கொட்டுமுரசு

தமிழ் மக்கள் கூட்டணி தமிழ் மக்களை மேலும் பிளக்குமா? அல்லது ஒட்ட வைக்குமா?

விக்னேஸ்வரன் கடந்த ஒக்ரோபர் மாதம் ஒரு புதிய கட்சியை அறிவித்த பின் ஒரு மூத்த ஊடகவியலாளர் என்னிடம் பின்வருமாறு கருத்துத் தெரிவித்தார். ‘அவர் சம்பந்தரால் பரசூட் மூலம் அரசியலுக்குள் இறக்கப்பட்டவர். ஆனால் ஒரு கட்சியை பரசூட் மூலம் இறக்க முடியாது.’ என்று. இதே தொனிப்பட பல மாதங்களுக்கு முன்பு டாண் ரி.வியின் பணிப்பாளரும் என்னிடம் சொன்னார். ‘கொழும்பு மைய விக்னேஸ்வரனால் யாழ்ப்பாணத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தன்னோடு நிற்பவர்களுக்கு சம்பளத்தையும் கொடுத்து முழு நேரமாக ஒரு கட்சியைக் கட்டியெழுப்ப முடியுமா?’ என்று. விக்னேஸ்வரனின் ...

Read More »

அரசியல் தீர்வு முயற்சி ஏன் இந்தளவு நெருக்கடிகளை எதிர்கொண்டிருக்கிறது?

புதிய அரசியல் யாப்பு ஒன்று வரவுள்ளது என்னும் அடிப்படையில் பல்வேறு விவாதங்கள் இடம்பெற்றன. ஆனால் இன்றைய தென்னிலங்கை அரசியல் நிலைமைகள் ஒரு விடயத்தை தெளிவாக நிரூபித்துவிட்டது. அதாவது, அவ்வாறானதொரு அரசியல் யாப்பு ஒன்று வரப்போவதில்லை. இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் உத்தேச அரசியல் யாப்பு தொடர்பான நிபுனர் குழு அறிக்கையொன்று வெளியாகியிருக்கிறது. இதனை தாம் நிராகரிப்பதாக கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான டெலோ உத்தியோகபூர்வமாக அறிவித்திருக்கிறது. கூட்டமைப்பின் பிறிதொரு பங்காளிக் கட்சியியான புளொட்டின் தலைவர் சித்தார்த்தனோ, பல்வேறு சந்தர்ப்பங்களில், புதிய அரசியல் யாப்பு ஒன்று வரப்போவதில்லை என்று ...

Read More »

பிரியங்கா அடுத்த இந்திரா காந்தியாக முடியுமா?

ஆண்டு 1999. இடம் ரேபரேலி. பரபரப்பான தேர்தல் நேரம். காங்கிரஸ் வேட்பாளர் கேப்டன் சதீஷ் ஷர்மா. பாஜக சார்பில் அருண் நேரு போட்டியிட்டார். ஆம், ராஜீவ் காந்தியின் உறவினரான அதே அருண் நேரு. 27 வயதான இளம்பெண் அப்போது காங்கிரஸ் வேட்பாளருக்காகப் பிரச்சாரம் செய்தார். அவரைப் பார்க்கவும், அவருடைய பேச்சை கேட்கவும் பெருமளவு கூட்டம் கூடியது. அருண் நேரு ஏற்கெனவே ரேபரேலியில் வெற்றி பெற்றிருக்கிறார். அதனால் பாஜக மிகுந்த நம்பிக்கையுடன் இருந்தது. ஆனால் 27 வயதே ஆன இளம்பெண் கூட்டத்தைப் பார்த்து, “என் தந்தைக்கு ...

Read More »

இலங்கையில் இந்தியாவின் வகிபாகம் குறித்து ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் கூறுவது என்ன ?

