செய்திமுரசு

ஒற்றையாட்சியை அதிகரிப்பது ஆரோக்கியமானதல்ல! -ஞா.ஸ்ரீநேசன் நேர்காணல்

 கழுதை தேய்ந்து கட்டெறும்பாக மாறியது போன்று இருக்கின்ற அதிகாரங்கள் போதாது என்று ஆயுத போராட்டம் நடந்து முடிந்தும், ஜனநாயக போராட்டம் இடம்பெற்றுக்கொண்டு இருக்கின்றபோது, இருக்கின்ற அதிகாரங்களை பறிக்கின்ற செயற்பாடுகள் காணப்படுகின்ற படியால் அரசாங்கம் கொண்டு வருகின்ற 19 ஆவது திருத்தத்தை அகற்றுவதென்பது ஒரு அரசின் மேலாதிக்கத்தை உயர்த்துகின்ற செயற்பாடாக அமைவதோடு மட்டுமல்லாமல் 13 ஆவது திருத்தத்தில் கை வைப்பதென்பது இருக்கின்ற அதிகாரங்களையும் இல்லாமல் செய்து ஒற்றையாட்சி முறையின் வலுத்தன்மையை அதிகரிக்கின்ற போக்காக அமையும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டு. மாவட்ட முன்னாள் பாராளுமன்ற ...

Read More »

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி காலமானார்

 மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி (வயது 84) காலமா னார். பிரணாப் முகர்ஜி காலமானதாக அவரது மகன் அபிஜித் முகர்ஜி தனது கட்டுரைப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். முன்னாள் குடியரசுத் தலைவா் பிரணாப் முகா்ஜி (84) தொடா்ந்து ஆழ்ந்த மயக்க (கோமா) நிலையிலேயே இருந்து வந்த நிலையில், நினைவு திரும்பாமலேயே புது டில்லியில் உள்ள இராணுவ மருத்துவமனையில் இன்று அவரது உயிர் பிரிந்தது. மூளையில் இரத்தக் கட்டியை அகற்றுவதற்காக கடந்த ஆகஸ்ட் 10ஆம் ...

Read More »

முல்லைப் பெரியாறு அணையை கட்டிய ஜான் பென்னிகுவிக் கல்லறை இடித்து சேதம்

முல்லைப் பெரியாறு அணையை கட்டிய கர்னல் ஜான் பென்னிகுவிக் கல்லறையை சேதப்படுத்தியவர்களை லண்டன் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மதுரை, தேனி, திண்டுக்கல் உள்பட 5 மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில், தமிழக கேரள எல்லையில் முல்லைப் பெரியாறு அணையை கட்டியவர் கர்னல் ஜான் பென்னிகுவிக். இவர் தனது சொத்துக்கள் முழுவதையும் இந்த அணையை கட்டுவதற்காக செலவழித்தார். இதனால் 5 மாவட்ட விவசாயிகள் இவரை கடவுளாக வழிபட்டு வருகின்றனர். தேனி மாவட்டத்தில் இன்றும் கூட பல வீடுகளில் தங்களது குழந்தைகளுக்கு பென்னிகுவிக் பெயரை வைத்து ...

Read More »

புதிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டும் என்கிறார் விமல்

19 ஆவது திருத்தத்தை நீக்குவதற்கு பதி லாக, 2/3 பெரும்பான்மை செல்வாக்கின் கீழ் 1978 ஆம் ஆண்டு முதல் பழுதுபார்க்கப்பட்டு வரும் இந்த அரசி யலமைப்பை மாற்றுவதற்காக நாட்டை உறுதிப்படுத்தும் வகையில் புதிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டும் என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார். நாட்டை பாதுகாக்கவும் , ஒரே சட்டத்தின் கீழ் நாட்டை கொண்டுவரும் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் என்ற உறுதியான நம்பிக்கையுடன் ஜனாதிபதி கோதபய ராஜபக்ஷ தலைமையிலான தற்போதைய அரசாங்கத்தி ற்கு மக்கள் 2/3 பெரும்பான்மை பலத்தை வழங்கியுள் ளனர் என ...

Read More »

சர்வதேசம் மௌனம் காப்பது ஏன்?

மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் அமைப்பின் ஏற்பாட்டில் இன்றைய தினம் திங்கட்கிழமை காலை மன்னாரில் காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் அனுஸ்ரிக்கப்பட்டது. மன்னார் பிரஜைகள் குழுவின் அனுசரனையுடன்,மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் அமைப்பின் ஏற்பாட்டில் இன்று திங்கட்கிழமை(31) காலை 9.30 மணியளவில் மன்னார் பஸார் பகுதியில் இடம் பெற்றது. இதன் போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் ஒன்று கூடி பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு அமைதியான முறையில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை ...

Read More »

அரசியலமைப்பை மாற்றுவதால் சிறுபான்மை மக்கள் அடிமையான இனமாக நாம் வாழக்கூடிய நிலை!

