செய்திமுரசு

காலம் கடந்த ஞானம்…!

ஐக்­கிய தேசிய கட்­சியும் சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியும் இணைந்து உரு­வாக்­கிய நல்­லாட்சி அர­சாங்கத்தரப்­பினர் ஜனா­தி­பதி ஆட்சி முறையை ஒழிப்­ப­தையே பிர­தான நோக்­க­மாகக் கொண்­டி­ருந்­தனர். அத்­துடன் இனப்­பி­ரச்­சி­னைக்கு ஓர் அர­சியல் தீர்வு காண்­ப­தாக அளித்த உறு­தி­மொ­ழிக்கு அமை­வா­கவே 2015ஆம் ஆண்டு ஜனா­தி­பதி தேர்­தலில் பொது வேட்­பா­ள­ரா­கிய மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு ஆத­ரித்து வெற்றி பெறச் செய்­தது. ஏட்­டிக்குப் போட்­டி­யான நிலைப்­பாட்டைக் கொண்­டி­ருந்த இந்த இரண்டு கட்­சி­களும் இணைந்து ஓர் அரச நிர்­வா­கத்தில் இணைந்­தி­ருந்த ஓர் அரி­தான சந்­தர்ப்­பத்தின் மூலம் புரை­யோ­டிப்­போ­யுள்ள தமிழர் பிரச்­சி­னைக்குத் தீர்வு ...

Read More »

காலை இழந்த மாணவன்; மூன்று தங்கப் பதக்கங்களை வென்று சாதனை!

தனக்கு  கால் இல்லாத போதும் விளையாட்டுக்கு ஊனம் தடை கிடையாது என்பதை நிரூபித்து தேசிய போட்டிகளில் மூன்று தங்கப் பதக்கங்களை மாணவன் ஒருவன் வெற்றுள்ளார். காத்தான் குடியைச் சேர்ந்த 17வயதான அஹமட் அனீக் என்ற மாணவரே இவ்வாறு பதக்கங்களை பெற்றுள்ளார். தனக்கு ஒரு கால் இல்லாத போதும்  விளையாட்டுக்கு ஊனம் எவ்விதத்திலும் தடை கிடையாது என்பதை நிரூபித்து (NPAC -National Para Athletics Championships-2019)    தேசிய பரா மெய்வல்லுனர் போட்டியில் எம்.எம்.அஹமட்  அனீக் என்ற மாணவன் மூன்று தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார். ...

Read More »

ஆட்கடத்தலை முறியடிக்க அவுஸ்திரேலியாவிற்கு முழு ஆதரவு!

இலங்கையின் கரையோரத்தில் இடம்பெறும் ஆட்கடத்தல் மற்றும் சட்டவிரோதக் குடியேற்றம் ஆகிய நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்கு அவுஸ்திரேலியாவிற்கு முழுமையான ஆதரவை வழங்குவதாக அரசாங்கம் உறுதியளித்திருக்கிறது.   இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அவுஸ்திரேலியாவின் இறையாண்மை எல்லைகள் செயற்பாட்டின் தளபதி மேஜர் ஜெனரல் கிரேய்க் ப்ஃயூரினி தலைமையிலான தூதுக்குழுவினருடன் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத ஆரியசிங்க தலைமையிலான குழுவினர் நடத்திய பேச்சுவார்த்தையின் போதே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்திருக்கிறது. இதுகுறித்து வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது: மேஜர் ஜெனரல் க்ரேய்க் ப்ஃயூரினி தலைமையிலான ...

Read More »

மீள்குடியேறி 10 வருடங்கள் கடந்தும் அடிப்படை வசதி இன்றி அவதியுறும் சோலை கிராம மக்கள்!

கிளிநொச்சி பூநகரி பிரதேச சபைக்குட்பட்ட ‘பல்லவராயன் கட்டு சோலை’ கிராமத்தைச் சேர்ந்த மக்கள் மீள் குடியோறி சுமார் 10  வருடங்கள் ஆகியும் இது வரை தாங்கள் தொடர்ச்சியாக அடிப்படை வசதிகள் எதுவும் இன்றி அவதியுறுவதாகவும் அரச அதிகாரிகள் தொடர்ச்சியாக பராமுகமாகச் செயற் படுவதாகவும் மெசிடோ நிறுவனத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட மக்கள் கருத்துக் கேட்கும் நிகழ்ச்சி திட்டத்தில் விசனம் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி பல்லவராயன் கட்டு சோலை கிராமத்தைச் சேர்ந்த மக்கள் யுத்த காலப் பகுதியில் இராணுவ நடவடிக்கை காரணமாக தங்களுடைய சொந்த கிராமத்திலிருந்து  வெளியேற்றப்பட்டு தற்காலிகமாக ...

Read More »

மசூத் அசார் உள்ளிட்ட 4 பேரை புதிய சட்டப்படி பயங்கரவாதிகளாக அறிவித்ததற்கு அமெரிக்கா ஆதரவு

மசூத் அசார், ஹபீஸ் சயீத் உள்ளிட்ட 4 பேரை புதிய சட்டத்தின் கீழ் பயங்கரவாதிகளாக மத்திய அரசு அறிவித்ததற்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்து உள்ளது. இந்தியாவின் சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டம் 1967-ன் கீழ், ஒரு இயக்கத்தை மட்டுமே பயங்கரவாத இயக்கமாக அறிவிக்க வழி இருந்தது. எனவே தனி நபரையும் பயங்கரவாதியாக அறிவிக்க வழி செய்யும் வகையில் இந்த சட்டம் சமீபத்தில் திருத்தப்பட்டது. இந்த புதிய சட்டப்படி ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்க தலைவர் மசூத் அசார், லஷ்கர் இ தொய்பா தலைவர் ...

