செய்திமுரசு

பெற்றோரை பார்க்க சென்ற அவுஸ்திரேலிய பிரஜைகள் தற்கொலை குண்டுத்தாக்குதலில் பலி!

இலங்கையில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் அவுஸ்திரேலியா பிரஜைகளான இரண்டு சிங்கள இனத்தவர்  பலியாகியுள்ளனர். Manik Suriaaratchi மற்றும் 10 வயதான அவரது மகள் Alexendria ஆகியோர் நீர்கொழும்பு கட்டுவப்பிட்டிய St. Sebastian தேவாலயத்தில்  நடந்த குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டுள்ளனர். அவுஸ்திரேலியர்களான இவர்கள் தமது பெற்றோரை பார்க்க இலங்கை சென்றுள்ளனர். ஈஸ்டர் ஞாயிறு வழிபாடுகளில் கலந்துக்கொண்டனர். சம்பவம் நடைபெற்ற போது Manik Suriaaratchiயின் கணவர் Mawjood வாகனத்தை நிறுத்த சென்றிருந்ததால் அவர் காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். இலங்கையில்   நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களை அவுஸ்திரேலிய பிரதமர் Scott ...

Read More »

வெள்ளவத்தையில் குண்டு வெடிப்பு!

கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் சற்றுமுன்னர் மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்ட குண்டு வெடித்துள்ளது. சாவோய் திரையரங்கிற்கு அருகே இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.  மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்டிருந்த குண்டு ஒன்றே இவ்வாறு வெடித்து சிதறியுள்ளது.

Read More »

மஹிந்த ராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லிம் தற்கொலை குண்டுதாரிகள்?

கொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல வர்த்தகருக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுடன் மிகவும் நெருக்கமான உறவு இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பின் பிரபல ஊடகமொன்று இது தொடர்பான தகவலை வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் அந்த ஊடகத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது பிரபல வர்த்தகரான அல்காஜ் மொகமட் யூசுப் இப்ராஹிம் (வயது 65) என்பவரின் மகன்களான இம்சாத் அகமட் இப்ராஹிம் (வயது 33), இல்காம் அகமட் இப்ராஹிம் (வயது31) இருவரும் கிங்ஸ்பெரி மற்றும் சினமன்ட் கிரான்ட் ...

Read More »

குண்டுகளுடன், ‘உலகத்துக்கு ஒரே கடவுள்’ என எழுதப்பட்ட வாகனங்கள் நடமாட்டம்!

வெடிபொருள்களுடனான வான் ஒன்றும் லொரியொன்றும் கொழும்புக்குள் உட்பிரவேசித்துள்ளமை தொடர்பில் அனைத்து காவல் துறை நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், அவற்றை விட ஐந்து மோட்டார் வாகனங்கள் மற்றும் கெப் ரக வாகனமொன்றும் தொடர்பில் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. மேலும் குறித்த இந்த வாகனங்கள் தொடர்பிலான விடங்கள் ஏதேனும் அறியமுடிந்தால் உடனடியாகப் அவசர காவல் துறை  இலக்குத்து அழைத்து தெரியப்படுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவை பின்வருமாறு, #. WP BCY- 2183 (Black Red TVS Scooty #. NWP VP 7783 (Midnight Black Bajaj pulsar 150) #. ...

Read More »

தாக்குதல் நடத்தியோரின் புகைப்படத்தை வெளியிட்ட ஐ.எஸ்.ஐ.எஸ்!

கொழும்பு உட்பட  நாட்டில் நடத்தப்ப்ட்ட  8 தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினர் உரிமை கோரியுள்ள நிலையில் அந்த அமைப்பினர் குறித்த தாக்குதலை மேற்கொண்ட 7 ஐ.எஸ்.ஐ.எஸ். உறுப்பினர்களுடைய புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. அத்துடன் தாக்குதல் நடத்தியோர் தொடர்பான பெயர் உள்ளடங்கிய விரிவான அறிக்கையொன்றையும் ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கம் வெளியிட்டுள்ளது.

Read More »

தற்கொலை தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 359 ஆக உயர்வு!

