செய்திமுரசு

சீனாவின் புதிய எல்லைச் சட்டம்; இந்தியாவிற்கான கவலைகள் என்ன?

அக்டோபர் 23 அன்று, சீனாவின் சம்பிரதாயமான ஆனால் உயர்மட்ட சட்டமன்ற அமைப்பான தேசிய மக்கள் காங்கிரஸின் நிலைக்குழு, “நாட்டின் நில எல்லைப் பகுதிகளின் பாதுகாப்பு மற்றும் சுரண்டலுக்கான” புதிய நிலச் சட்டத்தை நிறைவேற்றியது, இது ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வரும் என்று அரசு ஊடகமான சின்ஹுவா தெரிவித்தது. சட்டம் என்பது குறிப்பாக இந்தியாவுடனான எல்லைக்காக அல்ல; எவ்வாறாயினும், 3,488-கிமீ எல்லை சர்ச்சைக்குரியதாகவே உள்ளது, மேலும் 17 மாத கால இராணுவ நிலைப்பாட்டின் தீர்வில் மேலும் தடைகளை உருவாக்கலாம் என்று சில வல்லுநர்கள் கருதுகின்றனர். ...

Read More »

அமெரிக்காவினதும் சர்வதேச சமூகத்தினதும் நிதிஉதவிகள் கவனக்குறைவாக கூட ஒடுக்குமுறை அரசாங்கத்தை பலப்படுத்தக்கூடாது

அமெரிக்காவினதும் சர்வதேச சமூகத்தினதும் நிதிஉதவிகள் கவனக்குறைவாக கூட ஒடுக்குமுறை அரசாங்கத்தை பலப்படுத்தக்கூடாது என இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அமெரிக்க காங்கிரசின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன் கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். அமெரிக்க காங்கிரசின் மனித உரிமைகள் ஆணைக்குழு பயங்கரவாத தடைச்சட்டத்தினால் ஏற்பட்ட தாக்கங்கள் குறித்து தனது உறுப்பினர்களிற்கும் கலந்துகொண்டவர்களிற்கும் தெரிவிக்குமாறு அம்பிகா சற்குணநாதனிற்கு அழைப்பு விடுத்திருந்தது. அமெரிக்காவும் சர்வதேச சமூகமும் இலங்கை தொடர்பாக இரு முக்கிய தலையீடுகளை மேற்கொள்ளவேண்டும் என அவர் ...

Read More »

முன்னாள் மன்னரை கொலை செய்ய இளவரசர் சல்மான் முயன்றார்

ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி சவுதி அரேபியாவில் இருந்து தப்பி கனடாவில் தஞ்சம் அடைந்துள்ள முன்னாள் புலனாய்வு அதிகாரியான அல்ஜாப்ரி என்பவர் அமெரிக்க செய்தி நிறுவனத்தின் நேர்காணலின்போது இதனை தெரிவித்தார். சவுதி அரேபியாவை சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கசோகி படுகொலை செய்யப்பட்டதன் பின்னணியில் அந்த நாட்டின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் இருப்பதாக பரவலான குற்றச்சாட்டு இருந்து வருகிறது. ஆனால் சவுதி அரேபியா அரசு இதனை திட்டவட்டமாக மறுத்து வருகிறது. இந்தநிலையில் மறைந்த சவுதி மன்னர் அப்துல்லாவை, இளவரசர் முகமது பின் சல்மான் அதிகாரத்துக்காக ...

Read More »

வெளிநாட்டு மாணவர்களை குயின்ஸ்லாந்து மீண்டும் வரவேற்கிறது

வெளிநாட்டு மாணவர்கள் குயின்ஸ்லாந்து மாநிலத்திற்கு அடுத்த வருடம் திரும்பலாம் என்று Premier Anastasia Palaszczuk அறிவித்தார். குயின்ஸ்லாந்து மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம் புதிதாக இருவருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் தொற்றைப் பரப்புவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

Read More »

அரசாங்கத்தை விமர்சித்தவர் பதவியில் இருந்து தூக்கப்பட்டார்

சிரேஷ்ட  பேராசிரியர் புத்தி மரம்பே விவசாய அமைச்சில் அவர் வகித்த அனைத்து பதவிகளிலிருந்தும் நீக்கப்பட்டார் – தேசிய விவசாயக் கொள்கையை உருவாக்க நிபுணர் குழு, இலங்கை விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டம், சிறு உடமையாளர் விவசாயக் கூட்டுத் திட்டம் ஆகியவற்றில் வகித்த பதவிகளில் இருந்தே அவர் நீக்கப்பட்டுள்ளார். அரசாங்கத்தின் கொள்கைத் திட்டங்களை விமர்சனங்களுக்கு உட்படுத்தினார் என்றக் குற்றச்சாட்டின் கீழே, அவர் வகித்த பதவிகளில் இருந்து, நீக்கப்பட்டுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read More »

