செய்திமுரசு

கசோக்கி படுகொலையை பதிவு செய்த ஆடியோ டேப்பை கேட்க விரும்பவில்லை – டிரம்ப்

பத்திரிகையாளர் கசோக்கி படுகொலையை பதிவு செய்த ஆடியோ டேப்பை கேட்க விரும்பவில்லை என ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார். சவுதி அரேபியாவை சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி கடந்த மாதம் 2-ந் தேதி துருக்கியில் உள்ள சவுதி துணை தூதரகத்தில் படுகொலை செய்யப்பட்டார். இவர் அமெரிக்காவின் ‘வாஷிங்டன் போஸ்ட்’ பத்திரிகையில் பணியாற்றி வந்ததால், இந்த விவகாரத்தை அமெரிக்கா கடுமையாக எடுத்துக்கொண்டு விசாரித்து வருகிறது. கசோக்கி கொலை சம்பவம் அடங்கிய ஆடியோ டேப்பை துருக்கி அரசு கைப்பற்றியது. இதை பிரான்ஸ், இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு அளித்து ...

Read More »

பாரிய ஆபத்திலிருந்து தப்பியது மெல்பேர்ன்!

அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னில் பயங்கரவாத தாக்குதலை மேற்கொள்ள திட்டமிட்டனர் என்ற சந்தேகத்தின் பேரில் மூவரை கைதுசெய்துள்ள  காவல் துறை கைதுசெய்யப்பட்டுள்ளவர்கள் பொதுமக்கள் நிறைந்து காணப்படும் பகுதியில் துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட திட்டமிட்டிருந்தனர் எனவும் தெரிவித்துள்ளனர். மெல்பேர்னின்  வடபகுதியில் உள்ள புறநகர் பகுதியை சேர்ந்த இவர்களை கடந்த மார்ச் மாதம் முதல் கண்காணித்து வந்த நிலையிலேயே   காவல் துறையினர்  கைதுசெய்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட மூவரும் சகோதாராகள்( 30.26.21) என தெரிவித்துள்ள   காவல் துறை  இவர்கள் ஐஎஸ் அமைப்பினால் ஈர்க்கப்பட்டவர்கள் எனவும் குறிப்பிட்டுள்ளனர். 17000 தொலைபேசி அழைப்புகளையும் ...

Read More »

மக்களின் ஆதரவை அதிகம் பெற்ற அவுஸ்திரேலியப் பிரதமர்!

அவுஸ்திரேலியாவில் ஆளுங்கட்சிக்கு மக்கள் ஆதரவு அதிகரித்துள்ளதாக கருத்துக் கணிப்பின் அடிப்படையில் தெரியவந்துள்ளது. இக் கருத்துக் கணிப்பு முடிவுகளை Fairfax-Ipsos வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதன்படி எதிர்கட்சியான லேபர்கட்சி இருகட்சி விருப்பு அடிப்படையில் ஆளும் கூட்டணி அரசை விடவும் 52-48 என முன்னிலை வகிக்கிறது. இதேவேளை கடந்த மாத கருத்துக்கணிப்பில் 55-45 என லேபர் கட்சி முன்னிலை வகித்திருந்த நிலையில் இந்த முறை ஆளுங்கட்சிக்கான மக்கள் ஆதரவு 3 புள்ளிகளால் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதனடிப்படையில் Scott Morrison மக்களின் விருப்பத்திற்குரிய பிரதமராக உள்ளார். எதிர்கட்சித் தலைவர் Bill ...

Read More »

திரைமறைவில் என்ன நடக்கிறது?-கெஹெலிய ரம்புக்வெல்ல

நாடாளுமன்றத்தில் திரை மறைவில் என்ன நடக்கின்றது என்பது பற்றி மக்கள் விளங்கிக் கொள்ளவேண்டும், மேன்மைக்குறிய நாடாளுமன்ற சம்பிரதாயங்கனை துச்சமென மதித்து நடவடிக்கை எடுக்கும் போது அனைப் பார்த்துக்கொண்டு எங்களால் அமைதியாக இருக்க முடியாது என்று கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். கண்டி பூஜாபிட்டிய பிரதேசத்தில் நேற்ற இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், கடந்த சில தினங்களாக நாடாளுமன்றத்தில் ஏற்பட்டு வரும் சம்பவங்கள் தொடர்பாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். சிலர் ...

Read More »

ஈ.பி.டி.பி தவிர்ந்த அனைத்து கட்சிகளுக்கும் முன்னாள் முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் அழைப்பு!

ஈ.பி.டி.பி தவிர்ந்த அனைத்து கட்சிகளுக்கும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார். அத்துடன் பொதுச்சின்னத்தில், தமிழ் மக்கள் கூட்டணி தேர்தலை சந்திக்கும் என அவர் மேலும் கூறியுள்ளார். யாழ். பலாலியிலுள்ள தமிழ் மக்கள் பேரவையின் அலுவலகத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் நடைபெற்ற நிகழ்வின்போது, பேரவையின் இணைத்தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மீண்டும் மீண்டும் குரோதங்களையும் விரோதங்களையும் வளர்த்துக்கொண்டு முரண்பாடுகள் ஏற்பட இடமளிக்காமல் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கை அடிப்படையில் தேர்தல் அரசியலை எதிர்நோக்குவதற்கு முன்வருமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார். கொள்கை அடிப்படையில் ஒன்றுபட்டு ...

Read More »

மைத்திரியின் அளாப்பி அரசியலும் தமிழ்த் தரப்பும்!

