செய்திமுரசு

அனுராதபுரம் சிறைச்சாலைக்கு முன்பாக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!

தமிழ் அரசியல்கைதிகளின் விடுதலையை கோரி அனுராதபுரம்  சிறைச்சாலைக்கு கால்நடை பவனியை மேற்கொண்ட மாணவர்கள் அனுராதபுரம் சிறைச்சாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை கோரி கடந்த ஒன்பதாம் திகதி கால்நடை பேரணியை ஆரம்பித்த யாழ்பல்கலைகழக மாணவர்கள் இன்று மதியம் அனுராதபுரம் சிறைச்சாலையை சென்றடைந்தனர். இவ்வாறு அனுராதபுரம் சிறைக்கு சென்ற மாணவர்களில் சிலருக்கு அங்குள்ள தமிழ் அரசியல் கைதிகளை பார்வையிடுவதற்கான அனுமதி வழங்கப்பட்டது அதேவேளை ஏனைய மாணவர்கள் சிறைச்சாலைக்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டுள்ளனர். அரசியல் கைதிகளின் விவகாரத்தில் நல்லிணக்க அரசாங்கத்தின் போக்கை கண்டித்து ...

Read More »

ஐ.நா. மனித உரிமை அவையின் உறுப்பினராக இந்தியா!

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை அவைக்கு நடைபெற்ற தேர்தலில் அதிக ஆதரவை பெற்ற இந்தியா, உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை அவைக்கு இந்தியா உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான தேர்தலில் இந்தியா அதிக வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளது. 193 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை அவைக்கென சில நாடுகளை தேர்வு செய்வதற்கு ரகசிய வாக்கெடுப்பு நடைபெற்றது. 97 வாக்குகளை பெறுவதன் மூலம் மனித உரிமை அவைக்கு உறுப்பினராக தேர்வாக முடியும். ...

Read More »

பத்திரிகையாளன் வாயை மூடவே முடியாது! – ‘நக்கீரன்’ கோபால்

ஒரு கட்டுரைக்காகத் திடீர் கைது, முன்னுதாரணம் அற்ற நிகழ்வாக இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 124 பிரயோகம், ஊடகங்களின் ஒட்டுமொத்த எதிர்க்குரல், நீதிமன்றத்தின் குறுக்கீடு, விடுவிப்பு என்று மீண்டும் பரபரப்பு எல்லைக்குள் வந்திருக்கிறார் ‘நக்கீரன்’ கோபால். ஆளுநர் சம்பந்தப்பட்ட ஒரு கட்டுரைக்காகக் கைதுசெய்யப்பட்ட விதம் அவரைப் புண்படுத்தியிருந்தாலும், அவரது துணிச்சலை அது துளியும் பாதிக்கவில்லை. ஊடகங்கள் இன்று எதிர்கொள்ளும் மோசமான சூழலை விரிவாகப் பேசினார். ஒருவேளை நீதிமன்றம் தங்களை விடுவிக்காமல் இருந்திருந்தால், ‘நக்கீரன்’ முடங்கியிருக்குமா? ஏனெனில், ‘நக்கீரன்’ ஊழியர்கள் 30-க்கும் மேற்பட்டோர் மீது எஃப்ஐஆர் ...

Read More »

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பங்குகொள்ளும் சமகால அரசியல் பொதுக்கூட்டம்!

அவுஸ்திரேலியாவிற்கு வருகை தந்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கெளரவ கஜேந்திரகுமார்  பொன்னம்பலம் அவர்களுடனான சமகால அரசியல் கலந்துரையாடல் எதிர்வரும் 14-10-2018 ஞாயிற்றுக்கிழமையன்று பிற்பகல் 4.30 மணியிலிருந்து மாலை 6.30மணிக்கு மெல்பேர்ண் மொவுண்வேவளி அல்வி மண்டபத்தில் நடைபெறவுள்ளது. எனவே இவ் அரசியல கருத்தரங்கிற்கு அனைத்து தமிழ்மக்களும் வருகைதந்து இதில் கலந்துகொள்வதோடு உங்களது சந்தேகங்களையும் கேள்விகளையும் திரு கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திடம் கேட்டு தெளிவடைந்து கொள்ளலாம்!  

Read More »

48 மணிநேரத்துக்கு இணையதள சேவை முடங்க வாய்ப்பு!

உலக அளவில் அடுத்த 48 மணிநேரத்துக்கு இணையதள சேவை முடங்கும் வாய்ப்பு இருப்பதால் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என ரஷ்யா அறிவுறுத்தியுள்ளது. தி இண்டர்நெட் கார்பரேஷன் ஆப் நேம்ஸ் அண்ட் நம்பர் என அழைக்கப்படும் சர்வதேச இணையதள சேவை அமைப்பு வழக்கமான பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் அடுத்த 48 மணிநேரத்துக்கு பல்வேறு இணையதள சர்வர்களும் தொடர்பு இழக்கூடும் என ரஷ்யா எச்சரித்துள்ளது. அதுபோலவே இணைப்பு கிடைக்காமல் தவிக்கும் சூழல் ஏற்படும். சமீபகாலமாக இணையதளங்களில் புகுந்து மர்ப நபர்கள் ...