யாழ். குருநகரில் சுமந்திரனுக்கு எதிராக கொடும்பாவி எரித்து போராட்டம்

யாழ். குருநகர் பகுதியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரனுக்கு எதிராக இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இழுவை மடித் தொழிலை தடை செய்ய வேண்டும் எனவும், தடை செய்யப்பட்ட தொழில் முறமைகளுக்கு எதிரான சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த வேண்டும் எனவும் எம்.ஏ. சுமந்திரன் தலைமையிலான போராட்டம் கடந்த வாரம் நடைபெற்றது. இந்நிலையில் சுமந்திரனின் கோரிக்கையால், உள்ளூரில் இழுவை மடித் தொழில் செய்யும் மீனவர்கள் பாதிக்கப்படுவதாகக் கூறியே மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.     உள்ளூர் மீனவர்கள் அடிமடித் தொழில் ...

Read More »

தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வயது 20

தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு இப்போது 20 வயது.இலங்கையின் வடக்கு,கிழக்கு தமிழ் மக்களின் முதன்மையான அரசியல் அணியான கூட்டமைப்பு 2001 டிசம்பர் பாராளுமன்ற தேர்தலுக்கு ஒரு சில வாரங்கள் முன்னதாக 2001அக்டோபர் 22 அமைக்கப்பட்டது.அதற்கு பிறகு ஆனையிறவின் இருமருங்கிலும் எத்தனையோ நிகழ்வுப் போக்குகள் நடந்தேறிவிட்டன. வடக்கு,கிழக்கில் தமிழ் மக்கள் வாழ்கின்ற பகுதிகளில் தேர்தல்களில் தொடர்ச்சியாக பெரும்பாலான ஆசனங்களை வென்றதன் மூலம் இலங்கைத் தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான அரசியல் அணியாக கூட்டமைப்பு விளங்கிவருகிறது.2001, 2004, 2010, 2015, மற்றும் 2020 பாராளுமன்ற தேர்தல்களில் கூட்டமைப்பு இரட்டை இலக்கத்தில் ...

Read More »

ஆஸ்திரேலிய தடுப்பில் கொரோனா: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அகதி

தடுப்பிற்கான மாற்று இடமாக செயல்படும் மெல்பேர்னின் பார்க் ஹோட்டலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதி ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை கணக்குப்படி, அத்தடுப்பில் உள்ள 15 அகதிகள்/ தஞ்சக்கோரிக்கையாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Read More »

கூட்டமைப்பு: இரு தசாப்த ஏற்றமும் இறக்கமும்

2001 அக்டோபரில் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பு 2004ம் ஆண்டுத் தேர்தலில் 22 ஆசனங்களைப் பெற, அதனை உருவாக்கிய விடுதலைப் புலிகள் சமயோசிதமான உத்தியைக் கையாண்டனர். இத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 22 பேரில் ஐம்பது வீதமானோர் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள். அன்றுஇ 633,654 வாக்குகளைப் பெற்ற கூட்டமைப்பு 2009க்குப் பின்னர் கதிரை அரசியலுக்கு மாறி கடந்த வருடத் தேர்தலில் 327,168 வாக்குகள் மட்டும் பெற்று பத்து ஆசனங்களுடன் சரிவு நிலைக்கு வந்துள்ளது. ‘கட்டாக்காலி’ அரசியலால் கழுதை தேய்ந்து கட்டெறும்பாகிய கதையாக கூட்டமைப்பு ஆகிவிட்டது. ...

Read More »

கோட்டாபய ஒப்புக்கொள்ளாவிட்டால்? அடுத்த முடிவு தயார்

கெரவலபிட்டி மின் நிலையத்தின் ஒரு பகுதியை அமெரிக்காவுக்கு வழங்குவது தொடர்பான உடன்படிக்கை குறித்து பேசுவதற்கு ஜனாதிபதி ஒப்புக்கொள்ளாவிட்டால் மக்களிடம் நேரடியாக சென்று பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். கெரவலபிட்டி மின் நிலையத்தின் ஒரு பகுதியை அமெரிக்காவுக்கு வழங்குவது தொடர்பான உடன்படிக்கை குறித்து ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து எழுப்பட்ட கேள்விக்குப் பதில் வழங்கிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது குறித்துப் பேசிய அவர், கெரவலபிட்டி மின் நிலையத்தின் ஒரு பகுதியை அமெரிக்காவுக்கு வழங்குவது தொடர்பான உடன்படிக்கை குறித்து ...

Read More »