கொட்டுமுரசு

தமிழர் நாகரிகத்தின் தொன்மை வெளியாவதைத் தடுக்க சதியா?

கீழடி அகழ்வாய்வு அறிக்கைகள் வெளியாவதில் காணப்படும் தாமதத்தைப் பார்க்கும்போது தமிழர் நாகரிகத்தின் தொன்மை தொல்லியல் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படுவதைத் தடுக்க சதித்திட்டம் உருவாக்கப்பட்டு அரங்கேற்றப்படுகின்றதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவுனர் இராமதாஸ் சந்தேகம் வெளியிட்டுள்ளார். அறிக்கையொன்றில் இதனை தெரிவித்துள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது ”தமிழர் நாகரிகத்தின் தொன்மையையும் பெருமையையும் உலகத்திற்கு உணர்த்தவிருக்கும் கீழடி அகழாய்வுப் பணிகள் விரைவாக நடைபெற்று வரும் போதிலும் அவற்றின் முடிவுகள் குறித்த அறிக்கைகளை வெளியிடுவதில் செய்யப்படும் தாமதம் மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது. இதுவரை 6 கட்ட அகழாய்வுப் ...

Read More »

பூகோள அரசியல் சக்திகளின் விளையாட்டு மைதானமா இலங்கை

இலங்கை இந்து சமுத்திரத்தின் மத்தியிலும் இந்தியாவுக்கு அண்மையில் அமைந்திருப்பதனால் அதிகம் மூலோபாய முக்கியத்துவத்தை கொண்டுள்ளதைக் காணமுடிகிறது. அத்தகைய மூலோபாயமே அதன் அரசியல் பொருளாதார இருப்புக்கும் செழுமைக்கும் காரணமாக விளங்குகிறது. அத்தகைய மூலோபாய அமைவு இலங்கைக்கான வாய்ப்பே அன்றி பாதிப்பாக விளங்கிக் கொள்ள முடியாது. இலங்கையின் புதிய அரசாங்கத்தின் மூலோபாய நகர்வில் வெளிப்படையில்லாத போக்கினால் அதிக குழப்பமிக்க கொள்கைகளை நோக்கி செயல்படுகிறது. அது மட்டுமன்றி முன்பின் முரண்பாடான கொள்கைகளையும் வகுக்க முயலுகிறது. இக்கட்டுரையும் அத்தகைய சூழலை வாசகனுக்கு தெளிவுபடுத்தும் நோக்கில் அமையவுள்ளது.   இந்து சமுத்திரப் ...

Read More »

ஈஸ்டர் சந்தேக நபர் விடுதலையும் 2/3 பெரும்பான்மைக்கான முடிச்சுகளும்!

0 மைத்திரி, ரணில் அதிகாரிகள் ஆளுக்காள் அதிரடி குற்றச்சாட்டு 0 ரிஷாட் தம்பி விடுதலைக்கும் 20 க்கும் முடிச்சு போடப்படுகிறது 0 பேராயருக்கும் சந்தேகம்! கடும் போக்காளர்கள் அரசு மீது சீற்றம் 0 ஹக்கீம், ரிஷார்ட் வந்தால் உதைத்து விரட்டியடித்து விடுவோம்; – ஒரு எச்சரிக்கை 0 அரசு ஆடைகள் அணிந்து கொண்டா மக்கள் முன் நிற்கின்றது? – பிக்கு கேள்வி மனித வாழ்வு மிகவும் விநோதமனது. அவர்களின் சிலரது வாழ்வு துயரங்கள் நிறைந்து. இன்னும் சிலரது வாழ்வு செல்வச் செழிப்பானது. இன்னும் சிலரது ...