அரசியல் மனித உரிமைகள் நல்லாட்சி மதிக்கப்படாவிடின் ஜீ.எஸ்.பி.யை மறுபரிசீலனை செய்ய நேரிடுமென ஜனாதிபதியிடம் தெரிவித்தேன். ஜெனிவாவில் இம்முறையும் இலங்கைக்கு கால அவகாசம் வழங்கப்படலாம். ஆனால் அதனை ஜெனிவாவில் நடைபெறும் கலந்துரையாடல்களிலேயே தீர்மானிப்போம் என இலங்கையிலுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் டங் லை மார்க்   வழங்கிய பிரத்தியேக செவ்வியில் தெரிவித்தார். தற்போது எழுந்துள்ள பல்வேறு கேள்விகளுக்கு மத்தியில் அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்பது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர் மனந்திறக்கிறார். கேள்வி: ஜெனிவா கூட்டத் தொடர் ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில் இலங்கையில் மனித உரிமை விவகாரத்தில் ...

Read More »

சம அந்தஸ்து இதுவரை கிடைக்கவில்லை!

200 வருடங்கள் கடந்தும் மலையக தோட்டத் தொழிலாளர்களுக்கு கௌரவமான இலங்கை பிரஜைகள் எனும் உரிமையை இதுவரை பெற்றுக்கொள்ள முடியவில்லை. தொடர்ந்தும் அவர்களது சந்ததியினர் இந்திய வம்சாவளியை சேர்ந்த வெளிநாட்டவர்கள் என்றே நோக்கப்படுகின்றனர்.   தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளதால் வாக்களிப்பதற்கான உரிமை கிடைக்கின்றது. எனினும் பெரும்பான்மை மக்களோடு ஒப்பிடும்போது அவர்களுடனான சம அந்தஸ்து அவர்களுக்கு இதுவரை கிடைக்கவில்லை. இன்றும் இவர்கள் இரண்டாம் தர பிரஜைகளாகவே கருதப்படுகின்றனர். இவர்கள் இந்த நிலைமைக்கு தள்ளப்பட்டிருப்பது இலங்கையில் ஒரு அங்குல நிலத்துக்கு அவர்களால் உரிமை கூற முடியாத காரணத்தினாலேயே தோட்டத்தொழிலாளர்களின் ...

Read More »

ஏழு தமிழர்களை விடுதலை செய்ய ஆளுநர் தாமதிப்பது முறையல்ல!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ஏழு தமிழர்களை விடுதலை செய்ய ஆயிரமாயிரம் காரணங்கள் இருக்கும் நிலையில், விடுதலையை ஆளுநர் தாமதிப்பது முறையல்ல என, பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ராமதாஸ் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தவறுதலாகத் தண்டிக்கப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களையும் விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை பரிந்துரைத்து இன்றுடன் 138 நாட்கள் ஆகியும், அவர்களின் விடுதலை இன்னும் சாத்தியமாகவில்லை. 7 தமிழர்கள் விடுதலை விவகாரம் குறித்து முடிவெடுப்பதில் எந்தக் காரணமும் இல்லாமல் ஆளுநர் ...

Read More »

வடிவேலின் புதிய அரசியல் யாப்பு ?

கடந்த வருடம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடக்கிய தூதுக் குழுவொன்று சீனாவிற்கு பயணம் மேற்கொண்டிருந்தது. இதன்போது கூட்டமைப்பின் தலைவராக அறியப்படும் இரா.சம்பந்தனும் அந்தக் குழுவில் இடம்பெற்றிருந்தார். அதே போன்று கூட்டமைப்பிற்கு எதிர்நிலைப்பாடுள்ள பிறிதொரு தமிழ் கட்சியின் தலைவரும் அந்தக் குழுவில் இடம்பெற்றிருந்தார். இவர்கள் அங்கு தங்கியிருந்த வேளையில் ஆசுவாசமாக மாலை நேரங்களில் பேசிக் கொள்வதுண்டாம். பொதுவாக மக்களுக்கு முன்னால் முரண்பாடுள்ளவர்களாக காண்பித்துக் கொள்ளும் அரசியல்வாதிகள், தனியறையில் மதுக் கோப்பைகளுடன் இருப்பது அரசியலை பொறுத்தவரையில் சர்வசாதாரணமான ஒன்று. சம்பந்தனும் அப்படியான மதுக் கோப்பைகள் உரசிக் கொள்ளும் இரவுகளை ...

