகதி ஒருவர், தடுப்பு நிலைமைகளை முன்னேற்றும்படி போராட்டம் நடத்தியதற்காக வழக்கமான தடுப்பு மையத்தில் சிறைப்படுத்தப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடையும் முயற்சியில் ஈடுபட்ட பர்ஹத் பந்தேஷ் எனும் அந்த அகதி, மனுஸ்தீவில் செயல்பட்ட ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாமில் ஆறு ஆண்டுகள் சிறைப்படுத்தப்பட்டிருந்தார். கடந்த 2019ம் ஆண்டு, உடல் மற்றும் மனநல சிகிச்சைக்காக ஆஸ்திரேலியாவுக்குள் அனுமதிக்கப்பட்ட இவர், மெல்பேர்னில் உள்ள மந்த்ரா ஹோட்டலில் வைக்கப்பட்டிருந்தார். இந்த ஹோட்டல், தடுப்பிற்கான மாற்று இடமாக ...

Read More »

சீன ஆய்வகத்திலிருந்து வந்ததுதான் கரோனா வைரஸ்-மைக் பாம்பியோ

சீனாவின் வூஹான் ஆய்வகத்திலிருந்துதான் கரோனா வைரஸ் பரவியது என்பதற்கு ஏராளமான முக்கிய ஆதாரங்கள் இருக்கின்றன. இந்த வைரஸ் மனிதனால் உருவாக்கப்பட்டது என்று பல வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ குற்றம் சாட்டியுள்ளார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள வூஹான் நகரில் கரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. சீனாவில் ஏற்படுத்திய பாதிப்பைக் காட்டிலும் அமெரிக்காவில் மோசமான பாதிப்பை கோவிட்-19 வைரஸ் ஏற்படுத்தி வருகிறது. அமெரிக்காவைப் பொறுத்தவரை இதுவரை கரோனா வைரஸால் அந்நாட்டில் 11.88 லட்சம் பேர் ...

Read More »

காலம் காலமாக காரணம் சொல்லும் கூட்டமைப்பு !

கலந்துரையாடல் ஒன்றுக்காக சிறிலங்கா  பிரதமரினால், கலைக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்ட அழைப்பினைத தாம் ஏற்றுக்கொண்டமைக்கான காரணத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளிப்படுத்தியுள்ளது. இது தொடர்பில் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை, 1. கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுமாறு வலியுறுத்தி தழிழ் தேசியக் கூட்டமைப்பினாலும் ஏனைய அரசியல் கட்சிகளினாலும் மேதகு ஜனாதிபதி அவர்களுக்கு வேண்டுகோளொன்று விடுக்கப்பட்டது. இக்கோரிக்கைக்கான பதில் இதுவரை எதிர்மறையானதாகவே இருந்து வருகிறது. 2. இப்பின்னணியில், பிரதமர் கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தின் அனைத்து உறுப்பினர்களையும் 04 ஆம் திகதி திங்கட்கிழமை அலரி மாளிகையில் கூட்டமொன்றிற்கு அழைத்துள்ளார். 3. ...

Read More »

கொரியா எல்லையில் குண்டு மழை பொழிந்த வடகொரியா

வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் 20 நாட்களுக்குப்பின் பொதுவெளியில் தோன்றிய நிலையில், கொரிய எல்லையில் குண்டுமழை பொழிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வடகொரியாவுக்கும், தென்கொரியாவுக்கும் இடையிலான நட்புணர்வு பெரும்பாலும் நன்றாக இருந்ததில்லை. வடகொரியா அவ்வப்போது ஏவுகணை சோதனை நடத்தும்போது தென்கொரியா அமெரிக்காவுடன் இணைந்து ராணுவ கூட்டுப்பயிற்சியில் ஈடுபட்டு, எல்லையில் ராணுவ விமானங்களை பறக்க விட்டு வடகொரியாவை அச்சுறுத்தும். ஆனால் கடந்த ஓராண்டுகளுக்கு மேலாக இரு நாடுகளுக்கும் இடையில் மிகப்பெரிய அளவில் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டதில்லை. இரு நாட்டு அதிபர்களும் பேச்சுவார்த்தையில் கூட ஈடுபட்டனர். ...

Read More »

ஜூன் 20 இல் பொதுத் தேர்தலை நடத்த தடை விதிக்கவும்!

