செய்திமுரசு

அச்சு நூல்கள் அழியாது..! ஏன்?

உலகெங்கும் பதிப்புத் துறை சார்ந்த கூடுகைகளில், “விரைவில் அச்சு நூல் மறைந்து விடும், இனி மின்னூல்கள் மட்டுமே தழைக்கும்” என்று சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தொடர்ந்து பேசப்பட்டுவந்தது. பெரும் பதிப்பாளர்களை நோக்கிப் பல வரலாற்றுத் தீர்ப்புகளை வீசினர் தொழில்நுட்பக் கற்றுக்குட்டிகள். பதிப்புலகுக்குப் பெரும் பங்களித்த ஆளுமைகள் பலர் மனங்கலங்கி நின்றிருப்பதைக் கண்டிருக்கிறேன். தொழில்நுட்பத்தால் மட்டும் வரலாறு தீர்மானிக்கப்படுவதில்லை. தொழில்நுட்பத் தின் தாக்கத்தை மறுப்பது மூடத்தனம். ஆனால், தொழில்நுட்பம் பண்பாட்டின் செல்வாக்குக்கு உட்பட்டது என்பதை உணரா திருப்பது அறியாமை. அச்சு இயந்திரங்கள் வந்ததும் ஓலைச்சுவடி ...

Read More »

அணியில் அதிரடி மாற்றத்தை உருவாக்க விரும்பவில்லை!

இங்கிலாந்திற்கு எதிரான படுதோல்வியால் அணியில் அதிரடி மாற்றத்தை உருவாக்க விரும்பவில்லை என்று ஜஸ்டின் லாங்கர் கூறியுள்ளார். இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற 3-வது ஆட்டத்தில் இங்கிலாந்து 50 ஓவரில் 481 ரன்கள் குவித்து உலக சாதனைப் படைத்தது. பின்னர், பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 239 ரன்னில் சுருண்டு படுதோல்வி அடைந்தது. இந்த தோல்வி குறித்து ஆஸ்திரேலிய அணியின் புதிய பயிற்சியாளரான ஜஸ்டின் லாங்கர் கூறுகையில் ‘‘இங்கிலாந்தின் இந்த ஆட்டம் தற்செயலாக நடந்தது அல்ல. ...

Read More »

சிறிலங்காவில் விபத்தில் அவுஸ்திரேலிய பிரஜை உயிரிழப்பு!

தெற்கு அதிவேக வீதியில் இடம்பெற்ற விபத்தில்இ அவுஸ்திரேலிய பிரஜை (37) ஒருவரும் நான்கு வயது சிறுமி ஒருவரும் உயிரிழந்துள்ளனர். நேற்று (20) காலை 5 மணியளவில் எம்பிலிப்பிட்ட காவல் துறை பிரிவுக்கு உட்பட்ட குருந்துகஹஹெதெக்ம பிரதேசத்தில்இ கெட்டாவையில் இருந்து காலி நோக்கி சென்ற வேன் விபத்துக்குள்ளாகியுள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக வீதியின் அருகில் நிறுத்தப்பட்டிருந்த லொறி ஒன்றின் பின்புறத்தில் வான் மோதியுள்ளது. விபத்தில் வானில் பயணித்த அவுஸ்திரேலிய பிரஜைகள் நால்வரில் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஏனையவர்கள் களுத்துறை நகொடை வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

Read More »

மக்களுக்கான எதிர்பார்ப்பை முதல்வர் விக்கி பூர்த்தி செய்தாரா?

முள்ளிவாய்க்கால் இனஅழிப்புப் போரிற்கு பின்னரான ஈழத்தமிழர்களின் விடுதலைக்கான பயணமானது, உறுதியான அடித்தளம் இன்றியே நகர்ந்துகொண்டிருக்கிறது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வெற்றியை உறுதிப்படுத்துவதன் மூலம், தமிழர்களின் அரசியல் உரிமையை பெற்றுவிடலாம் என நம்பி வாக்களித்த மக்கள் ஏமாற்றப்பட்டு வருகிறார்கள். ஏமாற்றங்களின் விளைவாக உருவான திருப்புமுனை, தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கான மாற்றுத்தலைமையாக முதல்வர் விக்கினேஸ்வரன் தலைமையிலான அணிக்கு மக்களின் ஆதரவாக பெருகியது. தமிழ் மக்கள் பேரவை என்றும் அதன் தொடர்ச்சியாக எழுகதமிழ் என்றும், முதல்வருக்கு எதிராக அவர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்த தமிழரசுக் கட்சியும் ஈபிடிபியும் ...

Read More »

மாவீரர் குடும்பங்களுக்கு இழப்பீடு – அமைச்சரவைப் பத்திரம் 3 ஆவது தடவையாக நிராகரிப்பு!

