செய்திமுரசு

நியூயோர்க் டைம்ஸ் செய்திதொடர்பில் விசாரணை!

சைனா ஹாபர் நிறுவனத்தினால் 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது 7.6 டொலர் மில்லியன் செலவழித்தமை தொடர்பில் ஆங்கில பத்திரிகை ஒன்றில் பிரசுரமாகி இருந்த செய்தி தொடர்பாக குற்றப்புலனாய்வு திணைக்களம் மேற்கொண்டுவரும் விசாரணைக்கு அமைவாக இணையத்தள ஊடகவியலார்களின் தேசிய அமைப்பின் தலைவரிடம் இரண்டரை மணி நேரம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. 2015 ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கு சைனா ஹாபர் நிறுவனத்தால் 7.6 டொலர் மில்லியன் செலவழித்தமை தொடர்பாக நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை ஊடகவியலாளர் மரியா அபி ஹபியினால் கடந்த ஜூன் மாதம் 25 ஆம் ...

Read More »

குருந்தூர், வெடுக்குநாறி மலைகளுக்குச் சென்ற விமலின் கட்சி!

குமுளமுனை குருந்தூர் மலைக்கும் ,நெடுங்கேணி வெடுக்குநாறி மலைக்கும் விமல் வீரவன்சவின் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் , தொல்லியல் திணைக்கள உத்தியோகஸ்தர்களுடன் இன்று விஜயம் ஒன்றினை மேற்கொன்டுள்ளனர். தேசிய சுதந்திர முன்னணியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான பத்ம உதயசாந்த, மற்றும் ஜயந்த சமரவீர, தேசிய சுதந்திர முன்னணியின் ஊடக பேச்சாளருமான மொஹம்மத் முஸம்மில் ஆகியோர் தொல்பொருள் திணைக்களத்தினை சேர்ந்த அதிகாரிகளுடன் இணைந்து குருந்தூர் மலைக்கும் வெடுக்குநாறி மலைக்கும் சென்றனர். இவர்களின் திடீர் விஜயத்தால் குறித்த பகுதிகளில் உள்ள தமிழ் மக்கள் குழப்பமடைந்து இவர்களின் நோக்கத்தை ...

Read More »

2018ம் ஆண்டு வேதியியல் நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு!

018-ம் ஆண்டு வேதியியல் துறைக்கான நோபல் பரிசு பெண் விஞ்ஞானி பிரான்சஸ் அர்னால்ட் உட்பட 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இயற்பியல், மருத்துவம், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது. அவ்வகையில், 2018-ம் ஆண்டுக்கான வேதியியல் துறைக்கான நோபல் பரிசு ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமில் இன்று அறிவிக்கப்பட்டது. வேதியியல் துறை வல்லுநர்களான அமெரிக்காவைச் சேர்ந்த ஜார்ஜ் ஸ்மித், பிரான்சஸ் அர்னால்டு, பிரிட்டனின் கிரிகோரி விண்ட்டர் ஆகிய மூன்று பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மனிதகுலத்துக்கு உதவும் வகையில் ...

Read More »

மனித புதைகுழியில் ஆடைகளுடன் தொடர்புடைய எந்தவொரு தடயப்பொருளும் கிடைக்கவில்லை!

மன்னார் ‘சதொச’ வளாகத்தில் தொடர்ச்சியாக மேற்கொள்ளபட்டு வந்த மனித எலும்புக்கூடுகள் அகழ்வு பணிகள் இன்று புதன் கிழமை 79 ஆவது தடவையாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்ட நீதவான் ரி.சரவண ராஜா மேற்பார்வையில் சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தலைமையில் அகழ்வு பணிகள் இடம்பெற்று வருகின்றது. பல்வேறு கேள்விகள் சந்தோகங்களை ஏற்படுத்தக் கூடிய வகையில் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு வருகின்ற நிலையில் இன்று புதன்கிழமை அகழ்வு பணிக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி ஊடகவியலாளர்களை சந்தித்து உரையாடல் ஒன்றை மேற்கொண்டார் குறித்த உரையாடலின் போது, இதுவரை ...

Read More »

கொலை வழக்குப் பதிய கோரிக்கை!

அவுஸ்திரேலியாவில் சாலை விபத்தில் சிக்கி கர்ப்பிணி பெண் கொல்லப்பட்ட வழக்கில், விபத்துக்கு காரணமான சாரதி மீது கொலை வழக்கு பதிய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளியன்று சிட்னி நகரில் நடந்த சாலை விபத்தில் புதுமண தம்பதிகளான் Katherine Hoang மற்றும் அவரது உறவினர் 17 வயது Belinda Hoang ஆகியோர் கொல்லப்பட்டனர்.</p><p>கேத்ரீனின் கணவர் 27 வயதான Bronco Hoang இந்த விபத்தில் படுகாயமடைந்து கோமா நிலையில் மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மட்டுமின்றி விபத்தை ஏற்படுத்திய 29 வயது இளைஞர் ரிச்சார்ட் மொனானு ...

Read More »

யாழ். திரைப்பட விழா விட்ட பெருந்தவறு!

