செய்திமுரசு

கிளைமோர் பின்னணியிலேயே கர்ப்பிணி பெண்களின் விபரங்களை பயங்கரவாத தடுப்பு பிரிவு கோரியது!

கடந்த மாதம் 22 ஆம் திகதி ஒட்டுசுட்டான் பகுதியில் கிளைமோர் மற்றும் புலிகளின் சீரூடை, புலிக்கொடி கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பான சந்தேக நபர் ஒருவரை கைது செய்யவே மே மாதம் 25 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரையான காலத்தில் குழந்தை பெறும் நிலையில் இருந்த கர்ப்பவதிகளின் விபரங்களை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கோரியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேற்படி தகவல்களை கோரி பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கிளிநொச்சி மாவட்ட சுகாதார துறையினருக்கு அனுப்பிய கடித்தத்தில் பயங்கரவாத தடுப்பு பிரிவின் ஊடாக நடைபெற்று ...

Read More »

காதலுடனும் நாம் புதிதாய்ப் பிறக்கிறோம்!

சிலி எழுத்தாளர் இஸபெல் அயந்தேயின் வரிகள் இவை: “ஒருவேளை காதலைத் தேடுவதற்காகவே நாம் இந்த உலகத்தில் இருக்கிறோம். மீண்டும் மீண்டும் காதலைக் கண்டடையவும், தொலைக்கவும்… ஒவ்வொரு காதலுடனும் நாம் புதிதாய்ப் பிறக்கிறோம். ஒவ்வொரு காதல் முடிவுறும் பொழுதும், ஒரு புதிய காயத்தைப் பெறுகிறோம். நான் பெருமைக்குரிய தழும்புகளைப் பெற்றிருக்கிறேன்.” பல ட்விஸ்ட்டுகளோடு கால்பந்தாட்ட உலகக் கோப்பை பயணித்துக்கொண்டிருக்கிறது. அர்ஜெண்டினா, பிரேசில் முதலான நாடுகளைக் கடந்து ரசிகர்கள் விரும்பும் அணிகள் தோற்றுப்போக, யாருமே எதிர்பார்க்காத அணிகள் அடுத்த கட்டத்துக்கு முன்னேறி யிருக்கின்றன. ‘பெட்டிங் நடக்கிறது’, ‘கிளப் ...

Read More »

வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் எழுதிய கடிதத்தை புகழ்ந்த டிரம்ப்

வடகொரியா மற்றும் அமெரிக்கா இடையேயான உறவில் தற்போது எடுத்து வரும் முயற்சிகள் புதிய எதிர்காலத்தின் தொடக்கமாக இருக்கும் என நம்புவதாக வடகொரியா தலைவர் அதிபர் கிம் ஜாங்-உன் அமெரிக்க அதிபருக்கு எழுதிய கடிதத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் டிரம்ப். கிம் எழுதிய கடிதத்தை (ஜூலை ஆறு தேதியிட்டது) வெளியிட்டுள்ள டிரம்ப் ”மிகவும் அருமையான குறிப்பு இது ” எனத் தெரிவித்துள்ளார். ஆனால், சிங்கப்பூரில் கடந்த ஜூன் மாதம் நடந்த வரலாற்று உச்சிமாநாட்டில் இரு நாட்டுத்தலைவர்களும் விவாதித்தவற்றில் அடிப்படை விஷயமான, கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுத நீக்கம் ...

Read More »

புத்தரின் போதனைப்படி நியாயமானதாய் செய்தால் நிரந்தரத் தீர்வினை அடையலாம் – சம்பந்தன்

எழுபது ஆண்டுகள் கடந்தும் இன்னமும் தேசிய பிரச்சினை தீர்க்கப்படாமல் இருக்கின்றதுடன் இப் பிரச்சினைக்கு புத்தபெருமானின் போதனைகளின் பிரகாரம் நியாயமானதாய் சரியாக செய்வதன் மூலம் நிரந்தர தீர்வினை அடைந்து கொள்ளலாம் என எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த்தேசியக் கூட்டடைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். இலங்கை வந்துள்ள தாய்லாந்தது பிரதமர் இன்று கொழும்பில் எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தனை சந்தித்து கலந்துரையாடினார். இந்த கலந்துரையாடலின் போதே எதிரக்கட்சித் தலைவரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார். இருவருக்கும் இடையில் ...

Read More »

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியை திரும்ப அழைத்து வர முடியுமா?

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியை திரும்ப அழைத்து வர முடியுமா? என்று  இந்தியாவுடன் அடைந்த தோல்வி குறித்து இங்கிலாந்து முன்னாள் கப்டன் மைக்கேல் வாகன் கூறியுள்ளார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியுடன் நாங்கள் மீண்டும் நாங்கள் விளையாட முடியுமா என்ற தொனியில் மைக்கேல் வாகன் இந்தப் பதிவையிட்டிருக்கிறார். நாட்டிங்காமில் நடைபெற்ற இந்தியா – இங்கிலாந்து இடையே நடந்த முதல் ஒருநாள் போட்டியில் குல்தீப் யாதவின் 6 விக்கெட்டுகளில் 268 ரன்களுக்குச் சுருண்டது இங்கிலாந்து. அடுத்து களம் இறங்கிய இந்திய அணியில் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோட் ...

