செய்திமுரசு

வடக்கு நிலைமையும் சர்வதேசத்தின் பார்வையும்!

உள்நாட்டு அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ள விஜயகலா விவகாரம், இலகுவில் முடிவுக்கு வருவதாகத் தெரியவில்லை. பல்வேறு பரிமாணங்களில் பலதரப்பட்ட கேள்விகளை அது எழுப்பியிருந்தது. பலரையும் பலதரப்பட்ட அரசியல் நிலைப்பாடுகளை எடுப்பதற்கு நிர்ப்பந்திருக்கின்றது. இவைகள் அவருக்கு ஆதரவானது என்றும், அவருக்கு எதிரானது என்றும் இரண்டு வகையில் அமைந்திருக்கின்றன. அரசியல் கொள்கைகள், அரசியல் கட்சிகளின் எல்லைகள் என்பவற்றைக் கடந்து, பொதுமக்களின் நலன்கள் சார்ந்து இந்த நிலைமைகள் உருவாகியிருக்கின்றன என்பது முக்கியமானது. அதேவேளை, கட்சிக் கொள்கைகள் கட்சி அரசியல் நிலைப்பாடுகளுக்கு உட்பட்டு, விஜயகலாவுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் ...

Read More »

“குகையினுள் நிலைமை மோசமாக இருந்தாலும், புன்னகையுடன் எங்களுக்கு மிகவும் உதவிய சிறுவன்”!-கடற்படை

தாய்லாந்துக் குகையில் சிக்கியவர்களை மீட்ட வீரர்கள், பொதுமக்களின் பாராட்டு மழையில் நனைந்துவருகின்றனர். ஆனால், ‘குகையில் இருந்த சிறுவர்களில் ஒருவன், அனைவருக்குமே ஹீரோவாகத் திகழ்ந்துள்ளான்’ என்கின்றனர் மீட்புப்படை வீரர்கள். தாய்லாந்துக் குகைக்குள்  சென்ற 13 சிறுவர்கள் திடீரெனப் பெய்த மழை வெள்ளத்தில் சிக்கிக்கொண்டனர். இந்தச் சிறுவர்களை மீட்கும் பணியில் பல்வேறு சிரமங்களைத் தாண்டி சாதித்தனர் மீட்புப்படை வீரர்கள். 18 நாள்களாக நீடித்த கடும் போராட்டத்தின் பயனாக, அனைத்து சிறுவர்களையும் வெளியில் கொண்டுவந்துவிட்டனர். இந்தப் பணியின்போது, குகைக்குள் சிக்கிய ஒரு சிறுவன் மீட்பு படையினருக்கு மிகவும் உதவியதாக, தாய்லாந்து ...

Read More »

`தாய்லாந்து சிறுவர்களை மீட்க உதவிய இந்திய நிறுவனம்’!

தாய்லாந்து குகைக்குள் சிக்கிய சிறுவர்களை மீட்பதற்கு இந்திய நிறுவனம் உதவியுள்ளது தற்போது தெரியவந்துள்ளது. நீண்ட, நெடிய போராட்டங்களுக்குப் பிறகு தாய்லாந்து குகைகுக்குள் சிக்கியிருந்த 16 வயதுக்குட்பட்ட கால்பந்தாட்ட வீரர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இதனால் தாய்லாந்து மக்களைப்போல், ஒட்டுமொத்த உலகமும் நிம்மதியடைந்துள்ளது. மீட்கப்பட்ட சிறுவர்களுக்கும் பயிற்சியாளருக்கும் சிகிசிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அவர்களின் உடல்நிலை சீராக உள்ளதால் தாய்லாந்து அரசு நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளது. இதற்கிடையே, சிறுவர்கள் மீட்கப்பட்ட செய்திகள் தொடர்ச்சியாக வெளிவந்த வண்ணம் உள்ளன. பல்வேறு தொழில்நுட்ப உதவிகளுடன் சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இதில் குகைக்குள் இருந்த நீரை ...

Read More »

சிறிலங்காவில் போதைப்பொருள் விற்பனை செய்வோருக்கு எதிராக மரண தண்டனை!

போதைப்பொருள் விற்பனை செய்வோருக்கு எதிராக மரண தண்டனையை அமுல்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கிகாரமளித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், நேற்று (10) கூடிய அமைச்சரவைக் கூட்டத்திலேயே,  மேற்கண்ட தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.  நீதியமைச்சர் தலதா அத்துகோரளை சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்துக்கே அமைச்சரவை அங்கிகாரமளித்துள்ளது. மேற்படி அமைச்சரவைப் பத்திரம் தொடர்பில்,     மேற்படி அமைச்சரவைப் பத்திரம் தொடர்பில், புத்தசாசன அமைச்சில் நேற்று (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், புத்தசாச அமைச்சர் காமினி ஜயவிக்கிரம பெரேரா தெரிவித்ததாவது,  குறித்த அமைச்சரவை பத்திரத்துக்கமைய நாட்டில் மரண தண்டனையை நடைமுறைப்படுத்த அமைச்சர்கள் தமது பூரண ...

Read More »

இராணுவத் தளபதி மகேஷ் சேனாநாயக்கவின் பதவி நீடிப்பு!

இராணுவத் தளபதி லுதினல் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவின் பதவிக்காலம் மேலும் ஒரு வருடத்தால் நீடிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த பதவி நீடிப்பை வழங்கியுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.

