செய்திமுரசு

விஜயகலாவின் கருத்து அல்ல அது மக்களுடையது!- ஜீ.குணசீலன்

“இன்றைய சூழலில் எமது அரசியல் வாதிகள் உட்பட பல்வேறு விதமானவர்கள் மாகாண சபையினுடைய அதிகாரங்களை குறைப்பதிலேயே முனைப்பாக இருக்கின்றனர்” என வடக்கு சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் தெரிவித்தார். வட மாகாண சுகாதார அமைச்சரின் அலுவலகத்தில் இன்று காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், வட பகுதியில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் வன்முறைகள் அதிகரித்த நிலையில் காணப்படுகின்றது. கொள்ளை,கொலை, பாலியல் வன்புனர்வு போன்ற பல்வேறு விதமான குற்றச் செயல்கள் தொடர்ந்தும் இடம் பெற்று வருகின்றது. குறித்த குற்றச் ...

Read More »

தமிழ் மக்கள் அரசாங்கத்தை உருவாக்கிவிட்டு வெளியில் நின்று வேடிக்கை பார்க்கிறார்கள்!

தமிழ் மக்கள் அரசாங்கத்தை உருவாக்கிவிட்டு வெளியில் நின்று வேடிக்கை பார்க்கிறார்கள் ஆனால் முஸ்லிம்கள் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுகிறார்கள் இந்த விடயத்தில் தமிழர்கள் முஸ்லிம்களிடம் பாடம் கற்க வேண்டும் என தேசிய சகவாழ், கலந்துரையாடல்கள் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற விசேட கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில், யுத்தம் நடைபெற்ற காலகட்டத்தில் அரசாங்கத்துடன் இணைய முடியாது. கொழும்பிலே தமிழ் மக்களை வெள்ளை வேனில் ...

Read More »

”உங்கள் மீது யாருக்கும் கோபமில்லை”!தாய்லாந்து பயிற்சியாளருக்கு பெற்றோர்கள் கடிதம்!

உங்கள் மீது யாருக்கும் கோபமில்லை என்று பயிற்சியாளருக்கு பெற்றோர்கள் கடிதம் அனுப்பி உள்ளனர். தாய்லாந்தில் நீர் தேங்கியிருக்கும் குகையில் சிக்கியுள்ள 12 சிறுவர்கள் மற்றும் அவர்களது கால்பந்து பயிற்சியாளருக்கு நீரில் மூழ்க தெரியாது என்பதால் ஓர் இரவில் அவர்களை மீட்டுவிட முடியாது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தாய்லாந்தின் தம் லுவாங் குகையின் ஒரு பகுதியில், ஏறக்குறைய இரண்டு வாரங்களாக சிக்கியிருக்கும் 12 சிறுவர்கள் மற்றும் அவர்களது கால்பந்து பயிற்சியாளரை மீட்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.உயிருடன் இருப்பதாக இங்கிலாந்தை சேர்ந்த 2 நீர் மூழ்கி ...

Read More »

காதலை நிரூபிக்க நடந்த சோதனையில் துயரம்!

காதலை நிரூபிக்க மாமனாரின் நிபந்தனையை ஏற்று, துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு பாஜக தலைவர் உயிரிழந்தார். அவரின் இறுதிஆசையின்படி, காதலியின் கண்முன் உடலறுப்புகள் தானம் செய்யப்பட்ட உருக்கமான நிகழ்வு நடந்துள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம், போபால் நகரைச் சேர்ந்தவர் அதுல் லோக்ஹண்டே. இவர் பாரதிய ஜனதா கட்சியின், இளைஞர் அமைப்பான யுவ மோர்ச்சா தலைவராக உள்ளார். லோக்ஹண்டே கடந்த சில ஆண்டுகளாக 27 வயது பெண் ஒருவரைக் காதலித்து வந்துள்ளார். அந்தப் பெண்ணும் லோக்ஹண்டேவை தீவிரமாகக் காதலித்துள்ளார். ஆனால், இருவரின் திருமணத்துக்கு பெண்ணின் தந்தை ஒப்புக்கொள்ளவில்லை. பெண்ணிடம் ...

Read More »

ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் ஆரோன் பின்ச் சாதனை!

டி20 கிரிக்கெட் வரலாற்றில் முதல் வீரராக 900 புள்ளிகளை கடந்து ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் ஆரோன் பின்ச் சாதனை படைத்துள்ளார். டி20 கிரிக்கெட் பேட்ஸ்மேன் தரவரிசை பட்டியளில் 900 புள்ளிகளை கடந்த முதல் வீரர் எனும் சாதனையை ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரரும், டி20 போட்டிகளின் கேப்டனுமான ஆரோன் பின்ச் படைத்துள்ளார். சமீபத்தில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் பங்கேற்ற தொடரின் முடிவில் 891 புள்ளிகள் பெற்றிருந்தார். இதற்கிடையே ஆரோன் பின்ச், ஜிம்பாப்வேயில் நடைபெற்று வரும் பாகிஸ்தான், ஜிம்பாப்வே உடனான முத்தரப்பு டி20 போட்டியில் விளையாடி வருகிறார். ...

