செய்திமுரசு

கூட்­ட­மைப்­பின் தலை­மைக்குப் பொருத்­த­மா­ன­வர் யார்?

கூட்­ட­மைப்­பின் அடுத்த தலைமை தொடர்­பாக இப்­போதே கேள்­வி­கள் எழ ஆரம்­பித்து விட்­டன. சம்­பந்­தன் மூப்­பின் இறு­திக் கட்­டத்தை எட்­டி­விட்­ட­தால் இந்­தக் கேள்­வி­கள் எழு­வது இயல்­பா­னது. இந்­தி­யா­வின் தமிழ்­நாட்­டில் மு.கரு­ணா­நி­தி­யும் மூப்­பின் எல்­லை­யில் நின்­ற­போது தி.மு.கவுக்கு அடுத்த தலை­வ­ரைத் தேர்ந்­தெ­டுக்க வேண்­டிய தேவை ஏற்­பட்­டது. ஆனால் வாரிசு அர­சி­ய­லில் ஊறிப்­போன இந்­தி­யா­வில் வழக்­கம்­போல கரு­ணா­நி­தி­யின் மகன்­க­ளில் ஒரு­வ­ரான மு.க. ஸ்டாலி­னின் பெயர் நீண்ட கால­மா­கவே அந்­தப் பத­விக்கு அடி­பட்டு வந்­தது. இதற்கு ஏற்­றாற்­போன்று தி.மு.கவின் செயல் தலை­வ­ராக அவர் அந்­தக் கட்­சி­யின் தலை­வ­ரான அவ­ரது தந்­தை­யா­ரான ...

Read More »

வட மாகாண ஆளுநரை சந்தித்த இந்திய கல்வித்தூதுக்குழுவினர்

யாழ்ப்பாணத்தில் கடந்த 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் இடம்பெற்ற கல்விக்கண்காட்சியில் கலந்துகொண்ட இந்தியாவின் முன்னணி பல்கலைக்கழகங்களின் பிரதிநிகளின் தூதுக்குழுவினர் இன்று (13) முற்பகல் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை ஆளுநர் செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.   போரினால் பாதிக்கப்பட்ட வட மாகாண மாணவர்கள் கல்வியில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளதன் காரணமாக கல்வியை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு துணைபுரியுமாறு இந்திய தூதுக்குழுவிடம் ஆளுநர் கேட்டுக்கொண்டார். இந்தியா மற்றும் இலங்கைக்கிடையில் மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக பீடங்களுக்கிடையில் மாணவர் பரிமாற்ற நிகழ்ச்சித் திட்டங்களை மேற்கொள்வதனூடாக வட மாகாண ...

Read More »

வடக்கு மக்கள் வாகன வரிப் பத்­தி­ரங்­க­ளைப் பெற்­றுக் கொள்­ள புதிய வசதி !

வாகன வரிப் பத்­தி­ரங்­க­ளைப் பெற்­றுக் கொள்­ளக் கூடிய தன்­னி­யக்க இயந்­தி­ரங்­கள் வடக்கு மாகாணத்­தில் 3 இடங்­க­ளில் பொருத்­தப்­ப­ட­வுள்­ளதென மாகாண மோட்­டார் போக்­கு­வ­ரத்­துத் திணைக்­க­ளம் தெரி­வித்­துள்­ளது.   வாகன வரிப் பத்­தி­ரங்­களை பிர­தேச செய­ல­கங்­க­ளில் பெற்­றுக் கொள்ள முடி­யும். ஆனால் அதைப் பெற்­றுக் கொள்­வ­தற்­காக அதிக நேரத்­தைச் செல­விட வேண்­டி­யுள்­ளது. அதை இல­கு­ப­டுத்­தும் வகையில் தன்­னி­யக்க இயந்­தி­ரம் மூலம் வாகன வரிப் பத்­தி­ரங்­களை வழங்­கத் திட்­ட­மி­டப்­பட்­டுள்ளது. யாழ்ப்­பா­ணம் கைத­டி­யில் உள்ள பிரதி முதன்­மைச் செய­லர் அலு­வ­ல­கத்­தில் பரீட்­சார்த்­த­மாக ஏசி­யன் பவுண்­டே­ச­னின் தொழில் நுட்ப உத­வி­யு­டன் இந்த ...

Read More »

மீண்டும் திறக்கப்படும் கிறிஸ்துமஸ் தீவு தடுப்புக்காவல் நிலையம்!

கிறிஸ்துமஸ் தீவில் அமைந்துள்ள சர்ச்சைக்குரிய தடுப்புக்காவல் நிலையம் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் தீவில் அமைந்துள்ள தடுப்புக்காவல் நிலையத்தை மீண்டும் திறக்கவிருப்பதாக அவுஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மோரிசன் அறிவித்துள்ளார். சில மாதங்களுக்கு முன்னர் அந்தத் தடுப்புக்காவல் நிலையம் மூடப்பட்டது. அதிகமான குடியேறிகள் கிறிஸ்துமஸ் தீவிற்கு வரும் சாத்தியம் உள்ளதால், அதனைக் கையாள தடுப்புக்காவல் நிலைய வசதிகளை மீண்டும் திறக்கத் தாம் ஒப்புதல் அளித்ததாக திரு.மோரிசன் தெரிவித்தார்.

Read More »

டிரம்பை எதிர்த்து போட்டியிட வாய்ப்பு தேடும் 5 பெண்கள்!

