புதிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டும் என்கிறார் விமல்

19 ஆவது திருத்தத்தை நீக்குவதற்கு பதி லாக, 2/3 பெரும்பான்மை செல்வாக்கின் கீழ் 1978 ஆம் ஆண்டு முதல் பழுதுபார்க்கப்பட்டு வரும் இந்த அரசி யலமைப்பை மாற்றுவதற்காக நாட்டை உறுதிப்படுத்தும் வகையில் புதிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டும் என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

நாட்டை பாதுகாக்கவும் , ஒரே சட்டத்தின் கீழ் நாட்டை கொண்டுவரும் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் என்ற உறுதியான நம்பிக்கையுடன் ஜனாதிபதி கோதபய ராஜபக்ஷ தலைமையிலான தற்போதைய அரசாங்கத்தி ற்கு மக்கள் 2/3 பெரும்பான்மை பலத்தை வழங்கியுள் ளனர் என விமல் தெரிவித்தார்.

பிலியந்தல, தம்பே பிரதேசத்தில் இடம்பெற்ற வரவேற்பு நிழ்வில் கலந்து கொண்டு இவ்வாறு தெரிவித்தார்.

இன்று நம் நாடு பொறுப்பற்ற தவறான பாதைவிட்டு வெளியேற்றப்பட்டு சரியான திசையில் நகர்கிறது.

விகிதாசார பிரதிநிதித்துவ முறையின் கீழ் கூட, எங் களுக்கு 2/3 பெரும்பான்மை கிடைத்தது, ஏனெனில் இந்த நாட்டின் மக்கள் ஸ்திரத்தன்மையை கோருகிறார்கள்.

கடந்த நான்கரை ஆண்டுகளில், இந்த நாட்டு மக்கள் குழப்பமான ஆட்சியை அனுபவித்திருக்கிறார்கள். ‘அந்த குழப்பத்தை ஏற்படுத்திய கூட்டம் வேண்டாம்! இது போன்ற குழப்பம் மீண்டும் வேண்டாம்! என தெரிவித்து பொதுமக்கள் 2/3 பெரும்பான்மையைக் கொடுத்தனர்.

அந்த 2/3 பெரும்பான்மையை பொதுமக்கள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கு வழங்கியது அவர்மீது கொண்ட நம்பிக்கை அடிப்படையில் வழங்கியுள்ளனர்.

அந்த நம்பிக்கையில் தான் ஒரு புதிய அரசியலமைப்பு அல்லது ‘அடிப்படை சட்டம்’ அறிமுகப்படுத்தும் என்று மக்கள் 2/3 அதிகாரத்தை வழங்கியுள்ளனர் இந்த சந்தர்பத்தை அரசு சரியாகப் பயன்படுத்துவதன் மூலம் நாட்டை ஒரே சட்டத்தின் கீழ் கொண்டுவர முடியும்.

புதிய அரசியலமைப்பு ஒவ்வொரு தேசியத்திற்கும் ஒவ் வொரு பிராந்தியத்திற்கும் தனித்தனி சட்டங்கள் இருப் பதை நிறுத்தி முழு நாட்டையும் ஒரே சட்டத்தின் கீழ் கொண்டுவர வேண்டும்.

இது அவசியமானது. 2/3 பெரும்பான்மை வழங்கிய பிண்ணயில் மக்களின் எதிர்பார்ப்பு உள்ளடக்கி இருக்கிறது.</p>
<p>அரசியலமைப்பின் 20 வது திருத்தத்தின் ஆரம்ப வரைவு அடுத்த அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்று நீதி அமைச்சர் அறிவித்துள்ளார்.

19 ஆவது திருத்தத்தால் பிரதமருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் ஏற்பட்ட குழப்பம் நமது அரசுக்கு பொருந்தாது. அந்த குழப்பம் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கும் பொருந்தாது அந்த சக்திகளால் ஒருவருக்கொருவர் மோதப் போவதில்லை.

எனவே இன்று 19 ஆவது திருத்தத்தை நீக்குவதற்கு பதி லாக, 2/3 பெரும்பான்மை செல்வாக்கின் கீழ் 1978 ஆம் ஆண்டு முதல் பழுதுபார்க்கப்பட்டு வரும் இந்த அரசி யலமைப்பை மாற்றுவதற்காக நாட்டை உறுதிப்படுத்தும் வகையில் புதிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டும் என் பதை நான் எதிர்பார்க்கிறேன் என அவர் தெரி வித்தார்.