செய்திமுரசு

யாழில் 11வது நாளாகவும் தொடரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம்..

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டுமென வலியுறுத்தி யாழில் இடம்பெற்றுவரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் 11வது நாளாக இன்றும் தொடர்கின்றது. நீதி வேண்டிய இந்த போராட்டம் நல்லூர் – நல்லை ஆதீனம் முன்பாக யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. குறித்த போராட்டத்திற்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், அரசியல் பிரதிநிதிகள், சிவில் அமைப்பினர், மத தலைவர்கள் என பலரும் தனது ஆதரவினை தெரிவித்து வருகின்றனர். போராட்டத்தின் கோரிக்கைகளாவன, சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதினூடாக ...

Read More »

கத்தோலிக்க ஆயர்கள் மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானம்

நேற்று நடைபெற்ற இலங்கை கத்தோலிக்க ஆயர்களின் மாநாட்டில் ஏப்.21, 2019 உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் குறித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகளை விரைவில் செயற்படுத்த வேண்டும் என்றும் இது தொடர்பான பரிந்துரைகளை செயற்படுத்துவதில் யாருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன என்பதில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையிலான கத்தோலிக்க ஆயர்கள், ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையை ஆய்வு செய்ததாகவும் அதன் கண்டுபிடிப்புகள் மற்றும் பரிந்துரைகளை வரவேற்பதாகவும் கூறினர். குண்டுவெடிப்பில் ஈடுபட்டவர்கள், ...

Read More »

தீவிரவாத வேலைதிட்டம் தற்போது உச்சத்தை எட்டியுள்ளது – விக்டர் ஐவன்

சிங்கள-பௌத்த இனவாத சித்தாந்தத்தின் அரசியல் இயக்கமொன்றாகவும் மற்றும் அதன் சமூகரீதியில் ஏற்றுக்கொள்ளல் ஆகியவற்றின் சாத்தியக்கூறுகள் இப்போது ஒரு வரலாற்று முடிவை எட்டியுள்ளன என்பதை வெளிப்படுத்த ‘தீவிரவாத சகாப்தத்தின் முடிவு’ என்ற தலைப்பில் கடந்த வாரம் பினான்சியல்டைம்ஸி ல் வெளியான கட்டுரை. கணிசமானஅளவுக்கு பொது வான விதத்தில் தூண்டிவிட்டதாகத் தெரிகிறது. இந்த கட்டுரையில், சிங்கள பௌத்தம் என்ற பெயரில், ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக பல்வேறு வடிவங்களில் செழித்து வளர்ந்து வரும் இந்த தீவிரவாத இனவாதம் அதன் வலுவின் உச்சத்தை எட்டிய அதே சமயம் ஒரு வரலாற்று ...

Read More »

ஜனாதிபதி முதலில் மனித உரிமைகள் பற்றிய படிப்புக்காக பாலர் பாடசாலை செல்லவேண்டும்

நாட்டை கட்டியெழுப்பவேண்டுமென்றால் மனித உரிமைகள் குறித்து கற்பதற்காக ஜனாதிபதி பாலர் பாடசாலைக்கு செல்லவேண்டும் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று ஆற்றியஉரையில் இதனை தெரிவித்துள்ள அவர் மேலும் தெரிவித்தள்ளதாவது வெளிநாட்டு நாணயத்துடன் தொடர்புபட்ட சகல விதமான விடயங்களும் பல சந்தர்ப்பங்களில் கலந்துரையாடப்பட்டன. நாட்டின் பொருளாதாரம் பல்வேறு விடயங்களில் தங்கியிருப்பதை நாம் உணரக்கூடியதாக உள்ளது. இவ் விடயம் பற்றி கலந்துரையாடுவதற்கு முன்னர் இந்த விடயம் பற்றி மக்கள் மத்தியில் சில சந்தேகங்கள் காணப்படுகின்றன. அதைப் பற்றி நான் இங்கு கேட்க ...

Read More »

அவுஸ்திரேலிய பெருநகரங்களில் நடைபெறும் கவனயீர்ப்பு நிகழ்வுகள் பற்றிய அறிவித்தல்

அன்பான உறவுகளே,   தமிழீழ தாயக உறவுகளின் நீதிக்கான கோரிக்கைக்கு தீர்வுதேடும் பயணத்தில், ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை பேரவையில் மேற்கொள்ளப்படும் தீர்மானத்தில், தமிழர் இனவழிப்புக்கான நீதியை பெற்றுக்கொள்ள சிறிலங்கா அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு (ICC) பாரப்படுத்தவேண்டும் என்று அனைத்து தமிழ் மக்களும் எதிர்பார்க்கின்றனர்.   அத்தோடு தமிழர் இனவழிப்பு தொடர்பாக சர்வதேச நீதிக்கான பொறிமுறை (IIIM) ஒன்றை ஏற்படுத்துமாறும் அதன் மூலம் சாட்சிகளையும் ஆவணங்களையும் பதிவுசெய்வதற்கான வழிவகையை ஏற்படுத்துமாறு கோருவதுடன், ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை பேரவையின் விசேட தூதுவரை நியமித்து இலங்கைத்தீவில் தொடரும் ...