அரசியலமைப்பை மாற்றுவதால் சிறுபான்மை மக்களின் சுதந்திரமும் பாதுகாப்பும் இல்லாமல் மேலும் அடிமையான இனமாக நாம் வாழக்கூடிய நிலை ஏற்படும் இதனால் சர்வாதிகார குடும்ப ஆட்சிக்கு வழிகோலும் என, இலங்கை தமிழரசு கட்சி பட்டிருப்பு தொகுதித் தலைவரும் மட்டு. மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பா.அரியநேத்திரன் தெரிவித்தார். அரசியலமைப்பின் 13,ம், 19,ம் திருத்தத்தை மாற்றுவது தொடர்பில் மேலும் கருத்து கூறுகையில், புதிய அரசாங்கம் தற்போது பதவி ஏற்றதுடன் ஜனாதிபதி கோட்டபாய ராஷபக்ச 19,வது அரசியல் அமைப்பை முழுமையாக இல்லாமல் செய்து 20,வது அரசியலைமைப்பை கொண்டு வருவதாகவும் ...

Read More »

சிறுபான்மை கட்சிகளின் ஒத்துழைப்பின்றி 19ஆவது நீக்கப்படுமாம்

சிறுபான்மை கட்சிகளின் ஒத்துழைப்பின்றி 19 ஆவது அரசியல் அமைப்பை நீக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்தார். கொத்மலையில் ​நேற்று (29)  நடைபெற்ற, மக்கள் சந்திப்பின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே இவர் இதனை கூறினார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ’19 ஆம் திருத்தத்தின் ஊடாக நாட்டை பிரச்சினைக்குள்ளாக்கினார்கள் என்பதை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே கூறியுள்ளார். சுயாதீன ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டன அவை வெறுமனே அரசியல் ரீதியான ஆணைக்குழுக்கள் மாத்திரமே ஆகும். அப்போது பொலிஸ்மா ...

Read More »

கொரோனா பரவலில் குழந்தைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன

கொரோனா பரவலில் குழந்தைகள் முக்கிய பங்கு வகிப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது.உலகம் முழுவதும் கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்து வருகிறது. இந்த வேகத்தை கட்டுப்படுத்தி மனித குலத்தை மீட்பதற்காக கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்துகளும், தடுப்பூசியும் உருவாக்குவதில் மருத்துவ நிபுணர்கள் ஈடுபட்டு உள்ளனர். இப்படி மருந்துகளுக்கான தேடல் ஒருபுறம் இருக்க, மறுபுறம் கொரோனா குறித்த ஆய்வுகளும் வேகமெடுத்து வருகின்றன. குறிப்பாக வைரஸ் ஏற்படுத்தும் பாதிப்பு, எந்த வயதினர் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்? எந்தெந்த நோயாளிகள் வைரசின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் மாண்டு விடுகிறார்கள்? என்பது போன்ற ...

Read More »

ஈழத்தின் புகழ்பெற்ற மூத்த ஓவியர் ‘ஆசை இராசையா’ காலமானார்

ஈழத்தின் மூத்த ஓவியரும் மெய்யுருக்களை வரைவதில் புகழ் பெற்றவருமான ஆசை இராசையா இன்று (29) தனது 74வது வயதில் காலமானார். தெல்லிப்பழை வைத்தியசாலையில் இவர் காலமானார். யாழ்ப்பாணம் – அச்சுவேலியை பிறப்பிடமாக கொண்டவர் ஆசை இராசையா. இவர் தரமான நூல்களின் வடிவமைப்பாளராகவும், அட்டைப்பட ஓவியராகவும், நிலவுருக்கள் மற்றும் மெய்யுருக்களை வரைவதில் புகழ் பெற்றவராகவும் இருக்கின்றார். அத்துடன் இவர் இலங்கை முத்திரைப் பணியக ஓவியக் குழுவில் ஒருவராகவும் இருந்தார். அரசின் 8 முத்திரைகளுக்கான ஓவியங்களை இவரே வரைந்துள்ளார். இதன்படி சேர். பொன். இராமநாதன், சேர். பொன். ...

Read More »

காணாமல் ஆக்கபட்டவர்களுக்குக் கிடைக்காத நீதி

இன்று அனைத்துலக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தினம். இந்நாளை முன்னிட்டு தமிழ்ப் பகுதிகளிலும் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும்  நாடுகளிலும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதிகேட்டு ஆர்ப்பாட்டங்கள் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கின்றன. கடந்த 11 ஆண்டுகளாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நீதி கேட்டுப் போராடி வருகிறார்கள். இன்றோடு இப்போராட்டங்கள் 1,290 ஆவது நாளை அடைகின்றன.காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இலங்கை அரசாங்கத்திடமும் உலக சமூகத்திடமும் குறிப்பாக ஐநா விடமும் இரண்டு விடையங்களை கேட்கிறார்கள். முதலாவது நீதி. இரண்டாவது இழப்பீடு. நீதி வேண்டும் என்றால் அதற்கு விசாரணை செய்ய வேண்டும். காணாமல் ஆக்கியவர்களை ...

Read More »