Read More »

8652 கோடி ரூபா பண உதவியை இழந்த இலங்கை : மைத்திரி கையெழுத்து இடாதது ஏன்?

2015 ஆம் ஆண்டு புதிய அரசாங்கம் தெரிவு செய்யப்பட்டதை தொடர்ந்து, இலங்கைக்கு மேற்கத்தைய நாடுகளிலிருந்து பெருமளவில் பொருளாதார வளங்கள் வந்து சேரப் போகின்றன என்றும் அதன் விளைவாக நாட்டில் பொருளாதார வளர்ச்சி ஏற்படுவதோடு அதனால் பொதுமக்களது சுபீட்சம் பெருகும் என்றும் ஒருவிதமான எதிர்பார்ப்பு நிலவியது. சர்வதேச சமூகம் எதிர்பார்த்திருந்த வகையிலும் அது தொடர்பாக அழுத்தங்களை ஏற்படுத்தி வந்திருந்தமைக்கும் அமைவாக இலங்கை அரசாங்கமும் மனித உரிமை நிலைவரங்கள் தொடர்பில் நேர்மறையாக நாட்டில் செயற்பட ஆரம்பித்ததனால் இவ்வாறான எதிர்பார்ப்புக்கள் வலுப்படுத்தப் பட்டிருந்தன. இதற்கு முன்னர் ஆட்சியில் இருந்த ...

Read More »

தமிழ் குடும்பம் உடனடியாக நாடு கடத்தப்படுவதை தடுத்தது நீதிமன்றம்!

இலங்கை தமிழ் தம்பதியினர் தொடர்பான வழக்கை  எதிர்வரும் 18 ம் திகதி வரை ஒத்திவைத்துள்ள அவுஸ்திரேலிய நீதிபதி தமிழ் தம்பதியினரின் இரண்டாவது மகளிற்கு பாதுகாப்பு கோருவதற்கான உரிமையில்லை என்பதற்கான  மேலதிக ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறு அவுஸ்திரேலிய குடிவரவு துறை அமைச்சரிற்கு உத்தரவிட்டுள்ளார். செப்டம்பர் 18 ம் திகதி மீண்டும் வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவுள்ளதாக நீதிபதி மொர்டெகாய் புரொம்பேர்க்  அறிவித்துள்ளார். இதற்கு முன்னர் நடேஸ் பிரியா தம்பதியினரையும் குழந்தைகளையும் நாடு கடத்த முடியாது எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 18 ம் திகதியே வழக்கின் இறுதி நாளாகயிருக்காது எனவும் ...

Read More »

கோண்டாவில் வீட்டில் புகுந்து வாள்வெட்டு கும்பல் அட்டகாசம்!

கோண்டாவில் அந்நங்கைப் பகுதியிலுள்ள வீடொன்றினுள் புகுந்த கும்பல் ஒன்று வீட்டிலிருந்த பொருட்களை அடித்து நொறுக்கியதுடன் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியையும் அடித்து உடைத்து சேதமாக்கி விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த வீட்டிற்கு நேற்று வியாழக்கிழமை இரவு 9 மணியளவில் இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த நான்கு பேர் கொண்ட குழுவே வன்முறையில் ஈடுபட்டது. குறித்த நால்வரும் தமது முகங்களை மூடி கட்டி இருந்தார்கள் என வீட்டிலிருந்தவர்கள் தெரிவித்தனர்.   வீட்டினுள் புகுந்து வன்முறை கும்பல் அடாவடியில் ஈடுபட்டிருந்த ...

Read More »

கொக்குவில் பிடாரி அம்மன் கோவிலடியில் வாள் வெட்டு!

கொக்குவில் பிடாரி அம்மன் கோவிலடியில் நின்ற இளைஞர் இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சம்பவத்தில் படுகாயமடைந்த இருவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பலே இத்தாக்குதலை நடத்தியதாக விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் நேற்று புதன்கிழமை இரவு 9.30 மணியளவில் பிடாரி அம்மன் கோவிலடியில் இளைஞர் கூடி நின்ற போது அங்கு வாள்களுடன் வந்த 6 பேர் கொண்ட கும்பல் இருவர் மீது தாக்குதலை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றது என்று காவல் துறையினர்  ...

Read More »

மாவை சேனாதிராஜா முன்பாக தொண்டர் தற்கொலை முயற்சி!

வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள் 454 பேருக்கு இன்று காலை நியமனக்கடிதங்கள் வழங்கும் நிகழ்வு சாவகச்சேரி நகராட்சி மன்ற பொன்விழா மண்டபத்தில் இடம்பெறவிருந்தது. இந்நிலையில் ஏற்கனவே சுகாதார தொண்டர்களாக தற்காலிக அடிப்படையில் பணிபுரிந்த சுமார் 800 வரையான சுகாதார தொண்டர்கள் நியமனம் வழங்கவிருந்த மண்டபத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டுவரும் சுகாதாரத் தொண்டர்களை நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவை நேரில் சென்று சந்தித்துள்ளார். இதன்போது போராட்டத்தில் ஈடுபட்ட  ஒருவர் தனக்கு தானே மண்ணெண்ணெய் ஊற்றி தீ மூட்ட முயற்சித்ததால் அப்பகுதியில் சிறிது ...

Read More »