செய்திமுரசு

தமிழனே தமிழனுக்கு எப்போதும் எதிரியும் துரோகியும்……!

ஆட்சியாளர்களும் ஜனாதிபதிகளும் மாறும்போது இலங்கை நாட்டின் சட்டங்களும் மாறுகின்றதா என்ற கேள்வி தமிழ்மக்கள் மத்தியில் எழுகின்றது. ஜனாதிபதி கோட்டபாய ஒரு நாடு ஒருசட்டம் என கூறுகின்றார் அப்படியானால் அவருக்கு முன் பதவியல் இருந்த ஜனாதிபதிகள் இரண்டு சட்டம் ஒருநாடு என்ற விதமாகவா செயல்பட்டனர் ஏனெனில் கடந்த காலங்களில் தியாகி திலீபனின் நினைவு இந்த நாட்டில் பல இடங்களில் சுதந்திரமாக இடம்பெற்றபோது ஏன் இவ்வருடம் நடத்தமுடியாமல் சட்டத்தால் தடுக்கப்படுகிறது என, மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசு கட்சியின் பட்டிருப்பு தொகுதித் தலைவருமான ...

Read More »

இன்று நாடாளுமன்றில் அனைத்துக் கட்சிகளும் குரல் கொடுக்க வேண்டும்!

“நினைவேந்தல் தடை உத்தரவுகளுக்கும் அரசுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும், நீதிமன்ற உத்தரவுகளில் ஜனாதிபதி தலையிடமாட்டார் எனவும் சாக்குப் போக்குக் கதைகள் கூறி ராஜபக்ஷ அரச தரப்பினர் நழுவமுடியாது. நினைவேந்தல் தடை யுத்தரவுகளை உடன் நீக்கவேண்டும்” என வலியுறுத்தினார் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை. சோ.சேனாதிராசா. “தியாகி திலீபனின் நினைவேந்தலுக்கு ராஜபக்ஷ அரசு விதித்துள்ள தடைக்கு எதிராகத் தமிழ்க் கட்சிகள் முன்னெடுத்துள்ள நகர்வுகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ள அனைத்துத் தரப்புக்களுக்கும் பெரும் நன்றிகளைக்கூறுகின்றோம். ராஜபக்ஷ அரசு விதித்துள்ள தடைக்கு எதிராக இன்று செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகவுள்ள ...

Read More »

திலீபன் நினைவேந்தல் நிகழ்வும் தமிழ்க் கட்சிகளின் ஒற்றுமையும்

“தமிழினத்தை ஒற்றுமைப்படுத்துவதற்கு எதிரிகளால்தான் முடியும்” என்ற கருத்து மீண்டும் உண்மையாகியிருக்கின்றது. திலீபனின் நினைவேந்தலுக்கு விதிக்கப்பட்ட தடை நவக்கிரகங்கள் போல, ஒவ்வொரு திசையில் முரண்பட்டுக்கொண்டிருந்த தமிழ்க் கட்சிகளை ஒற்றுமைப்படுத்தியிருக்கின்றது. குறைந்தபட்சம், திலீபன் நினைவேந்தலிலாவது தமிழ்க் கட்சிகள் ஒற்றுமைப்பட்டிருப்பது தமிழ் மக்களுக்கு கொஞ்சம் நம்பிக்கையைக் கொடுத்திருக்கின்றது. பலமான ஒரு அரசாங்கம் தென்னிலங்கையில் பதவியேற்றிருக்கின்றது. கடும் சிங்கள – பௌத்த தேசியவாதத்தை தமது கொள்கையாகக் கொண்டுள்ள அந்த அரசாங்கத்தின் செயற்பாடுகள் எவ்வாறானதாக இருக்கும் என்பது புரிந்துகொள்ள முடியாத ஒன்றல்ல. சிறுபான்மையின மக்கள் அனைவரும் தமது எதிர்காலம் குறித்து சிந்திக்க ...

Read More »

ஆஸ்திரேலியாவில் உள்ள அகதிகள் வேறு நாடுகளுக்கு மீள்குடியமர்த்தப்படவுள்ளனர்!

நவுருத்தீவில் செயல்பட்டு வந்த ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பில் சிறைவைக்கப்பட்டிருந்த 10 அகதிகள் அமெரிக்கா மற்றும் நார்வேவில் மீள்குடியமர்த்தப்பட இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதில் 9 அகதிகள் அமெரிக்காவிலும் 1 அகதி நார்வேயிலும் மீள்குடியமர்த்தப்பட இருக்கின்றனர். அதே சமயம், நவுருதீவில் மேலும் 160 அகதிகள் மற்றும் தஞ்சக்கோரிக்கையாளர்கள் வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சுமார் 8 ஆண்டுகள் அத்தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுடன் பப்பு நியூ கினியா தீவிலும் ஆஸ்திரேலியாவில் உள்ள தடுப்பிற்கான மாற்று இடங்களிலும் பல அகதிகள் மீள்குடியேற்றத்திற்காக காத்திருக்கின்றனர். அமெரிக்கா- ஆஸ்திரேலியா ...