கடந்த 21 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நாட்டில் 8 இடங்களில்இடம் பெற்ற மிலேச்சதனமான தற்கொலை  குண்டு தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 359 ஆக அதிகரித்துள்ளதுடன் மேலும் பலர் படுகாயமடைந்து வைத்தியாசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குறித்த தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் இலங்கையர்கள் உட்பட பல வெளிநாட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இக் கொடூரத் தாக்குதலில் 38 வெளிநாட்டவர்கள் உயிரழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, இறந்தவர்கள் பலரின் இறுதிச் சடங்குகள் நேற்றைய தினம் பலபாகங்களிலும் இடம்பெற்றதுடன் நேற்றைய நாள் துக்கநாளாகவும் அனுஷ்டிக்கப்பட்டது.

Read More »

நியூசிலாந்து மசூதி தாக்குதல்களுக்கு பழிவாங்க இலங்கையில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது தாக்குதலா?

நியூசிலாந்து நாட்டின் கிரைஸ்ட் சர்ச் நகரத்திலுள்ள மசூதிகளில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுக்கு பழிவாங்கவே இலங்கையில் கிறிஸ்தவ தேவாலயங்கள் தாக்கப்பட்டதாக ராணுவ மந்திரி தெரிவித்துள்ளார். நியூசிலாந்து நாட்டின் கிரைஸ்ட்சர்ச் நகரத்திலுள்ள இருவேறு மசூதிகளில் கடந்த மார்ச் மாதம் தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர்கள் மீது நடத்தப்பட்ட சரமாரியான துப்பாக்கிச் சூட்டில் 50 பேர் உயிரிழந்தனர். இலங்கையில் 3 தேவாலயங்களை குறிவைத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை குண்டுவெடிப்பு தாக்குதல்கள் நிகழ்ந்தன. மேலும் 4 ஓட்டல்கள் மற்றும் ஒரு குடியிருப்பு வளாகத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவங்களில் 10 இந்தியர்கள் உள்பட 310 ...

Read More »

தாக்குதல் பொறுப்பை ஏற்றது ஐ.எஸ்.ஐ.எஸ்!

இலங்கையின் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட குண்டுவெடிப்புத் தாக்குதலுக்கான  பொறுப்பை ஏற்றுக்கொள்வதாக, ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு ஏற்றுக்கொண்டுள்ளது.

Read More »

ஃபர்தாவைத் தடைசெய்ய யோசனை!

இஸ்லாமியப் பெண்கள், முகத்தை முழுமையாக மூடும் வகையில் அணியும் ஃபர்தாவைத் தடை செய்வது தொடர்பில், இஸ்லாமிய மத அமைப்புகள், எதிர்வரும் நாட்களில் அறிவிக்குமென, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் தெரிவித்தார். முஸ்லிம் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் பங்குபற்றலுடன், தபால் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சில் நேற்று (22) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, இந்தத் தீர்மானம் எட்டப்பட்டதாக, சிறிகொத்தாவில் இன்று (23) இடம்பெற்ற ​ஊடகவியலாளர் மாநாட்டின் போது, முஜிபூர் எம்.பி கூறினார்.

Read More »

ஐ.எஸ். தற்கொலை படையைச் சேர்ந்த 3 பேர் படம் வெளியீடு!

இலங்கையில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 3 பேரின் படம் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கையில் நேற்று முன்தினம் அடுத்தடுத்து 8 இடங்களில் தொடர்ச்சியாக குண்டுகள் வெடித்தன. 3 தேவாலயங்கள், 3 சொகுசு நட்சத்திர ஓட்டல்கள் இந்த தொடர் குண்டு வெடிப்பில் சிக்கி தகர்க்கப்பட்டன. நேற்றும் வான் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த குண்டு ஒன்று வெடித்தது. விமான நிலையம் அருகே 6 அடி நீளம் உள்ள பைப் வெடி குண்டு கண்டுபிடிக்கப்பட்டு இலங்கை விமானப்படை வீரர்களால் செயல் இழக்க செய்யப்பட்டது. இலங்கையை உலுக்கிய இந்த தொடர் ...

Read More »