Read More »

கிளிநொச்சியில் குழந்தை பிரசவித்தவர்களின் தகவல்களை திரட்டும் பயங்கரவாத தடுப்பு பிரிவு!

கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த மே மாதம் 25ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரையிலான கால பகுதியில் குழந்தை பிரசவித்தவர்களின் தகவல்களை பயங்கரவாத தடுப்பு பிரிவு காவற்துறையினர் சேகரித்து வருகின்றனர். மருத்துவமனைகள் , வீடுகளில் குழந்தை பிரசவித்தவர்களின் தகவல்களை சேகரித்து வருகின்றனர். தகவல் சேகரிப்பதற்கான காரணம் தெரியப்படுத்தப்படவில்லை. அது தொடர்பில், வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் எஸ். திருவரங்கனிடம் கேட்ட போது, குறித்த விபரங்களை தருமாறு எமது அமைச்சிடம் கோரி இருந்தார்கள். அதனை வழங்க எமக்கு அனுமதியில்லை. அது தொடர்பில் மத்திய சுகாதார அமைச்சுக்கு ...

Read More »

அருங்காட்சியகமாக மாறப்போகும் தாய்லாந்து குகை!

சிறுவர்கள் சிக்கித்தவித்த தாம் லுவாங் குகை அருங்காட்சியகமாகவும், மீட்பு குழுவின் தைரியமான மீட்பு பணிகளை திரைப்படமாகவும் எடுக்க முயற்சிகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தாய்லாந்தின் சியாங் ராய் பகுதியில் உள்ள தாம் லுவாங் குகையை பார்வையிடச் சென்ற 12 சிறுவர்கள் மற்றும் அவர்களின் கால்பந்து பயிற்சியாளர் கடந்த மாதம் 23-ம் திகதி குகைக்குள் சிக்கிக்கொண்டனர். குகையில் 17 நாட்களாக சிக்கி தவித்த கால்பந்து பயிற்சியாளர் மற்றும் சிறுவர்கள் 12 பேர் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டு சியாங் ராய் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ...

Read More »

தந்தையிடமிருந்து தங்கையை காப்பாற்றும் முயற்சியில் உயிர்துறந்த அண்ணன்!

தந்தையிடமிருந்து தங்கையை காப்பாற்றுவதற்காக சகோதரன் தனது உயிரை பணயம் வைத்து இறந்த சம்பவம் அவுஸ்திரேலியாவில் இடம்பெற்றுள்ளது. கடந்த வாரம் ஜோன் எட்வேட்ஸ் என்ற நபர் தனது மகனையும் மகளையும் சுட்டுக்கொன்ற சம்பவம் சிட்னியில் இடம்பெற்றுள்ளது. அவுஸ்திரேலியாவை உலுக்கியுள்ள இந்த சம்பவம் குறித்து புதிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. 15 வயது ஜக் எட்வேட்ஸ் தனது தந்தையின் துப்பாக்கி பிரயோகத்திலிருந்து சகோதரியை காப்பற்றுவதற்காக உயிர்விட்டமை தற்போது தெரியவந்துள்ளது. தந்தை துப்பாக்கியுடன் தாயின் வீட்டிற்கு வந்த வேளை சிறுவன் தனது சகோதரியை காப்பாற்றுவதற்கு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளான். ...

Read More »

தனிகட்சி தொடங்கும் எண்ணமில்லை!- முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்

தனிக்கட்சி ஆரம்பிப்பது தொடர்பில் எந்த வித நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட  சிறிலங்காவிற்கான  கனடா தூதுவர் டேவிட் மைக்கனுடான சந்திப்பின்போதே முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். எனது கட்சி என்னை நியமிக்காவிடின் வீட்டிற்கு செல்வேன் அல்லது இன்னொரு கட்சியுடன் இணைவேன், இல்லாவிடில் ஒரு கட்சியை அமைக்க முடியும் என நான் தெரிவித்திருந்ததில் மூன்றாவது விடயத்தை மாத்திரம் ஊடகங்கள் பெரிதுபடுத்திவிட்டன என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். காணாமல்போனோர் தொடர்பான அலுவலகத்தின் தலைவர் சாலிய பீரிஸை மனச்சாட்சியுடன் செயற்பட அனுமதித்துள்ளனரா என்பது ...

Read More »

விஜயகலாவின் நாடாளுமன்ற உறுப்புரிமை பறிக்கப்பட வேண்டும்! – நவீன் திஸாநாயக்க

முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் நாடாளுமன்ற உறுப்புரிமை பதிவயை பறிக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை அலுவலகமான சிறிகொத்தாவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், விடுதலை புலிகளுக்கு ஆதரவாகவும் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் விடுதலை புலிகளின் இயக்கம் மீண்டும் தோற்றம் பெற வேண்டும் என அவர் தெரிவித்த கருத்துக்கு எதிராகவே மேற்கண்ட ...

Read More »