Read More »

ஆஸ்திரேலியாவின் டாஸ்மானியா கடற்கரையில் செத்து ஒதுங்கிய 25 திமிங்கலம்- 270 போராட்டம்

ஆஸ்திரேலியாவின் டாஸ்மானியா கடற்கரையில் 25 பைலட் திமிங்கலங்கள் செத்து ஒதுங்கிய நிலையில், 270 உயிருக்கு போராடி கொண்டு இருக்கின்றன. ஆஸ்திரேலியாவில் உள்ள தீவு கடற்கரையான டாஸ்மானியாவில் 300-க்கும் மேற்பட்ட பைலட் திமிங்கலங்கள் திடீரென கரை ஒதுங்கின. தகவல் அறிந்த அரசு ஆராய்ச்சியாளர்கள். இந்த திமிங்கலங்களை கடலுக்குள் விட முயற்சி செய்து வருகின்றனர். அதில் 25 திமிங்கலங்கள் உயிரிழந்துவிட்டன. 270 உயிருக்கு போராடிக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு திமிங்கலமும் 7 மீட்டர் நீளம் கொண்டதாகவும், 3 டன் எடை கொண்டதாகவும் இருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். மேலும், டாஸ்மானியா ...

Read More »

கொரோனாவால் ஏற்படும் நிமோனியாவை கண்டறிய செயற்கை நுண்ணறிவு சாதனம்

கொரோனாவால் ஏற்படுகிற நிமோனியாவை கண்டறிய செயற்கை நுண்ணறிவு சாதனத்தை விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர். கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோயை கட்டுப்படுத்துவதற்காக உலகமே தடுப்பூசிக்காக காத்திருக்கிறது. ஏறத்தாழ 10 லட்சம் பேரின் உயிரைப்பறித்திருக்கிற கொரோனா வைரஸ் தொற்று நோயால் ஏற்படுகிற நிமோனியாவை கண்டறிவதற்கு செயற்கை நுண்ணறிவை பயன்படுத்த முடியும் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். இந்த வேலைக்கு இதுவரை பொதுவாக எக்ஸ்ரேதான் பயன்படுத்தப்படுகிறது. இந்த நிலையில், ஏ.ஐ. என்று சொல்லப்படுகிற செயற்கை நுண்ணறிவு முறைகளை பயன்படுத்த முடியும் என தெரியவந்துள்ளது. எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவு அதிக செயல்திறனை ...

Read More »

இரட்டைக் குடியுரிமை குறித்த பிரிவு தக்கவைக்கப்பட வேண்டும்

19ஆம் திருத்தத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இரட்டைக் குடியுரிமை குறித்த பிரிவு 20ஆம் அரசியலமைப்பு திருத்தத்திலும் தக்கவைக்கப்பட வேண்டுமென ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார இன்று தெரிவித்துள்ளார். 19ஆம் திருத்தத்தில் அநேக சாதகமான அம்சங்கள் இருந்ததால் அதை முற்றாக நிராகரிக்க முடியாது என அவர் தெரிவித்தார். “தகவல் உரிமைக்கு உத்தரவாதமளிக்கும் விதிகள், ஜனாதிபதிக்கான 5 ஆண்டு வரையறை, ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடக்கூடிய எண்ணிக்கையை இரண்டாக வரையறுத்தல், இரட்டைக் குடியுரிமை கொண்டோரை தேர்தலில் போட்டியிடாது தடுத்தல் போன்ற 19ஆம் திருத்தத்தில் காணப்பட்ட நல்ல பல ...

Read More »

கிளிநொச்சியில் புகையிரதத்தின் முன்பாய்ந்து மாணவன் தற்கொலை

கிளிநொச்சியில் இன்று இளைஞர் ஒருவர் புகையிரதத்தின் முன்பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். யோகேந்திரன் அஜந்தன் என்ற இளைஞனே தற்கொலை செய்துகொண்டுள்ளார். இவர் க.பொ. உயர்தரப்பரீட்சையில் வணிகத்துறையில் 3 ஏ பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்கொலைக்கான காரணங்கள்வெளியாகாத அதேவேளை காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Read More »

விழிப்புடன் செயற்படும் சிங்களத் தலைவர்களும் உறங்கியபடி கனவுகாணும் தமிழ்த் தலைவர்களும்

எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு இலங்கை அரசியலில் உள்நாட்டுரீதியாகவும் , அண்டை நாட்டு ரீதியாகவும், பிராந்திய ரீதியாகவும் உலகளாவிய அரசியல் ரீதியாகவும் பாரிய மாற்றங்கள் ஏற்பட உள்ளன. ராஜபக்ச சகோதரர்களின் அரசாங்கம் கடைப்பிடிக்க உள்ள உள்நாட்டு — வெளிநாட்டு கொள்கைகள், மற்றும் அவர்கள் மேற்கொள்ளவுள்ள நிலைப்பாடுகள் என்பன இலங்கை தொடர்பாக உள்நாட்டு, வெளிநாட்டு ரீதியில் பல்வேறு புதிய மாற்றங்களை ஏற்படுத்த வல்லவை. இப்பின்னணியில் இந்தியா, அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகள் இலங்கை தொடர்பாக இறுக்கமான நிலைப்பாடுகள் எடுப்பதற்கான வாய்ப்புகள் துல்லியமாக உள்ளன. இலங்கை — ...

Read More »

புதிய வைரஸ் தொற்று- ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படும்

சீனாவில் புதிய பாக்டீரியா தொற்று வேகமாக பரவி வருகிறது. ஏற்கனவே உருவான கொரோனா வைரசுக்கு மருந்து கண்டு பிடிக்கப்படாத நிலையில் தற்போது மற்றொரு வைரஸ் பரவி வருவது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வுகான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும்பாதிப்பை ஏற்படுத்தியது. தற்போது அந்த வைரஸ் சீனாவில் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. இதையடுத்து சீனா முழுவதும் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி உள்ளனர். இந்த நிலையில் சீனாவில் புதிய பாக்டீரியா தொற்று வேகமாக ...

Read More »