அப்பா பொலன்னறுவை ரோயல் கல்லூரியில் கல்வி கற்றுக்கொண்டிருந்த போதுஒரு முறை வகுப்பத்தலைவராக நியமிக்கப்பட்டார்.உதவி வகுப்புத்தலைவராகநியமிக்கப்பட்ட மாணவர் சற்று வெட்க குணமும் பெண் சுபாவமும் கொண்டவராகஇருந்தார். அத்தோடு அவர் அவரது சில குறிப்பிட்ட நண்பர்களுடன் சேர்ந்துகொண்டு ஆங்கிலத்தில் கதைப்பவராகவும் இருந்தார்.இந்த நடவடிக்கைகள்அப்பாவை கோபத்திற்கு ஆளாக்கியது.உடனே வகுப்பாசிரியரிடம் சென்று உதவிமாணவத்தலைவரை பதவி நீக்கம் செய்யுமாறு அடம்பிடித்திருக்கிறார்.இதனால்இரண்டு நாட்கள் பாடசாலைக்கும் செல்லவில்லையாம்.அப்பாவின் முகம்சாதாரண நிலையிலும் கோபக்காரரைப்போலவே இருந்ததால்வகுப்புத்தலைவருக்கு அவரே பொருத்தம் என கருதிய வகுப்பாசிரியர் அப்பாவின்கோரிக்கையினை நிராகரிக்க முடியாத நிலையில் உதவி மாணவத்தலைவரைபதவி நீக்கினாராம்.இந்த செய்தியை கேள்விப்பட்ட பின்னரே ...

Read More »

பாகிஸ்தான் நமக்காக செய்தது என்ன?

சர்வதேச பயங்கரவாதியான ஒசாமா பின்லேடன் போன்றவர்களுக்கு அடைக்கலம் அளித்ததை தவிர அமெரிக்காவுக்காக பாகிஸ்தான் செய்தது என்ன? என அதிபர் டிரம்ப் கேள்வி எழுப்பியுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்தார். பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அளித்துவந்த நிதியுதவியை நிறுத்துமாறு உத்தரவிட்டது தொடர்பாக டிரம்ப்பிடம் செய்தியாளர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த டிரம்ப், ‘சர்வதேச பயங்கரவாதியான ஒசாமா பின்லேடன் போன்றவர்களுக்கு அடைக்கலம் அளித்ததை தவிர அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் ஒரு மண்ணும் செய்யவில்லை’ என ஆவேசமாக கூறினார். பாகிஸ்தானில் நிம்மதியாக, ...

Read More »

பொதுத்தேர்தலே ஒரேவழி என்கிறார் பசில் ராஜபக்ச!

பக்கச்சார்பான முறையில் நடந்துகொள்ளும் சபாநாயகர் காரணமாகவே பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானங்கள் இரண்டும் பிழையான நடைமுறையை பின்பற்றி முன்னெடுக்கப்பட்டுள்ளன என பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தை கலைத்து விட்டு பொதுத்தேர்தலை நடத்துவதே தற்போதைய சூழலில் இடம்பெறக்கூடிய சிறந்த விடயம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பேட்டியொன்றில் இதனை அவர் குறிப்பிட்டுள்ளார். பிரதமருக்கு எதிரான இரு நம்பிக்கையில்லா தீர்மானங்களும் தவறான முறையில் முன்னெடுக்கப்பட்டுள்ளன என குறிப்பிட்டுள்ள பசில் பக்கச்சார்பான முறையில் நடந்துகொள்ளும் சபாநாயகர் காரணமாகவே இந்த நிலையேற்றபட்டது எனவும் தெரிவித்துள்ளார்.. முதலாவது தீர்மானம் ஜனாதிபதிக்கு சவால் விடும் ...

Read More »

சபாநாயகரிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை!

சபாநாயகர் கருஜெயசூரியவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானமொன்றினை கொண்டுவரவுள்ளதாக ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். கடந்த இரண்டுவாரங்களாக இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வுகளின் போது சபாநாயகர் பக்கச்சார்பாக நடந்துகொண்டார் என்பதை அடிப்படையாக வைத்தே இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது நாங்கள் ஏனையவிடயங்கள் குறித்து ஆராய்ந்துவருகின்றோம் கூடிய விரைவில இது குறித்து தீர்மானிப்போம் என அவர் தெரிவித்துள்ளார். சபாநாயகர் நாடாளுமன்ற நடைமுறைகள் அனைத்தையும் புறக்கணித்துள்ளார் இதன் காரணமாக ஜனாதிபதி சபாநாயகரை நாடாளுமன்ற நடைமுறைகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளவேண்டிய நிலையேற்பட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார். திங்கட்கிழமை நடைபெறவுள்ள நாடாளுமன்ற ...

Read More »

வரைவு ஒப்பந்தத்தை நிறைவேற்ற தெரசா மே உறுதி!

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து விலக முடிவு எடுத்துள்ள இங்கிலாந்து, அது தொடர்பான நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கி உள்ளது. ஆளுங்கட்சி மந்திரிகளிடையே  இது தொடர்பாக தயாரிக்கப்பட்டுள்ள வரைவு அறிக்கைக்கு அங்கு அதிருப்தி நிலவுகிறது. அந்த அதிருப்தியில், ‘பிரிக்ஸிட்’ என அழைக்கப்படுகிற அந்த நடவடிக்கையை கவனித்து வந்த மந்திரி டொமினிக் ராப், அந்த துறைக்கான ராஜாங்க மந்திரி சூயல்லா உள்பட 4 மந்திரிகள் அடுத்தடுத்து நேற்று முன்தினம் பதவி விலகினர். இதனால் பிரதமர் தெரசா மேவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஆனாலும் அவர் இந்த வரைவு ஒப்பந்தத்தை நிறைவேற்ற ...

Read More »