செய்திமுரசு

மறைந்த ஆயர் தமிழர்கள் சுயநிர்ணய உரிமையோடு வாழ வேண்டுமென்ற அவா கொண்டவர்

முள்ளிவாய்க்காலில் தமிழர்களுக்கு எதிராக இலங்கை இராணுவத்தினரால் இழைக்கப்பட்ட அநீதிகளை சர்வதேச சமூகத்துக்குக் கொண்டு சென்றவர் இராயப்பு ஜோசப் ஆண்டகை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் அவர்கள் தெரிவித்துள்ளார். மன்னார் மறை மாவட்டத்தின் முன்னாள் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை இன்று இயற்கை எய்தியுள்ளமை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் தனது இரங்கல் உரையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இராயப்பு ஜோசப் ஆண்டகை தமிழர்களின் வரலாறு எனவும் அவரின் இழப்பானது ஒட்டுமொத்த தமிழினத்துக்கும் பேரிழப்பு எனவும் ...

Read More »

ஆஸ்திரேலிய தொடரில் அசத்திய இந்திய கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தருக்கு கார் பரிசு

இந்திய கிரிக்கெட் அணி கடந்த ஜனவரி மாதம் ஆஸ்திரேலிய மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி வரலாறு படைத்தது. இந்திய கிரிக்கெட் அணி கடந்த ஜனவரி மாதம் ஆஸ்திரேலிய மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி வரலாறு படைத்தது. இந்த தொடரில் மூத்த வீரர்கள் பலர் காயத்தால் விலகிய நிலையில் இளம் வீரர்கள் பிரமிப்பூட்டும் வகையில் விளையாடியதுடன், பிரிஸ்பேன் மைதானத்தில் ஆஸ்திரேலியாவின் வீறுநடைக்கும் முடிவு கட்டினர். இந்த டெஸ்ட் தொடரில் அறிமுகமாகி இந்தியாவின் வெற்றியில் முக்கிய ...

Read More »

தான்சானியா ஜனாதிபதியின் இறுதிச் சடங்கில் நெரிசலில் சிக்கி 45 பேர் பலி

2015ஆம் ஆண்டு முதல் தான்சானியாவின் ஜனாதிபதியாக பதவி வகித்து வந்த ஜான் மெகுபுலி கடந்த 17-ஆம் திகதி காலமானார். தான்சானியா நாட்டு மக்களின் ஆதரவைப் பெற்ற இவரது மரணம் அந்த நாட்டு மக்களை மிகவும் அதிர்ச்சிடைய வைத்தது. அவரது உடல் கடந்த வாரம் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக ஹிக்ரு மைதானத்தில் வைக்கப்பட்டிருந்தது. ஜான் மெகுபுலியின் உடலைக் காண்பதற்காகவும், இறுதி அஞ்சலி செலுத்தவும் லட்சக்கணக்கான மக்கள் குவிந்தனர்.பலர் அந்த மைதானத்தின் சுவர் ஏறிக் குதித்து அங்கு சென்றனர். அப்போது திடீரென சுவர் இடிந்து விழந்ததால் அங்கிருந்தவர்கள் ...

Read More »

எதிர்வரும் நாட்களில் நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு முன்னெடுப்பு

உயிர்த்த ஞாயிறு தினத்தை கருத்திற்கொண்டு எதிர்வரும் நாட்களில் நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு முன்னெடுக்க பாதுகாப்பு பிரிவு தீர்மானித்துள்ளது. கத்தோலிக்க தேவாலயங்கள் உள்ளிட்ட இடங்களில் அதிக கவனம் செலுத்தப்படும் என்று இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் நிலாந்த பிரேமரத்ன தெரிவித்தார். ஒவ்வொரு பகுதியிலும் பாதுகாப்பு நிலைமை குறித்து பகுப்பாய்வு செய் யுமாறு இராணுவத் தலைமையகத்தால் ஒவ்வொரு பகுதிகளுக்கும் பொறுப்பான அதிகாரிகளுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. அடையாளம் காணப்பட்ட விசேட பகுதிகளுக்கு அதிக பாதுகாப்பை வழங்க இராணுவத் தலைமையகத்திற்கு அறிவித்துள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Read More »

மனித உரிமை பேரவை தீர்மானத்தின் அடிப்படையில் ஐநா தடைகளை விதிக்கமுடியாது

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானம் குறித்து இலங்கை வடகொரியா எரித்திரியா போன்று செயற்படமுடியாது என முன்னாள் அமைச்சர் மங்களசமரவீர தெரிவித்துள்ளார். மனித உரிமை தொடர்பான அனைத்து பிரகடனங்களிலும் இலங்கை கைச்சாத்தி;ட்டு அதனை ஏற்றுக்கொண்டுள்ளதால் இலங்கைவடகொரியா எரித்திரியா போல செயற்பட முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.மனிதஉரிமை பேரவை தீர்மானம் தொடர்பில் அரசாங்கம் என்ன நடவடிக்கைஎடுக்கவேண்டும் என்ற கேள்வி;க்கு பதிலளித்துள்ள அவர் அரசாங்கம் இராஜதந்திரத்தின் மீது நம்பிக்கை வைக்கவேண்டும் மோதல்போக்கின் மீது நம்பிக்கை வைக்ககூடாது என ...