யாழ். சர்வதேசத் திரைப்பட விழா இன்று புதன்கிழமை ஆரம்பிக்கின்றது. நான்காவது ஆண்டாக நடைபெறும், குறித்த திரைப்பட விழாவில் கவனம்பெற்ற உள்நாட்டு – வெளிநாட்டு படங்கள் திரையிடப்படுகின்றன. உள்ளூர் கலைஞர்களின் குறும்படங்களுக்கான வாய்ப்பும் வழங்கப்படுகின்றது. ஆனால், இம்முறை திரைப்பட விழா ஆரம்பிப்பதற்கு முன்னரேயே, திரைப்பட விழாக்குழு கருத்துச் சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் செயற்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கின்றது. அந்தக் குற்றச்சாட்டை முன்வைத்திருப்பது, சர்ச்சைக்குரிய ‘Demons in Paradise’ என்கிற படத்தின் இயக்குநரான ஜூட் ரட்ணம். இம்முறை திரைப்பட விழாவில், மூன்றாவது நாளான வெள்ளிக்கிழமை (ஒக்டோபர் 5, ...

Read More »

அமெரிக்க வெளியுறவு துறை செயலாளர் வடகொரிய தலைவரை சந்திக்கிறார்!

அமெரிக்க வெளியுறவு துறை செயலாளர் மைக் பாம்பியோ, வரும் ஞாயிறு அன்று வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். உலக நாடுகளின் எதிர்ப்புகளையும் மீறி வடகொரியா பலமுறை அணு குண்டுகளையும், கண்டம்விட்டு கண்டம் பாயும் பல ஏவுகணைகளையும் பரிசோதித்ததால் அமெரிக்காவின் கோபத்திற்கு ஆளாகி பொருளாதார தடைகளை சந்தித்தது. இதையடுத்து, தென்கொரியா எடுத்த முயற்சியின் பலனாகவே அமெரிக்க அதிபர் டிரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் கடந்த ஜூன் மாதம் சிங்கப்பூரில் சந்தித்துப் பேசினர். அப்போது கொரிய தீபகற்பத்தை அணு ...

Read More »

எமது சமூகம் இனிமேல் தன்னும் விழித்துக் கொள்ளுமா?

உங்களுக்குப் பாதுகாப்பு வழங்கியிருக்க வேண்டிய சமூகத்தில் நானும் ஒருவர் என்ற அடிப்படையில் முதலில் எனது மன்னிப்புக்கள்! எனக்கு உங்களைத் தெரியாது. உங்கள் மரணம் தற்போது அறிமுகம் தந்துள்ளது. உங்கள் தோழர்களும், குடும்பமும், உங்களில் மதிப்பும், மரியாதையும் வைத்திருப்பவர்களும் உங்கள் இழப்பினால் கவலை மட்டும் அன்றி ஆத்திரமும் கொண்டுள்ளார்கள்.நான் எழுதும் இக்கடிதமும் ஆத்திரம் கலந்த ஆதங்கத்தின் ஒரு வெளிப்பாடே! உங்களை அறிந்தவர்கள், குறிப்பாக உங்களது தாயார், நீங்கள் தற்கொலை செய்யும் ஒரு பெண்ணல்ல எனத் தெளிவாகக் கூறுகிறார்கள். அதுவே போதும் இது தற்கொலையா அல்லது கொலையா ...

Read More »

இந்தோனேசியாவை தாக்கியது கருவிகளால் கண்டுபிடிக்க முடியாத அதிசய சுனாமி!

இந்தோனேசியாவை தாக்கிய சுனாமி ஏற்பட்டதை ஏன் கருவிகளால் கண்டுபிடிக்க முடியவில்லை என்பது விஞ்ஞானிகளை மிகவும் குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளது. இந்தோனேசியாவில் கடந்த 28-ந்திகதி ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் சுனாமி உருவாகி அங்குள்ள பேலு நகரையும் அதை சுற்றி உள்ள பகுதிகளையும் தாக்கியது. இதில் 800 பேர் வரை பலியாகி உள்ளனர். மேலும் பலர் உயிர் இழந்திருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. கடலில் சுனாமி ஏற்பட்டால் அதை முன்கூட்டியே கண்டுபிடிப்பதற்காக பல நாடுகள் சேர்ந்து கடலில் பல்வேறு கருவிகளை பொருத்தி உள்ளன. ஆனால் இந்தோனேசியாவில் நிலநடுக்கம் ஏற்பட்ட ...

Read More »

மாவீரர் நாள் அனுட்டிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது!- லெப்டினன் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க

யுத்தத்தில் உயிர்நீத்த தமிழ் மக்களை நினைவுகூருவதில் பிரச்சினை இல்லையென இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். ஆனால் தமிழீழ விடுதலைப்புலிகளின் மறைவுகளை நினைவுகூர்ந்து நினைவஞ்சலி நிகழ்வுகளை நடத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாதென அவர் மேலும் தெரிவித்துள்ளார். அநுராதபுரத்தில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில், “வடக்கில் யுத்தம் நிறைவடைந்து மக்கள் சுமூகமாக வாழ ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் யுத்தத்தில் உயிரிழந்த தமது உறவுகளை நினைவுகூரவேண்டியது அவசியமான ஒன்றாகும். ஆனால் நாட்டில் பெரும் அச்சுறுத்தலாக இருந்த தமிழீழ ...

Read More »