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப்பை தோற்கடிக்க ஜனநாயக கட்சி சார்பில் வேட்பாளராக களம் இறங்க 5 பெண்கள் வாய்ப்பு தேடுகிறார்கள். அமெரிக்காவில் அடுத்த ஆண்டு (2020) நவம்பர் 3-ந் தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் மீண்டும் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி டிரம்ப் போட்டியிட்டால் அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் யார் என்பது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அதே சமயம் கடந்த காலங்களில் இல்லாத அளவுக்கு ...

Read More »

ஆண்டுகளோ பத்து; வார்த்தைகளோ பொய்த்து!

“முப்பது ஆண்டுகாலப் போர் முடிந்து, பத்து ஆண்டுகள் கழிந்தும் தீர்வு வராதது வருத்தம்; இலங்கை மீது சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்துள்ளன; அபிவிருத்தி அடைவதில் தோல்வி கண்டுள்ளோம்; செந்தணலின் மீதுள்ள சாம்பல் மீது நல்லிணக்கம் நிற்கின்றது; ஊழலை ஒழிக்க முடியாது உள்ளது; போதைப் பொருள் வணிகத்தை அழிக்க முடியாது உள்ளது” இவ்வாறாக, இலங்கையின் 71ஆவது சுதந்திரதின பிரதான நிகழ்வு காலிமுகத்திடலில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்ட போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வரிசையாகத் தெரிவித்த உண்மையும் ஏமாற்றமும் கலந்த உரை இதுவாகும். முப்பது ஆண்டு கால யுத்தம் ...

Read More »

கோத்தாவை எச்சரித்த நீதிமன்றம்!

உரிய நேரத்தில் நீதிமன்றத்துக்கு சமூகமளிக்காத காரணத்தினால் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தது.   இலங்கை காணி மீட்பு மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான 33.9 மில்லியன் ரூபா பணத்தை நம்பிக்கை மோசடி செய்தமை தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 7  பிரதிவாதிகளுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, முதல் பிரதிவாதியான கோத்தா மறில் ஆஜராகவில்லை. அத்துடன் 6 ஆம் பிரதிவாதியும் மன்றில் இருக்கவில்லை. இந் நிலையில் பெயர் வாசிக்கப்பட்டபோது 2,3,4,5,7 ஆம் ...

Read More »

பாகிஸ்தானுக்கு உதவ தயார் – சர்வதேச நிதியம் தகவல்!

பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் பாகிஸ்தானுக்கு உதவ தயாராக இருப்பதாக சர்வதேச நிதியம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. சர்வதேச நிதியத்திடம் (ஐ.எம்.எப்.) பெற்ற கடனை திருப்பிச் செலுத்த வேண்டிய நெருக்கடியில் அந்நாடு உள்ளது. அந்நாட்டின் அன்னியச்செலாவணியின் கையிருப்பு வெறும் 8.12 பில்லியன் டாலர் (சுமார் ரூ.57 ஆயிரத்து 650 கோடி) மட்டுமே உள்ளது. இது ஐ.எம்.எப். மற்றும் உலக வங்கி நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச அன்னியச்செலாவணி கையிருப்பை விட குறைவான தொகை ஆகும். அது மட்டுமின்றி இந்த தொகை, 7 ...

Read More »

ஆஸி. வதிவிட உரிமைபெற்ற வெளிநாட்டவர்கள் தாய்நாடு சென்றபோது கைது?

அவுஸ்திரேலியாவில் வதிவிட உரிமை பெற்றுக்கொண்ட 17 சீனர்கள் தங்களது சொந்த ஊருக்கு சென்றபோது கைது செய்யப்பட்டுள்ளார். அவ்வாறு கைது செய்யப்பட்டவர், சீன இரகசியப்படையினரால் கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்கள் என கூறப்படுகின்றது. தங்களது உறவினர்களை காண்பதற்காக சொந்த ஊருக்கு சென்றபோது இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் இவ்வாறு இரகசிய இடங்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களில் பலரது மனைவிமார் மற்றும் குழந்தைகள் அவுஸ்திரேலிய குடியுரிமையுடைவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இவர்களில் நால்வர் வீட்டுக்காவலிலும் ஏனையோர் தடுப்புமுகாம்களில் வைக்கப்பட்டுள்ளார்கள் என்றும் தெரியவருகின்றது. சீன அரசினால் ஆக்கிரமிப்புக்கு உள்ளாக்கப்பட்டுவருவதாக கூறப்பட்டும் Uighur சிறுபான்மை ...

Read More »

யாழ் பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி பணி பூர்த்தி!

இறுதிப் போரில் கொல்லப்பட்ட பொதுமக்களின் நினைவாக  முள்ளிவாய்க்கால் நினைவு தூபி  யாழ்ப்பாண பல்கலைகழக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் இந்த தூபி அமைக்கும் பணிகள் பல்கலைக்கழக மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் அந்தப் பகுதியில் தூபியை அமைப்பதற்கு கொழும்பின் உத்தரவுக்கு அமைவாக பல்கலைக்கழக நிர்வாகத்தால் தடை விதிக்கப்பட்டிருந்தது. அதனால் ஆரம்ப கட்ட வேலையுடன் இடைநிறுத்தப்பட்டது. இந்த நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை அமைக்கும் பணிகளை பல்கலைக்கழக மாணவர்கள் முடிவுறுத்தியுள்ளனர். இறுதிப் போரின் போது படுகொலை செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள், தற்போது பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றுவரும் மாணவர்களின் ...

Read More »