Read More »

நைஜீரியாவில் பேரழிவை ஏற்படுத்திய பெருவெள்ளம்!

நைஜீரியாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கில் ஏராளமானோர் உயிரிழந்துள்ள நிலையில், ஐநா பொதுச்செயலாளர் கவலை தெரிவித்துள்ளார். நைஜீரியாவில் கடந்த ஆகஸ்ட் மாதம் கனமழை தொடங்கி பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன. ஆறுகளில் அபாய அளவைத் தாண்டி வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. பல்வேறு ஆறுகளின் கரைகளில் உடைப்பு ஏற்பட்டு ஊருக்குள் தண்ணீர் புகுந்தது. மழையினால் ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் ஆறுகளில் ஏற்பட்ட உடைப்பினால் சாலைகள், பாலங்கள் என உள்கட்டமைப்பு கடுமையாக சேதமடைந்துள்ளது. லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். ...

Read More »

குச்சவெளி சித்திவிநாயகர் ஆலய காணியை தொல் பொருள் திணைக்களம் அபகரிக்க எடுத்த முயற்சி நிறுத்தம்!

குச்சவெளி சித்திவிநாயகர் ஆலய காணியை தொல் பொருள் திணைக்களம் அபகரிக்க எடுத்த முயற்சி ஆலய நிர்வாக சபையினர் உரிய அதிகாரிகளிடம் முறையிட்டு தமது ஆவணங்களை சமர்பித்தன் அடிப்படையில் தீர்வு காணப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக ஆலயத்திற்கு சொந்தமான காணி மற்றும் அங்கு தொல் பொருள் திணைக்களத்துடன் தொடர்வுடையதாக கூறப்பட்ட கற்துாண் போன்றவற்றை நேரில் சென்று பார்வையிட்ட தொல்பொருள் திணைக்கள தலைமை அலுவலகத்தில் இருந்து வருகை தந்த அதிகாரிகள் மற்றும் குச்சவெளி பிரதேச செயலாளர் குச்சவெளி பொலிஸார் ஆகியோர் தமக்கு குச்சவெளியில் உள்ள இன்னுமொரு தொல் பொருள் ...

Read More »

இடைக்கால அரசாங்கத்திற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு!

இடைக்கால அரசாங்கத்தை அமைப்பது குறித்த யோசனை மாத்திரமே முன்வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இது குறித்து பேச்சுவார்த்தைகள் எவையும் இடம்பெறவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் நெருக்கடி நிலை ஏற்படுவதை தவிர்ப்பதற்காக நாங்கள் தலையிட விரும்புகின்றோம் மக்களை காப்பாற்ற விரும்புகின்றோம் என அவர் தெரிவித்துள்ளார். எனினும் இடைக்கால அரசாங்கம் குறித்து பேச்சுவார்த்தைகள் எவையும் இதுவரை இடம்பெறவில்லை என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இடைக்கால அரசாங்கம் குறித்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி இடைக்கால அரசாங்கமொன்று அமைவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே ...

Read More »

ஒரு நாள், ஒரு காடு, சில பறவைகள்! சுப்பிரமணியத்துடன் ஒரு பயணம்

D-750 நிக்கான் கேமரா, 500 ஜூம் லென்ஸ், கூடவே கேமரா ஸ்டேண்ட். தூக்க முடியாத பையை தூக்கிக் கொண்டு அதிகாலையிலேயே தன்னந்தனியாகவே கிளம்பி விடுகிறார். ‘உடன் வருகிறேன்!’ என்றபோது அவ்வளவு சுலபமாய் அவர் சம்மதிக்கவில்லை. சில குறிப்பிட்ட நாட்களில் ‘கூப்பிடுகிறேன்!’ என சொல்லி போக்குக் காட்டிவிட்டு தொடர்ந்து கல்தா கொடுத்துக் கொண்டிருந்தவர், ஒரு முறை மிகவும் வற்புறுத்திய பிறகு, ‘இல்லண்ணா, நான் எங்கே போனாலும் தனியா போறதுதான் வழக்கம். பறவை மட்டுமில்லண்ணா, சிறுத்தை, புலி, மர அணில், செந்நாய்னு ஏகப்பட்டது சுத்தற இடம். நம்மால ...

Read More »

அவுஸ்திரேலியாவில் 7 பெண்கள் கொலை!

8 நாட்களில் 7 பெண்கள் கொலைசெய்யப்பட்டுள்ள சம்பவம் அவுஸ்திரேலியாவில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒக்டோபர் 3ம் திகதி Nicole Cartwright என்ற 32 வயதுப் பெண் கொலைசெய்யப்பட்ட நிலையில் இவரது உடல் சிட்னி பூங்கா ஒன்றிலிருந்து மீட்கப்பட்டது. அதேபோன்று அன்றைய தினம் விக்டோரியாவில் 46 வயதான Gayle Potter என்ற 3 பிள்ளைகளின் தாய் தனது முன்னாள் கணவனால் காரால் மோதி கொல்லப்பட்டதாக தெரியவந்தது. அதேநேரம் Northern Territory இல் 29 வயதுப்பெண் ஒருவரும் குடும்ப வன்முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். ஒக்டோபர் 4ம் திகதி விக்டோரியாவின் ...

Read More »