எதிர்வரும் ஜூன் 20 ஆம் திகதி இலங்கையில் பொதுத் தேர்தல் நடாத்த திட்டமிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை ரத்து செய்யக் கோரி சட்டத்தரணி ஒருவர் உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்துள்ளார். அரசியலமைப்பின் 104 ஆவது சரத்துடன் இணைத்து வாசிக்கத்தக்கதாக 126 ஆம் ,17 ஆம் சரத்துக்களின் அடிப்படையில் இந்த அடிப்படை உரிமை மீறல் மனு இன்று தாக்கல் செய்ப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக் குழு, தேர்தல்கள் ஆணைக் குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, ; ஆணைக் குழு உறுப்பினர்களான என்.ஜே. ...

Read More »

கிம் உரத்தொழிற்சாலையை திறந்து வைத்தாராம்!

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் நேற்று ஒரு உரத்தொழிற்சாலையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்ததாக அந்நாட்டு அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. கொரிய தீபகற்பத்தில் அமைந்துள்ள முக்கியமான நாடுகளில் ஒன்று வடகொரியா. சர்வாதிகார ஆட்சி நடைபெறும் அந்நாட்டின் கிம் ஜாங் உன் (36) செயல்பட்டு வருகிறார். உலக நாடுகளுடன் பெரும்பாலும் வர்த்தகம் உள்ளிட்ட எந்தவித தொடர்பும் வைத்துக்கொள்ளாத வடகொரியாவில் ஊடகங்கள் உள்பட அனைத்து துறைகளும் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. வெளிநாட்டு ஊரடங்கள் அந்நாட்டில் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு நடக்கும் எந்த ...

Read More »

ஆஸ்திரேலியாவில் வணிக வளாகத்தில் கத்திக்குத்து !

ஆஸ்திரேலியாவில் வணிக வளாகத்தில் மர்ம நபர் நிகழ்த்திய தாக்குதலில் படுகாயம் அடைந்த 5 பேரை மீட்ட காவல் துறை தாக்குதல் நடத்திய நபரை கொன்றனர். ஆஸ்திரேலியாவின் மேற்கு பகுதியில் உள்ள பில்பாரா பிராந்தியத்தின் தெற்கு ஹெட்லாண்ட் நகரில் மிகப்பெரிய வணிக வளாகம் ஒன்று உள்ளது. இந்த வணிகவளாகத்தில் திடீரென நுழைந்த மர்ம நபர் ஒருவர் பொருட்கள் வாங்கி கொண்டிருந்த மக்களை கத்தியால் சரமாரியாக குத்தினார். இதனால் மக்கள் அனைவரும் உயிரை காப்பாற்றிக்கொள்ள நாலாபுறமும் சிதறி ஓடினர். மேலும், 5 பேர் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர். ...

Read More »

இலங்கையில் 105 மணி நேர ஊரடங்கு அமுல் செய்யப்படும்!

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் ஆகிய மாவட்டங்கள் தவிர ஏனைய 21 நிர்வாக மாவட்டங்களிலும் தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டு அமுல்செய்யப்பட்டு வருகின்றது. அந்த 21 மாவட்டங்களிலும் நேற்று இரவு 8.00 மணிக்கு பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு, எதிர்வரும் திங்கட் கிழமை& அதிகாலை 5.00 மணியுடன் தளர்த்தப்படவுள்ளது. பின்னர் அன்றைய தினம் முதல் இரவு 8.00 மணியிருந்து அதிகாலை 5.00 மணி வரையிலான 9 மணி நேரமே ஊரடங்கு அமுல் செய்யப்படும். எனினும் எதிர்வரும் 6 ஆம் திகதி புதன் கிழமை இரவு 8.00 மணி ...

Read More »

ஆறு வீரர்களை அதிரடியாக நீக்கியது ஆஸ்திரேலியா

வீரர்களுக்கான மத்திய ஒப்பந்தத்தில் இருந்து ஆறு வீரர்களை அதிரடியாக நீக்கியுள்ளது ஆஸ்திரேலியா கிரிக்கெட் போர்டு. ஆஸ்திரேலியா ஒவ்வொரு ஆண்டும் சிறந்த வீரர்களை மத்திய ஒப்பந்தத்தில் சேர்க்கும். சோபிக்காத வீரர்களை நீக்கும். இந்த ஆண்டுக்கான மத்திய ஒப்பந்தத்தில் இருந்து ஷான் மார்ஷ், உஸ்மான் கவாஜா, பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப், மார்கஸ் ஸ்டோய்னிஸ், நாதன் கவுல்டர்-நைல், மார்கஸ் ஹாரிஸ் ஆகியோரை அதிரடியாக நீக்கியுள்ளது. அதேவேளையில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் மார்னஸ் லபுஸ்சேன்-ஐ ஒப்பந்தத்தில் சேர்த்துள்ளது. காயத்தில் இருந்து மீண்டுள்ள ஆல்-ரவுண்டர் மிட்செல் மார்ஷ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியா ...

Read More »