செய்திமுரசு

நியூசிலாந்து மசூதியில் தாக்குதல் நடத்தியது ஆஸ்திரேலிய பயங்கரவாதி!

நியூசிலாந்து மசூதியில் துப்பாக்கி சூடு நடத்தி பொதுமக்களை கொன்று குவித்தது ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வலதுசாரி பயங்கரவாதி என அந்நாட்டின் பிரதமர் தெரிவித்துள்ளார். நியூசிலாந்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள இரண்டு மசூதிகளில் இன்று தொழுகை நடைபெற்றபோது, மர்ம நபர்கள் திடீரென புகுந்து துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இதில், 49 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பலர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆடர்ன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். துப்பாக்கிச்சூடு தொடர்பாக 4 ...

Read More »

நியூசிலாந்து மசூதிகளில் துப்பாக்கி சூடு- 27 பேர் பலியானதாக தகவல்!

நியூசிலாந்தில் உள்ள மசூதிகளில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 27 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது. நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள மசூதியில் இன்று ஏராளமான மக்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு திடீரென துப்பாக்கியுடன் நுழைந்த ஆசாமி, தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்களை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டான். துப்பாக்கி சத்தம் கேட்டு அனைவரும் நாலாபுறமும் சிதறி ஓடினர். சிலர் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். சிலர் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் ரத்தக் காயங்களுடன் வெளியே ஓடி வந்தனர். தாக்குதல் பற்றி காவல்துறைக்கு தகவல் ...

Read More »

இலங்கை பிரஜைகளிற்கு பாதிப்பா? தகவல்களை பெற முயற்சி!

நியுசிலாந்தில்  இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் இலங்கை பிரஜகைள் எவருக்காவது பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை அறிவதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன அவுஸ்திரேலியாவிற்கான இலங்கையின் பிரதி தூதுவர் செனரத் திசநாயக்க இதனை தெரிவித்துள்ளார். இலங்கை பிரஜைகள் பாதிக்கப்பட்டுள்ளனரா என்பதை உறுதி செய்வதற்காக துப்பாக்கி பிரயோகம் குறித்த தகவல்கள் அனைத்தையும் ஆராய்ந்து வருகின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.

Read More »

ஆளுநரிடம் மகஜரை கையளித்திருப்பது பாரதூரமானது!

பெருபான்மை அரசால் நியமிக்கபடும் ஆளுநரிடம் மகஜர் ஒன்றை கையளித்திருப்பது பிழையானதுடன், பாரதூரமானது என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.   வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக 754 நாட்களாக  தொடர் போராட்டத்தில் ஈடுபடும் காணாமல் ஆக்கபட்ட உறவினர்கள்  நேற்றைய(14) தினம் நடத்திய ஊடாக சந்திப்பிலேயே மேற்படி தெரிவித்தனர். மேலும் கருத்து தெரிவிக்கையில், காணாமல் ஆக்கபட்ட உறவுகள் வடக்கு ஆளுனரிடம் மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர். பெருபான்மை அரசால் நியமிக்கப்படும் ஆளுநரிடம் மகஜரை கையளித்திருப்பது பிழையானதுடன், பாரதூரமானது. இங்கிருந்து பலர் ஜெனிவா சென்றுள்ள நிலையில் ஆளுநரிடம் ...

Read More »

முன்னாள் போராளி வாழ்வாதாரத்துக்கு போராடும் அவலம்!

புதிய ஊன்றுகோல் ஒன்றினை வாங்குவதற்கு வசதியற்றிருக்கும் ஜெகன், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளி. நந்திக் கடல் பகுதியில் நடந்த இறுதி யுத்தத்தில், இலங்கைப் படையினருக்கு எதிராக ஆயுதமேந்திப் போரிட்ட போது, தமது இடது காலினை அவர் இழந்தார். தன் 15ஆவது வயதில் விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து 7 ஆண்டுகள் ஆயுதம் ஏந்திப் போராடிய அந்த இளைஞன், இப்போது அன்றாட உணவுக்கான வருமானத்தைத் தேடிக் கொள்வதற்கே மிகவும் போராடுகிறார். இலங்கை அம்பாறை மாவட்டம் – விநாயகபுரத்தில் மனைவி மற்றும் இரண்டு வயது ...

Read More »

அவுஸ்திரேலியாவில் தேடப்படும் இலங்கை இளைஞன்!