Read More »

ஒரு சொட்டு இரத்தத்தினை கொண்டு கொரோனா தொற்று பரிசோதனை

விரல் நுனியிலிருந்து எடுக்கப்படும் ஒரு சொட்டு இரத்தத்தினை கொண்டு கொரோனா தொற்று பரிசோதனை முறையை கண்டு பிடித் துள்ளனர். இலங்கையரான பேராசிரியர் நீலிகா மாலவிகே உள்ளிட்ட ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக நிபுணர் குழு இணைந்து கொரோனா தொற்றை இனங் காணும் இலகுவான இரத்த பரிசோதனை முறைமையைக் கண்டு பிடித் துள்ளனர். கொரோனா தொற்றினை அறிந்துகொள்ள மிகவிரைவாக, இலகுவான முறையில் மற்றும் குறைந்த செலவில் மேற்கொள்ள இங்கிலாந்து ஒக் ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள் புதிய பரிசோதனை முறையைக் கண்டுபிடித்துள்ளனர். அத்தோடு, இலங்கை பேராசிரியர் நீலிகா மாலவிகே இதற்குப் ...

Read More »

ஐ.நா. போர்க்குற்ற விசாரணையை ஆரம்பிக்கும் தருணத்தில் இலங்கையர்கள் இழந்த உறவினர்களிற்காக காத்திருக்கின்றனர்

இலங்கையின் வடபகுதியில் உள்ள மன்னாரின் பள்ளிமுனை கிராமத்திலிருந்து மனுவல் உதயச்சந்திரவின் மகன் Anton Seerado  காணாமல்போய் 13 வருடங்களாகின்றன. ஆனால் இன்றும் நான்கு பிள்ளைகளின் தாயான அவர் தனது மகனின் வருகைக்காக காத்திருக்கின்றார். இது இன்னமும் முடிவிற்கு வரவில்லை என அவர் அராப் செய்திக்கு தெரிவித்தார். இலங்கையின் 26 வருடகால யுத்தத்தில் இழைக்கப்பட்ட குற்றங்களை விசாரணை செய்வதற்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அலுவலகம் ஆணையைப் பெற்று ஒரு வார காலத்தின் பின்னர் அவர் இதனை தெரிவித்தார். அரசாங்கத்திற்கும் பிரிவினைவாத தமிழீழ விடுதலைபுலிகளிற்கும் ...

Read More »

தமிழ்நாட்டை டெல்லிக்கு அடகு வைத்து விட்டார்கள்

எட்டு வழிச்சாலை மட்டும் முதல்வர் பழனிசாமி போடுவார். அதில் தான் பணம் பார்க்க முடியும். தமிழகத்தில் அடிக்கல் நாயகன் எடப்பாடி பழனிசாமி. சென்னை மயிலாப்பூர் கபாலி தோட்டத்தில், தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து, திமுக கனிமொழி எம்.பி தேர்தல் பிரசாரம் செய்தார். தமிழகத்தில் விரைவில் தி.மு.க. ஆட்சி வரப்போகிறது. மு.க.ஸ்டாலின் முதல்வராக வரப்போகிறார். அ.தி.மு.க.ஆட்சியில், தமிழகம் முழுவதும் சாலை ஏதும் போடப்படவில்லை. எட்டு வழிச்சாலை மட்டும் முதல்வர் பழனிசாமி போடுவார். அதில் தான் பணம் பார்க்க முடியும். தமிழகத்தில் அடிக்கல் நாயகன் எடப்பாடி பழனிசாமி. அவர் ...

Read More »

உயிர்த்த ஞாயிறு விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் தனது பெயரை சேர்த்தமைக்கு அவுஸ்திரேலிய பேராசிரியர் கடும் எதிர்ப்பு

உயிர்த்தஞாயிறு தாக்குதல் விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் தனது பெயர் இடம்பெற்றுள்ளமைக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ள அவுஸ்திரேலிய பேராசிரியர் ஒருவர் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுக்கப்போவதாக தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவை சேர்ந்த பேராசிரியர் லுக்மன் தலிப்பே இதனை தெரிவித்துள்ளார். அவரின் சார்பில் பிரிட்டனை சேர்ந்த பரப்புரை அமைப்பொன்று அறிக்கையொன்றை இலங்கையின் நாளேடுகளிற்கு அனுப்பிவைத்துள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து இலங்கையில் சமீபத்தில் இடம்பெற்ற விவாதங்களின் போது எதிர்பாராத வகையில் எனது பெயருக்கு களங்கமேற்படுத்தப்பட்டுள்ளது என பேராசிரியர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். ...

Read More »

ஆஸ்திரேலியாவில் 2 முக்கிய மந்திரிகளின் பதவி பறிப்பு

அமைச்சரவை மறுசீரமைப்பின்போது பெண்களுக்கான தொடர்ச்சியான பதவி உயர்வுகளை பிரதமர் ஸ்காட் மாரிசன் அறிவித்தார். ஆஸ்திரேலிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள பாதுகாப்புத்துறை மந்திரி லிண்டா ரெனால்ட்ஸ், அட்டர்னி ஜெனரல் கிறிஸ்டியன் போர்ட்டர் ஆகியோர் மீதான கற்பழிப்பு குற்றச்சாட்டுகள், அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன. அவர்களுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. பல்லாயிரக்கணக்கான பெண்கள் வீதிக்கு வந்து போராடியதால் அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், குற்றச்சாட்டில் சிக்கிய 2 மந்திரிகளையும் அமைச்சரவையில் இருந்து நீக்கி பிரதமர் ஸ்காட் மாரிசன் உத்தரவிட்டுள்ளார். உள்துறை மந்திரி பீட்டர் ...

Read More »