Read More »

தாய்லாந்து குகைக்குள் சிறுவர்களுடன் தங்கிய ஆஸி. வைத்தியருக்கு நேர்ந்த சோகம்!

தாய்லாந்து குகைக்குள் சிக்கிய சிறுவர்களை மீட்கச் சென்ற நீச்சல் வீரர்களில் ஒருவரானத ஆஸ்திரேலிய வைத்தியரின் தந்தை நேற்று மரணமடைந்தார். தாய்லாந்தில் உள்ள தாம் லுங் குகைக்கு கடந்த மாதம் 23-ஆம் திகதி 12 கால்பந்து விளையாடும் சிறுவர்களும் அவர்களது பயிற்சியாளரும் சென்றனர். அப்போது பெய்த கனமழையால் கடும்வெள்ளம். இதனால் குகைக்குள், சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்தில் சிக்கிக் கொண்டனர். ஒன்பது நாட்களுக்குப் பின்னர், கடந்த 2-ம் திகதி அவர்கள் குகைக்குள் சிக்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இந்த செய்தி பரபரப்பானது. அவர்களை எப்படி மீட்பது ...

Read More »

15 நாட்களாக தாய்லாந்து குகைக்குள் சிறுவர்கள் உயிருடன் இருந்தது எப்படி?

தாய்லாந்தில் உள்ள லாம் துவாங் குகைக்குள் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக உணவின்றி சிக்கித் தவித்த 12 சிறுவர்கள் உயிருடன் மீண்டது குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. இந்த சிறுவர்களுடன் சென்ற துணைப் பயிற்சியாளர் முன்னாள் பவுத்தத் துறவி என்பதும், அவரின் பல்வேறு பயிற்சிகள் மூலம் சிறுவர்களை சோர்வடையாமல் பார்த்துக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளன. அது குறித்த விவரம் வருமாறு. தாய்லாந்து நாட்டின் சியாங்ராய் மாகாணத்தில் தாம் லுவாங் என்ற குகை உள்ளது. சுமார் 10கி.மீ நீளமுடைய இந்த குகை ஆசியாவிலேயே மிகப்பெரிய குகையாகும். தாய்லாந்து ...

Read More »

அவுஸ்திரேலியாவிற்கு ஐநா மீண்டும் கண்டனம்!

அவுஸ்திரேலியா அகதிகளை நடாத்தும் முறை குறித்து ஐநா மீண்டும் கண்டனம் வெளியிட்டுள்ளது. ஐ.நா வின் working group on arbitrary detention- தடுப்புக்காவல்களுக்கெதிரான செயற்பாட்டுக் குழு இந்தக் கண்டனத்தை தெரிவித்துள்ளது. அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரியவர்களில் பலர் 9 ஆண்டுகளைக் கடந்தும் தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டுள்ளனர். இது நியாயமற்ற செயல் என இக்குழு கண்டித்துள்ளது. தஞ்சக்கோரிக்கையாளர்கள் தடுப்பு முகாம்களில் வைத்திருக்கும் முறையில் கடந்த 2017 ஜுன் முதல் 5 அறிக்கைகளை இந்த அமைப்பு வெளியிட்டுள்ளது. காலவரையறையற்ற தடுப்புக் காவலில் உள்ளவர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என ...

Read More »

தாய்லாந்து சிறுவர்களை காப்பாற்ற தயாரிக்கப்பட்ட நீர்மூழ்கிக் கப்பல்!

“நாம் எந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறோம், எவ்வளவு செலவு செய்கிறோம் என்பது இங்கு முக்கியமில்லை அந்தக் சிறுவர்களை பத்திரமாக மீட்க வேண்டும், அவ்வளவுதான்” எனத் தெரிவித்தார் தேசிய மீட்புக்குழு இணை ஆணையரான அன்மர் மிஸ்ரா. தாய்லாந்தின் `தாம் லுவாங்’ குகைக்குள் தங்கள் நண்பர் ஒருவரின் பிறந்தநாளைக் கொண்டாட ஜுன் 23 திகதி உள்ளே சென்றனர் 16 வயதுக்குட்பட்ட 12 கால்பந்து வீரர்களும், அவர்களுடைய 25 வயதுப் பயிற்சியாளரும். பின்னர் திடீரென்று பெய்த கனமழையால் குகையின் பாதை முழுவதும் தண்ணீரால் நிரம்பிவிட அவர்களால் வெளியேற முடியாத சூழல் ஏற்பட்டது. ...

Read More »

தாய்லாந்து குகைக்குள் சிக்கிய அனைவரும் பத்திரமாக மீட்பு!

தாய்லாந்து குகைக்குள் சிக்கியிருந்த 12 சிறுவர்கள் மற்றும் பயிற்சியாளர் என அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்த மீட்பு பணியை கச்சிதமாக செய்து முடித்த கடற்படை வீரர்களை பலரும் பாராட்டி உள்ளனர். தாய்லாந்தின் சியாங் ராய் பகுதியில் உள்ள தாம் லுவாங் குகையை பார்வையிடச் சென்ற 12 சிறுவர்கள் மற்றும் அவர்களின் கால்பந்து பயிற்சியாளர் கடந்த மாதம் 23-ம் திகதி குகைக்குள் சிக்கிக்கொண்டனர். 9 நாட்களுக்குப் பிறகு அவர்கள் உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, மீட்பு பணி தொடங்கப்பட்டது. ஆனால் குகைக்குள் சிக்கிய சிறுவர்கள் மிகுந்த பசியுடன் ...

Read More »