இளைஞர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடியதாக கூறப்படும் இலங்கை பின்னணி கொண்ட இளைஞர் ஒருவரை காவல் துறையினர் தேடி வருகிறார்கள். மேற்கு அவுஸ்திரேலிய மாநிலத்தின் பேர்த் நகரில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பேர்த் மாநகரின் Langford பிரதேசத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை மதியம் ஒரு மணியளவில் இந்த இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் தாக்குதலுக்குள்ளான இளைஞர் வயிற்றுப்பகுதியில் படுகாயமடைந்துள்ளார். இந்த நிலையில் காயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாக்குதல் நடத்தியவர் தொடர்பாக காவல் துறையினர்  தகவல் வெளியிட்டுள்ளனர். அதற்கமைய, 28 வயதான ...

Read More »

நாடுகடந்த தமிழீழ அரசின் அவுஸ்திரேலிய நியுசிலாந்து பிரதிநிதிகளுக்கான தேர்தல் பற்றிய அறிவிப்பு!

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அவுஸ்திரேலிய பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் பற்றிய அறிவித்தலை அவுஸ்திரேலிய நியுசிலாந்து நாடுகளுக்கான நாடுகடந்த தமிழீழ அரசின் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதுபற்றிய விபரங்களை கீழுள்ள இணைப்புகளில் காணலாம். தேர்தல் ஊடக அறிக்கை ௦1 AUS Nomination Form TAMIL AUS Nomination Form ENGLISH   Key dates for the Election are: 10 March – Nominations Open 24 March – Nominations Close 25 March – Candidate list is announced 26 ...

Read More »

வாகன ஊர்தி இன்று கிளிநொச்சியை சென்றடைந்தது!

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு கால  அவகாசம்  வழங்க கூடாது,  சர்வதேச விசாரனை நடத்தப்படல் வேண்டும் என்பதை வலியுறுத்தி யாழ்  பல்கலைகழக சமூகம் ஏற்பாடு செய்துள்ள போராட்டத்தின் விழிப்புனர்வு ஊர்தி  இன்று(14) கிளிநொச்சியை சென்றடைந்தது   கடந்த செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்பட்ட குறித்த ஊர்தி பயணம் இன்று காலை யாழ் பல்கலைக்கழகத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டு கிளிநொச்சியை சென்றடைந்தது. இந்நிலையில் எதிர்வரும் 16ம் திகதி யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ள கால அவகாசம் வழங்க கூடாது என வலியுறுத்தும் போராட்டத்திற்கு ஆதரவாக குறித்த ஊர்தி பயணம் ஆரம்பிக்கப்பட்டது.

Read More »

மஹிந்தவுக்கு எச்சரிக்கை! ரணிலிடம் கோரிக்கை!

தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் அரசியல் தீர்வொன்றை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காகவே நாம் எதிரணியில் இருந்துகொண்டும் அரசாங்கத்தை ஆதரித்து வருகின்றோம். எனவே எமது ஒத்துழைப்புகளை விளங்கிக்கொண்டு அரசாங்கம் தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்தார். அத்துடன் எமது மக்களுக்கான அரசியல் தீர்வுக்கான முயற்சிகளை தடுக்க வேண்டாமென எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷவிடமும் கோரிக்கை விடுத்தார். பாராளுமன்றத்தில் இடம்பெற்ற பிரதமரின் தேசியக்கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம்,மற்றும் புனர்வாழ்வளிப்பு,வடமாகாண அபிவிருத்தி,தொழிற்பயிற்சி,மற்றும் ...

Read More »

மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க சீனா மீண்டும் முட்டுக்கட்டை!

மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க சீனா 4-வது முறையாக முட்டுக்கட்டை போட்டுள்ளது. இதனால் இந்தியா கடும் அதிருப்தி அடைந்துள்ளது. காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் துணை ராணுவப் படை வீரர்கள் 40 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, பாகிஸ்தானில் உள்ள மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்து அவர் சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும், ஆயுதங்கள் வாங்குவதற்கு தடை விதிக்க வேண்டும், அவர் இயங்குவதற்கு அனுமதித்து வரும் பாகிஸ்தானுக்கு நெருக்குதல் கொடுக்க வேண்டும் என்று இந்தியா முயற்சி மேற்கொண்டது. ஐ.நா. பாதுகாப்பு ...

Read More »