கொட்டுமுரசு

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை? ஈழத் தமிழர்களை சீனாவின் கால்களில் விழத் தூண்டுகிறது?

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை தொடர்ந்தும் ஈழத் தமிழர்களை வேறு வழியின்றி சீனாவின் கால்களில் விழத் தூண்டுகிறதா? என்ற கேள்வி எழுகிறது. இன்று இலங்கையில் நடக்கும் சம்பவங்களை பார்த்தால், இந்தியாவுக்கு ஆதரவாக இருக்கும் ஈழத் தமிழர்களையும் சீனாவை நோக்கி செல்லும் நிலைக்கு தள்ளி விட்டுள்ளது. கடந்த எழுபது ஆண்டுகளுக்கு மேலாக ஈழத் தமிழர்களின் உரிமைகளை பெற்றுக் கொடுப்பதில் இந்திய தேசம் இரட்டை வேடம் போட்டு வந்த நிலையில், ஈழத் தமிழர்கள் சீனாவை ஆதரிக்கும் போக்கு காணப்படுகிறது. குறிப்பாக யாழ்ப்பாண மக்கள் சீன நிறுவனங்களினால் முன்னெடுக்கப்பட்டு வரும் ...

Read More »

கரோனா பற்றி உங்கள் குழந்தைகளிடம் எப்படிப் பேசுவது?

“அம்மா, உலகம் அழியப்போவுதாமா? நாமெல்லாம் சாகப்போறோமா?” – நடு இரவில் எழுந்து கேட்கும் ஆறு வயதுக் குழந்தைக்கு என்ன பதில் சொல்வது எனத் தெரியாமல் அவளை இறுக்கமாகக் கட்டிப்பிடித்துக்கொண்டு, “அப்படியெல்லாம் ஒண்ணும் ஆகாது, தூங்கு” எனத் தட்டிக்கொடுத்த அந்தத் தாய், அன்று மாலைதான் தனது கணவரை கரோனா சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துவிட்டுத் தூக்கம் வராமல் பரிதவித்துக்கொண்டிருந்தார். கடந்த வாரத்தில் பார்த்த ஒன்பது வயதுச் சிறுவனொருவன் எப்போதும், “பயமாயிருக்கு… பயமாயிருக்கு” எனச் சொல்லிக்கொண்டே இருக்கிறான். அவன் முகம் பயத்தால் வெளிறிப்போய் இருந்தது. இவர்களைப் போல இன்னும் ...

Read More »

அவுஸ்திரேலிய தடுப்பு முகாமில் அடைபட்டிருக்கும் ஈழ தமிழ் சிறுமிகளின் கதை!

5 வயதாகும் கோபிகா தனது குழந்தைப் பருவத்தின் பெரும்பகுதியை ஆஸ்திரேலியாவின் தடுப்பு முகாமில் அடைப்பட்டுக் கழித்து வருகிறார். 2019-ஆம் ஆண்டு கோபிகாவின் குடும்பம் கிறிஸ்துமஸ் தீவில் உள்ள அவுஸ்திரேலியாவின் தடுப்பு முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சுற்றிலும் வேலியிடப்பட்ட 24 மணி நேரக் கண்காணிப்பில் உள்ள வளாகத்தில் அவர்கள் அடைக்கப்பட்டனர். கோபிகாவுக்கு நண்பர்கள் வைத்திருக்கும் பெயர் கோபி. அவருக்கு பள்ளி செல்ல அனுமதி உண்டு. ஆனால் காவலர்களின் வேனில்தான் செல்ல வேண்டும். பள்ளி மட்டும்தான் கோபிகாவுக்கு கவலைகளை மறக்கும் மகிழ்ச்சியான இடம். “நம்மை ஏன் அவர்கள் ...