Read More »

தமிழ் கலாசாரத்தையும் வரலாற்றையும் திட்டமிட்டு அழிக்கும் உத்திகள் இடம்பெறுகின்றன

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 46வது கூட்டத்தொடர் இலங்கை நிலைமை குறித்து ஆராய்ந்து வரும் நிலையில் கொடூரமான உள்நாட்டுப் போர் முடிந்து 12 ஆண்டுகளுக்குப் பின்னும் இலங்கை எவ்வாறு மென்மேலும் ஓர்  இனநாயக நாடாக சென்றுகொண்டிருக்கின்றது என்பதையும், தமிழ் மக்களின் நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவதையும் சிங்களமயமாக்கப்படுவதையும் ஒரு புதிய அறிக்கை விபரிக்கின்றது. ஓக்லாண்ட் நிறுவனம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது ஓக்லாண்ட் நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளதாவது; ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 46வது கூட்டத்தொடர் இலங்கை நிலைமை குறித்து ஆராய்ந்து வரும் நிலையில் கொடூரமான ...

Read More »

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி 20 தொடரை 3-2 என கைப்பற்றியது நியூசிலாந்து

மார்டின் குப்திலின் அதிரடி ஆட்டத்தால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டி 20 போட்டியை 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து வென்றது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து அந்த அணிக்கு எதிராக 5 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடியது. இதில் இரு அணிகளும் தலா 2 ஆட்டங்களில் வென்று தொடர் சமனிலையில் இருந்தது. இந்நிலையில், ஆஸ்திரேலியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் நேற்று நடந்தது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ...

Read More »

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் உண்மையான மூளைசாலி யார்?

இலங்கை வாழ் கத்தோலிக்கர்கள், நேற்றைய ஞாயிறு தினத்தை, ‘கறுப்பு ஞாயிறு’ ஆக, அனுஷ்டித்தனர். அந்த அமைதிவழிப் போராட்டத்துக்கு, ஏனைய மதத் தலைவர்களும் ஆதரவளித்தனர். இன்னும் சில மதத் தலைவர்கள், தேவாலயங்களுக்குச் சென்று, எதிர்ப்புப் போராட்டத்திலும் இணைந்துகொண்டனர். உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை முழுமையாக நிராகரித்துள்ள பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின்  உண்மையான  மூளைசாலி யார் என்பதை வெளிப்படுத்துவதே எமது முயற்சியாகும் என்றார். ‘கறுப்பு ஞாயிறு’ எதிர்ப்புப் பேராட்டம், கொழும்பு, கொச்சிக்கடை புனித ...

Read More »

அகதிகள் அல்லது தஞ்சக்கோரிக்கையாளர்களின“ நிலை என்ன?

கடந்த மார்ச் 1ம் திகதி, தடுப்பிற்கான மாற்று இடமாக செயல்படும் ஆஸ்திரேலியாவின் கங்காரூ பாய்ண்ட் ஹோட்டலிலிருந்தும் பிரிஸ்பேர்ன் குடிவரவு இடைத்தங்கல் முகாமிலிருந்தும் 25 அகதிகள் அல்லது தஞ்சக்கோரிக்கையாளர்கள் விடுவிக்கப்பட்டிருக்கின்றனர். அந்த வகையில், கடந்த ஜனவரி 20ம் திகதி முதல் இதுவரை 115 அகதிகள் அல்லது தஞ்சக்கோரிக்கையாளர்கள் விடுவிக்கப்பட்டிருக்கின்றனர். இவர்கள் ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைய முயன்றதாக சுமார் 8 ஆண்டுகளாக கடல் கடந்த தடுப்பிலும் ஆஸ்திரேலியாவில் உள்ள தடுப்பு முகாம்களிலும் சிறைவைக்கப்பட்டிருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அகதிகள் பல ஆண்டுகள் கழித்து விடுவித்துள்ளமை குறித்த ...

Read More »

மகளிர் தினம்: பெண்களின் உரிமைக்கு குரல் கொடுப்போம்

வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடந்த பெண்கள் தற்போது வானில் பறந்து கொண்டிருக்கின்றனர் என்றால் அதற்கு அவர்கள் வித்திட்ட பல்வேறு போராட்டங்களுக்கும், தியாகங்களுக்கும் கிடைத்த வெற்றியே இந்த மகளிர் தினமாகும். மகளிர் தினமானது பெண்களுக்கான சமத்துவம், உரிமைகளை வலியுறுத்துவதற்காகவும் கொண்டாடப்படுகிறது. வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடந்த பெண்கள் தற்போது வானில் பறந்து கொண்டிருக்கின்றனர் என்றால் அதற்கு அவர்கள் வித்திட்ட பல்வேறு போராட்டங்களுக்கும், தியாகங்களுக்கும் கிடைத்த வெற்றியே இந்த மகளிர் தினமாகும். ஆணுக்கு சமமானவள் பெண் என்பதை நிரூபிக்கும் வகையில் பெண்கள் பல வெற்றிக்கனியை பறித்துக்கொண்டிருக்கிறார்கள். பெண் பிரதமர், பெண் ...

Read More »