வடக்கு மக்கள் வாகன வரிப் பத்­தி­ரங்­க­ளைப் பெற்­றுக் கொள்­ள புதிய வசதி !

வாகன வரிப் பத்­தி­ரங்­க­ளைப் பெற்­றுக் கொள்­ளக் கூடிய தன்­னி­யக்க இயந்­தி­ரங்­கள் வடக்கு மாகாணத்­தில் 3 இடங்­க­ளில் பொருத்­தப்­ப­ட­வுள்­ளதென மாகாண மோட்­டார் போக்­கு­வ­ரத்­துத் திணைக்­க­ளம் தெரி­வித்­துள்­ளது.

 

வாகன வரிப் பத்­தி­ரங்­களை பிர­தேச செய­ல­கங்­க­ளில் பெற்­றுக் கொள்ள முடி­யும். ஆனால் அதைப் பெற்­றுக் கொள்­வ­தற்­காக அதிக நேரத்­தைச் செல­விட வேண்­டி­யுள்­ளது. அதை இல­கு­ப­டுத்­தும் வகையில் தன்­னி­யக்க இயந்­தி­ரம் மூலம் வாகன வரிப் பத்­தி­ரங்­களை வழங்­கத் திட்­ட­மி­டப்­பட்­டுள்ளது.

யாழ்ப்­பா­ணம் கைத­டி­யில் உள்ள பிரதி முதன்­மைச் செய­லர் அலு­வ­ல­கத்­தில் பரீட்­சார்த்­த­மாக ஏசி­யன் பவுண்­டே­ச­னின் தொழில் நுட்ப உத­வி­யு­டன் இந்த இயந்­தி­ரம் பொருத்­தப்­பட்­டுள்­ளது. வாக­னக் காப்­பு­றுதி மற்­று­ம் புகைச் சோத­னை­களை  மேற்­கொண்ட பின்­னர், இயந்­தி­ரத்­தில் கட­னட்­டை­யைச் செலுத்தி அதி­லுள்ள அறி­வு­றுத்­தல்­க­ளைப் பின்­பற்றி 14 நாள்­க­ளுக்­கான தற்­கா­லிக வாகன வரிப் பத்­தி­ரத்­தைப் பெற்­றுக்­கொள்ள முடி­யும்.

வாகன வரிப் பத்­தி­ரத்­துக்­கான முதன்­மைப் பிரதி வாக­னம் பதி­யப்­பட்ட புத்­த­கத்­தின் முக­வ­ரிக்­குத் தபால் மூலம் அனுப்­பப்­ப­டும். பரீட்­சார்த்­த­மா­கத் தற்­போது நடை­பெற்­று­வ­ரும் இந்­தச் சேவை­யில் ஏற்­ப­டும் சவால்­கள் ஆரா­யப்­பட்டு அவை தீர்க்­கப்­பட்டு இந்­தச் சேவையை மக்­க­ளுக்கு இல­கு­வில் கொண்டு செல்ல நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும்.

அதன்­பின்­னர் வவு­னியா, யாழ்ப்­பா­ணம் உட்­பட 3 இடங்­க­ளில் இந்­தத் தன்­னி­யக்க இயந்­தி­ரங்­கள் பொருத்­தப்­ப­டும். இந்த இயந்­தி­ரத்­தில் 24 மணி நேர­மும் சேவை­க­ளைப் பெற்­றுக் கொள்ள முடி­யும் என்று தெரி­விக்­கப்­பட்­டது.