கிளிநொச்சியில் புகையிரதத்தின் முன்பாய்ந்து மாணவன் தற்கொலை

கிளிநொச்சியில் இன்று இளைஞர் ஒருவர் புகையிரதத்தின் முன்பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

யோகேந்திரன் அஜந்தன் என்ற இளைஞனே தற்கொலை செய்துகொண்டுள்ளார். இவர் க.பொ. உயர்தரப்பரீட்சையில் வணிகத்துறையில் 3 ஏ பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்கொலைக்கான காரணங்கள்வெளியாகாத அதேவேளை காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.