Read More »

பாராளுமன்றத்திலும் ஆட்டம் காட்டிய ”கொரோனா”

மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலையில் சனிக்கிழமை கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா கொத்தணி சமூகத்துக்குள் இறங்கியதனால் 1050 க்கும் மேற்பட்டோர் ஒரு சில தினங்களுக்குள் கொரோனா தொற்றாளர்களானதுடன் இலங்கையின் 16 மாவட்டங்கள் கொரோனாவின் ஆட்சிக்குள் வந்துள்ள போதும் கடந்த வார பாராளுமன்ற அமர்வுகள் எவ்வித தடையுமின்றி இடம்பெற்று முடிந்துள்ளன. பாராளுமன்ற அமர்வுகளுக்கு கொரோனாவினால் தடை ஏற்படாதபோதும் கொரோனா அச்சுறுத்தல் தொடர்பில் அரச,எதிர்க்கட்சியினரிடையில் சபையில் ஏற்பட்ட கருத்து மோதல்களினால் கொரோனாவின் தாக்கம் பாராளுமன்றத்திலும் வெளிப்பட்டது. முதல் நாள் அமர்வான செவ்வாய்க்கிழமையே கொரோனா கொத்தணியை எதிர்க்கட்சிகள் கையில் எடுக்குமென எதிர்பார்க்கப்பட்டபோதும் அன்றைய நாள் ...

Read More »

20 ஆவது திருத்தமும் சிங்கள மக்களின் ஜனநாயகமும்

கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் தமிழரசுக்கட்சி 20ஆவது திருத்தத்தை குறித்து ஓர் ஆய்வு அரங்கை ஒழுங்குபடுத்தியது. அதில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஒரு விடயத்தைக் கூறினார். அண்மையில் திருகோணமலைக்கு தான் சென்றிருந்த வேளை கடற்கரையில் உலாவச் சென்றதாகவும் அப்போது அங்கு வந்திருந்த சிங்கள உல்லாசப் பயணிகள் சிலர் தன்னை அடையாளம் கண்டு விட்டதாகவும் 20ஆவது திருத்தத்துக்கு எதிராக நீங்கள் சட்ட ரீதியாக போராட வேண்டும் என்று அவர்கள் தன்னை கேட்டுக் கொண்டதாகவும் கூறியுள்ளார். நீங்கள்தானே இந்த அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வந்தீர்கள் ...

Read More »

கூட்டமைப்பின் பேச்சாளரை ரெலோ, புளொட் தனியாக அறிவிக்கப்போகின்றனவா?

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் பதவியை ‘ரெலோ’வுக்கு தரப்போவதில்லை என்பதில் தமிழரசுக் கட்சி பிடிவாதமாக நின்றால், ‘புளொட்’ மற்றும் இணைந்து செயற்படக்கூடிய வேறு கட்சிகளுடன் சேர்ந்து கூட்டமைப்பாக புதிய பேச்சாளர் ஒருவரைத் தெரிவு செய்து நாம் தொடர்ந்து கூட்டமைப்பாகப் பயணிப்போம்” என ரெலோ உறுதியாகத் தெரிவித்திருக்கின்றது. அதற்குத் தேவையான பாராளுமன்றப் பலமும், ஒருங்கிணைப் புகுக்குழுவின் ஆதரவும் தமக்கு இருப்பதாகவும் ரெரோ கூறுகின்றது. கூட்டமைப்பின் பேச்சாளர் பதவியில் தொடரும், இழுபறிநிலை மற்றும் பாராளுமன்றக்குழுக் கூட்டத்தில் நடைபெற்றது என்ன? இது தொடர்பில் ரெலோவின் அணுகுமுறை என்ன என்பது ...

Read More »

சீனா: பொருளாதார அரசியலும் மேலாதிக்க விஸ்தரிப்பும்! – பகுதி 1

கொரோனா நெருக்கடி என்பது இந்த நூற்றாண்டின் முதலாவது உலகளாவிய பேரிடர். இதற்கு முந்தைய உலகளாவிய நெருக்கடிகள் என இரண்டு உலகப்போர்களும் கணிப்பிடப்படக்கூடியவை. இன்னொரு வகையில் சொல்வதானால் சற்றேறக்குறைய நூறு ஆண்டுகளுக்குள் மூன்று நெருக்கடிகள் உலகளாவிய பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன. உயிரழிவுகள், பொருளாதார வீழ்ச்சி சார்ந்தவற்றைப் பொதுவான பாதிப்புகளாகச் சுட்டமுடியும். தவிர உலகமயமாக்கலின் தன்மைகள், உலக அமைதிக்குப் பங்கம், நாடுகளுக்கிடையிலான உறவுகளில் இந்நெருக்கடிகள் விளைவுகளை ஏற்படுத்தின. புதிய இயல்பு அல்லது புதிய வழமை கொரோனா நெருக்கடியின் விளைவுகள் உலகளாவிய மாற்றத்திற்குரிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளன. ‘New Normal’ எனப்படும் ...