போரில் இறந்த விடுதலைப் புலிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடுகளை வழங்குவதற்காக, சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்தை சிறிலங்கா அமைச்சரவை மூன்றாவது தடவையாக நேற்று நிராகரித்துள்ளது. இந்த அமைச்சரவைப் பத்திரத்தை, மீள்குடியேற்ற, புனர்வாழ்வு மற்றும் வடமாகாண அபிவிருத்தி, இந்து கலாசார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைத்திருந்தார். கடந்த இரண்டு வாரங்களாக அமைச்சரவையில் இந்தப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்ட போது சிறிலங்கா ஜனாதிபதியும், அமைச்சர்களும் எதிர்ப்புத் தெரிவித்தமையால், நிறுத்தி வைக்கப்பட்டது. நேற்று மீண்டும் இந்த அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்ட போது, அமைச்சர்கள் தொடர்ந்து எதிர்ப்பை வெளியிட்டனர். இந்த அமைச்சரவைப் ...

Read More »

ஐ.நா. மனித உரிமை ஆணையகத்தில் இருந்து அமெரிக்கா விலகல்!

ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை கவுன்சிலில் இருந்து அமெரிக்கா விலகுகிறது என ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்சில் கடந்த 2006-ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பில் 47 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்க தூதராக இருந்து வருபவர் நிக்கி ஹாலே. இவர் இன்று செய்தியாள்ர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்சிலில் இருந்து அமெரிக்கா விலகுகிறது என தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், ...

Read More »

அமைச்சுப்பதவியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ள பொன்சேகா!

ஜனாதிபதியின் வாக்குறுதியின் படி எதிர்வரும் 3 மாதக் காலப்பகுதியில் சிங்கராஜா வனத்தில் உள்ள இரண்டு யானைகளுக்கும் இடமொன்று வழங்கப்படாவிட்டால் தாம் அமைச்சுப்பதவியில் இருந்து விலகுவதாக வனவிலக்கு அமைச்சர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா மற்றும் பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெரும ஆகியோர் தெரிவித்துள்ளனர். ரக்குவானை ரஜவத்த கிராம மக்களை சந்தித்த போது அமைச்சர்கள் இதனை தெரிவித்துள்ளனர்.

Read More »

ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் 242 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது. ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான 3-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நாட்டிங்காமில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோவ் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இங்கிலாந்து அணி முதலில் இருந்தே ஆஸ்திரேலியா பந்து வீச்சை பதம் பார்த்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும்  அடித்து ...

Read More »

“என் கோபத்துக்குக்கூட அவர்கள் தகுதியற்றவர்கள்!” கெளரி லங்கேஷின் தங்கை கவிதா

உலகம் முழுவதும் இருக்கின்ற பத்திரிகையாளர்களுக்கு 2017ம் ஆண்டு மிகவும் மோசமான ஆண்டு எனக் கூறலாம். கடந்த ஆண்டு மட்டும் , தங்களின் வேலைக்   காரணமாக , உலகம் முழுவதும் கொல்லப்பட்ட பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை …46! அதில் இந்தியாவில் கொல்லப்பட்டவர்கள் மூன்று பேர் ..கர்நாடகாவைச் சேர்ந்த  கெளரி லங்கேஷ் என்ற பெண் பத்திரிகையாளர் உட்பட! 2017ம் ஆண்டு,  செப்டம்பர்  5ம் தேதி, பெங்களூரில், காந்தி நகரிலுள்ள தன் அலுவலகத்திலிருந்து , ராஜராஜேஸ்வரி நகரிலுள்ள தன்  வீட்டிற்கு திரும்பியபோது, மூன்று  மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார் கெளரி லங்கேஷ். இந்த கொலை வழக்கில், ...

Read More »

சீனப் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கும் டிரம்ப்!

சீனப் பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கூடுதலாக 10 சதவீதம் வரி விதிக்க முடிவு செய்துள்ளதால் இரு நாடுகளுக்கிடையே வர்த்தக போர் தீவிரமடைந்துள்ளது. அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே வர்த்தகப் போர் தொடங்கி உள்ளது. அமெரிக்காவில் சீனப் பொருட்கள் குவிந்ததுடன் விலையும் மலிவாக கிடைப்பதால் அமெரிக்க பொருட்களின் வர்த்தகம் சரிந்தது. இது அமெரிக்க அதிபர் டிரம்பின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. ஏற்கனவே, அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை என்ற கொள்கையை கடைப்பிடித்து வரும் டிரம்ப்,  சீனப் பொருட்களுக்கு 4 லட்சம் கோடி ரூபாய் வரை வரி விதித்தார். இதற்கு ...

Read More »