செய்திமுரசு

மக்கள் சிரிப்பதற்கும், அழுவதற்கும் தடை- வடகொரியா அதிரடி உத்தரவு

மக்கள் சிரிப்பதற்கும், அழுவதற்கும் 11 நாட்கள் தடை விதித்து வடகொரியா அரசு உத்தரவிட்டுள்ளது. வடகொரியாவின் முன்னாள் அதிபர் கிம் ஜாங்-இல் மறைந்து 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதையடுத்து அந்நாட்டில் 11 நாட்களுக்கு துக்கம் அனுசரிக்க அந்நாட்டு அதிபர் கிம் ஜாங்- உன் முடிவு செய்துள்ளார். இதனால் 11 நாட்களுக்கு அந்நாட்டு மக்கள் யாரும் சிரிக்கவும், மது அருந்தவும், கடைகளில் மளிகைப் பொருட்கள் வாங்கவும் கூடாது என அந்நாட்டு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் அனைவரும் எந்தவித கேளிக்கை, கொண்டாட்டங்களிலும் ஈடுபடக்கூடாது. வீடுகளில் யாராவது இறந்தாலும் ...

Read More »

‘அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்’

மாவீரன் கர்ணன்’ என்ற வாசகத்தைத் தனது ஓட்டோவின் பின்புறத்தில் ஒட்டிய முல்லைத்தீவை சேர்ந்த இளைஞர்கள்  இரண்டுபேர், முல்லைத்தீவு பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்ததாக செய்திக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. ‘மாவீரன்’ என்ற சொல்லை, ஓட்டோவில் பதிந்திருந்தமை தொடர்பில், வாக்குமூலத்தைப் பெற்றுக்கொள்ள முல்லைத்தீவு  பொலிஸ் நிலையத்துக்கு  ஓட்டோவுடன் வருகைதருமாறு சகோதரர்களான 21, 19 வயதுடைய இளைஞர்களை, முல்லைத்தீவு பொலிஸார்  அறிவுறுத்தி இருந்தனர். அவர்களை அழைத்து, வாக்குமூலம் பெற்றுக்கொண்டிருந்தவேளை, ஊடகங்களுக்கும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்துக்கும்   பாதிக்கப்பட்டவர்களால், தொலைபேசி மூலம் முறைப்பாடு செய்யப்பட்டு இருந்தமையால், உடனடியாகக் ...

Read More »

பிள்ளையர் சிலை உடைத்து சேதம்

அம்பாறை திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள  கஞ்சிக்குடியாறு சந்தியில் அமைக்கப்பட்டிருந்த பிள்ளையார் சிலையை இனந்தெரியாத விசமிகளால் உடைத்து சேதமாக்கப்பட்ட சம்பவம் நேற்று வியாழக்கிழமை (16) இரவு இடம்பெற்றள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர். திருக்கோவில் பொத்துவில் பிரதான வீதியிலுள்ள கஞ்சிக்குடியாறு சந்தியில குடியிருப்புக்கள் இல்லாத பகுதியில்  பாராளுமன்ற உறுப்பினர் பொடியப்பு பியசேன, பிள்ளையார் சிலை ஒன்றை அமைத்ததையடுத்து  அதனை அந்த பிரதான வீதி ஊடாக பிரயாணிக்கும் மக்கள் வழிபட்டு வழிபட்டுவந்தனர். இந்த நிலையில் சம்பவதினமான நேற்று இரவு குறித்த பிள்ளையர் சிலையின் கை, தும்பிக்கை போன்றவற்றை இனந்தெரியாத ...

Read More »

எரிவாயு வெடிப்பு; விசாரணை குழுவின் அறிக்கை பூர்த்தி

சமையல் எரிவாயு வெடிப்பு தொடர்பாக ஆராய்ந்து பரிந்துரைகளை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி குழு தனது இறுதி அறிக்கையை தயாரித்துள்ளது. அறிக்கையை ஜனாதிபதியிடம் சமர்ப்பிப்பதற்கான திகதி மற்றும் நேரத்தை தாம் கோரியுள்ளதாக மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சாந்த வல்பொலகே தெரிவித்துள்ளார். எரிவாயு நிறுவனங்கள் – தரநிலைகள் பணியக அதிகாரிகள் – நுகர்வோர் உட்பட சுமார் 40 தரப்பினரிடமிருந்து வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

Read More »

இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் மிகவும் மோசமடைந்துவரும் நிலை!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் நிர்வாகத்தின்கீழ் இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் மிகவும் மோசமடைந்துவரும் நிலையில், மனித உரிமைகள்சார் கடப்பாடுகளை உரியவாறு நிறைவேற்றுமாறு அரசாங்கத்தின்மீது அழுத்தம் பிரயோகித்து தற்போதைய நிலைவரத்தை மாற்றியமைப்பதற்கான மிகமுக்கிய வாய்ப்பு ஐரோப்பிய ஒன்றியத்தின் வசமுள்ளது. இலங்கையில் மேலும் மனித உரிமை மீறல்கள் இடம்பெறுவதைத் தடுக்கும் வகையில் ஐரோப்பிய ஒன்றியம் ஏனைய சர்வதேச தரப்புக்களுடன் இணைந்து செயலாற்ற வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது. அதேவேளை வரியின்றி ஐரோப்பிய சந்தைகளைச் சென்றடைவதற்கான இலங்கையின் இயலுமை ஜி.எஸ்.பி வரிச்சலுகையிலேயே தங்கியிருக்கின்றது. ஆகவே உரியவாறான ...