Read More »

இருண்ட யுகத்தை நோக்கி நகரும் ஊடக சுதந்திரமும், கருத்து வெளிப்பாட்டு உரிமையும்

ஊடக சுதந்திரம் என்பது ஜனநாயகத்தின் அடிப்படை உரிமை. அது ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் ஒன்றாகும். எங்கு ஊடக சுதந்திரம் ஒடுக்கப்படுகின்றதோ அங்கு அராஜகம் தலைதூக்கும்; அநியாயங்களே கோலோச்சும். இதற்கு உலக வரலாறுகள் அழிக்க முடியாத சான்றுகளாகத் திகழ்கின்றன. ஜனநாயகம் நிலவுவதாகக் கூறப்படுகின்ற நாடுகளில் தொடர்ச்சியாக அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்காக அரசியல்வாதிகள் அடிப்படை உரிமைகளையும், மனித உரிமைகளையும், ஜனநாயக உரிமைகளையும் மதிப்பதில்லை. அவற்றைப் பேணுவதில் உரிய கவனம் செலுத்துவதுமில்லை. ஆனால் ஊடகவியலாளர்களையும், ஊடக நிறுவனங்களையும் தங்கள் கைகளுக்குள் வைத்துக் கொள்வதற்காகவும், தமது அதிகார எல்லைக்குள் ...

Read More »

இனப்படுகொலையா? இல்லையா

கடந்த வியாழக்கிழமை ஆறாந்திகதி கனடாவின் ஒன்ராறியோ நாடாளுமன்றம் ஈழத்தமிழ் இனப்படுகொலை அறிவூட்டல் வாரத்தைப் பிரகடனப்படுத்தியிருக்கிறது. அதாவது நடந்தது இனப்படுகொலை என்று கூறுகிறது. கடந்த மாதம் 24ஆம் திகதி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆர்மீனிய இனப்படுகொலை குறித்து ஓர் அறிக்கையை வெளியிட்டிருந்தார். 1915ஆம்ஆண்டு ஏப்ரல்24இலிருந்து தொடக்கி சுமார் பதினைந்து இலட்சம் ஆர்மீனியர்கள் துருக்கிய ஒட்டோமன் பேரரசால் கொல்லப்பட்டார்கள், அல்லது பலவந்தமாக நாடுகடத்தப்பட்டார்கள். சுமார் ஒரு நூற்றாண்டின் பின் அமெரிக்கா அதை ஓர் இனப்படுகொலை என்று இப்பொழுது அறிவித்திருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன் ஜேர்மனி அவ்வாறு ...

Read More »

சர்வதேச அன்னையர் தினம்

சர்வதேச அன்னையர் தினமான இன்று (ஞாயிற்றுக்கிழமை) அனைவரும் தம்முடைய தாய்க்கு வாழ்த்தை கூறி விலை மதிக்க முடியாத வாழ்த்தை பெறலாம். அம்மா என்றால் அன்பு, கருணை, இனிமை, தியாகம். அம்மா என்ற சொல்லை உச்சரிக்கும் போது அனைவருடைய உள்ளங்களும் உணர்ச்சி மிகுதியால் தழுதழுக்கின்றன. அன்னையின் அன்பு தனித்துவமானது. மற்ற எவரோடும் அன்னையின் அன்பை ஒப்பிட முடியாது. தாய்மையின் தன்னலமற்றத் தியாகத்தை கொண்டாடுவதற்காக ஆண்டுதோறும் மே மாதம் 2-வது ஞாயிற்றுக்கிழமை சர்வதேச அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. அன்னையர் தினத்தை உலகம் கொண்டாடுவதற்கு முன்பே நமது முன்னோர்கள் ...

Read More »

இனவழிப்புக்கு உள்ளான ஆர்மேனியர்கள் – அமெரிக்காவின் அங்கீகாரம்

சரியாக 106 வருடங்களுக்கு பின்பு ஆர்மேனிய மக்களுக்கு எதிராக 1915 ஆம் ஆண்டு ஓட்டோமான் பேரரசினால் இடம் பெற்ற தாக்குதல்கள் ‘இனப்படுகொலை’ தான் என்று முதன் முதலாக அமெரிக்க ஜனாதிபதி  ஜோ பைடன் அறிவித்துள்ளார்.  அமெரிக்க ஜனாதிபதியொருவர் இந்த விடயத்தினை இனப்படுகொலை என்று ஏற்றுக்கொள்ளும் முதலாவது சந்தர்ப்பமும் இதுதான். அமெரிக்கா வழங்கியுள்ள இந்த இனஅழிப்பு அங்கீகாரம் துருக்கியின் உள்நாட்டு அரசியலை ஒரு உலுக்கு உலுக்கி விடும் நோக்கம் கொண்டதே தவிர ஆர்மேனிய மக்களின்  நலன் குறித்த எந்த விவகாரத்திற்கும் பெரிதாக பயன்படாது என்கின்றனர் ஆய்வாளர்கள். ...

