அமைச்சுப்பதவியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ள பொன்சேகா!

ஜனாதிபதியின் வாக்குறுதியின் படி எதிர்வரும் 3 மாதக் காலப்பகுதியில் சிங்கராஜா வனத்தில் உள்ள இரண்டு யானைகளுக்கும் இடமொன்று வழங்கப்படாவிட்டால் தாம் அமைச்சுப்பதவியில் இருந்து விலகுவதாக வனவிலக்கு அமைச்சர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா மற்றும் பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெரும ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

ரக்குவானை ரஜவத்த கிராம மக்களை சந்தித்த போது அமைச்சர்கள் இதனை தெரிவித்துள்ளனர்.