Read More »

என்.ராமகிருஷ்ணன்: எழுத்தாயுதம் ஏந்திய கம்யூனிஸ்ட்

ஒரு மாணவர் போராட்டத்தில் நான் சென்னை மத்திய சிறைச்சாலையில் இருந்தபோது, என்னிடமிருந்து ‘தோழர் எஸ்.ஏ.தங்கராஜன்: கத்தோலிக்கத்திலிருந்து கம்யூனிசம் வரை’ நூலை, ஒரு அரசியல் தலைவரைக் கொலைசெய்த காரணத்துக்காகச் சிறையில் இருந்தவர் வாசிக்க ஆரம்பித்தார். அடுத்த சில தினங்களில் ‘‘என்னப்பா, ஜெயில்ல கக்கூஸ் வாங்கிக்கொடுத்தவர் இவர்தானா! இப்படி ஒரு புத்தகத்த முதலிலேயே படிச்சிருந்தேன்னா என் நிலமை எப்படியோ மாறியிருக்கும்” என்றார். ‘‘ஜெயில்ல கக்கூஸ் வாங்கிக்கொடுத்தவர் புக்க படிங்க’’ எனத் தன் சகாக்களை படிக்கச் சொல்ல ஆரம்பித்தார். இப்படிப்பட்ட எழுத்துகளை நூலாக்கம் செய்தவர் என்.ராமகிருஷ்ணன். கம்யூனிஸ்ட் தலைவர்களின் ...

Read More »

கிளிநொச்சியில் அகழ்வின் போது பெருமளவான துப்பாக்கி ரவைகள் மீட்பு!

கிளிநொச்சிக்கு கோரக்கண் கட்டுப்பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் இருந்து துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டு வருகின்றன. கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கோரக்கன் கட்டு பூங்காவன சந்திப் பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் கடந்த ஞாயிற்றுக்கழமை குழி ஒன்றை வெட்டிய போது சில துப்பாக்கி ரவைகள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து கிளிநொச்சி காவல் துறைக்கு தகவல் வழங்கப்பட்டது இதனையடுத்து கடந்த திங்கட்கிழமை சம்பவ இடத்துக்கு சென்ற கிளிநொச்சி காவல் துறைக்கு மற்றும் விசேட அதிரடிப்படையினர் குறித்த பகுதியில் இருந்து துப்பாக்கி ரவைகள் ...

Read More »

ஆஸ்திரேலிய அரசால் தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதிகளை மீள்குடியமர்த்த உதவி…

Operation #NotForgotten எனும் பிரச்சார செயலின் மூலம் அகதிகளுக்கு ஆஸ்திரேலிய அகதி கவுன்சில், MOSAIC, Ads Up Canada Refugee Network ஆகிய அமைப்புகள் ஆஸ்திரேலிய அரசால் தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதிகள் மீள்குடியமர உதவி வருகின்றன. கடந்த 2019ம் ஆண்டு முதல் பப்பு நியூ கினியா அல்லது நவுருத்தீவில் வைக்கப்பட்டிருந்த 157 அகதிகள் சார்பாக கனடாவில் மீள்குடியமர்த்த விண்ணப்பிக்கப்பட்டிருந்தது. இந்த கனடா மீள்குடியமர்வு என்பது ஆஸ்திரேலிய- அமெரிக்க அகதிகள் ஒப்பந்தத்தில் விடுப்பட்ட அகதிகளுக்கு நிரந்தரமான வாழ்க்கையை தரும் பெரும் வாய்ப்பாகப் பார்க்கப்படுகிறது.

Read More »

குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி – ஐரோப்பிய நாடுகளில் தொடக்கம்

ஐரோப்பிய நாடுகளில் ஒமைக்ரான் வைரஸ் பரவல் அடுத்த சில மாதங்களில் அதிகரிக்கும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். ஐந்து முதல் 11 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்திற்கு ஐரோப்பிய ஒன்றிய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு கடந்த மாதம் ஒப்புதல் அளித்தது.  இதையடுத்து ஃபைசர் பயோடெக் நிறுவனம் சார்பில் குறைவான அளவு கொண்ட கொரோனா தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தது. இதனையடுத்து இத்தாலி, ஸ்பெயின், ஹங்கேரி, கிரீஸ் நாடுகளில் சிறார்களுக்கான கொரோனா தடுப்பூசி போடும் நடவடிக்கை தொடங்கியுள்ளது. ஏதென்ஸ் நகரில் உள்ள ...

Read More »

அம்பாறையில் மைக்ரோ ரக கைதுப்பாக்கியை விற்க முயன்ற ஒருவர் கைது!

அம்பாறை காரைதீவு பிரதேசத்தில் விடுதலைப் புலிகள் பயன்படுத்திய மைக்ரோ ரக கைதுப்பாக்கி ஒன்றை 16 இலட்சத்துக்கு விற்க முற்பட்ட ஒருவரை நேற்று செவ்வாய்கிழமை (14) மாலை காவல் துறையுடன் விசேட அதிரடிப்படையினர் இணைந்து கைது செய்துள்ளதாக காரைதீவு காவல் துறையினர்ர் தெரிவித்தனர். இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவல் ஒன்றிற்கு அமைய சம்பவதினமான இன்று காலை காரைதீவு விபுலானந்த வித்தியாலய வீதியிலுள்ள சட்டவிரோதமாக ஆயுதங்களை வாங்கி விற்கும் ஒருவரின் வீட்டை இராணுவ புலனாய்வு பிரிவு காவல் துறை  மற்றும் விசேட அதிரப்படையினருடன் இணைந்து குறித்த வீட்டை ...

Read More »