Read More »

குகைக்குள் சிக்கிய 8வது சிறுவன் மீட்பு – விரைவில் அனைவரும் மீட்கப்படுவார்கள்!

தாய்லாந்து குகையில் சிக்கிய 12 சிறுவர்கள் மற்றும் ஒரு பயிற்சியாளரை மீட்கும் பணியில், 4 சிறுவர்கள் நேற்று மீட்கப்பட்ட நிலையில் இன்று மேலும் நான்கு சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளார். தாய்லாந்தின் சியாங் ராய் பகுதியில் உள்ள தாம் லுவாங் குகையை பார்வையிடச் சென்ற 12 சிறுவர்கள் மற்றும் அவர்களின் கால்பந்து பயிற்சியாளர் கடந்த மாதம் 23-ம் தேதி குகைக்குள் சிக்கிக்கொண்டனர். 9 நாட்களுக்குப் பிறகு அவர்கள் உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களை மீட்கும் பணியில் தாய்லாந்து கடற்படை முழுவீச்சில் ஈடுபட்டுள்ளது. குகைக்குள் உள்ள சிறுவர்களுக்கு ...

Read More »

விஜயகலாவிற்கு அமைச்சு பதவி வழங்குவதற்கு நான் சிபாரிசு செய்வேன்!

விஜயகலாவிற்கு இராஜாங்க அமைச்சர் பதவிக்கு பதிலாக அமைச்சு பதவி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க தான் சிபாரிசு செய்வதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். இன்று கிளிநொச்சியில் இடம்பெற்ற கட்சியின் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் விடுதலை புலிகளின் பிரதிநிதிகளாக அவர்களின் இலட்சியத்தை முன்னெடுப்போம் என தெரிவித்த தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்கள். யுத்தத்தின் பின்னர் இடம்பெற்ற கொலைகள், உயிரிழப்பு சொத்தழிப்பு அனைத்திற்கும் காரணமாக சம்பந்தனும், ...

Read More »

மஹிந்தவுக்கு எதிராக ஒத்திவைப்பு பிரேரணை!

தேர்தல் பிரச்சாரத்திற்காக சீனாவிடமிருந்து நிதியை பெற்ற விவகாரம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு எதிராக நாடாளுமன்ற ஒத்திவைப்பு பிரேரணையொன்றை கொண்டுவருவதற்கு ஐக்கியதேசிய கட்சி தீர்மானித்துள்ளது. எதிர்வரும் வியாழக்கிழமை இவ்வாறான பிரேணையை கொண்டுவருவதற்கு கட்சி தீர்மானித்துள்ளது. இதேவேளை முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச குறித்த பிரேரணையை கொண்டுவருவது குறித்தும் ஐக்கியதேசிய கட்சி ஆராய்ந்து வருகின்றது. இது குறித்து ஐதேகவின் நாடாளுமன்ற கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Read More »

சிட்னியில் கம்பவாரிதி ஜெயராஜ் மூன்று நாள் சிறப்புப் பேருரைகள்!

‘ஞான வேள்வி’ யூலை -10 செவ்வாய் – “விருந்தோம்பல் எனும் வேள்வி” யூலை- 11 புதன் – “சாதனை செய்க பராசக்தி” யூலை- 12 வியாழன் – “கேள்விகளால் ஒரு வேள்வி” என்ற தலைப்பில், உங்களுடைய தமிழ் இலக்கியம் மற்றும் ஆன்மீகம் சார்ந்த கேள்விகள்-சந்தேகங்களை தெளிவுறுத்தும் வகையில் அமையவுள்ளது. தங்களுடைய கேள்விகளைப் பின்வரும் மின்னஞ்சல் முகவரிக்கு ஜுலை 8ம் திகதிக்கு முன்னதாக அனுப்பி வைக்குமாறு கேட்டுள்ளனர். kambanaustralia@kambankazhagam.org அனைவரும் ‘ஞான வேள்விப்’ பேருரைகளுக்கு வருகைதந்து, எம் தமிழ்ப் பணிகளுக்கான ஆதரவைத் தந்தும், பயன் பெற்றும், ...

Read More »

தாய்லாந்து குகையும், அதுக் குறித்த கதையும்!

தாய்லாந்தில் குகையொன்றில் கடந்த இரண்டு வாரங்களாக சிக்கியுள்ள 12 சிறுவர்கள் மற்றும் அவர்களின் பயிற்சியாளரை மீட்கும் அபாயகரமான பணி……இதுவரை 6 பேரை மீட்டுள்ளனர். அந்த குகை மற்றும் அந்த சிறுவர்கள் குறித்த தகவல்களை 5 கேள்வி, பதில்கள் வடிவில் வழங்குகிறோம். ஏன் அந்த பதினொரு சிறுவர்கள் குகைக்குள் சென்றார்கள்? இந்த தருணம் வரை சரியான பதில் தெரியாத கேள்வி இது. ஏன் அவர்கள் ஜூன் 23, சனிக்கிழமை அந்த குகைக்குள் சென்றார்கள் என்பதை யாராலும் சரியாக விளக்க முடியவில்லை. பிபிசி தாய்லாந்து செய்தியாளர்கள் தரும் ...

Read More »