Read More »

புத்தகங்களுடன் வாழ்வதும் ஓர் அலாதியான அனுபவம்தான்!

புத்தகங்களுடன் வளர்வது மட்டுமல்ல, புத்தகங்களுடன் வாழ்வதும் ஓர் அலாதியான அனுபவம்தான். புத்தகத்தை வாங்குவதும் அதை வீட்டில் அடுக்கி வைத்து வீட்டுக்கு வருபவர்களிடம் `என்னிடம் எவ்வளவு புத்தகங்கள் இருக்கின்றன பாருங்கள்’ என்று சொல்லிக்காட்டி பெருமைகொள்வதும் சுகமான அனுபவம்தான். இன்று பெரும்பாலான வீடுகளில் புத்தகங்களுக்கான அறை என்று பெரிதாக இல்லை… குழந்தைகள் கையில் புத்தகமும் இல்லை. அந்த இடத்தை மொபைல்கள் ஆக்கிரமித்துவிட்டன. இவை, இன்றைய தலைமுறையினருக்கு புத்தகங்களின் அருமையையும் வாசிப்பின் அவசியத்தையும் யாரும் புரியவைக்கவில்லை என்பதையே காட்டுகின்றன. கடந்த இரண்டு வாரமாகச் சென்னையில் நடந்துவரும் புத்தகக் காட்சிக்கு ...

Read More »

வாள் வெட்டுக் குழுக்களும் வீதிச்சோதனைகளும்!

கடந்த பொங்கல் தினத்தன்று யாழ்ப்பாணம் நாச்சிமார் கோயிலடியில் மோட்டார் சைக்கிளில் வந்த வாளேந்திய இளைஞர்கள் நடாத்திய தாக்குதலில் சிலர் காயப்பட்டுள்ளார்கள். நாச்சிமார் கோயில் அதிகம் சனப்புழக்கமான ஓர் இடம். யாழ்ப்பாணத்தில் பெருஞ்சாலைகளில் ஒன்றாகிய காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ளது. யாழ் பல்கலைக்கழகத்திலிருந்து நடந்து செல்லக்கூடிய தூரம். இந்த இடத்தில்தான் தைப்பொங்கல் தினத்தன்று தாக்குதல் நடந்தது. இதற்கு முன் கடந்த புதுவருட தினத்தன்று கொக்குவில் காந்தி சனசமூக நிலையத்தில் வாளேந்திய இளைஞர்கள் அட்டகாசம் செய்துள்ளார்கள். தாங்கள் அங்கு வரப்போவதை முன்னறிவித்து விட்டு வந்திருக்கிறார்கள். அந்த அறிவிப்பே அவர்களுக்கு ...

Read More »

பரிசுப் பொட்டலமாகத்தான் இருக்கிறது வாழ்க்கை!- தேவதேவன்

இயற்கை வியப்பு, ஆன்மிக அம்சத்தைத் தனது கவிதைகளின் அடிப்படையாகக் கொண்டு நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக எழுதிவரும் கவிஞர் தேவதேவன். கடவுளின் இடத்தில் இயற்கை ஒழுங்கை வைத்து அதன் விகாசத்தில் அது தரும் ஆனந்தத்தில் இயங்கும் பக்திக் கவிஞர் இவர். ‘கவிதை பற்றி’ என்ற சிறிய உரையாடல் நூலும் முக்கியமானது. முதல் தொகுதியான ‘குளித்துக் கரையேராத கோபியர்கள்’ தொடங்கி நாற்பது கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டிருக்கிறார். ‘புரியாது கழிந்த பொய்நாட்கள் எல்லாம்’ என்பது இவரது சமீபத்திய தொகுப்பு. கவிதையை உயிர்த்துவம் மிக்கச் செயல்பாடாகக் கருதும் தேவதேவனிடம் உரையாடியதிலிருந்து… ...

Read More »