Read More »

13ஆம் திருத்தமும் தமிழரின் பரிதாப நிலையும்

சகுனம் பார்த்து, அதிஷ்டத்தை நம்பி வாழ்க்கையின் நடவடிக்கைகளைத் தீர்மானிக்கும் ஒரு சமூகத்தில், அப்பாவியான இலக்கம் 13 ஒரு அபகீர்த்தி வாய்ந்ததென்று பலராலும் கருதப்படுவதால் அதனை உபயோகிப்பதை எவ்வாறாயினும் தவிர்க்கவே விரும்புவர். உல்லாச விடுதிகள் கூட தமது அறைகளுக்கு 13ஆம் இலக்கத்தைத் தவிர்த்தே வரிசைப்படுத்துவதும் உண்டு. இந்தத் துரதிஷ்டத்தினாற்தானோ என்னவோ அரசியல் ரீதியாக இலங்கைத் தமிழரின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கக்கூடிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு யாப்புத் திருத்தத்துக்கும் இந்த எண்ணே கிட்டியுள்ளது. இது தமிழர்களுக்கோர் அபசகுனமா? அது ஒரு புறமிருக்க, இலங்கையின் இன்றைய அரசியற் சூழலில் அந்தத் ...

Read More »

அமெரிக்காவிற்கு அதிகாரம் இல்லை

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் பேட்டியொன்றின் போது இராஜதந்திர நடைமுறைகளை மீறியுள்ளார் என இலங்கைக்கான சீன தூதரகம் குற்றம்சாட்டியுள்ளது. நேற்று அமெரிக்க தூதுவர் வழங்கிய பேட்டி குறித்தே சீன தூதரகம் இந்த குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. மூன்றாவது நாடொன்றின் தூதுவர் இலங்கை அமெரிக்க உறவுகளை வெளிப்படையாக கேள்விக்குட்படுத்தியுள்ளார் என சீன தூதரகம் தெரிவித்துள்ளது. இறைமையுள்ள நாடொன்றின் உள்விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுவது எப்போதும் ஆச்சரியமளிக்காத விடயம் என தெரிவித்துள்ள சீன தூதரகம் மற்றையவர்களின் இராஜதந்திர உறவுகளை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தும் வெறுக்கத்தக்க நடவடிக்கைகளை கண்டு மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர் என ...

Read More »

மிகப்பெரிய வெளிநாட்டு முதலீட்டு செயற்திட்டம்

2014 செப்டெம்பரில் சீன ஜனாதிபதி சி ஜின்பிங்கும் அன்றைய இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் கொழும்பு துறைமுக நகரத்திட்டத்தை கூட்டாக ஆரம்பித்துவைத்தார்கள்.கடலில் இருந்து 269 ஹெக்டேயர் நிலத்தை மீட்டு, இலங்கையின் தலைநகர் கொழும்புக்கான நிதித்துறை, சுற்றுலாத்துறை, விநியோகங்கள் ஒழுங்கமைப்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறைகளை ஒருங்கிணைக்கும் புத்தம் புதிய மத்திய வர்த்தக மாவட்டமொன்றை நிர்மாணிப்பதே இந்த திட்டமாகும். ஆரம்பித்தவைக்கப்பட்டு 6 வருடங்கள் கடந்த நிலையில், இலங்கையின் வரலாற்றில் மிகப்பெரிய வெளிநாட்டு நேரடி முதலீடாக இப்போது விளங்கும் கொழும்பு துறைமுகநகரத்திட்டம் உள்நாட்டு மற்றும் பிராந்திய பொருளாதாரத்தை மீளவடிவமைப்பதற்கான எதிர்கால ...

Read More »