Read More »

பெ.சு.மணி: தமிழ்த் திறனாய்வுலகின் பொக்கிஷம்

பல்கலைக்கழகப் பாடத்திட்டத்துக்கு வெளியே அறிவு மரபே கிடையாது என்று உலவிவந்த மாயையை உடைத்த பெரியார், ம.பொ.சிவஞானம், ஜீவா, மயிலை சீனி. வேங்கடசாமி, மு.கருணாநிதி வரிசையில் வருபவர் பெ.சு.மணி (1933-2021). எஸ்எஸ்எல்சி வரை மட்டுமே படித்த பெ.சு.மணியின் நூல்களெல்லாம் பல்கலைக்கழக மாணவர்களின் அறிவு வளர்ச்சிக்கு உயர் படிக்கட்டுகளாக இருக்கின்றன. தனது ஆய்வுப் பணிக்காக மீனம்பாக்கம் அஞ்சலகத் துறையில் அஞ்சல் பிரிப்பகத்தில் இரவு வேலையை மாற்றிக்கொண்டு, தனது சைக்கிளில் பகற்பொழுது முழுவதும் சென்னை நூலகங்களில் கிடையாகக் கிடந்து தேனீபோலச் சேகரித்த நூல்களைப் பதிப்பித்து வெளியிட்டவர். இன்றுபோல் எந்த ...

Read More »

மம்தா: வங்க மகளின் வெற்றி

வங்கத்தில் மிகப் பெரும் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியமைத்திருக்கிறார் மம்தா. எப்படியாவது வங்கத்தைக் கைப்பற்றிவிடும் நோக்கத்தில் மோடி, அமித் ஷா, ஜே.பி.நட்டா, ராஜ்நாத் சிங், யோகி ஆதித்யநாத் என்று பாஜகவின் பெருந்தலைகளெல்லாம் வங்கத்தில் வந்து குவிந்தனர். இன்னொரு புறம், இடதுசாரிகளும் காங்கிரஸும் ஐஎஸ்எஃபும் அமைத்த கூட்டணியின் வாக்குப் பிரிப்பானது மம்தாவையே பாதிக்கும் என்று கூறப்பட்டது. இவர்களுக்கெல்லாம் எதிர்முனையில் இருந்தவர் ஒரே ஒரு பெண். அதுவும் சக்கர நாற்காலியில் பிரச்சாரம் செய்யும் பெண்! வங்கத் தேர்தல் வரலாறு சுதந்திரத்துக்குப் பிறகு நடைபெற்ற முதல் தேர்தலில் ...

Read More »

பிரேமதாஸவை படுகொலை செய்ய ‘பாபு’எப்படி வந்தார்?

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ரணசிங்க பிரமேதாஸாவின் மீது, 1993 மே 1ஆம் திகதி ஆமர்வீதியில் தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டது. அந்தப் படுகொலை தொடர்பில், வெளிச்சத்துக்கு வராததும் வெளிச்சத்துக்கு கொண்டுவரப்படக்கூடாத கதைகள் பல உள்ளன. அதுதொடர்பில், சுதத் சில்வா,  ‘லங்காதீப’ விடம் பேசியுள்ளார்.   சுதத் சில்வா, இந்நாட்டின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஐந்து ஜனாதிபதிகளின் கீழ் கடமையாற்றிய உத்தியோகபூர்வ புகைப்படப்பிடிப்பாளர். அரச தலைவர்களுக்கு மிகநெருக்கமாக இருந்த அவர், ‘தகவல் களஞ்சியம்’ போன்றவர். அவரிடமிருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில், இக்கட்டுரை எழுதப்பட்டது. ஜனாதிபதி பிரேமதாஸ வாழ்க்கையின் ...

Read More »